சீ- விளையாட்டு பூபந்து போட்டியில் கடந்த 10 ஆண்டுகளில் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் தங்கம் பெற்று தினா-தான் சாதனை, தேசிய மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னணி ஜோடியான பேர்லி தான்-தினா முரளிதரன் 86 நிமிட விருவிருப்பான கடிமையான போட்டியின் இறுதியில், இன்று SEA Games தாய்லாந்து 2025…
தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை டோப் குலோவ் மறுக்கிறது, விசாரணை தொடர்ந்து…
டோப் குலோவ் நிறுவனம் (Top Glove) அதன் வெளிநாட்டுத் தொழிலாளார்கள் சுரண்டப்படுகிறார்கள் என்று பிரிட்டனின் த கார்டியன் நாளிதழ் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. எனினும், சில தொழிலாளர்கள் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச 104-மணி நேரத்திற்கு கூடுதலாக ஓவர்டைம் வேலை செய்திருக்கலாம் என்பதை டோப் குலோவ் நிறுவனத்தின் தலைவர் லிம்…
மூசா மீது குற்றம் சாட்டாமல் விட்டது எஜிசி, நாங்கள் அல்ல…
சாபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமான் மீது 2012 ஆம் ஆண்டில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. அம்முடிவை எடுத்தது சட்டத்துறை தலைவர் அலுவலகம் (எஜிசி), நாங்கள் அல்ல என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்எசிசி) இன்று கூறிற்று. மூசா மீது ஏன் குற்றம் சாட்டப்படவில்லை என்பதற்கு…
பிரபு குடும்பத்தாரின் கருணை மனுவை சிங்கப்பூர் அதிபர் நிராகரித்தார்
சிங்கப்பூர் அதிபர் அலுவலகம் பிரபு என். பத்மநாதன் குடும்பத்தாரின் கருணை மனுவை நிராகரித்து விட்டதாக வழக்குரைஞர் என்.சுரேந்திரன் கூறினார். “அவர்கள் பிரபுவின் சகோதரருக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள்”, என்றவர் இன்று காலை வாட்ஸ்ஏப்பில் தொடர்பு கொண்டபோது தெரிவித்தார். சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள மலேசியரான பிரவுவின் குடும்பத்தார்,…
குறைந்தபட்ச சம்பளம் கோரும் போராட்டவாதிகளை அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வெளியில் சந்தித்தார்
நாடாளுமன்றம். பக்கத்தான் அரசாங்கம் அறிவித்துள்ள ரிம50 குறைந்தபட்ச சம்பள உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் இறங்கிய 300க்கு மேற்பட்டவர்களை நாடாளுமன்றத்திற்கு வெளியில் மனித வள அமைச்சர் மு. குலசேகரன் சந்தித்தார். அப்போராட்டவாதிகளின் சுமார் 20 பிரதிநிதிகள் அந்த விவகாரம் குறித்து விவாதிக்க குலசேகரனுடன் பின்னர் நாடாளுமன்றத்திற்குள் சென்றனர்.…
தேர்தல் விதிமுறைகள் செம்மைப்படுத்தப்படும்- இசி
தேர்தல் விதிமுறைகளில் காணப்படும் பலவீனங்களைச் சரிசெய்யப் போவதாக தேர்தல் ஆணையம் (இசி) கூறியது. சில விதிமுறைகள் தெளிவற்றிருப்பதால் அவற்றை வெவ்வேறு விதமாக விளக்கப்படுத்திக் கொண்டு சர்ச்சையிடலாம் என இசி தலைவர் அஸ்ஹார் அசிசான் கூறினார். எனவே தேர்தல் சட்டத்தைச் சீரமைக்க ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்போவதாக அவர் சொன்னார்.…
பிரதமர்: இனிமேல் அரசியல்வாதிகளுக்குத் தூதர் பதவி கிடையாது
அரசியல்வாதிகளை மலேசிய தூதர்களாக நியமிக்கும் முந்தைய நிர்வாகத்தின் நடைமுறைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கும். வெளிநாடுகளில் மலேசியத் தூதர்களாக உள்ள அரசியல்வாதிகள் நாட்டுக்குத் திரும்ப அழைக்கப்பட்டு அவர்களின் பணி முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அரசியல்வாதிகளைத் தூதர்களாக நியமிக்க வேண்டாம் என்று வெளியுறவு அமைச்சு…
“வீணான” இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து பாஸ் போட்டியிடக் கூடும்
அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதற்காக ஓர் இடைத் தேர்தலை உருவாக்கும் திட்டத்தை பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் இன்று குறைகூறினார். அன்வாருக்காக ஒரு நாடாளுமன்ற இருக்கை வேண்டுமென்றே காலி செய்யப்பட்டால், பாஸ் பிகேஆர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அன்வாரை எதிர்த்துப் போட்டியிடக் கூடும்…
மகாதிர்: பிகேஆர் விவகாரங்களில் நான் தலையிடுவதில்லை
பிகேஆர் விவகாரங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் மகாதிர் இன்று வலியுறுத்திக் கூறினார். "நான் என்ன செய்துள்ளேன்? நான் அன்வார் அல்லது அஸ்மின் அல்லது வேறு யாரைப்பற்றியும் ஏதேனும் தவறாக கூறியதை யாராவது கேட்டதுண்டா? "இது அவர்கள் கட்சி. நான் தலையிடுவதில்லை", என்று மகாதிர் இன்று நாடாளுமன்றக்…
ஓடாதீர்கள்! வெளிநடப்பை அகோங் கிண்டல் செய்தார்
இன்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பதற்குமுன், பேரரசர் சுல்தான் முகம்மட் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஓடி விடாதீர்கள் என்று கூறினார். நாடாளுமன்றத்தில் எதிரணியினர் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி அவர்களிடம், 'தயவுசெய்து அமருங்கள் மற்றும் ஓடி விடாதீர்கள்" என்று பேரரசர் புன்னகையுடன் கூறினார். இது நேற்று பிஎன்…
இந்தியர்களின் அடையாளப் பத்திரங்கள் விவகாரம் அமைச்சரவைக்கு கொண்டு வரப்பட்டது, சேவியர்
இவ்வாரம் திங்கட்கிழமை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட டாக்டர் சேவியர் ஜெயக்குமார், மறுநாள் புத்ரா ஜெயாவிலுள்ள நீர் நிலம் இயற்கை வள அமைச்சில் அமைச்சின் அதிகாரிகளைச் சந்தித்து அமைச்சரவை பணிகள் குறித்து விளக்கம் பெற்றதாக கூறினார் தமது அமைச்சின் பணிகள் முன்பு நீர், மின்சாரம், பச்சை தொழில்நுட்பம், இயற்கை…
மாவ்கோம் தலைவருக்கு ரிம85,000 சம்பளமா? நியாயமற்றது என்கிறது பினாங்கு எம்டியுசி
மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் பினாங்கு கிளை, போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் நேற்று மலேசிய வான் போக்குரவத்து ஆணைய (மாவ்கோம்)த் தலைவரின் மாதச் சம்பளம் ரிம85,000 என்று அறிவித்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளது. இவருக்கே இவ்வளவு என்றால், நிலப் போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்), தேர்தல் ஆணையம் முதலிய மற்ற …
இரண்டாவது சுற்று விசாரணைக்காக எம்ஏசிசி-இல் நஜிப்
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எஸ்ஆர்சி இண்டர்நேசனல்மீதான விசாரணைக்காக இன்று காலை மணி 9.45க்கு மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய தலைமையகம் வந்தார். இன்று நடப்பது இரண்டாவது சுற்று விசாரணை. தொடக்க விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுமார் ஐந்து மணி நேரம் நஜிப் துருவித் துருவி விசாரிக்கப்பட்டார். அவ்விசாரணை …
நஜிப் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படலாம் என்று காடிர் எதிர்பார்க்கிறார்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் (எம்எசிசி) வாக்குமூலம் அளிக்கும் போது முன்னாள் பிரதமர் கைது செய்யப்படலாம் என்று மேன்மக்கள் மன்றத்தின் பேச்சாளர் எ. காடிர் ஜாசின் எதிர்பார்க்கிறார். இது போல் முன்பு நடந்துள்ளது. பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கோர்புரேசனில் நடந்ததாக கூறப்படும் ஊழல்கள் குறித்து அதன்…
இஸ்தானா நெகாராவில் மகாதிர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்
14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பக்கத்தான் ஹரப்பானின் தலைவர் மகாதிர் நாட்டின் ஏழாவது பிரதமராக இன்று மாலை மணி 5 க்கு பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்காக இஸ்தானா நெகாராவுக்கு பேரரசரால் அழைக்கப்பட்டிருந்தார். மகாதிர், அவரது துணைவியார் சித்தி ஹாஸ்மா அலி மற்றும் இதர…
மகாதிர்: ஹரப்பான் 112க்கும் கூடுதலான இருக்கைகளைப் பெற்றுள்ளது, இசி பாரத்தில்…
அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவைப்படும் 112க்கும் கூடுதலான நாடாளுமன்ற இருக்கைகளை ஹரப்பான் கூட்டணி பெற்றுள்ளது என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் கூறிக் கொண்டுள்ளார். பெட்டாலிங் ஜெயா, ஷெரடன் ஹோட்டலில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மகாதிர், ஹரப்பான் ஆறு மாநிலங்களை - பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா,…
தேர்தல் களத்தில் நாடு
இன்று நடைபெறும் 14 ஆவது பொதுத் தேர்தலில் காலை மணி 8.00 லிருந்து 14,449,200 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிப்பார்கள். வாக்காளர்கள் 687 வேட்பாளர்களிலிருந்து 222 நாடாளுமன்ற உறுப்பினர்களையும், 1,646 வேட்பாளர்களிலிருந்து 505 மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்வார்கள். வாக்களிப்பின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக இரவு மணி…
கிட் சியாங் இஸ்கந்தர் புத்ரியில் போட்டியிடுகிறார்
டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அவரது பழைய கெலாங் பாத்தா தொகுதியுல், இப்போது இஸ்கந்தர் புத்ரா தொகுதியில், போட்டியிடுவார் என்று நேற்றிரவு டிஎபி உறுதிப்படுத்தியது. அவர் இஸ்கந்தர் புத்ரியில் போட்டியிடுவது பற்றிய முடிவை கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக எடுத்ததாக டிஎபியின் தலைமைச் செயலாளர்…
சுத்தமான தேர்தலா?, விவாதம் நடத்த இசி தலைவருக்கு பெர்சே சவால்
மலேசியாவில் தேர்தல்கள் எப்போதுமே சுத்தமானதாக இருந்திருக்கின்றன என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹசிம் அப்துல்லஈ கூறிக்கொண்டதற்கு அதன் மீது பகிரங்க விவாதம் நடத்துவதற்கு அவருக்கு பெர்சே சவால் விட்டுள்ளது. இன்று மாலை அந்தச் சவால் பல டிவிட்ஸ்கள் மூலம் விடுக்கப்பட்டன. தேர்தல் நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருந்திருக்கின்றன…
சுஹாகாம் பற்றிப் பலருக்குத் தெரியவில்லை, நீதிபதிகளுக்குக்கூட
மனித உரிமை ஆணையம், சுஹாகாம் அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. பொதுமக்கள் பலருக்கு அப்படி ஓர் அமைப்பு இருப்பது தெரியவில்லை. சில நீதிபதிகளுக்குக்கூட அது இருப்பது தெரியவில்லை. வியாழக்கிழமை, சுஹாகாம் ஆணையர் நிக் சலிடா சுஹய்லா நிக் சாலே கோலாலும்பூர், கம்போங் கிரிஞ்சியில், சுஹாகாமை மக்களிடம் பிரபலப்படுத்தும் …
லங்காவியை மேம்படுத்த ரிம1.3 பில்லியன் ஒதுக்கீடு, நஜிப் அறிவிப்பு
லங்காவியில் 11 ஆவது மலேசியத் திட்டத்தின் (11எம்பி) கீழ் ஐந்து புதிய திட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் ரிம1.315 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் நஜிப் இன்று அறிவித்தார். லங்காவி மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் (ரிம500 மில்லியன்), சுகாதார பணியாளர்களுக்கு வீடுகள் (ரிம135 மில்லியன்), பாடாங் மாட்சிராட்டில் புதிய தீயணைப்பு…
வாழ்க்கைச் செலவின உயர்வால் வாக்காளர்கள் ஹரப்பான் பக்கம் வருவர்: முகைதின்
வாழ்க்கைச் செலவின உயர்வு தேர்தலில் எதிரணிக்கு ஆதரவாக மாறப்போகிறது என்கிறார் பெர்சத்துத் தலைவர் முகைதின் யாசின். கடந்த ஈராண்டுகளாக பக்கத்தான் ஹரப்பான் மேற்கொண்ட ஆய்வுகள், மக்களைச் சந்திக்கையில் கிடைத்த பின்னூட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறினார். ”வாழ்க்கைச் செலவினம் உயர வேண்டும் என்பது எங்கள் விருப்பம் அல்ல …
மலேசியாகினி ரிம350,000 நிதி திரட்டும் இலக்கை அடைந்தது
மலேசியாகினி அதன் சட்டப் பாதுகாப்பு நிதி திரட்டல் நோக்கத்தில் வெற்றி பெற்றது. 12 நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட அந்த நிதி திரட்டல் நேற்று அதன் குறிக்கோளை அடைந்தது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மலேசியாகினிக்கும் ரவுப் ஆஸ்திரேலியன் தங்கச் சுரங்க நிறுவனத்திற்கும் இடையிலான வழக்கில் மலேசியாகினி அந்த தங்கச் சுரங்கத்திற்கு…
இனரீதியான பிளவைத் தடுக்கவே பிரதமர் வேட்பாளராக மகாதீர்
எதிர்வரும் பொதுத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மட்டுமின்றி நாட்டுக்கே மிக முக்கியமானது. நாடு சுதந்திரத்திற்குப் பின், 60 ஆண்டுகளில் மிகச் சிக்கலான ஒரு காலக்கட்டத்தில் பயணிக்கிறது என்பதை அனைவரும் அறிவோம், நாட்டு மக்கள் ஒன்றுபட்டு இந்நாடைக் காப்பாற்றாவிடில் இந்நாடே கடனில் மூழ்கும், நமது மக்கள் அவர்களின்…























