சார்லஸ் சந்தியாகோ - பள்ளி குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான இளம் இந்திய மலேசியர்கள், குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களின் இறுதிச் சடங்குகளுக்கு வருவதைப் பார்ப்பது வேதனையானது மற்றும் ஏற்றுக்கொள்ள இயலாதது. இதற்கிடையில், இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த கல்வியாளர்கள், அறிஞர்கள் அல்லது சமூகத் தலைவர்களின்…
நமது அரசியல் விமோசனம் – பூனையின் மணியை யார் கழற்றுவது?
இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட இந்திய அரசியல் கட்சிகள் இருக்கும் பட்சத்தில் மேலும் 3 புதிய கட்சிகள் கடந்த சில மாதங்களாக உதயமாகிக் கொண்டிருப்பது நமது அரசியல் விழிப்புணர்ச்சிக்கு சவாலாக உள்ளது. நமது அரசியல் என்பது ஓர் இனத்தின் மக்கள் கூட்டம் என்ற வகையில்,…
பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக்கு அனுப்பி, அதன் பெருமையைக் கொண்டாடுங்கள்
இராகவன் கருப்பையா - அண்மைய காலமாக நம் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பு இளம் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை 'மெண்டரின்' மொழி கற்கச் செய்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். நம் பிள்ளைகள் 'மெண்டரின்' மொழி கற்பதில் தவறில்லை. ஆனால் அவர்களைச் சீனப் பள்ளிக்கு அனுப்பி "மை சில்ரன் ஆர் இன்…
தமிழ் பள்ளிகளுக்கு மித்ரா வழங்கிய புதுப்பிக்கப்பட்ட கணினிகள்!
இராகவன் கருப்பையா - மித்ரா எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்றுப் பிரிவு நம் நாட்டில் உள்ள 525 தமிழ் பள்ளிகளுக்கும் மடிக்கணினிகளை வினியோகம் செய்ய மேற்கொண்டுள்ள முயற்சிகள் மகத்தான ஒரு முன்னெடுப்பு, வரவேற்கத்தக்க ஒன்று. நம் பிள்ளைகள் சிறு வயது முதல் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கு…
சீன – தமிழ் பள்ளிகளை அகற்ற கூட்டரசு நீதி மன்றத்தில்…
மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தோல்வியுற்ற இஸ்லாமிய கல்வி மேம்பாட்டுக் கவுன்சில் மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு ஆகியவை சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகள் அகற்ற கோரும் தங்களின் முறையீட்டை உச்ச நீதி மன்றத்தில் (கூட்டரசு நீதிமன்றம் அல்லது பெடரல் கோர்ட்) முறையீடு செய்துள்ளனர். பெடரல் நீதிமன்றம் தாய்மொழிப் பள்ளிகள்…
ஊராட்சி மன்றத் தேர்தல் இனவாதத்தால் சீர்குலையுமா?
பைசால் அப்துல் அஜிஸ் – பெர்சே தலைவர்- இது ஒது உணர்வுப்பூர்வமான தலைப்பாக மாறியுள்ளது., வரலாற்று ரீதியாக, உள்ளூராட்சித் தேர்தல் நாட்டின் அரசியல் நிலைத்தன்மையுடன் தொடர்பானது. குறிப்பாக.1960 களில் அமைதியின்மை சம்பவங்களுடன் தொடர்புடையது, இது இறுதியில் 1965 இல் அதன் நிறுத்தத்திற்கு வழிவகுத்தது, அதன் விளைவாக 1976 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சட்டம்…
நிழலைக் காட்டி பயமுறுத்தும் மலாய் அரசியல்வாதிகள்!
இராகவன் கருப்பையா - இந்நாட்டின் பிரதமராவதற்கு வரிசை பிடித்து நிற்போரை ஒரு நீண்ட பட்டியலிட்டால் 100ஆவது இடத்தில் கூட ஒரு இந்தியரின் பெயரையோ சீனரின் பெயரையோ பார்க்க முடியாது. மலாய்க்காரர் அல்லாத ஒருவர் மலேசிய பிரதமராக முடியும் என நாட்டின் அரசியல் சாசனத்தில் உள்ள போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில்…
30 ஆண்டுகளாக தமிழ்ப் பள்ளிக்கு இடையறாத ஆதரவு வழங்கும் சீன…
பேராக் மாநிலம் சிதியவான் பகுதியைச் சேர்ந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த ரப்பர் வியாபாரி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக இங்குள்ள ஒரு தமிழ்ப் பள்ளிக்கு ஆதரவளித்து வருகிறார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு னர் யெக் டோங் பிங் (Yek Dong Ping) ரிம 330,000 க்கு ஆயர் தவாரில்…
பல்லின சமயமும் மொழியும் மலேசியாவுக்கு கிடைத்த வரம்!
கி. சீலதாஸ் - இனம், சமயம், மொழி என்கின்ற மும்முனைப் பிரச்சினைகளைக் கிளப்புவது காலங்காலமாக நடந்து வரும் ஓர் அரசியல் நடவடிக்கையாகும். இந்தப் பிரச்சினைகளுக்கு முடிவு காணும் கொள்கையை, நடவடிக்கையை, புண்ணியச் செயலை நடுவண் ஆட்சியில் அமர்ந்திருந்த அரசியல் இயக்கங்களும் சரி, இப்பொழுது ஆட்சியில் இருக்கும் இயக்கமும் சரி, இந்த…
தாய்மொழிப் பள்ளிகள் பிரச்சினை: சட்டமா, அரசியலா?
கி.சீலதாஸ் - அரசமைப்புச் சட்டத்தின் ஒரு சில பகுதிகளை மட்டும் எடுத்து வியாக்கியானம் செய்வதானது, அந்தச் சட்டத்தின் முழுமையான அடிப்படை நோக்கம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ள மறுப்பவர்களின் தவறான, அரசமைப்புச் சட்டத்திற்கும் வரலாற்றுக்கும் உரிய மரியாதையைத் தர மறுக்கும் குணமாகும். தாய்மொழிப் பள்ளிகளான சீனம், தமிழ் கற்பிக்கப்படுவது அரசமைப்புச் சட்டத்திற்குப்…
சமூக ஒப்பந்தக் கொள்கை, ஏழை இந்தியர்களுக்கும் தேவை
இராகவன் கருப்பையா - பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது, உயர் கல்வி நிலையங்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் நிலவும் குளறுபடிகள் குறித்து பேசிய மாணவர் நவீன் முத்துசாமியின் காணொளி நாடு தழுவிய நிலையில் அதிக அளவில் பகிரப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'சமூக ஒப்பந்தம்'(Social Contract) எனும் பெயரில்…
வேஷ்டி கட்டி பட்டமளிப்புக்கு சென்ற மாணவர்கள்
இராகவன் கருப்பையா - பேராக், தஞ்சோங் மாலிமில் உள்ள 'உப்சி' எனப்படும் சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு இந்தியப் பாரம்பரிய முறைப்படி வேஷ்டியோடு சென்ற மூன்று மாணவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. அந்தப் பட்டமளிப்பு விழாவிற்கான அதிகாரத்துவ உடைகளின் பட்டியலில் 'வேஷ்டி' இல்லாததால் தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக இளநிலைக் கல்வியியல்(தமிழ்…
பல்கலைக்கழக ஒதுக்கீட்டை நியாயப்படுத்த ‘சமூக ஒப்பந்தத்தை’ பயன்படுத்துவது நியாயமற்றது
பல்கலைக்கழக நுழைவு ஒதுக்கீட்டை நியாயப்படுத்த "சமூக ஒப்பந்தத்தை" பயன்படுத்துவதற்கு எதிராக சிறப்பு விருது பெற்ற எம். நவீன், இது சமூக நீதியல்ல, பிரிவினைவாதம் என்று கூறினார். நவீன் , 23, சமீபத்தில் ராயல் கல்வி விருது பெற்றவர் ஆவார். "சமூக ஒப்பந்தம்", பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இன மக்களிடையே…
தமிழ் – சீன பள்ளிகள் அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவை – நீதிமன்றம்…
தமிழ் - சீன பள்ளிகள் நீண்ட காலமாக கல்வி அமைப்பின் சட்ட கட்டமைப்பில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று கூறியது. மத்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஆரம்பப் தாய் மொழிப் பள்ளிகளில் மாண்டரின் அல்லது தமிழ் மொழியைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி நான்கு மலாய்-முஸ்லிம் குழுக்களின்…
பழுதான சுவாசக் கருவிகள், யாரையும் தண்டிக்க முடியாதா?
இராகவன் கருப்பையா - மூன்று ஆண்டுகளுக்கு முன் கோவிட் பெருந்தொற்றின் போது கொள்முதல் செய்யப்பட்ட சுவாசக் கருவிகளில்(வெண்டிலேட்டர்) பெரும்பாலானவை பயன்படுத்த முடியாத, பழுதானவை என்பது நமக்கு புதிய செய்தியல்ல. கடந்த 2020ஆம் ஆண்டில் கொல்லைப்புறமாக நுழைந்து ஆட்சியை கைப்பற்றிய முஹிடின் அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக அடாம் பாபா இருந்த போது…
மனிதனின் நிம்மதியும், உலக அமைதியும் வெறும் கனவா?
கி.சீலதாஸ்,- முரண்பாடுகள்தான் மனுதனின் இயக்குகின்றன என்பதை அலசுகிறார் கட்டுரையளர் இவ்வையகத்தில் எங்கெல்லாம் மனிதன் கால் பதித்தானோ, வாழ்ந்தானோ அங்கெல்லாம் வேற்றுமையை விதைப்பதில்தான் முனைப்பாக இருந்தான். பல்லாயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும் அவனின் பழைய, பழக்கமாகிவிட்ட கசப்பான வேற்றுமையைப் போற்றி வளர்க்கும் குணம் மாறவில்லை; மாறும் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்பதைக் காட்டிலும்…
காஸாவுக்கு ஆதரவு காட்ட பள்ளி பிள்ளைகளை துப்பாக்கி ஏந்த சொல்வதா?
இராகவன் கருப்பையா -பாலஸ்தீனின் காஸா முனையில் மூண்டுள்ள போரினால் கடுமையான துயருக்கு ஆளாகி அவதிப்படும் அந்நாட்டு மக்களுக்கு பரிவுகாட்டி அவர்களுக்கு பல வகையிலும் உதவிக்கரம் நீட்ட அனைத்துலக சமூகம் முனைப்பு காட்டி வருகிறது. அவ்வகையில் நாமும் மனிதாபிமான அடிப்படையில் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்து வரும் வேளையில் நமது…
காஸாவுக்கு ஆதரவாக பள்ளி பிள்ளைகளை துப்பாக்கி ஏந்த சொல்வதா?
இராகவன் கருப்பையா - பாலஸ்தீனின் காஸா முனையில் மூண்டுள்ள போரினால் கடுமையான துயருக்கு ஆளாகி அவதிப்படும் அந்நாட்டு மக்களுக்கு பரிவுகாட்டி அவர்களுக்கு பல வகையிலும் உதவிக்கரம் நீட்ட அனைத்துலக சமூகம் முனைப்பு காட்டி வருகிறது. அவ்வகையில் நாமும் மனிதாபிமான அடிப்படையில் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்து வரும் வேளையில் நமது…
சமய விவகாரங்களுக்கான அமைச்சர் எல்லா மதங்களையும் கவனிப்பாரா?
இராகவன் கருப்பையா - நம் நாட்டின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் முஹமட் நயிம் மொக்தார் இஸ்லாம் மதத்திற்கு மட்டும்தான் அமைச்சரா அல்லது இங்குள்ள அனைத்து சமயங்களும் அவருடைய பார்வையின் கீழ் வருகிறதா என்று தெரியவில்லை. அவருடைய அமைச்சர் பொறுப்பு இதர அமைச்சுகளைப் போல் தனியாக இல்லாமல் பிரதமர் இலாகாவின் கீழ்…
காஸாவுக்கு தேவை அவரச உதவி: உபகாரச் சம்பளம் அல்ல!
இராகவன் கருப்பையா - பாலஸ்தீன மாணவர்களுக்கு கல்வி உபகாரச் சம்பளம் வழங்க தயாராய் இருப்பதாக 'யூனிடென்' எனப்படும் தெனாகா நேஷனல் பல்கலைக்கழகம் செய்துள்ள அறிவிப்பு இத்தருணத்தில் கேலிக்கூத்தான ஒன்றாக உள்ளது. இவ்வாண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான கல்வித் தவணைக்கு பதிவு செய்யும் புதிய பாலஸ்தீன மாணவர்களுக்கு அந்த சலுகை வழங்கப்படும்…
விளையாட்டுத்தனமான மெர்டேக்கா காற்பந்து விளையாட்டு
இராகவன் கருப்பையா - தலைநகர் புக்கிட் ஜாலில் விளையாட்டரங்கில் இம்மாதம் 13-17-இல், பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடைபெற்ற மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டிகள் கொஞ்சமும் சுவாரஸ்யம் இல்லாத ஒரு கேலிக்கூத்தான ஏற்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா, தஜிகிஸ்தான், மற்றும் மலேசிய பங்கு கொண்ட, 3 குழுக்கள் கொண்ட…
அரசாங்க ஓய்வூதியம் கஜானாவை காலியாக்கிறது – பூனைக்கு மணி கட்டும்…
இராகவன் கருப்பையா - அரசாங்க ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் பில்லியன் கணக்கான ரிங்கிட்டை மிச்சப்படுத்தலாம் என அண்மையில் சில பொருளாதார வல்லுனர்கள் செய்துள்ள பரிந்துரை அமலாக்கத்திற்கு வரக்கூடிய சாத்தியமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அரசாங்கத்தில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் வேலை செய்துள்ள ஒருவர், அவர் கடைசியாக…
காந்தியின் இன்னா செய்யாமையின் பொருள் – கி.சீலதாஸ்
அக்டோபர் இரண்டாம் நாள் 1869ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்தியாவில் தமது ஆரம்பக் கல்வியை முடித்து, இங்கிலாந்து சென்று சட்டப்படிப்பை முடித்து வழக்குரைஞரானார். இந்தியாவிலேயே சில காலம் வழக்குரைஞர் தொழில் செய்த காந்தியால் சிறப்பான இடத்தைப் பெற முடியவில்லை. எனவே, அவர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று…
மறைந்த ஒரு தோட்ட போராளிக்கு அஞ்சலி – அருட்செல்வன்
டெனூடின் தோட்டப்போரளிகளில் ஒருவரான ஆறுமுகம் அவர்கள் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி காலமானார். 65 வயதே ஆன அவர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளைத் தனியே விட்டுச் சென்றுள்ளார். அவர் மலேசிய சோசிலிச கட்யின் தீவிர பற்றாளர் ஆவார். டெனூடின் செம்பனைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பணம், தண்ணீர் சிக்கல், குடியிருக்க வீடு என பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி, இறுதியில் அதன் உச்சமாக அவர்களுக்கு…