கோவிட்-19 தடுப்பூசிக்கு பிறகு இறந்த சிறுவனின் பெற்றோரைச் கைரி நாளை…

கோவிட்-19 தடுப்பூசிக்கு பிறகு மரணமடந்த ரவினேஷ் குமாரின் பெற்றோரை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நாளை சந்தித்து அவர்களின் மகனின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தடயவியல் அறிக்கையை அவர்களுக்கு வழங்க உள்ளார். அந்த 13 வயது மாணவன் தனது முதல் கோவிட்-19 தடுப்பூசி ஜப் முடிந்து 18 நாட்களுக்குப் பிறகு…

மதமாற்றத்தில் பிள்ளைகள் – யார் காரணம்?

இராகவன் கருப்பையா - பல்லினங்களையும் சமயங்களையும் கொண்ட நம் நாட்டில் மதமாற்றம் என்பது நீண்டகால, விவாதத்திற்குரிய, தீர்க்கப்படாத ஒரு விவகாரமாகவே இருந்து வருகிறது. குறிப்பாகச் சிறார்கள், பெற்றோர் இருவருடைய ஒப்புதலின்றி ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்யப்படுவது தொடர்ந்தார்போல் ஒரு நீண்டகாலச் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பதினெட்டு வயதிற்கும் குறைவான பிள்ளைகளை மத…

வரிப்பணத்தை வீணாக்க வழி வகுத்த தேமு-யை  ஜோகூர் மக்கள் தண்டிக்க வேண்டும் – குலா

தேசிய முன்னணி  கூட்டணியில்  ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. ஜோகூர் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையுடன் இருந்த தே மு, இந்த ஓரிரு நாட்களுக்கிடையில்  அந்த நம்பிக்கையை இழந்து இருக்கிறது. அம்னோ துணைத்தலைவர்  முகமட் ஹாசான் பேசிய தோரணையிலிருந்து பார்க்கும்  போது அம்னோ தன் நிலையை  மறு ஆய்வு செய்துவிட்டதாகத்  தெரிகிறது. ஜொகூர் மாநில இடைத் தேர்தலில் …

பிலோமினா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் வியப்புள்ளது – அதோடு ஒரு திகைப்பும் உள்ளது!

பிலோமினா தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் புகழ் பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் உண்மையான பெயர் செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளி ஈப்போவில் உள்ள கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கிளைப் பள்ளியாக ஆங்கிலேயர் காலகட்டத்தில் இயங்கி வந்த இது 1938 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி  அதிகாரப்பூர்வ தமிழ்ப்பள்ளியானது. பல சிறப்புக்களைத் தமிழ்மொழி ஆர்வலர்களின் வழி அன்று தொட்டே இந்தப்பள்ளியும் பெற்று வருவது பெருமைக்குரியது. அப்பள்ளியின் ஆழமான வளர்ச்சிக்கு…

ஜொகூரின் கையில், மலேசியாவின் எதிர்கால அரசியல் திருப்பங்கள்! – கி.சீலதாஸ்

பொதுவாக மக்களை, குறிப்பாக வாக்காளர்களைக் குழப்புவதில், குழப்ப நிலையிலேயே வைத்திருப்பதில் அரசியல்வாதிகளும், அதிகாரத்தில் இருப்பவர்களும் தயங்காது கையாளும் அரசியல் கலாச்சாரமாகும். அரசியல் வாழ்க்கையில் இந்தக் கலாச்சாரம் தவிர்க்கப்படாத மரபு என்று சொல்லலாம். அரசியல் கலாச்சாரம் அரசியல் கலாச்சாரதெளிவற்ற முறையில் பேசுவது, காலத்துக்கு ஏற்றவாறு எதையாவது சொல்லிவிட்டு பிறகு அதை…

மக்கள் நீதிக் கட்சி, மூடா கட்சிக்கு எதிராகச் செயல்படாது –…

மக்கள் நீதிக் கட்சி (PKR), மூடா (MUDA) கட்சிக்கு எதிராகச் செயல்படாது – என்ற கருத்தைப்   பாராட்டினார் லிம் குவான் எங். ஜனநாயக செயல் கட்சி (DAP) இதனை வரவேற்பதாகவும், நமது குறிக்கோள் தேசிய முன்னணி (BN)  மற்றும் தேசிய கூட்டணி (PN) கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சவாலாக இருப்பதுதான் என்றார். லார்கின் (Larkin)  தொகுதியில் மக்கள் நீதிக் கட்சிக்கு எதிராக, மூடா என்ற அந்த   இளைஞர் கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது.…

சாக்கடையில் உழலும் மலேசிய அரசியல்

இராகவன் கருப்பையா - இன்னும் சுமார் 2 வாரங்களில் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தல் மலேசிய அரசியல் வரலாற்றில்  ஓர் அனல் பறக்கும்  சூழலை  ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு இந்த ஜொகூர் தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் நாட்டு மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் அது ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. அதாவது…

அடிப் மரண விசாரணை – கோயிலில் புகுந்தவர்களை அடையாளம் காட்ட…

நவம்பர் 2018-இல் சுபாங் ஜெயாவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கலவரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரின் விசாரணையில் சாட்சியளித்த ஒருவர், காலமான தீயணைப்பு வீரர் முகம்மது அடிப் முகமது காசிமை  யாரும் தாக்கியதைக் தான் பார்க்கவில்லை என்று கூறினார். அந்த சம்பவத்தின் போது நடந்த…

மதமாற்றத்தில் இந்திரா.. லோ சியூ.. இன்னும் யார்?

இராகவன் கருப்பையா - கடந்த ஒரு மாத காலமாக உள்நாட்டு ஊடகங்களை ஜொகூர் மாநில இடைத் தேர்தல்  தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகிற போதிலும் தனித்து வாழும் தாயான லோ சியூ ஹோங்ஙின் பாசப் போராட்டம் ஒரு பிரதான அங்கமாகவே மக்களின் கவனத்தை ஈர்த்து வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு…

  குள்ளநரி அரசியலும் நாட்டு மக்களும் – கி.சீலதாஸ்

ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் மலேசியர்களிடையே இரண்டு விதமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஜொகூரைப் பொருத்த வரை முதன் முதலாக இந்தத் தேர்தலில் பதினெட்டு வயதினரின் வாக்களிப்பைக் காண்கிறது. ஜொகூரின் பதினெட்டு வயதினர் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்பதல்ல; அவர்களால் வாக்களிக்க முடிகிறதே என்பதே அந்த மனநிலையின்…

நஜிப்பும்-ஸாஹிட்டும் ஏன் முஹிடினிடம் கெஞ்சினர்?

இராகவன் கருப்பையா- உலகையே உலுக்கிய மேகா ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிபும் அவருடைய அமைச்சரவையில் துணைப் பிரதமராக இருந்த அஹ்மட் ஸாஹிட்டும் தன்னிடம் வந்து மன்றாடியதாக முன்னாள் பிரதமர் முஹிடின் அம்பலப்படுத்தியது தேசிய அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிரடி அறிவிப்பில் உண்மை…

ஜஹிட் ஹமிடி என் உதவியை நாடினர் – முஹிடின்

அம்னோ தலைவர் ஜஹிட் ஹமிடி தனது நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடுவதற்காக என்னிடம் வந்தார் என்கிறார் முன்னாள் பிரதமர் முஹிடின். இது சார்பாக வெளியிட்ட அறிக்கையின்படி அந்த அம்னோ தலைவர் தான் பிரதமர் ஆன சில நாட்களிலேயே தன்னை வந்து சந்தித்ததாகக் கூறினார் முஹிடின். “அவர் பல கோப்புகளைக்…

மூடாவுக்கு கூட்டணியாகும் கட்சி – வாரிசானா? – பக்காத்தானா?

இராகவன் கருப்பையா -முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் சைட் சாடிக் தோற்றுவித்துள்ள 'மூடா' கட்சி நாட்டின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய ஒரு மறு மலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்காத்தான் ஆட்சியின் போது மகாதிரின் செல்லப் பிள்ளையைப் போல் இருந்த சைட் சாடிக் தோற்றுவித்த அக்கட்சியின் வளர்ச்சி தற்போது…

இளைஞர்களின் வாக்குகள் ஜொகூரில் வரலாறு படைக்கட்டும் – கி.சீலதாஸ்

ஜொகூர் மாநில பொதுத் தேர்தல் புது இலக்கைக் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் முடிவுகள் இளைஞர்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கும். இது ஜொகூரின் எதிர்காலம் மட்டுமல்ல இளைஞர்களின் பங்கு நாட்டின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் தன்மை வாய்ந்ததாகும். கடந்த ஜனவரி திங்கள் 22ஆம் நாள் ஜொகூர் மாநில மந்திரி புசார் (முதலமைச்சர்)…

இந்தியர்களின் மக்கள்தொகை 2020-இல் 6.7%க்கு குறைந்தது!

சமீபத்தில் முடிவடைந்த 2020 -க்கான  தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மலேசியாவின் மக்கள்தொகையில் பூமிபுத்ராவின்  சதவீதம் 69.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சீனர்கள்  மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. 2010-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 28.3 மில்லியனாக இருந்த மலேசியாவின் மக்கள்தொகை  32.4 மில்லியனாக அதிகரித்துள்ளது,…

‘மனைவியை இதமாக அடிக்கலாம்’ என்ற துணை அமைச்சர் ராஜினாமா செய்ய…

அன்மையில் மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சித்தி சைலா முகமட் யுசோப் பத்திரிகைக்கான ஒரு காணொளியில் கணவன்மார்கள் தங்கள் மனைவியை கண்டிக்க இதமான வகையில் அடிக்கலாம் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தார். அந்தத் துணை அமைச்சரின் காணொளியில் திருமணமான பெண்கள் எப்படி கணவன்மார்களிடம் மென்மையாக…

ஊழலை ஒடுக்க செல்வாக்கு மிக்கவர்கள் தடையா?- அன்வார்

ஊழலை ஒடுக்குவதற்குச் செல்வாக்கு மிக்கவர்கள் தடையாக இருக்கின்றனர் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம். இதற்கு முன்னால் இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர்களில் முன்னாள் பிரதமரும் அடங்குவார் என்கிறார் அன்வார். இதுபோன்ற அரசியல் சூழ்நிலையில் நாம் எதையும் குறைவாக மதிப்பிட இயலாது. “செல்வாக்கும் ஆதிக்கமும் கொண்டவர்கள் உண்மையான நாட்டின் சீரமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை”, என்று குற்றம் சாட்டுகிறார் அன்வார்.…

கட்சி தாவல் சட்டம் நாடாளுமன்றத்தினரையே கட்டுப்படுத்தும், அரசியல் கட்சிகளை அல்ல!

தற்பொழுது நாடாளுமன்ற விவாதத்திற்காக, கட்சி தாவல் சட்டம், சார்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சார்பாக கருத்துரைத்த சட்டத்துறை அமைச்சர்  வான் ஜுனைடி துன்கு ஜாபர், இது நாடாளுமன்ற உறுப்பினர்க மட்டுமே கட்டுப்படுத்தும், அரசியல் கட்சிகளை அல்ல என்றார். இந்தக் கட்சி தாவல் சட்டம் பினாங்கு மாநிலத்தில் 2012…

ஊழல் அரசியலில் குளிர் காயும் நாட்டு மக்கள்! – பகுதி…

கி.சீலதாஸ்- பல்லாயிரம் கோடி மக்களின் பணம் சட்டதுக்குப் புறம்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகிறது. இழப்பு யாருக்கு? நாட்டுக்கும் மக்களுக்கும் பல்லாயிரக் கோடி இழப்பு. மக்களின் இழப்பில், துயரில் சுகமாக ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கும் அதிகாரத்தில் இருந்த, இருக்கும் அரசியல்வாதிகள்! இதுதான் அம்னோ அரசியல் தலைவர்களின் அரசியல் பயணம் கண்ட பலன்.…

குற்றவாளிக்குத் தண்டனை இல்லை – அம்பலப்படுத்தினால் தண்டனை

இராகவன் கருப்பையா -நம் நாட்டில், ஒரு குற்றத்தை அம்பலப்படுத்துவோர் அனாவசியமாக அழைத்து விசாரணை செய்யப்படுவதும் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ்த் தண்டிக்கப்படுவதும் புதிய விசயம் ஒன்றுமில்லை. இத்தகைய சூழலில் குறிப்பாக ஊடகவியலாளர்கள் சிக்கித் தவிப்பது காலங்காலமாக இயல்பாகிவிட்ட ஒன்றாகவே தெரிகிறது. 'தும்பை விட்டு வாலைப் பிடிப்பதைப் போல' பல…

ஊழல் அரசியலில் குளிர் காயும் நாட்டு மக்கள்! – பகுதி…

கி.சீலதாஸ்- மலேசியா எப்படிப்பட்ட இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைச் சுதந்திரத்திற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டது. அது சமுதாய நீதி, நேர்மை, திறமை மிகுந்த ஆட்சி, நாட்டில் எல்லா இனங்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வது, பகைமை, வெறுப்புணர்வு போன்றவற்றிற்கு இடமளிக்காத சமுதாய உறவு, சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒரு சிலருக்குப் பாதுகாப்பு…

தமிழ் மொழி வளர்ச்சிக்கு சோதனை மேல் சோதனை

இராகவன் கருப்பையா- இந்நாட்டில் தமிழ் பள்ளிகளையும் தமிழ் மொழியையும் பாதுகாக்க  நாம் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் தொடர்ந்தார்போல் சவால் மிக்க சோதனைகளும் நம்மைத் தாக்கிய வண்ணமாகத்தான் உள்ளன. தமிழ், சீனப் பள்ளிகளை இழுத்து மூடவேண்டும் என அவ்வப்போது விஷக் கருத்துகளைக் கக்கிக் கொண்டிருக்கும் சில தரங்கெட்ட அரசியல்வாதிகள் மட்டுமின்றி அவ்வாறு…

‘சிறையில் மரணங்கள்’ திகைப்பூட்டுகின்றன – வழக்கறிஞர் மன்றம்

போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் கைதிகள் தொடர்ந்தார்போல் மரணம் அடைந்து வருவது தங்களுக்குத் திகைப்பூட்டுவதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் கூறுகிறது. கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை ஏழு நபர்கள் மரணமடைந்துள்ளனர் இவர்கள் அனைவரும் போலீஸ் பாதுகாப்பில் இருந்தவர்கள். அம்மன்றத்தின் தலைவர்  ஏ.ஜி. காளிதாஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மரணங்கள் கிள்ளான்,…