தமிழர்களின் பிரட்ச்சனைக்காக காலக்கெடு விதித்த தேரர்; அதிரும் முஸ்லிம்கள்!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு தமிழ் கிராமங்களை உள்ளடக்கிய உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது குறித்த கோரிக்கையை யூன் 21 ஆம் திகதியான நாளைய தினம் வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு முன்னதாக தீர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் காலக்கெடு விதித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின்…

தீவிர போராட்டம் வெடிக்கும் – கருணா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கிழக்கு மாகாணத்தில் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்த கோருவது அடிப்படை நியாயமே. இவற்றுக்கு தடையாக இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் தடையாக…

விடுதலைப்புலிகளின் சரணடைவு விடயத்தில் இந்தியாவின் தலையீடு – அனந்தி வாக்குமூலம்!

இந்திய அரசாங்கம் தலையிட்டிருக்கின்றது முதலமைச்சர் கருணாநிதி சார்பில் கனிமொழி பேசியிருக்கிறார் என நம்பியே நாம் எமது உறவுகளை இராணுவத்தினரிடம் கையளித்தோம் என தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவியும்,முன்னாள் வடக்கு மாகாண அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இறுதி…

2017க்குப் பின் காத்தான்குடியில் சஹ்ரான் செய்த அட்டுழியங்கள்; பல திடுக்கிடும்…

2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது சஹரான் காத்தான்குடியில் வசிக்கும் காலத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காத்தான்குடியில் சில பிரச்சினைகள் இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்தூரியாராச்சி தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கியபோதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும்…

முன்னெப்போதும் இல்லாத சவாலை தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

“முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச்சயமாக இந்தச் சவாலுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்களின் இலக்கை நாம் அடைந்தே தீருவோம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஆழியவளையில் நேற்றுமுன்தினம்…

முஸ்லிம் வர்த்தக நிலையங்களைப் புறக்கணிக்க வேண்டும்: அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

முஸ்லிம் வர்த்தக நிலையங்களை சிங்கள மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரான வரக்காகொட தேரர் தெரிவித்துள்ளார். கண்டி யட்டிநுவர ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிக்க முன்னெடுத்த…

யாழில் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசம்; அச்சத்தில் மக்கள்!

யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் சுதுமலை ஆகிய இருவேறு இடங்களில் இன்று மாலை வாள்வெட்டுக்குழுவினர் நடத்திய தாக்குதல்களில் பெறுமதிவாய்ந்த பொருட்கள் சேதமடைந்ததுடன் பெண் உட்பட இருவர் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

தீர்வை வழக்கும் எண்ணம் மைத்திரிக்கு இல்லை; மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு!

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் எண்ணம் ஏதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். “ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகளினால் தமிழ் மக்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் ஓரணியாக இணைந்து தமிழ்…

சஹ்ரானின் முதல் திட்டமிட்ட தாக்குதல்; சிக்கிய மற்றுமோர் ஆதாரம்!

ஸ்ரீலங்காவில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தொடர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் திட்டமிட்ட முதல் தாக்குதலான மட்டக்களப்பு வவுணதீவில் பொலிசார் மீதான இரட்டைக் கொலைத் தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்டும் இரண்டு உந்துருளிகளை காத்தான்குடி மற்றும் ரிதிதென்னை பிரதேசங்களில் இருந்து இன்று காலை…

இலங்கை சிறைகளில் இருந்து இன்னும் விடுவிக்கப்படாத முன்னாள் விடுதலைப் புலிகள்

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்ததாக கைதான பலரும் விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு அரசு மூலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இறுதிப்போருக்கு முன்னர் கைதான பலரும் இன்னும் சிறையிலேயே தங்கள் காலத்தைக் கழித்து வருகின்றனர். இறுதிப்போரின்போது சுமார் 12 ஆயிரம் விடுதலைப் புலிகள் கைது…

தீவிரவாதத்துக்கு எதிராக இந்து- பௌத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்: அத்துரலிய…

தீவிரவாதத்துக்கு எதிராக இந்து மக்களும் பௌத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “நாட்டில் இன்று, இந்து மற்றும் பௌத்த மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். பல…

என்மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மாட்டேன் – ஹிஸ்புல்லா

தன்மீது சுமத்தப்பட்டுள்ள எந்தவொரு குற்றச்சாட்டையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தான் தவறு செய்தமை நிரூபனமானால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராகவே இருப்பதாகவும் கிழக்கின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். பயங்கரவாத தடுப்புப் பிரிவில் நேற்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட 8 மணிநேர விசாரணைகளுக்குப் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு…

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் சிங்கள மக்களும் பிக்குகளும் இணைந்து ரகளை!

சர்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய பகுதியில் பௌத்த பிக்குகளும் தென்பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட  சிங்கள மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம்  இன்று (16)இடம்பெற்றது, அதாவது  பிள்ளையார் ஆலய வளவில் அடாத்தாக அமைக்கப்பட்டுள்ள  குருகந்த ரஜமஹா விகாரையின் பெயர் தாங்கிய பெயர் பலகை…

முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை பற்றிப் போற்றி பாடுபவர்கள் அவர்களது சந்தர்ப்பவாத…

பார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார். கூண்டோடு முஸ்லிம்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகித்   தங்கள் ஒற்றுமையை உலகறியச் செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த ஒற்றுமை தமிழர்களிடையே இல்லை. நெல்லிக்காய் மூட்டை போல் பிரிந்து கிடக்கிறார்கள்! இந்தமாதிரியான நுனிப்புல் விமரிசனம் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மாற்றுத் தலைமை…

பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே! இந்திய ஊடகத்தில் ரவூப் ஹக்கீம் புகழாரம்!!

பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் அவரின் இயக்கத்தினருக்கும் எனப் பெரும் ஆதரவுத் தளமிருந்தது. இப்போதும்…

இலங்கை உள்நாட்டுப் போரில் எதிரிகளை தம்பதியராக மாற்றிய காதல்

கௌரி மலர் மற்றும் ரோஷன் ஜெயதிலகா ஆகியோர் தங்களுடைய 11 மாத மகளுடன் விளையாடிக் கொண்டிருப்பதைப் பாருங்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பரம விரோதிகளாக இருந்தார்கள் என்பதை நீங்கள் நினைத்துக்கூட பார்க்கமாட்டீர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் குழந்தைப் போராளியாக இருந்த கௌரிக்கு இப்போது வயது 26. ரோஷன்…

இது நடந்தால் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவார்கள்: இரத்த ஆறு ஓடும்;…

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று நான் கூறியது உண்மைதான் என உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்றைய தினம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா சாட்சியமளித்திருந்தார். வடக்கு, கிழக்கு இணைக்கப்படுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்பவில்லை.…

மீன் சந்தையாக மாறிய காளி கோவில்; ஹிஸ்புல்லாவுக்கு எதிராக வலுக்கும்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஓட்டமாவடியில் இருந்த காளி கோயிலை உடைத்து மீன் சந்தை கட்டிய குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டினை நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பதிவு செய்துள்ளார். நேற்றைய தினம்…

நான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்’; அன்றே வெளிப்படையாக கூறிய சஹ்ரான்!

தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர் என்பதை சஹ்ரான் ஹாசிம் பகிரங்கமாக அறிவித்தாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளத்தின் பிரதிநிதி சட்டத்தரணி அபுசாலி உவைஸ் தெரிவித்தார். நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த போதே சட்டத்தரணி அபுசாலி உவைஸ் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், 2017ஆம் ஆண்டில்…

தமிழரை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே அரசாங்கம் நடத்துகின்றது –…

வடக்கு கிழக்கு பிரதேசங்களை மாற்றான் தாய் பிள்ளைகளைப் போன்றே தொடர்ந்து வரும் அரசாங்கங்கள் நடத்திவருவதாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், சுயமாக முன்னேறும் வகையில் எடுத்த அத்தனை முயற்சிகளையும் அரசு தடுத்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனம் திறந்துவைக்கும்…

கழி தின்ன தயாராகும் முஸ்லீம் தலைமைகள்

இன்று மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என அதிர்வு இணையம் அறிகிறது. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும். அதன்படி இன்று மாலை 3…

இலங்கை முஸ்லிம்கள் நாட்டைவிட்டே வெளியேற விரும்புகிறார்களா – உண்மை நிலவரம்…

இலங்கையிலுள்ள 7000 முஸ்லிம் குடும்பங்கள், நாட்டை விட்டு வெளியேற வெளிநாட்டு தூதரகமொன்றில் விண்ணப்பித்துள்ளமை குறித்து வெளியான செய்தி தொடர்பில் தமக்கு இதுவரை எந்தவித தகவல்களும் அறிவிக்கப்படவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் கடந்த 7ஆம் தேதி…

அரசிடம் சலுகைகளை பெற முற்பட்டால் முஸ்லிம்களுக்கு இதுதான் நிலை!

இலங்கையில் ஆட்சியில் இருக்கும் சிங்கள அரசாங்கத்துடன் இணைந்து சலுகைகளை மாத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் இருப்பார்களாயின் ஒருபோதும் அவர்களால் உரிமைகளை வென்றெடுக்க முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்திருக்கின்றார். இதனால் மொழியால் ஒன்றுபட்ட முஸ்லிம் சமூகம்,…