இராகவன் கருப்பையா - மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு மறைந்த ஊடகவியலாளர்கள் எம்.துரைராஜ் மற்றும் ஆதி குமணன் போன்றோர் தலைவர்களாக இருந்த காலக்கட்டம் உள்நாட்டுத் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு பொற்காலம் என்றால் அது மிகையில்லை. எம்.துரைராஜ் கடந்த 1977ஆம் ஆண்டிலிருந்து 1987ஆம் ஆண்டு வரையிலும் அதனைத் தொடர்ந்து ஆதி குமணன்…
நஸ்ரி: அம்னோ தனித்துச் செயல்படுவதே நல்லது, பிஎன் முடிந்துபோன கதை
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசீஸ், மீண்டும் எழுந்து நிற்க முடியாத கட்சிகளுடன் பிஎன்னில் இணைந்திருப்பதைவிட அம்னோ தனித்துச் செயல்படுவதே நல்லது என்கிறார். பிஎன் கூட்டணி என்பது “முடிந்துபோன கதை” என நஸ்ரி குறிப்பிட்டதாக ஃப்ரி மலேசியா டுடே இணையச் செய்தித்தளம் கூறிற்று. “தீவகற்ப மலேசியாவில் தனியாக …
நாட்டின் தலைமை நீதிபதி பதவி விலகல்
துன் ராவுஸ் ஷெரீஃப், நாட்டின் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிய வேளை, சுல்கிஃப்ளி அகமட் மகினுடின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். தலைமை பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஜூன் 7-ஆம் தேதி, யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு அவர்கள் இருவரும் பதவி விலகல் கடிதங்களை…
சரவாக் கட்சிகளின் வெளியேற்றம் எதிர்பார்க்கப்பட்டதே- அட்னான்
பாரிசான் நேசனலிலிருந்து சரவாக் கட்சிகள் விலகும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சில் செய்தி வெளிவந்துள்ளது. “அவர்கள் அவ்வாறு முடிவு செய்த பின்னர் நம்மால் என்ன செய்ய முடியும்? எதுவும் செய்ய முடியாது. ஆனால், யார் …
பி.என். உடைந்தது, 13 உறுப்புக்கட்சிகளில் நான்கே எஞ்சியுள்ளன
14-வது பொதுத் தேர்தலில், பாரிசான் நேசனல் (பி.என்.) 13 உறுப்புக் கட்சிகளுடன் களமிறங்கியது. இருப்பினும், கடந்த மே 9 தோல்விக்குப் பிறகு, ஒரே மாதத்தில், தற்போது அக்கூட்டணியில் 4 கட்சிகளே எஞ்சியுள்ளன. 1969-ல் நடந்த இனப் படுகொலை துயரத்திற்குப் பின்னர், ஆளுங்கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் இணைக்க, நாட்டின் இரண்டாம் பிரதமர்…
அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்து கூறுகிறார் சேவியர்
டாக்டர் சேவியர் ஜெயக்குமார், கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினர்,தேசிய உதவித் தலைவர் கெஅடிலான் புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லீம் பெருமக்களுக்கும் எனது இதயங்கனிந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதத்தை மிகவும் தூய்மையான, புனிதமான மாதமாக முஸ்லீம் மக்கள் கருதுகின்றனர். இம்மாதத்தில் அவர்கள் விரும்பி, உண்ணும்…
ரிம1.3 பில்லியன் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதற்கு பாகாங் அரசப் பேராளர் மறுப்பு
பாகாங் அரசப் பேராளர் தெங்கு அப்துல்லா சுல்தான் அஹமட் ஷா, ஒரு திட்டத்தில் “உதவியதற்காக” ரிம1.3 கையூட்டுக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். சைனா ரேய்ன்போ இண்டர்நேசனல் இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி (சிஆர்ஐஐசி) அவருக்குப் பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தமக்கு அந்த நிறுவனத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறாரவர். “எனக்கும் …
பிஎன்னுக்கு மேலும் ஓர் இடி: சரவாக் பிஎன் கலைப்பு, புதிய…
சரவாக் பிஎன்னில் நான்கு பங்காளிக் கட்சிகள் விலகிக் கொண்டதை அடுத்து அது கலைக்கப்பட்டது. விலகிய நான்கும் -பிபிபி, எஸ்யுபிபி, பிஆர்எஸ், பிடிபி- சேர்ந்து "Gabungan Parti Sarawak" (ஜிபிஎஸ்)” என்ற பெயரில் புதிய மாநிலக் கூட்டணி ஒன்றை உருவாக்கிக் கொண்டுள்ளன. சரவாக் முதலமைச்சரும் சரவாக் பிஎன் தலைவருமான ஆபாங் …
நஜிப் ஆலோசகர்களுக்கு மாதச் சம்பளம் ரிம200,000?
முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவரின் ஆலோசகர்களுக்கு மாதச் சம்பளமாக ரிம200,000 கொடுத்தாராம். சம்பளம் போக இதர சலுகைகளும் கொடுக்கப்பட்டனவாம். த மலேசியன் இன்சைட் செய்தித்தளம் கூறுகிறது. நஜிப்புக்குப் பல ஆலோசகர்கள். அவர்கள் ரிம70,000- இலிருந்து ரிம200,000வரை சம்பளம் பெற்றதாக ஒரு வட்டாரம் தெரிவித்ததாக அது கூறிற்று.…
Oh, Minister of Manpower, Plantation Executives Union, Sabah…
Dear YB.Mr.Kulasegaran, The Plantations Executives Trade union, Association of Agricultural Executives, Sabah, takes great pleasure in conveying to you its congratulations on your appointment as Minister of Human Resources Pleased to note that you…
‘தேவைப்பட்டால் அட்டர்னி ஜெனரல், வழக்கிலிருந்து விலகிக் கொள்ளலாம்’
தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதற்கு, தனக்கு அறிமுகமான தரப்பினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இருந்து விலகிக்கொள்ளவிருப்பதாக, சட்டத்துறை தலைவர் (ஏஜி) டோமி தோமஸ் உறுதியளித்துள்ளதாக மலேசிய பார் கவுன்சில் தெரிவித்துள்ளது. மலேசியப் பார் கவுன்சில் தலைவர் ஜோர்ஜ் வர்கிஸ், அத்தகைய நிலைமை ஏற்பட்டால், சட்டத்துறை தலைவராக செயல்பட, தேசிய வழக்குரைஞருக்குச் சட்டம்…
பேங்க் நெகாரா பணி நீக்கம் செய்த ஆர்வலர், பிரதமரிடம் மனு…
2016-ல், பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பேங்க் நெகாரா (பிஎன்எம்) ஊழியர் கோகிலா ஞானசேகரன் இன்று பிரதமரிடமும் மனித வளத்துறை அமைச்சரிடமும் ஒரு மனுவைக் கையளித்தார். ஒடுக்கப்பட்ட மக்கள் அணியின் (ஜெரிட்) ஆர்வலருமான கோகிலா, இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்னர், மனித வள அமைச்சில் அமைச்சர்…
APPOINTMENT OF ATTORNEY GENERAL
K. Siladass, June 11, 2018. Hardly a month had passed since Pakatan Harapan took over Putrajaya and it is already facing problems that have been left behind by the previous government. One problem is the…
‘ஜிஇ14-ல் தோல்விகண்ட போதிலும், அரசியல் சமூகப் பணிகள் தொடரும்’, பேராக்…
நடந்து முடிந்த நாட்டின் 14-வது பொதுத் தேர்தலில், பேராக் மாநிலத்தில் போட்டியிட்ட மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) வேட்பாளர்கள் அனைவரும் தோல்விகண்ட போதிலும், கட்சியின் அரசியல் சமூக நல போராட்டங்கள் எந்நிலையிலும் பாதிப்படையாமல், தொடர்ந்து மக்கள் போராட்டத்தைக் கட்சி முன்னெடுத்துச் செல்லும் என நேற்று கூடிய கட்சியின் மாநிலத்…
சுற்றுலா அமைச்சிலிருந்து எம்ஏசிசி ஆவணங்களை எடுத்துச் சென்றது
கடந்த வாரம் எம்ஏசிசி அதிகாரிகள் புத்ரா ஜெயாவில் சுற்றுலா, பண்பாட்டு அமைச்சுக்கு வருகை புரிந்தபோது சில ஆவணங்களை எடுத்துச் சென்றார்களாம். அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தைச் சந்தித்து விட்டுத் திரும்பிய மலேசியச் சுற்றுலா தலைமை இயக்குனர் மிர்ஸா முகம்மட் தைய்ப் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். அவர் மேல்விவரம் தெரிவிக்கத் …
அன்வார்: மகாதிர் பிரதமர் பொறுப்பை ஒப்படைக்க காலவரையறை நிர்ணயிக்கப்போவதில்லை
டாக்டர் மகாதிர் முகம்மட் குறிப்பிட்ட காலத்துக்குள் பிரதமர் பதவியை மாற்றிவிட வேண்டும் என்று காலவரையெல்லாம் விதிக்கப்போவதில்லை என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். “சிலர் நிகழ்ந்துள்ள (பிஎன்னிடமிருந்து பக்கத்தான் ஹரப்பானுக்கு) ஆட்சிமாற்றம் நீடிக்காது என்று நினைக்கிறார்கள். நான் அப்படி எண்ணவில்லை. “அது நீடிக்காமல் உடைந்துபோக எனக்கும் …
குட்டி 1எம்டிபிகள் நிறையவே உண்டு- டயிம்
அரசுத் துறைகளும் ஜிஎல்சிகளும் சம்பந்தப்பட்ட பல முறைகேடுகள் குறித்து பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்குத் தெரிய வந்திருப்பதாக மூத்த ஆலோசகர் மன்ற(சிஇபி)த் தலைவர் துன் டாயிம் சைனுடின் தெரிவித்தார். “குட்டி 1எம்டிபிகள் நிறையவே உள்ளன”, என்று புளூம்பெர்க்கிடம் தெரிவித்த டயிம், “இழப்புகள் மலைக்க வைக்கின்றன. கணக்கிட்டு வருகிறோம். பெரிது மிகப் …
மகாதிர் : மக்களுக்குத் தேவைப்படும் வரை, நான் பணியாற்றுவேன்
துன் டாக்டர் மகாதிர் முகமட், மக்கள் விரும்பும் வரை அல்லது அவரது சேவை மக்களுக்குத் தேவைப்படும் வரை, பிரதமராகப் பணியாற்றத் தயாராக இருப்பதாக கூறினார். "ஆனால், நிச்சயமாக நான் எவ்வளவு காலம் வாழமுடியும் என்பது எனக்குத் தெரியாது," என்று கூறிய அவர், இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனக்கு 95…
நஜிப்மீது குற்றஞ்சாட்டுமாறு புதிய ஏஜியை அவசரப்படுத்தாதீர்- ஸ்ரீராம்
1எம்டிபி விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது குற்றஞ்சாட்ட புதிய சட்டத்துறைத் தலைவ(ஏஜி)ருக்குப் போதுமான அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்கிறார் மூத்த வழக்குரைஞர் கோபால் ஸ்ரீராம். நஜிப்புக்கு எதிராக 2015-இலேயே குற்றப்பத்திரிகை தயாராகி விட்டதாகக் கூறப்பட்டாலும் நஜிப் குற்றம் எதுவும் செய்யவில்லை என்று முன்னாள் ஏஜி …
‘மருத்துவமனையில் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதே என் கே.பி.ஐ.’
அரசாங்க மருத்துவமனைகளில் காத்திருக்கும் செயல்முறைகளைத் துரிதப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவுள்ளதாகப் புதிய சுகாதார அமைச்சர் டாக்டர் ஜுல்கிப்ளி அஹ்மட் உறுதியளித்தார். சில மருத்துவமனைகளால் அவ்வாறு செய்ய முடிகிறது என்றும் நாடு முழுவதும் அதனைச் செயல்படுத்த இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். "இது என் கே.பி.ஐ.-இன் (செயல்திறன் காட்டி அட்டவணை) ஒரு…
புதிய தேசியக் கார் திட்டம், மகாதிர் விருப்பம்
பிரதமர் துன் டாக்டர் மகாதிர் முகமட், ஒரு புதிய தேசியக் கார் திட்டத்தை நிறைவேற்ற விரும்புவதாக வலியுறுத்தியுள்ளார், புரோட்டனின் கிட்டத்தட்ட பாதி பங்கு சீனாவிற்கு விற்கப்பட்ட நிலையில். “புரோட்டன் இப்போது தேசியக் கார் இல்லை. "அது இப்போது சீனாவுக்குச் சொந்தமானது. "ஆசிய நாடுகள் மற்றும் நமது பங்காளிகளின் உதவியுடன்…
நஜிப் மீது குற்றம் சாட்டுவதில் அவசரம் வேண்டாம், மகாதிர் எச்சரிக்கிறார்
1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் மீது குற்றம் சாட்டுவதில் அவசர நடவடிக்கைகள் எடுக்கும் முயற்சிக்கு எதிராக பிரதமர் மகாதிர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "நாம் எப்போது நஜிப்பை கைது செய்யப் போகிறோம் என்பதற்காக பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது அவ்வளவு சுலபமானதல்ல. நீதிமன்றம் ஏற்றுகொள்ளக்கூடிய ஆதாரங்களை…
ஹரப்பான் வழியில் போராடுவீர்: அம்னோவுக்கு பங் அறிவுறுத்து
அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பங் மொக்தார் ரடின், மே 9 பொதுத் தேர்தல் தோல்வியால் துவண்டு போன தம் தீவகற்ப சகாக்களுக்கு பயனான எதிர்க்கட்சியாக விளங்குவது எப்படி என்று ஆலோசனை கூறியுள்ளார். மலேசியாகினியிடம் உரையாடிய பங், பக்கத்தான் ஹரப்பான் எதிரணியில் இருந்தபோது எப்படிச் செயல்பட்டதோ அதே முறையில் அம்னோவும் …
கிட் சியாங்: 1998 மக்கள் எழுச்சி மீண்டும் நிகழாது
டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், 1998-இல் டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராகவும் அன்வார் இப்ராகிம் துணைப் பிரதமராகவும் இருந்தபோது நிகழ்ந்த மக்கள் எழுச்சி போன்று மீண்டும் ஒன்று நிகழ வாய்ப்பில்லை என்று நம்புகிறார். கடந்த 20 ஆண்டுகளில்தான் எத்தனை மாற்றங்கள். அத்தனையும் நல்லதுக்கென்றே தோன்றுகிறது என்றாரவர்.…