உனக்கு ஏண்டா இந்த சினிமா பிச்சை பொழப்பு ?

sidebar-title-poemsவளர்ந்து வரும் நமது கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி கருத்தூட்டப் (comment) பகுதியில் பதிவு செய்யவும்.

 

படைத்தவரையும்,தாய் தகப்பனையும்
kabali345தொழ வேண்டிய கைகள்…
பார்க்க வேண்டிய கண்கள்…
பேச வேண்டிய உதடுகள்…
போயும் போயும் ஓர் அற்பமான
தமிழ்ப் படத்திற்காகவா பரதேசிகளாக வேண்டுமா ?

அருகில்,தான் பெற்ற பிள்ளையின்
அன்புஒரு நொடியாவது கிடைக்காதா
என பெற்றோர் ஏங்கியிருக்க…
நாளை வரப் போகும்
கேலிக் கூத்துக்கு,சீட்டை
வாங்கியாகிவிட்டதை நினையும் போது

“அட,பிஸ்கோத்துகளே!”
எனச் சிரிக்கத் தோன்றுகிறது!
பார்க்காதே எனக் கூற
யாம் எத்தனிக்கவில்லை!

Superstar-Rajinikanthஇறுதியாக உம் வயதான பெற்றோரை
என்று கண்டு ஆறத் தழுவினாய்
எனச் சிந்திக்கச் சொல்கிறோம்!

புகழாரம் என்பது சினிமா
எடுத்தவனுக்கெல்லாம் சூட்டினால்
அதன் மதிப்பு மங்கிப்போம்!

உரிய உம் பெற்றோருக்கு
மட்டுமே சூட்டி,
பாலாபிஷேகம் செய்ய கற்றுக் கொள்

எம் தமிழினமே!
கபாலி பலிவாங்கும் பரிதேசி வேலை.
நமது சமயமும் திருக்குறளும்
சொல்லாத மிருகக்கொலை
காலம் கடந்த மன உலைச்சல்.
rajiniநிறுத்துடா வேமானி உன் குரைச்சலை!

பொய் பித்தலாட்டம் உன் சினிமாத்தனம்.
நீ சொல்ல ஒன்னும் தேவயில்ல .
. நாங்கள் கோயில் காளடா ….
குச்சி தீ மிரட்டல் என் சூடத்தை சுடாதுடா ..

ஜான் பிள்ளையானாலும்
ஆண் பிள்ளையடா
என் தமிழன் உறவும்
உணர்வும் கொதிக்குதுடா
உனக்கு ஏண்டா இந்த
சினிமா பிச்சை பொழப்பு ?

-பொன். ரங்கன்

TAGS: