பிரதமரின் மதிப்பு ஒரு பக்கம் சற்றுக் குறைந்தது மறுபக்கம் சீனர்களின்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தரமதிப்பீடு மே மாதம் 65விழுக்காட்டிலிருந்து ஜூனில் 64 விழுக்காட்டுக்குக் குறைந்தது. மலாய்க்காரர்களிடையேயும்  இந்தியர்களிடையேயும் அவரின் மதிப்பு குறைந்தது இதற்குக் காரணம். ஜூன் மாத இறுதியில் மெர்டேகா ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் நஜிப்பின் செயல்பாடுகளுக்கு மலாய்க்காரர்களிடையே இருந்த வரவேற்பு 75விழுக்காடு.இது, மே மாதம்…

இண்ட்ராப்: கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கொள்கையைக் கைவிடுக

கார்களைத் திரும்ப எடுத்துக்கொள்ள உரிமம் வழங்கும் கொள்கையை மீட்டுக்கொள்ள வேண்டும் Read More

போனஸ் கொடுப்பதில் நஜிப்பை முந்திக்கொண்டது சிலாங்கூர்

சிலாங்கூர் அரசு ஹரி ராயா போனஸ் அளிப்பதில் பிஎன் அரசாங்கத்தை மிஞ்சி விட்டது.மாநில அரசு ஊழியர்களுக்கு அரைமாதச் சம்பளத்தை போனசாகவும் அதற்குமேல் ரிம200 சேமிப்புத் தொகையாகவும்  வழங்குகிறது. கூட்டரசு அரசின் போனஸ் ஆகஸ்ட் மாதம் கொடுக்கப்படும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்துள்ள வேளையில் மாநில அரசின்…

லினாஸ் இணையத்தளம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது

குவாந்தான், கெபெங்கில் லினாஸ் அரியமண் சுத்திகரிப்பு ஆலையை அமைத்துவரும் லினாஸ் கோர்ப்-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இன்று மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த இணையதளத்தை, லினாசை நிறுத்துக, மலேசியாவை காப்பாற்றுக என்று எழுதப்பட்ட கருப்புநிறக் கணினித்திரை மூடிக்கொண்டிருந்தது. அரசாங்கத்திடம் தற்காலிக உரிமம் (டிஓஎல்) பெற்றுள்ள அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளை எதிர்ப்புத் தெரிவிக்க…

‘டான்ஸ்ரீகள்’கூட போலிப் பல்கலைக்கழகப் பட்டங்களை வாங்குகிறார்கள்

சமுதாயத்தில் பேரும் புகழும் பெற்று விளங்கும் சில பெருமக்கள் - அவர்களில் சிலர் டான்ஸ்ரீகள் - போலிப் பல்கலைக்கழகப் பட்டங்களை, அண்மையில் சிலாங்கூர் போலீஸ் முறியடித்த ஒரு கும்பலிடம் விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்கள். “அவர்களில் பலர் சமுதாயத்தில் உயர்வாக மதிக்கப்படுபவர்கள்”, என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் துன் ஹிசான் துன்…

லிம்:பெர்சேமீது எல்லாத் தாக்குதலையும் பிஎன் அரசு நிறுத்த வேண்டும்

செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்து பிஎன் அரசு துப்புரவான,நியாயமான தேர்தலுக்காக போராடும் கூட்டணி(பெர்சே)மீது எல்லாத் தாக்குதல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். “(உள்துறை அமைச்சர்)ஹிஷாமுடின் உசேனுன் பிஎன் அரசும் விவேகமாகவும் நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடந்து கொள்ள…

அரசாங்க ஊழியர்களுக்கு போனஸ், பிரதமர் அறிவித்தார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அரசாங்க ஊழியர்களுக்கு பாதி-மாதச் சம்பளம் போனசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.குறைந்த பட்சம் ரிம500 வழங்கப்படும்.அதேவேளை பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சிறப்புத் தொகையாக ரிம500 பெறுவார்கள். இந்த போனஸ் ஆகஸ்ட் 9-ல் வழங்கப்படும் என்று இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர் கூறினார்.…

சாபாவில் பிஎன் பாதிக்கு மேற்பட்ட இடங்களை இழக்கலாம்

அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன், சாபாவில் 60விழுக்காட்டுக்கு மேற்பட்ட இடங்களை இழக்கும் சாத்தியம் இருப்பதாக சாபாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். பிஎன் இப்போது வைத்துள்ள 22இடங்களில் 14-ஐ இழக்கலாம் என்று யுஐடிஎம் சாபா விரிவுரையாளர் ஆர்னல்ட் புயோக் கூறினார். கோத்தா கினாபாலு, சண்டாகான், பென்சியாங்கான் ஆகிய…

கெடாவில் பிஎன் வெற்றி பெற்றால் முக்ரிஸ் மந்திரி புசார்

அடுத்த பொதுத் தேர்தலில் கெடாவில் பிஎன் வெற்றிபெற்றால் ஜெர்லுன் சட்டமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதிர் மந்திரி புசார் ஆக வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். அண்மையில் யுனிவர்சிடி உத்தாரா மலேசியா, அம்மாநிலத்தின் 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்திய ஆய்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் புதல்வர் முக்ரிசுக்கு…

லங்காட்2 -க்கு ஜார்ஜ் கெண்ட், கமூடா, லோ & லோ…

அம்பாங் எல்ஆர்டி விரிவாக்கத் திட்டத்தில் சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் ஜார்ஜ் கெண்ட் பெர்ஹாட், லங்காட்2 நீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் குத்தகையைப் பெற முயற்சி செய்யக்கூடும். அதனுடன் கமுடா பெர்ஹாட், லோ&லோ கார்ப்பரேசன் ஆகியவையும் போட்டியிடலாம் எனக் கருதப்படுகிறது. ஜார்ஜ் கெண்ட், பகாங்கிலிருந்து சிலாங்கூருக்கு சுத்திகரிக்கப்படாத நீரைக் கொண்டுவரும் திட்டத்தில்…

ஏஜியைத் தூண்டிவிட முயல்கிறாரா கைரி?

ஏப்ரல் 28பேரணியில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்குப் பொறுப்பேற்கும் கடப்பாட்டிலிருந்து பெர்சே விடுவிக்கப்படவில்லை என்று அம்னோ இளைஞர் தலைவர் ஜமாலுடின் அபு பக்கார் கருத்துத் தெரிவித்திருப்பது சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ரின் பணியில் குறுக்கிடுவதற்கு ஒப்பாகும். சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரம் ஏஜிக்கு மட்டுமே உண்டு என்று பாஸ் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி…

பெர்சே பேரணியில் போலீசை சீண்டிவிட்டவர்கள் சில இளைஞர்கள்

ஏப்ரல் 28-இல், பெர்சே பேரணியில் சாதாரண உடை அணிந்திருந்த மூன்று நான்கு இளைஞர்கள், போலீசாருக்கு சினமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) நடத்தும் பொதுவிசாரணையில் இன்று கூறப்பட்டது. பொது விசாரணையில் 14-வது சாட்சியாக சாட்சியமளித்த சுற்றுப்பயண வழிகாட்டியான கரம் சிங்,அந்த மூன்றுநான்கு பேரும் ஜாலான் துவாங்கு அப்துல்…

பெர்சே தீர்ப்பு: உள்துறை அமைச்சருக்கு செம அடி!

உங்கள் கருத்து: “முக்கியமான விசயம் என்னவென்றால்,பெர்சே கெட்டதோ, தீமையானதோ அல்ல என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.” பெர்சே ‘சட்டவிரோத’ அமைப்பல்ல, நீதிமன்றம் தீர்ப்பு  ஸ்டார்: பெர்சேக்கு பாராட்டு! அத்தீர்ப்பு அரசாங்கம் சொல்வது செய்வது எல்லாமே நியாயமாகிவிடாது என்பதைக் காண்பிக்கிறது. நிர்வாகம் சீராக நடைபெற முறையான சரிபார்த்தலும் சரிக்கட்டலும் தேவை. அரசாங்கத்தின்…

சுமத்ராவில் நிலநடுக்கம்,அதிர்வுகள் மலேசியாவில் உணரப்பட்டன

ரிக்டர் அளவைக்கருவியில் 6.4 என்று பதிவான ஒரு நில நடுக்கம் இந்தோனேசிய தீவான சுமத்ராவின் மேற்குக்கரைக்கு அப்பால் நிகழ்ந்துள்ளது என்று ஏஎப்பி செய்தி நிறுவனம் கூறியது. நிலநடுக்கத்துக்கு அஞ்சி வீட்டை விட்டு வெளியேறி ஓடிய ஒரு மனிதர் அதிர்ச்சியில் இறந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர். காலை மணி 7.30க்கு…

சிலாங்கூர் நீர் விவகாரம்மீது கருத்துக்கணிப்பு; பிஎஸ்எம் வரவேற்கிறது

மாநில நீர் விவகார நிர்வாகம் மீது ஒரு கருத்துக்கணிப்பை நடத்த வேண்டும் என்று மலேசிய சோசலிசக் கட்சி(பிஎஸ்எம்) சிலாங்கூர் அரசைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வன், இருக்கும் வசதிகளையும் மாநில வாக்காளர் பட்டியலைக் கொண்டும் கருத்துக்கணிப்பை நடத்தலாம் என்று கூறினார். ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூரா அல்லது…

அரசு பெர்சேயைத் தீயதாகக் காண்பிக்க முயல வேண்டாம்

பெர்சே ஒரு சட்டவிரோத அமைப்பல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அதைத் தீயதாக உருவகித்துக் காட்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி வலியுறுத்தியுள்ளார். “சட்ட அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.பிஎன் குற்றச்சாட்டுகளால் பெர்சே பற்றி நிலவிய தப்பெண்ணங்களையெல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டும்”, என்று பாஸ்…

பெர்சே “சட்டவிரோதமான அமைப்பு” அல்ல, நீதிமன்றம் தீர்ப்பு

கடந்து ஆண்டு ஜூலை 1 இல் பெர்சே (தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்கள் கூட்டணி) ஒரு "சட்டவிரோதமான" அமைப்பு என்று உள்துறை அமைச்சர் செய்திருந்த அறிவிப்பை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால், அக்கூட்டணியைப் பதிவு செய்யவதற்கான ஆணை கோரி பெர்சே செய்திருந்த இதர இரண்டு கோரிக்கைகளை நீதிமன்றம் வழங்கவில்லை.…

நிக் அசிஸைச் சந்தித்தார் துணை அமைச்சர்

வீடமைப்பு மற்றும் ஊராட்சி துணை அமைச்சர் லாஜிம் உகின், பாஸ் ஆன்மிக தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டை இன்று சந்தித்தார். தங்கள் கட்சியில் சேருமாறு சாபா பாஸ் தலைவர்கள் அந்த பியுஃபோர்ட் எம்பிக்கு அழைப்பு விடுத்த இரண்டு நாள்களுக்குப் பின்னர் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கிளந்தான் மந்திரி…