சொஸ்மா கைது பிலிப்பீன்ஸ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதா ?

2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் மூவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு பிலிப்பின்ஸில் மலேசியப் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் தொடர்புடையது என நம்பப்படுகின்றது. போலீசார் தங்கள் வீட்டில் சோதனை செய்த போது பயங்கரவாதி எனக் கூறப்பட்ட முகமட்…

டாக்டர் மகாதீர் மீண்டும் திசை திருப்புகிறார், அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள்…

"தகுதி இல்லாத குடியேற்றக்காரர்களுக்கு குடியுரிமையும் வாக்களிக்கும் உரிமையும் கொடுத்தது அப்போதும் தப்பு இப்போதும் தப்பு. அவ்வளவு தான்" டாக்டர் மகாதீர்: அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்டவர்கள் பிஎன் -னுக்குத் தான் வாக்களிக்க வேண்டும் என்ற அவசியமில்லை கொதிக்கும் மண்: அடையாளக் கார்டுகள் கொடுக்கப்பட்ட அந்தக் குடியேற்றக்காரர்கள் பிஎன் -னுக்கு வாக்களித்தார்களா…

எரியூட்டுவேன் எனச் சொன்னதற்காக வோங் தாக் மன்னிப்புக் கேட்டார்

கடந்த சில நாட்களில் பெரும் சர்ச்சையை மூட்டி விட்ட ஹிம்புனான் ஹிஜாவ் இயக்கத் தலைவர் வோங் தாக்,  லைனாஸ் அரிய  மண் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எரியூட்டப் போவதாக தான் சொன்னது தவறு என ஒப்புக் கொண்டுள்ளார். தமது கருத்து இளைய தலைமுறை மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும்…

அன்வாருடன் விவாத மேடை – 14.2.2013

தேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால்  அரசியல் கொள்கைகள் எவ்வாறு அமையும் என்பதை எதிரணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் விளக்கக் கோரும்  விவாத மேடையொன்றை  செம்பருத்தி.கொம் இணையத்தளம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி வரும் 14.2.2013 வியாழக்கிழமை  மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் மாலை மணி 7.30-க்கு நடைபெறும் என…

முன்னாள் இசா கைதி, புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து…

2012ம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் முன்னாள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) கைதியான யாஸிட் சுபாட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் முதலாவது நபர் அவராக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. அவரையும் அவரது சக…

பிஎன் -னுக்கு ஆதரவளிக்குமாறு சீன செல்வந்தர்களுக்கு முஸ்தாப்பா வேண்டுகோள்

பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் அனைத்துலக வாணிக, தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட், வரும் தேர்தலில் பிஎன் -னை ஆதரிக்குமாறு சீன செல்வந்தர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். கோலாலம்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் மலேசிய கூட்டு சீன வர்த்தக, தொழிலியல் சங்கத்துடன் இணைந்து இன்று அவரது அமைச்சு…

Muafakat: மலாய் பைபிள்களில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை தற்காக்க…

மலாய் மொழி பைபிள்களில் இறைவன் என்ற சொல்லுக்கு மலாய் மொழி பெயர்ப்பாக 'அல்லாஹ்' என்னும் சொல்லைப் பயன்படுத்துவதைத் தற்காக்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்பு ஒன்று சமயங்களுக்கு இடையிலான ஆலோசனை மன்றத்தை எச்சரித்துள்ளது. கூட்டரசு அரசமைப்புக்கு முரண்பாடாக இருக்கும் தங்கள் அறைகூவல்களினால் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகள் பற்றி  MCCBCHST…

அங் பாவ் குறித்து குறை சொல்ல வேண்டாம்: ஏழைக் குடும்பங்களுக்கு…

அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் 450 ஏழைக் குடும்பங்களுக்கு அங் பாவ் கொடுக்கப்பட்ட விதம் குறைகூறப்பட்டுள்ளது. முந்திய ஆண்டில் கொடுக்கப்பட்ட தொகையில் பாதிதான் இவ்வாண்டில் அங் பாவாகக் கொடுக்கப்பட்டிருப்பதுதான் குறைகூறலுக்குக் காரணமாகும். செராஸ் டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டான் கொக் வாய் (படத்தில் வலப்பக்கம் கடைசியாக இருப்பவர்), தம் தொகுதியில்…

பிகேஆர்: இரண்டாவது சவப் பரிசோதனையைத் லியோ தடுக்கப் பார்க்கிறார்

போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டார் என்று கூறப்படும் சி.சுகுமார் மீது இரண்டாவது சவப் பரிசோதனை நடைபெறுவதைச் சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய் தடுக்க முயல்கிறார் என பிகேஆர் சாடியுள்ளது. போலீசிடமிருந்து எழுத்துப்பூர்வமான உத்தரவு இல்லையென்பதால் மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையம் இரண்டாவது சவப் பரிசோதனை நடத்த மறுப்பதாக பிகேஆர்…

‘கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதாகச் சொல்லப்படுவதை டிஏபி-யின் அரிபின் மறுக்கிறார்

பல்கலைக்கழகம் ஒன்றில் தேவாலயம் ஒன்றை அமைக்கும் நோக்கத்துடன் கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை டிஏபி தேசிய உதவித் தலைவர் அரிபின் ஒமார் மறுத்துள்ளார். அந்த 'மிகவும் கடுமையான அவதூறு'  UPNM எனப்படும் Universiti Pertahanan Nasional Malaysia பல்கலைக்கழகத்திலிருந்து வந்ததாக அரிபின் பினாங்கில் நிருபர்களிடம்…

தேர்தலில் பிரதமரை எதிர்த்து மாணவர் அமைப்பு ஒன்று வேட்பாளரை நிறுத்தும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை அவரது பெக்கான் தொகுதியில் எதிர்த்துப் போட்டியிடுவதற்கு வேட்பாளர் ஒருவரை முன்மொழியப் போவதாக மாணவர் அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது. நஜிப் நிர்வாகத்தை நிராகரிப்பதாக தான் கூறிக் கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக தான் தேர்தலில் களம் இறங்குவதாக "Gerakan…

‘எந்தக் கட்சி என் புதல்வியைப் பதிவு செய்தது ?’ என…

பினாங்கு இரண்டாவது முதலமைச்சர் பி ராமசாமி, தமது புதல்வியை 'ஒர் அரசியல் கட்சி' செமினியில் ஒரு வாக்காளராகப் பதிவு செய்தது என தேர்தல் ஆணையம் (இசி) விடுத்துள்ள அறிக்கையில் மனநிறைவு கொள்ளவில்லை. கூச்சிங்கில் அண்மையில் இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் வெளியிட்ட அந்த அறிக்கை தம்மை…

என்எப்சி விவகாரம் தம்மைப் பாதிக்காது என்கிறார் நொங் சிக்

முன்னாள் அமைச்சர் ஷாரிசாட் குடும்பம் சம்பந்தப்பட்ட ஃபீட்லோட் கார்ப்பரேசன் (என்எப்சி) ஊழல் விவகாரம்,  லெம்பா பந்தாய் தொகுதியை வெற்றிகொள்ளும் தம் முயற்சியைப் பாதிக்காது என்று கூறுகிறார் கூட்டரசு பிரதேச, நகர்புற நல்வாழ்வு அமைச்சர் ராஜா நொங் சிக் சைனல் அபிடின். “அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கடுமையான உழைப்புத்தான் தேவை”.லெம்பா…

பெர்சே என்எஸ்டி-க்கு எதிராக அவதூறு வழக்கை சமர்பித்தது

ஆங்கில மொழி நாளேடான நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி),  தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே, அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க முயலுவதாக குற்றம் சாட்டி வெளியிட்ட செய்தி தொடர்பில் பெர்சே அந்த நாளேடு மீது அவதூறு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. "நாங்கள் அந்த செய்தியை மிகவுன் கவனமாக ஆய்வு…

மகாதீர்: எதிர்த்தரப்புக் கூட்டணியை விட்டு விலகும் துணிச்சல் பாஸ் கட்சிக்கு…

பாஸ் கட்சி டிஏபி-யை அதிகம் சார்ந்திருப்பதாலும் அதனை நம்புவதாலும் எதிர்த்தரப்புக் கூட்டணியை விட்டு விலகும் துணிச்சல் அந்தக் கட்சிக்கு இல்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சொல்கிறார். அந்தக் கூட்டணியை விட்டு விலகினால் 13வது பொதுத்தேர்தலில் தனக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்றும் அதனால் தோல்வி…

90 வயதைத் தாண்டிய வாக்காளர்கள் பற்றிய தகவல் இசி குளறுபடிகளை…

"பல ஆயிரக்கணக்கான அந்நியர்கள் வாக்காளர்களாக மாற்றப்பட்டது, ஆவி வாக்காளர்கள், இப்போது முதிர்ந்த வயதுடைய வாக்காளர்கள் ஆகிய தகவல்கள் வாக்காளர் பட்டியல் மீதான சந்தேகங்களையே அதிகரித்துள்ளன." நூறு வயதை எட்டியவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆய்வு கண்டு பிடித்துள்ளது உங்கள் அடிச்சுவட்டில்: தேர்தல் ஆணையம் எப்போதும் கோமாளித்தனமான பதில்களையே…

‘செரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்’

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், பெப்ரவரி 6, 2013. கடந்த 4-2-2012 தமிழ் நாளிதழ்களில் வெளிவந்துள்ள  செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர்  நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி அங்கு வருகை…

பொர்ன்திப்-பைக் கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல் அளித்தது

ஜனவரி 23ம் தேதி போலீஸ்காரர்களினாலும் கும்பல் ஒன்றினாலும் அடிக்கப்பட்டு மரணமடைந்ததாக கூறப்படும் சி சுகுமார் மீது இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்துவதற்கு பிரபலமான தாய்லாந்து உடற்கூறு நிபுணரான டாக்டர் பொர்ன்திப் ரோஜாசுனானந்-தை அனுமதிப்பதற்குத் தேவையான ஆவணங்களை வெளியிடுவதற்குச் சுகாதார அமைச்சு ஒப்புக் கொண்டுள்ளது. புத்ராஜெயாவில் நிகழ்ந்த ஒரு சந்திப்பின்…

தீபக்: எனது நிறுவனத்தை வாங்குமாறு பிரதமர் Boustead-க்கு ஆணையிட்டார்

கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன், தமக்குச் சொந்தமான Asta Canggih Sdn Bhd-டை Boustead Holdings Bhd வாங்கியதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ளார். குளறுபடியான நிலப் பேரத்தில் சம்பந்தப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்காக நஜிப் அதனைச் செய்தார் என தீபக்…

லிம் குவான் எங்: என் குடும்பத்தினர் பற்றிய ‘பொய்கள்’ என்னைக்…

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் சகோதரி வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எண்ணம் கொண்டுள்ளார் என்ற 'பொய்யான' செய்தியை வெளியிட்டதின் மூலம் தி ஸ்டார் நாளேடு மீண்டும் லிம்-மைக் காயப்படுத்தியுள்ளது. "அது தி ஸ்டார் ஏட்டின் முழுமையான பொய். அந்த ஏடு சில வலைப்பதிவுகளிலிருந்து அதனை எடுத்துள்ளது. …

முன்னாள் ஐஜிபி: எல்லா ‘திடீர் மரணங்களையும்’ கொலைகள் என புலனாய்வு…

உலு லங்காட்டில் ஜனவரி 23ம் தேதி பாதுகாவலரான சி சுகுமார் மரணமடைந்தது உட்பட எல்லா 'திடீர் மரணங்களையும்' கொலைகள் என புலனாய்வு செய்யுமாறு முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் போலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார். "திடீர் மரணம்' சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நடத்தப்படும் புலனாய்வு கொலையைப் போன்றதாகவே…

கேஎல்112-இல் கலந்துகொண்ட ஆயுதப் படையினருக்குப் பிரச்னை

கடந்த மாதம் ஹிம்புனான் கெபாங்கித்தான் ரக்யாட் (அல்லது கேஎல்112)-இல் கலந்துகொண்ட ஆயுதப்படை வீரர்கள் அறுவருக்கு எதிராக “ஆயுதப் படைக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்திவிட்டதாக”க் குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம். அறுவரில் ஐவர் அரச மலேசிய கடற்படையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இராணுவத்தைச் சேர்ந்தவர். அவர்கள் 1972 ஆம் ஆண்டு ஆயுதப்…

ஓர் அரசியல் கட்சி ராமசாமியின் புதல்வியை பதிவு செய்துள்ளது

தமக்குத் தெரியாமல் வாக்காளராகத் தாம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறிக் கொண்டுள்ள பினாங்கு இரண்டாவது முதலமைச்சர் பி ராமசாமியின் புதல்வியை ஓர் அரசியல் கட்சி வாக்காளராகப் பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் (இசி) விளக்கியுள்ளது. 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி செமினி சட்டமன்றத் தொகுதியிலும் உலு லங்காட்…