எரிபொருள் மானியங்கள் Budi95 திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் RON95 பெட்ரோலுக்கான ஒதுக்கீட்டை அரசாங்கம் ஒரு மாதத்திற்கு 150 லிட்டராகக் குறைக்க வாய்ப்புள்ளது. இத்திட்டம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது மாதத்திற்கு 300 லிட்டராகவும், கடந்த மார்ச் மாதம் முதல் 200 லிட்டராகவும் இருந்தது. 80 சதவீத மலேசியர்கள் ஒரு மாதத்திற்கு…
முஸ்லிம்கள் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என நஜிப் விருப்பம்
இந்த நாட்டில் மேலும் இணக்கமான எதிர்காலத்துக்காக தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். காசாவில் ஹாமாஸுக்கும் பாத்தாவுக்கும் இடையில் நிகழும் பூசலைச் சுட்டிக் காட்டிய அவர் இறையாண்மை கொண்ட ஒர் அரசாங்கம் மதிக்கப்படுவதற்கு ஒற்றுமையே நிலைக்களனாகும் என்றார் அவர்.…
இசி-யைப் போன்று தேர்தல் பார்வையாளர்களும் பிஎன் சட்டைப் பைக்குள்
"இசி நீண்ட காலமாக பிஎன் பக்கமே சாய்ந்துள்ளது, அதன் பிடியில் உள்ளது. அதனால் அது தூய்மையான, நியாயமான தேர்தல்களை நடத்தும் அரசமைப்பு பொறுப்பை நிறைவேற்றப் போவதில்லை" சபா அரசு சாரா அமைப்பை பார்வையாளர் தகுதியிலிருந்து விலக்குங்கள் என பெர்சே கோரிக்கை சின்ன அரக்கன்: 13வது பொதுத் தேர்தலுக்கு பார்வையாளராக…
நிக் அஜிஸ்: அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் நிராகரிப்பதாகச்…
13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் கூட்டணி வெற்றி பெற்றால் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் பிரதமர் பொறுப்பை ஏற்பதை பாஸ் கட்சியின் syura மன்றம் விரும்பாது எனக் கூறப்படுவதை அந்தக் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் மறுத்துள்ளார். அத்தகைய பொய்கள் பக்காத்தான்…
13வது பொதுத் தேர்தலில் SUPP தீவிர ஆதரவாளர்களையும் இளைஞர்களையும் நம்பியுள்ளது
SUPP எனப்படும் சரவாக் ஐக்கிய மக்கள் கட்சி கடந்த சட்டமன்றத் தேர்தலில் அடைந்த தோல்வியிலிருந்து 13வது பொதுத் தேர்தலில் மீளுவதற்கு புதிய இளம் உறுப்பினர்களையும் தீவிர ஆதரவாளர்களையும் சார்ந்துள்ளது. இவ்வாறு அந்தக் கட்சின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜார்ஜ் சான் கூறுகிறார். சமூகத்தில் உள்ள இளைய தலைமுறையினர் ஆதரவை…
மசீச-வின் ‘மக்கள் நிலைத்தன்மை பேருந்து’
மசீச 'மக்கள் நிலைத்தன்மை பேருந்து' என்ற பெயரில் நடமாடும் செராமா வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. செராஸில் இன்று பண்டார் துன் ரசாக்கில் நிகழ்ந்த அதன் ஆண்டு சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பின் போது பிரச்சார மேடையாகவும் பயன்படுத்தப்படும் அந்த வாகனம் அறிமுகமானது. அந்த திறந்த இல்ல உபசரிப்புக்கு…
தமிழர் இனப்படுகொலையை கண்டும் காணமலிருந்த ஐ.நாவுக்கு கண்டன மனு!
இலங்கையில் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டபோது செயல்பட்ட ஐக்கிய நாட்டுச் சபையினர் அதனை கண்டும் காணாமல் நடந்து கொண்டதாக அண்மையில் வெளியான அச்சபையின் அறிக்கையே கூறுகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஐ.நா செயல்பட்டதை கண்டனம் செய்யும் வகையில் வரும் புதன்கிழமை 13.2.2012-இல் பிற்பகல் 12 மணியளவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள…
‘டாக்டர் மகாதீருடைய குடியுரிமையே பறிக்கப்பட வேண்டும்’
"அடையாளக் கார்டு திட்டம் பெரிய தேசத் துரோகமாகும். சட்டம் இரு பக்கமும் கூர்மையுள்ளது என்பதை அந்த முன்னாள் பிரதமர் மறந்து விட்டார்" டாக்டர் மகாதீர்: அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசமைப்பைத் திருத்துங்கள் ஈப்போ2: ஒருவருடைய பிறப்புரிமையான குடியுரிமையை உலகில் எந்த நாடாவது பறித்தது உண்டா ? குடியேற்றக்காரருக்கு பிரஜாவுரிமை…
ஏழை இந்தியருக்கு இலவச உயர்கல்வி அவசியமா, இல்லையா? மஇகா பதில்…
-சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 9, 2013. பக்காத்தான் மத்திய ஆட்சியைக் கைப்பற்றினால் நாட்டில் இலவசக் கல்வித் திட்டத்தைச் செயல் படுத்தும் என்ற அன்வார் இப்ராகிம் வாக்குறுதி குறித்து இன்றைய தமிழ்ப் பத்திரிக்கைகளில் கேள்வி எழுப்பியுள்ள ம.இ.காவின் தேசிய உதவித் தலைவரும் துணையமைச்சருமான சரவணன், பக்காத்தான்…
நுருலுடன் விவாதம் நடத்துவதை நோங் சிக் நிராகரித்தார்
லெம்பா பந்தாய் தொகுதி மக்கள், தங்களுக்கு யார் அதிக உதவி செய்துள்ளார்கள் என்பதை முடிவு செய்வதற்கு தம்முடன் விவாதம் நடத்த வருமாறு அந்தத் தொகுதியின் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் விடுத்த அறைகூவலை அந்தத் தொகுதின் அம்னோ தலைவர் ராஜா நோங் சிக் ராஜா ஜைனல் அபிடின் நிராகரித்துள்ளார்.…
வான் அகமட்: சிலாங்கூர் சட்டமன்றம் கலைக்கப்படுவது பற்றி இசி-க்கு தெரிவிக்கப்படவில்லை
13வது பொதுத் தேர்தலிலிருந்து தனியாக மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவததற்கு எதிர்த்தரப்புக் கூட்டணியின் கீழ் உள்ள மாநிலங்களிடமிருந்து எந்த யோசனையும் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்துக்கு (இசி) வரவில்லை என அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூறுகிறார். "எடுத்துக்காட்டுக்கு சிலாங்கூர் அரசாங்கம் எங்களிடம் எதுவுமே தெரிவிக்கவில்லை.…
பிகேஆர்: நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக அமாலிலியோ ஜெயிலில் அடைக்கப்பட்டார்
பிலிப்பின்ஸில் குற்றச் செயல் ஒன்றுக்காக தேடப்பட்டு வந்த மானுவல் அமாலிலியோ பிலிப்பீன்ஸுக்கு திருப்பி அனுப்பப்படுவதைத் தவிர்ப்பதற்குச் "சௌகரியமாக" மலேசிய அதிகாரிகள் அவரை கோத்தா கினாபாலு மருத்துவமனை ஒன்றில் தடுத்து வைத்ததாக பிகேஆர் இன்று கூறியது. பிலிப்பின்ஸில் அமாலிலியோவின் நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக பிகேஆர் குழு ஒன்று அங்கு சென்றிருந்த…
தீபக்கின் கூற்றைப் புறக்கணியுங்கள்: நஜிப்புக்கு மகாதிர் அறிவுரை
வணிகரான தீபக் ஜெய்கிஷன் என்னென்னவோ சொல்வார். அதற்கெல்லாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கக் கூடாது என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவர் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”, என செராஸில் செய்தியாளர் கூட்டமொன்றில் மகாதிர் குறிப்பிட்டார். பிரதமர் என்ற முறையில்…
‘அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசமைப்பைத் திருத்த வேண்டும்’
அரசாங்கத்தை எதிர்க்கும் பெர்சே இணைத் தலைவர் எஸ்.அம்பிகா போன்ற வழக்குரைஞர்களின் குடியுரிமையைப் பறிக்க வேண்டுமானால் அரசமைப்பைத் திருத்த வேண்டும். “ஒருவரின் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டுமானால் அரசமைப்பைத் திருத்தியாக வேண்டும். அரசமைப்பைத் திருத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்”, என்று முன்னாள் பிரதமர்…
FCAS-சைத் தேர்தல் பார்வையாளர் நிலையிலிருந்து அகற்றுங்கள்
அண்மையில் சபாவைச் சேர்ந்த ஒர் அரசு சாரா அமைப்பு பிஎன் -னுக்கு பிரச்சாரம் செய்திருப்பதால் அதனை வரும் பொதுத் தேர்தலில் பார்வையாளராக இருப்பதிலிருந்து விலக்கி வைக்குமாறு சபா பெர்சே தேர்தல் ஆணையத்தைக் (இசி) கேட்டுக் கொண்டிருக்கிறது. "தேர்தல் பார்வையாளர்கள் எந்த அரசியல் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக் கூடாது. அவர்கள்…
அஞ்சல் வழி வாக்களிக்க 1,700 வெளிநாட்டு மலேசியர்கள் பதிந்து கொண்டுள்ளனர்
அஞ்சல் வழி வாக்களிப்பதற்கு இது வரையில் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களிடமிருந்து 1,779 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இணையம் மூலம் பதிவு செய்து கொள்ளும் அந்த நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி தொடங்கியது. அந்த விண்ணப்பங்களில் அதிகமானவை ஆஸ்திரேலியாவிலிருந்து கிடைத்தவை என தேர்தல் ஆணையத் துணைத் தலைவர்…
நோங் சிக்-கின் லெம்பா பந்தாய் போராட்டத்தில் ஷாரிஸாட் நிழல் பின்…
"வாக்காளர்கள் எந்த ஒரு ஊழலையும் பொருட்படுத்தக் கூடாது என ராஜா நோங் சிக் சொல்கிறார். இது தான் புதிய வழக்கமா ? அல்லது ஊழல்களை நாம் பொருட்படுத்தாத அளவுக்கு நாம் என்ன ஜடங்களா (உணர்வு இல்லாதவர்களா) ?" என்எப்சி ஊழல் தம்மைப் பாதிக்காது என்கிறார் நோங் சிக் சின்ன…
22 டெனுடின் தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டித்தர ஒப்பந்தம்
செமிஞ்கி டெனுடின் தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் 22 பேருக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தருவதற்கு இன்சே கென்னத் தோட்டத்துடன் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இன்று காலை மணி 10.30 க்கு அந்த ஒப்பந்தம் இஞ்சே கென்னத் தோட்ட உரிமையாளருக்கும் சம்பந்தப்பட்ட 22 முன்னாள் தொழிலாளர்களுக்கும் இடையில் காஜாங் நகராட்சி மன்ற…
விவாதத்திற்கு வாருங்கள் என நுருல் இஸ்ஸா, ராஜா நோங் சிக்-கிற்குச்…
லெம்பா பந்தாய் தொகுதியில் நிலவுகின்ற வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தாம் தவறி விட்டதாக கூறப்படுவது மீது தம்முடன் விவாதம் நடத்த வருமாறு கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நோங் சிக் ஜைனல் அபிடினுக்கு பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் சவால் விடுத்துள்ளார்.…
பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக யாசிட், ஹலிமா ஆகியோர்மீது குற்றச்சாட்டு
பாதுகாப்புக் குற்றச் சட்ட(சோஸ்மா)த்தின்கீழ் கைது செய்யப்பட்ட மூவரில் இருவர்மீது பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்ததாக இன்று அம்பாங் மெஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. “நீங்கள் ஒரு சித்தாந்த நோக்கில் தெரிந்தே பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்து வந்துள்ளீர்கள். உங்கள் செயல்கள் சீரியா நாட்டு சிவிலியன்களுக்குப் பாதகமானவை”, என்று யாசிட் சுவாட் (வலம்)…
லிம் குவான் எங்: துணைப் பிரதமர் சொன்ன ‘முட்டாள்’ என்ற…
பினாங்கில் நடத்தப்படும் பிஎன் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்புக்கு மக்கள் மூன்று வண்ணங்களிலான ஆடைகளை அணிந்து செல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட முதலமைச்சர் லிம் குவான் எங் 'முட்டாள்' துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறிய கருத்து 'இனவாதத் தன்மையைக்' கொண்டது எனச் சாடப்பட்டுள்ளது. அந்த…
ரோனி லியுவின் உதவியாளர் திடீர் பதவி விலகல்
சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியுவின் சிறப்பு உதவியாளர் ஜப்ரி நோர்டின், இன்று திடீரென பதவி விலகினார். ரோனிமீதும் டிஏபிமீதும் அதிருப்தி ஏற்பட்டதன் காரணமாகவே பதவி விலகுவதாக அவர் இன்று பினாங்கில் அறிவித்தார். தம் குடும்பம் மற்றும் தமது பாதுகாப்பை எண்ணி அஞ்சித்தான் பதவி விலகல் அறிவிப்பை சிலாங்கூரில்…
குறைபாடுள்ள சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள் என எம்னெஸ்டி சாடல்
உலக அளவில் உரிமைகளுக்காக போராடும் தரப்பான எம்னெஸ்டி இண்டர்நேசனல், மலேசியாவில், பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி “பெரும் குறைபாடுடைய” புதிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவரையும் விடுவிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என மலேசியாவை வலியுறுத்தியுள்ளது. இரு ஆடவரும் ஒரு பெண்ணும் “பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு”த்…
13வது பொதுத் தேர்தலுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என இசி…
13வது பொதுத் தேர்தலுக்கு சுமூகமாக நடைபெறும் பொருட்டு அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையம் (இசி) பெர்சே 2.0ன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனை கடுமையாக எச்சரித்துள்ளது. வெளிநாட்டு மலேசிய வாக்காளர்கள் தொடர்பான அம்பிகா அறிக்கைகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த நாட்டின் ஜனநாயக நடைமுறைகள் மீதான…


