இலங்கையில் ஜிகாத் அமைப்பினர் இல்லை!- பாதுகாப்பு அமைச்சு

ஜிகாத் அமைப்பினர் இலங்கையில் தங்கியிருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இலங்கையில் ஜிகாத் அமைப்பினர் செயற்படுவதாக குற்றம் சுமத்தினார். எனினும் இதனை மறுத்துள்ள பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர்…

தலைவர் பிரபாகரனைத் தேடும் இஸ்லாமிய தமிழர்கள்!

'பிரபாகரன் மீண்டும் எப்போது வருவார்?' இது தமிழர்களிடம் மட்டுமே தொக்கி நின்ற கேள்வி. இப்போது, இலங்கையின் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பரவியுள்ளது. பிரபாகரன் இருந்திருந்தால், எங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது என்று கண்ணீர் விட்டு அழுதார் ஒரு முஸ்லிம் பெண். 'எங்கள் சமூகத்தில், ஒரு பிரபாகரன் உருவாக வேண்டும்'…

இலங்கையில் தாலிபான்களை அமெரிக்கா ஊக்குவிக்கிறது: சம்பிக்க குற்றச்சாட்டு

தாலிபான்களை இலங்கையில் ஊக்குவிக்க அமெரிக்கா முனைவதாக ஜாதிக ஹெல உறுமயவின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், முன்னதாக தாலிபான்களை அமெரிக்கா ஊக்குவித்தது. இது பின்னர் அமெரிக்காவுக்கே ஆபத்தாக அமைந்தது. இதேபோன்று தற்போது அமெரிக்காவுக்கான இலங்கை தூதர்…

பாணந்துறை நோலிமிட் ஆடை நிறுவனம் தீக்கிரை! பொதுபலசேனா வெறிச்செயல்

இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை நிலையம் நோலிமிட்டின் பாணந்துறை காட்சியறை சற்று முன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி ஆடை விற்பனை காட்சியறைகளில் நோலிமிட் நிறுவனம் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றது. இதன் உரிமையாளர் ஒரு முஸ்லிம் என்ற போதிலும், சுமார் இரண்டாயிரம் சிங்களவர்கள் மற்றும், ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்களும் இந்த…

அளுத்கம வன்செயல்: 8 பேர் பலி! 170 பேர் காயம்!…

அளுத்கம வன்செயல் காரணமாக 8பேர் பலி, 170 பேர் காயம், 580 கோடி பெறுமதியான சொத்து இழப்பு, 150 வீடுகள் அழிப்பு, 2450 பேர் இடம்பெயர்வு, 17 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல், 1000 பேர் தொழில் வாய்ப்பு இழப்பு, 272 கால்நடைகள் கொலை, 86 கொள்ளைச் சம்பவங்கள். இவ்வாறு நேற்று…

70- 80களில் தமிழர்களுக்கு நடந்தது இன்று முஸ்லிம்களுக்கு நடக்கிறது: செ.கஜேந்திரன்

77- 83 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி இன அழிப்பினை ஆரம்பித்த அரசு இன்று முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல்களை ஆரம்பித்து அவர்களை அழிக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். அளுத்கம தர்காநகர் மற்றும் பேருவளையில் முஸ்லிம்கள் மீதான…

அளுத்கம வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து, யாழில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும்…

கொழும்பு அளுத்கம பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியிருக்கின்றன. அளுத்கம, பேருவளை பகுதிகளில் கடந்த 15ம் திகதி தொடக்கம் 3தினங்கள் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைச்…

தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை பிரிக்க சதித்திட்டம்! விழிப்புடன் இருக்க…

அளுத்கம பேருவளையில் இடம்பெற்ற கலவரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம் மக்கள் தங்களது சமூகத்திற்கு சார்பாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் முகமாக ஹர்த்தால் அனுஷ்டிப்பது நியாயமானது. ஆனால் அந்த சம்பவத்தை திசை திருப்புவதற்காக அரசாங்கம் மற்றும் பொதுபலசேனா ஆகியவற்றிக்கு சார்பாக இருக்கும் சிலர் தமிழ் - முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை…

முஸ்லீம்களுக்கு எதிரான வன்செயல்கள் சிங்கள பௌத்த மேலாதிக்க இனவெறியின் மற்றுமொரு…

சிங்கள பௌத்த தேசிய வன்முறையாளர்களின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு எதிராகத்தமிழ்மக்களும் முஸ்லீம் மக்களும் ஒன்றாக இணைந்து போராடவேண்டிய உன்னதமான தருணம் வந்துவிட்டது என்பதனையும் நாம் விரைந்து சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின் முழுவிபரம்: கடந்த சில…

83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றது!-…

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள், 83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றதோ என தாம் சந்தேகிப்பதாக வடமாகாண முதல்வர க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன்,  குறித்த வன்முறைச் சம்பவங்கள் உண்மையில் இனங்களுக்கிடையில் விரிசலினை உருவாக்கும் நோக்குடன் திட்டமிட்ட…

இலங்கை முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது: சுப்பிரமணியன் சாமி

இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு பாகிஸ்தான் தீவிரவாதப் பயிற்சி அளித்து வருவதாகவும், இது மிகவும் ஆபத்தானது எனவும் சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்குப் பாகிஸ்தான் பயிற்சி அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. இவ்விவகாரத்தில் மத்திய…

போர்க் குற்றம் தொடர்பான விசாரணையின் ஆரம்ப அறிக்கை செப்டம்பரில்

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது நடந்ததாக கூறப்படும் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணையின் ஆரம்ப அறிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நியமித்துள்ள இந்த…

வீடுகளுக்குச் செல்ல பொதுமக்கள் அச்சம்- 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள்…

அளுத்கம பகுதியில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் வீடுகளுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். தென்னிலங்கை அளுத்கமையில் கடந்த ஞாயிறு தொடக்கம் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதன் எதிரொலியாக எட்டு முஸ்லிம்கள் கொல்லப்பட்டு சுமார் நாற்பது வர்த்தக நிலையங்கள் முற்றாக அழிக்கப்பட்டன. நூற்றுக்கும்…

வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: இஸ்லாமிய ஒத்துழைப்பு சம்மேளனம்

இலங்கையில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த சம்மேளனத்தின் செயலாளர் இயட் அமீன் மதானி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையின் தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இதில் இறப்புக்களும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. சொத்துக்களுக்கு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. …

வெள்ளைக் கொடியுடன் காணிகளுக்குச் செல்வோம்: வலி வடக்கு மீள்குடியேற்ற சங்கத்…

இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியேற்றுவதற்காக  யாழ்.மாவட்டமே ஸ்தம்பிக்கதக்க வகையிலே நாங்கள் போராட்டம் நடத்தி வெள்ளை கொடியுடன் எங்கள் காணிகளுக்கு போக வேண்டிய நாள் விரைவில் வரும்' என வலி.வடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் தலைவர் கே.குணபாலன் தெரிவித்தார். வளலாய் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற கோரியும்…

காத்தான்குடியில் பாரிய கண்டனப் பேரணி

காத்தான்குடியில் இன்று பாரிய கண்டனப் பேரணி ஒன்று அமைதியான முறையில் நடைபெற்றது. கடந்த 15-06-2014ம் திகதி அளுத்கம, பேருவளை, தர்கா நகர் மற்றும் களுத்துறை போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பொது பல சேனா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட காடைத்தனமான வன்முறைக்கு எதிராக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்…

வன்முறை தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்- முஸ்லிம் நாடுகள் உறுதி

சிங்கள இனவாத அமைப்பினால் அளுத்கமை உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் நேரடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆறு முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளனர்.…

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா விசாரணைக் குழுவிடம் 230,000 முறைப்பாடுகள்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவிடம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நியூசிலாந்து நீதவான் கட்ரைட் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய விசாரணைக்குழுவினர் இலங்கை தொடர்பிலான விசாரணைகளை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்குழுவினரிடம் 229,028…

‘சூடானின் பிரிவினை பாதையில் இலங்கை’: ஐதேக எச்சரிக்கை

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்துள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு ஒத்துழைக்காமல், சூடான் நிலைமையே இலங்கையிலும் ஏற்பட அரசாங்கம் வழியேற்படுத்தியுள்ளதாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதா என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை…

அரசு மக்களை மிரட்டுகிறது: சம்பந்தர் குற்றச்சாட்டு

ஐ நா விசாரணைக் குழுவின் முன்பாக சாட்சியம் அளிப்பவர்கள் அதற்கான விளைவை சந்திக்க நேரிடும் என்று இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. ஒரு ஜனநாயக அரசின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமாக இருப்பவர் இப்படியான கருத்துக்களை வெளியிடுவது மிகவும் கவலைக்குரிய ஒரு விஷயம்…

போர்க்குற்றம் தொடர்பாக சாட்சியமளித்தால்……! அமைச்சர் ரம்புக்வெல எச்சரிக்கை

போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிப்போருக்கு எதிரான நடவடிக்கைகள், அவர்கள் அளிக்கும் சாட்சியங்களைப் பொறுத்து தீவிரமானதாக இருக்குமென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல  எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த செவ்வியிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இது ஒரு மோசமான நிலைமை. நாம் உன்னிப்பாகக் கவனிக்கின்றோம். அளிக்கப்படும்…

விசாரணைக்கு சம்மதிக்க வைக்க ஐ.நா. பிரதிநிதி ஒருவர் இலங்கை வருவார்?

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க கோரி, இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணையாளர்கள் ஜூலையில் ஒன்று கூடுகின்றனர்

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை மீதான விசாரணைகள் இந்த மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அறிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கையின் மனித உரிமைகள் காப்பு விடயம் தொடர்பில் அடுத்த மார்ச் மாதம் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் அறிக்கையை முன்வைக்கும் நோக்கிலேயே மனித உரிமைகள்…