பச்சை விளக்கு

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected]

 

Signal Lightஉண்மைப் பேசி வாழ்ந்திடுவோம்

உத்தமர் போல உயர்ந்திடலாம்

நூற்கள் பலவும் கற்றிடுவோம்

நூதன அறிவால் வென்றிடலாம்

சாலை விதிகளை மதித்திடுவோம்

சாக்காடு இன்றி வாழ்ந்திடலாம்

வாகன வேகம் குறைத்திடுவோம்

வாழ்க்கையில் ஊனம் தவிர்த்திடலாம்

சிவப்பு விளக்கு எரிகையிலே

சிறிதும் நகராமல் நின்றிடுவோம்

மஞ்சள் விளக்கினை பார்க்கையிலே

மனதில் நிதானம் செய்திடுவோம்

பச்சை விளக்கினைப் பார்த்தவுடன்

பயமின்றி சாலையைக் கடந்திடுவோம்

பொறுமை,நிதானம்,உண்மையுடன்

பொறுப்பாய் உழைத்தால் வெற்றிமுகம்!

– சீர்காழி உ செல்வராஜு

 

selvarajuசீர்காழி உ செல்வராஜு

நாகப்பட்டிணம் மாவட்டம் சீர்காழிக்கு அருகில் உள்ள தண்ணீர் பந்தல் சொந்த ஊர்,. 15 ஆண்டுகள் இந்திய கடற்படையில் பணியாற்றி சிறந்த சேவைக்கான விருதுகளை பெற்றிருக்கிறேன். தற்சமயம் கப்பல் கட்டுமான துறையில் பொறியாளராக சிங்கப்பூரில் பணி செய்து வருகிறேன். வாசிப்பும், எழுத்தும் பொழுது போக்கு. சிங்கப்பூரின் தேசிய தமிழ் நாளிதழான  தமிழ்முரசில் பல கவிதைகள் வந்துள்ளன.  ஒரு கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது.

TAGS: