நவீனத்தும் தமிழர்களின் பண்பாடுகளை அழிக்கின்றது

நவீனத்துவமான வருகை காரணமாக தமிழர்களின் கலைகலாசார பண்பாடுகள் அழிக்கப்படும் நிலையேற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரியை சிறப்பிக்கும் பட்டிமன்ற ஆரம்ப நிகழ்வின்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபையினர் ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று மாலை விக்னேஸ்வரர் திருத்தொண்டர் சபை மண்டபத்தில் நடைபெற்றது.…

இலங்கை இராணுவத்தின் ஒழுக்கமீறல்களை அம்பலப்படுத்தும் முன்னாள் கடற்படை அதிகாரி

தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, இலங்கைஇராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை…

வெடிகுண்டை விடவும் பண்பாடு பலமானது

ஓர் இனத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதே எந்தவொரு ஆதிக்க சக்தியினதும், கோட்பாடாகவும் நடைமுறையாகவும் உள்ளன என்று விபரிக்கும் கறுப்பின சிந்தனையாளர் அமில்கா கேப்ராயல் “வெடிகுண்டைவிடவும் பண்பாடு பலம்வாய்ந்த ஆயுதம்” என்றும் கூறியுள்ளார். ஓர் இனத்தை ஆயுதம் கொண்டு அழிப்பது…

தமிழ் மக்கள் பேரவையை பலப்படுத்தும் விமர்சனங்களை முன்வையுங்கள்

வடக்கின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை நடத்திய எழுக தமிழ் எழுச்சிப் பேரணி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பேரணி எதைச் சாதித்தது என்ற கேள்வியை முன்வைப்பவர்களுக்கான பதில் தமிழ் மக்களின் ஒன்றுபட்ட - ஒருமித்த குரல் பேரணி வாயிலாக முன்னெழுந்துள்ளது என்பதுதான்.…

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு வெளியிடும் கூட்டமைப்பு – அடுத்தது என்ன..? கொழும்பு…

அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் புதிய சட்டத்தில், சர்ச்சைக்குரிய சில பகுதிகள் நீக்கப்படாமல் உள்ளன. எனவே, பழைய சட்டமே புதிய வடிவத்தில் வரக் கூடும் என தெரிவித்துள்ள கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதனை எதிர்ப்பதாகவும் ஊடகம் ஒன்றுக்கு இன்று தெரிவித்துள்ளார். இது குறித்து…

விடாமல் விரட்டும் விசஊசிகள் – ஆறாவது வாரமாகவும் தொடரும் பரிசோதனைகள்

விசஊசி விவகாரம் தொடர்பில் ஆறாவது வாரமாகவும் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனையில் இதுவரை 161 முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசஊசி தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் முதலாம் வாரம் கடந்த மாதம் 2ஆம் திகதியும், இரண்டாம்…

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியோடு முள்ளிவாய்காலில் மரணித்துப் போன தமிழரின் ஒழுக்கம்

ஒரு இனத்தின் வரலாறு பாதுகாக்கப்பட வேண்டுமானால் அந்த இனத்தின் கலை, கலாசார பண்பாடுகளை பாதுகாக்க ஆலயங்களும் அதனூடான சமூகங்களும் முன்வர வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். கடுக்காமுனை காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ விழாவில் கலைநிகழ்வு நேற்று மாலை தலைவர் லவன் தலைமையில்…

விக்னேஸ்வரன் போட்ட குண்டு

தனது உயிருக்கு உலை வைத்து விட்டு அந்தப் பழியை விடுதலைப் புலிகள் மீது போடுவதற்கு தென்னிலங்கையில் சதித்திட்டங்கள் தீட்டப்படுவதாக தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த முதலாம் திகதி புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தில் நடந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய இலங்கை…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வேதனம் ஏன் வழங்க முடியாது:…

சாதாரண கூலி வேலைக்கான குறைந்தபட்ச வேதனமாக 1,000 ரூபாய் இந்நாளில் வழங்கப்படும் நிலையில், எமது நாட்டின் வளத்தை பெருக்குவதற்கு உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் வேதனம் ஏன் வழங்க முடியாது?, என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். சம்பள உயர்வு கோரி தொடர்…

எழுக தமிழில் தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்: தென்னிலங்கை தமது…

எழுக தமிழில் தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தென்னிலங்கை மனித உரிமைகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் தமது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடகப்பேச்சாளர் கு.குருபரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும்…

புதிய அரசியலமைப்பில் வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஷ்டி பேச்சுக்கே…

புதிய அரசியலமைப்பில் ‘சமஷ்டி’ முறை ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எனினும் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் எனவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. ‘சமஷ்டி’ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது புதிய அரசியலமைப்பில் கிடையாது. இந்த விடயத்தில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக அமை…

மலையக மக்களுக்காக கொழும்பில் பாரிய போராட்டம் – பொலிஸாரின் தடையை…

தமது சம்பளத்தை அதிகரிக்க கோரி மலையக மக்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் அமைப்புக்களும் கொழும்பில் வேலை செய்யும் மலையக இளைஞர் யுவதிகளும் ஒன்றிணைந்து இன்று காலை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். கொழும்பில்…

இலங்கையர்களுக்கு நம்பிக்கையளிக்கும் அறிவிப்பு

இலங்கைக் கடற்றொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய அறிவிப்பொன்று நேற்று முன்தினம் இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் விடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த அறிவிப்பை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுத்திருக்கின்றார். இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 05ம் திகதி நடத்தப்படும் என்று…

வடக்கில் சிங்களவரின் நிலைதான் கொழும்பில் உள்ள தமிழருக்கும்: கடும் எச்சரிக்கை

முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கில் இருந்து சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தாமும் இவ்வாறு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர்…

வடக்கு கிழக்கை இணையவிடாமல் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பை உருவாக்கும்…

வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்று பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஸவின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். மேலும், கூட்டு எதிர்க்கட்சி…

எழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடவில்லை: சம்பந்தன்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் அரசியலமைப்பினை மீறும் வகையிலான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதனையும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெளியிடவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்புக்கு முரணான வகையில் சி.வி.விக்னேஸ்வரன் கருத்துக்களை முன்வைத்துள்ளதாகத் தெரிவித்து கூட்டு எதிரணியின்…

மலையக மக்களின் அவலம் பாராளுமன்றை உலுப்பியது

யாழ் மாவட்டத்தின் பணப்பயிராக காணப்படும் புகையிலை உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை நிறுத்தப்பட்டால் அதற்கான மாற்றுத்திட்டம் என்ன? உரிய நிவாரணம் வழங்கப்படுமா? என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் கேள்வி எழுப்பினார். ஏற்றுமதி இறக்குமதி தொடர்பிலான விவாதத்திற்காக இன்று பாராளுமன்றம் ஒன்றுகூடியது. இதில் உரையாற்றும் போதே அவர்…

விக்னேஸ்வரனின் பாய்ச்சலால் வெகுண்ட சிங்களம்! பதில் சம்பந்தனிடம்

வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரன் மீது சிங்கள பேரினவாதம் கடும் விசனத்தில் இருக்கிறது. இன்னொரு புறத்தில் தமிழ் விட்டுக் கொடுப்பு அரசியல் தலைமை கொதிப்பில் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் கொழும்பில் இருந்து வரும் பொழுது இருந்த விக்னேஸ்வரன் இப்பொழுது இல்லை என்பது தான் கசப்பான உண்மை. வடக்கு…

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வுகாணப்படவில்லை

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். வவுனியா சிக்கனகூட்டுறவுச் சங்கத்தில் நடைபெற்ற பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கொடிய…

ஈழத் தமிழர் அரசியல் ஏதிலிகளா?

காணப்படும் வாய்ப்புக்களை சிக்கெனப் பற்றி பயன்படுத்தவும் எழும் பிரச்சனைகளை தமக்கு சாதகமாக கையாளவும் கூடிய அரசியல் தேர்ச்சி சிங்களத் தலைவர்களிடம் இயல்பாகவே உண்டு. இவ்வாண்டின் இறுதிவாக்கில் இனப்பிரச்சனைக்கு அரசியல் யாப்பு ரீதியான தீர்வு காணப்படுமென்ற கருத்து பரவியிருக்கும் இக்காலச் சூழலில் இலங்கையின் அரசியல் பிரச்சனைகளோடு நெருக்கமாக சம்பந்தப்பட்டிருக்கும் நாடுகளைச்…

இராணுவக் கட்டமைப்பில் மாற்றம் இல்லை!! முல்லைத்தீவில் சம்பந்தன் காட்டம்

இலங்கையில் ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அதனாலேயே தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்திருக்கின்றார். மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண உறுப்பினர்…

பதற்றம் தணிக்கும் முதல்வரின் விளக்கம்!

பத்துத் தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியையடுத்து தென்னிலங்கையில் உருவான பரபரப்பை ஓரளவு தணிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன். வட பகுதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடாதெனவும், பௌத்த மதத் தலங்கள் நிர்மாணிக்கப்படலாகாது எனவும் ‘எழுக தமிழ்’…

எப்போதாவது கணவர் வருவார் – சமூகத்தின் கேலி கிண்டலால் வலியின்…

எவராலும் கண்டு கொள்ளப்படாத ஒரு தரப்பாக தாம் ஆக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்களைச் சேர்ந்தகாணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் துயரம் வெளியிட்டனர். மட்டக்களப்பு ஆயித்தியமலையில் இன்று இடம்பெற்ற காணாமலாக்கப்பட்டோரில் தங்கி வாழ்ந்த உறவினர்களுக்கு உளநல ஆலோசனை வழங்கும் நிகழ்வில் சிரேஷ்ட நிபுணத்துவ உளநல மருத்துவர் ரீ.கடம்பநாதன் முன்னிலையில்…