அரசியல் தீர்வு நோக்கில் கூட்டிணையும் போது தமிழ் தரப்புகள் அவதானமாக…

அரசியல் தீர்வு நோக்கில் கூட்டிணையும் போது தமிழ் தரப்புகள் அவதானமாக இருக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று எச்சரித்துள்ளது. சிறிலங்காவின் தேசிய ஒற்றுமை முக்கியமானது. தேசிய ஒற்றுமையுடன், சம உரிமைக்காக தமிழ் பிரதிநிதிகள், ஏனைய சக்திகளுடன் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஆனால் ஒன்றிணையும் தரப்புக்கள் குறித்து தமிழ்…

சிங்கள அரசு மீண்டும் சர்வதேசத்தை ஏமாற்றப் போகிறது: தமிழர்களுக்கு ருத்திரகுமாரன்…

சிங்கள அரசு புலனாய்வுப் பிரிவினர் மூலமும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஐ.நா விசாரணைக்குழுவிற்கு அனுப்பிக் கொண்டிருப்பதாக கேள்விப்படுகின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை காலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தினை மீறியதாக சிங்கள அரசு ஆயிரக்கணக்கான…

வடக்கில் வசந்தம்! அரசாங்கம் சிங்கள மக்களை உதாசீனம் செய்துள்ளது!– சம்பிக்க…

வடக்கில் வசந்தத்தை ஏற்படுத்திய அரசாங்கம் சிங்கள மக்களை உதாசீனம் செய்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பு 7 தேசிய நூலக சேவை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “இடம்பெயர் வடக்கு கிழக்கு சிங்களவர் ஒன்றியம்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற கூட்டத்தில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

இந்த நாடு சுடுகாடாக மாறும்: ஹஸன் அலி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

இந்த நாட்டில் முப்பது வருடகாலமாக யுத்தம் நடத்தமைக்குரிய காரணங்களைக் கண்டு, அரசாங்கம் அதற்குரிய சரியான தீர்வினைக் காணாவிட்டால் இந்த நாடு சுடுகாடாக மாறுமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலி எச்சரிக்கை விடுத்துள்ளார். நிந்தவூரில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்…

வடக்கில் மூன்று மாவட்டங்களில் மட்டும் 28,316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு…

வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 28,316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் நலன்புரி முகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மாகாண…

இலங்கை சந்தேக நபரை நாடு கடத்தல்: இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில்…

இலங்கை சந்தேக நபரை நாடு கடத்துவது தொடர்பில் இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை முன்னெடுத்ததாக இலங்கையரான சுலைமான் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுலைமான் என்ற இலங்கையரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.…

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புக்களையும் தனிப்பட்டவர்களையும் அதில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகத்திடம் இந்தக்கோரிக்கையை உலக தமிழ் பேரவை முன்வைத்துள்ளது. இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக தமிழர் பேரவையின் தலைவர்,…

மனித உரிமை பேரவைக்கு விசுவாசமாக நடக்குமாறு மஹிந்தவிடம், பான் கீ…

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை உட்பட்ட ஐக்கிய நாடுகள் சபைக்கு, இலங்கை விசுவாசமாக செயற்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கேட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குழுவினரை நியூயோர்க்கில் வைத்து சந்தித்த போது மூன் இதனை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பான் கீ…

தமிழக முதல்வரின் சிறையடைப்பை அடுத்து தமிழர்கள் சுயாதீன வழியை தெரிவுசெய்ய…

தமிழக முதல்வரின் சிறைத்தண்டனையால் இலங்கை பிரச்சினை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலோ, தமிழகத்தின் நிலைப்பாட்டிலோ மாற்றங்கள் நிகழாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை,  அது தமிழர் நலன் என்ற…

சீனா நீர்மூழ்கிக் கப்பல் வந்தால் தகவல் தருவோம்: இந்தியாவிடம் இலங்கை…

சீன நீர்மூழ்கிக் கப்பல் மீண்டும் கொழும்பு வந்தால், இந்தியாவிடம் தகவல் தருவதாக இலங்கை வாக்குறுதியளித்துள்ளது. சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பில் சஞ்சாரிப்பது குறித்து அண்மையில் இந்தியா கடும் மனவருத்தம் தெரிவித்திருந்தது. இது குறித்து கருத்து வெளியிட்டு இலங்கையின் அரசாங்க முக்கியஸ்தர்கள், சீனாவுடனான இலங்கையின் உறவை துண்டிப்பது முடியாத…

மட்டக்களப்பு எல்லைப்புறக் கிராமத்தில் இராணுவ ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் எல்லைப்புற கிராமங்களில் இராணுவ ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட குடியேற்றங்களும் இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பட்டிப்பலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிராமங்களில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.…

உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் உரிமை சர்வதேசத்துக்கு கிடையாது: இத்தாலியில் மஹிந்த

இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்யும் உரிமை சர்வதேச சமூகத்திற்கு கிடையாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  இத்தாலி வாழ் இலங்கை மக்களை சந்தித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புனித பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு உத்தியோகபூர்வமாக அழைக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த இத்தாலிக்கு…

இந்­தி­யாவும் அமெ­ரிக்­காவும் இணைந்து மஹிந்தவின் ஆட்சியைக் கவிழ்க்க திட்டம்:வசந்த பண்டார

இந்தியாவும் அமெரிக்காவும், இலங்கை அரசாங்கத்தின் சில பங்காளிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதித்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் நூற்றுக்கு…

ஜனாதிபதி ஆணைக்குழு மீது நம்பிக்கை இழப்பு! அமர்வுகளில் பாரிய மொழிபெயர்ப்பு…

இலங்கையின் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகளின் போது மொழிபெயர்ப்பு தவறுகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சர்வதேச செய்திச்சேவை ஒன்று மனித உரிமையாளர்களை கோடிட்டு இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்போது ஆங்கிலத்தில் பேசும் அதிகாரிகள் தமிழ் பேசும் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து வாக்குமூலங்களை பெறுகின்றனர். இதன்போது…

இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை: அமெரிக்கா

இலங்கை தொடர்பிலான நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனவும்,  கொள்கைகளில் மாறப்போவதில்லையெனவும் அமெரிக்கா தெரிவித்துளள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் ப்சான்கி இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டு, அங்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியைச் சந்தித்து நாடு திரும்பிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, இலங்கை தொடர்பில்…

ஆணைக்குழு விசாரணைகளில் பங்கேற்கவில்லை!- நிபுணர் குழு குறித்து சந்தேகம்

காணாமற் போனோர் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை கூறவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நிபுணர்கள் மூவரும், மன்னார் மற்றும் கிளிநொச்சியில் இடம்பெற்ற விசாரணை அமர்வுகளில் கலந்துகொள்ளாததையிட்டு அவர்களின் ஒத்துழைப்பு தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபுணர்கள் மூவரைக் கொண்ட குழு, கடந்த செப்டெம்பர் மாதம்…

எங்கள் நிலம் எங்களுக்கே உரித்தானது! வேறு ஆட்களுக்கு வழங்கினால் நீதி…

வடபகுதிக் காணிகள் அந்த மக்களுக்கே உரித்துடையன: வேறுஆள்களுக்கு வழங்கப்பட்டால் நீதிமன்றை நாடுவோம் என வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். நேற்று செய்வாய்கிழமை முதலமைச்சர் தலைமையில் வடமாகாண அமைச்சர்கள் குழு மன்னார் ஈச்சளவக்கை கிராமத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரில் சென்று அவதானித்த பின்னர் கிராம மக்கள் முன்னிலையில்…

அரசாங்கத்தால் வடக்கு தமிழர்களின் மனங்களை வெல்ல முடியாது: அமைச்சர் ராஜித

இலங்கை அரசாங்கம் வடக்கில் பெருமெடுப்பில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டாலும், வடக்கு தமிழ் மக்களின் மனங்களை வெல்ல முடியாது என கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். கடற்றொழில் அமைச்சின் உதவியுடன் கூட்டுறவு திணைக்களத்தினால் யாழ். அரியாலை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மீன் சந்தை திறப்பு விழாவில்…

முதியோர் பராமரிப்பு: இலங்கை முன்னிலை; வடக்கில் நிலைமை மோசம்

சர்வதேச முதியோர் தினத்தையொட்டி அனைத்துலக மட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் முதியோரைப் பராமரிப்பது தொடர்பில் தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கை சிறப்பான இடத்தில் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 96 நாடுகளில் இலங்கை 43 ஆவது இடத்தில் உள்ளது. முதியவர்களின் வருமானம், சுகாதாரம், கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு, சாதகமான சமூக சூழல்…

இன்றும் சாட்சியப்பதிவுகள் முடியும் வரை காத்திருந்த புலனாய்வுத்துறை!

காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி நாள் சாட்சியப்பதிவுகள் இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இன்று கலை முதல் மாலை வரை சாட்சியமளிக்கும் பகுதிகளில் பொலிஸ் , புலனாய்வுத்துறை மற்றும் இராணுவத்தினர் அதிகளவில் காணப்பட்டனர். சாட்சியப்பதிவுகள் முடியும் வரை வெளியில் மக்களை அச்சுறுத்தும் வகையில் காத்திருந்தனர் புலனாய்வுத்துறையினர்.…

கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்தார் மோடி: மஹிந்த தெரிவிப்பு

இலங்கை அரசுடன் தாங்கள் பேச்சு நடத்துவதானால் இந்தியா விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிராகரித்திருக்கிறார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருக்கிறார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா சென்றிருந்த போது…

ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எவருக்கும் யோக்கியதை இல்லை!- மனோ…

அதிமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஜெயலிதாவை விமர்சனம் செய்ய இங்கே எந்த ஒரு அரசியல்வாதிக்கும் யோக்கியதை இல்லை. குறிப்பாக ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகளுக்கு கொஞ்சமும் அருகதை இல்லை. என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊழல், குடும்ப ஆட்சி, வீண்…

வெற்றியை நோக்கி மகிந்த: புதிய திட்டத்தின் வெளிவராத பல தகவல்கள்

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றும்போது அவரது முகத்தில் தெளிவில்லாத் தன்மை இம்முறை மாறியிருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இவ்வாறு லங்காசிறி வானொலியின் இந்த வார நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,…