ஜிஇ14 புறக்கணிப்பு பிரச்சாரம் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலானது

’14-வது பொதுத் தேர்தலில் ஓட்டு போடாதீர்கள்’ மற்றும் ‘வாக்குகளைச் சேதமாக்குங்கள்’ பிரச்சாரங்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாத, எதிர்க்கட்சி வாக்காளர்களின் சமூக தளங்களில் மட்டுமே வலம் வருகிறது. பாரிசான் நேசனல் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதை உறுதி செய்ய, பிஎன் ஆதரவாளர்கள், 14-வது பொதுத் தேர்தலில் கண்டிப்பாக ஓட்டு…

எம்ஏசிசி எம்.ஆர்.எஸ்.எம். துணை முதல்வரைத் தடுத்து வைத்தது

மாரா கல்லூரியில் (எம்.ஆர்.எஸ்.எம்) மாணவர்களுக்குப் பொருட்கள் விநியோகம் செய்யும் ஒப்பந்தத்தில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), அக்கல்லூரியின்  துணை முதல்வரைக் கைது செய்தது. அவரோடு, அவரின் 24 வயது மகனும் நிறுவனம் ஒன்றின் 40 வயது உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும்,…

ஜோகூரை ஹரப்பான் கைப்பற்றுவது சிரமம், கான் கூறுகிறார்

  எதிர்வரும் பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் ஜோகூரில் பெருமளவில் வெற்றி பெரும் சாத்தியத்தைக் கொண்டிருக்கவில்லை என்று ஒரு சிறந்த வருங்காலத்திற்கான மையம் (சென்பெட்) என்ற அமைப்பின் கூட்டுத் தலைவர் கான் பிங் சியு கூறுகிறார். கான் கூறுவது சரியானதாக இருக்குமானால், 14 ஆவது பொதுத் தேர்தலில் மத்திய…

ஆயர் ஹீத்தாம் தொகுதி – டிஎபி, அமனா மீண்டும் பேச்சுவார்த்தை

ஜோகூர், ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவது டிஎபியா அல்லது அமனா என்பது பற்றிய வியூகத்தை வகுப்பதற்கு பக்கத்தான் ஹரப்பானின் பங்காளிக் கட்சிகளான அவ்விரண்டும் மீண்டும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, அத்தொகுதி அமனா வேட்பாளருக்கு கொடுக்கப்படும், ஆனால் அவர் டிஎபியின் சின்னத்தின் கீழ் போட்டியிருவார்…

மாய்ம் : கூடுதலாக 34 சீனப் பள்ளிகளைக் கேட்கும் டொங்…

சீனப் பள்ளிகளின் அறவாரியமான டொங் ஜோங், நாடு முழுவதிலும், கூடுதலாக 34 சீன வகை பள்ளிகளை உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதை, மலேசிய ஆமால் இஸ்லாமி அமைப்பு (மாய்ம்) சாடியுள்ளது. மாய்ம் அமைப்பின், கிளாஸ்தர் கல்வி தலைவர், டாக்டர் அமினி அமீர் அப்துல்லா, ‘இடம் கொடுத்தால் மடத்தைக்…

டிஏபி: மணமான பெண்ணுடன் எம்ஏசிசி தலைவர் காதல் விவகார வழக்கு…

எம்ஏசிசி   தலைவர்   சுல்கிப்ளி   அஹமட்   மணமான  பெண்ணுடன்  உறவு  வைத்துள்ளதாகக்  கூறப்படும்  விவகாரம் மீதான   விசாரணை   எந்த   அளவில்    உள்ளது   என  எதிரணி  எம்பி  ஒருவர்  போலீசை  வினவுகிறார். அவ்விவகாரம்  தொடர்பில்   போலீஸ்  நீண்ட  காலமாக  மெளனம்    சாதிப்பதாக  டிஏபி   துணைத்  தலைவர்   கோபிந்த்   சிங்   டியோ   கூறினார்.…

பிகேஆர்: நஜிப் 1எம்டிபி தவறுகளை ஒப்புக்கொண்டது ஏன்?

பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்   1எம்டிபி-இல்  சில    தவறுகள்   நிகழ்ந்திருப்பதை   ஒப்புக்கொண்டது   பிகேஆர்  தலைமைச்   செயலாளர்    சைபுடின்   நசுத்தியோன்   இஸ்மாயிலுக்கு    சந்தேகங்களைக்  கிளப்பியுள்ளது. அவர்  அதை  ஒப்புக்கொண்ட   நேரம்தான்  அதன்  பின்னே   மறைமுகமான  நோக்கங்கள்  இருக்குமோ  என்று  சைபுடினை  ஐயுற   வைத்துள்ளது. “அவருக்கு   அதில்   சம்பந்தமில்லை    எனக்  காண்பிக்க …

நஜிப் : ஜிஎஸ்டி-யை உயர்த்தும் திட்டம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை

பொருள், சேவை வரி (ஜி.எஸ்.டி) ஆறு விழுக்காட்டிலேயே தொடர்ந்து இருக்கும் என, அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதமர் நஜிப் மீண்டும் வலியுறுத்தினார். இன்று, புத்ராஜெயாவில், “ நான் வாக்குறுதி கொடுக்கிறேன், அரசாங்கம் ஜிஎஸ்டி-யை உயர்த்தாது,” என்று அவர் கூறினார். உலகிலேயே ஆகக் குறைந்த ஜிஎஸ்டி விதிக்கும் நாடு மலேசியா என்றும்…

பெட்ரோல், டீசல் விலை 1 சென் குறைகிறது

இன்று நள்ளிரவு தொடக்கம், பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லரை விலைகள் 1 சென் குறைகிறது. லிட்டருக்கு ரோன் 95, ரோன் 97 முறையே ரிம 2.29 மற்றும் ரிம 2.56-ஆகவும்; டீசலின் விலை லிட்டருக்கு ரிம 2.31-ஆகவும் விற்கப்படும். இவ்விலை நாளை, ஜனவரி 25 தொடக்கம் ஜனவரி 31…

போலிடிவிட்: நேரடிப் போட்டி என்றால் ஜோகூரில் ஹரபான் வெல்லும்

எதிர்வரும்    பொதுத்    தேர்தலில்   ஜோகூரில்  பக்கத்தான்  ஹரபான்  வெல்லும்   என்று  ஆருடம்   கூறும்   சமூக  வலைத்தள   ஆய்வு  மையமான  போலிடிவிட்,   பிஎன்னுடன்  நேரடிப்  போட்டி    நடந்தால்   மட்டுமே    அது   சாத்தியம்  என்கிறது. அம்மாநிலச்  சட்டமன்றத்தில்   56  இடங்கள்  உள்ளன.  அவற்றில்   36  இடங்களில்   அது   வெல்ல   வேண்டும். மும்முனைப் …

மகாதிர்: சாபாவும் சரவாக்கும் மற்ற மாநிலங்கள் போல் அல்ல, எனவே…

கூட்டரசு   அரசாங்கமும்  சாபா      சரவாக்கும்   செய்துகொண்ட    ஒப்பந்தத்தை  மறுபரிசீலனை   செய்ய வேண்டும்   அது,  அவை   கூடுதல்   சுயாட்சி   பெறவும்   மேம்பாடு   காணவும்    அவசியம்     என்கிறார்   டாக்டர்  மகாதிர்  முகம்மட். சாபாவும்  சரவாக்கும்    மற்ற  மாநிலங்கள்போல்    அல்லாமல்  பங்காளிகளாகத்தான் 1963  ஜூலையில்   மலேசியா  ஒப்பந்தத்தின்வழி   மலேசியாவில்  இணைந்தன. “மலேசியாவை  அமைக்க …

உயர் நீதிமன்றம் : ஆன்லைன் அவமதிப்புக்கு எதிரான சட்டத்தில் தவறு…

தொலைத் தொடர்பு, பல்லூடகச் சட்டம் (சிஎம்ஏ) 1998-ன் விதிமுறை,  பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை மீறுவதாக உள்ளதால் அதனை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும் எனும் சுபாங் எம்.பி. ஆர்.சிவராசாவின் விண்ணப்பத்தை, உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சி.எம்.ஏ.-யின் 233-வது பிரிவு, சட்டப்பூர்வமாகவும் மத்திய அரசியலமைப்பின் 10-வது பிரிவை மீறவில்லை…

வெற்றியைக் கொண்டுவந்த அரசாங்கத்திடமே வாக்காளர்கள் திரும்பிச் செல்ல வேண்டும்: மகாதிர்

எந்த  அரசாங்கம்    சாதனைகளைச்   செய்து  தடம்  பதித்துள்ளதோ   அந்த    அரசாங்கத்துக்கே  வாக்காளர்கள்   வாக்களிக்க    வேண்டும்   என்று    டாக்டர்    மகாதிர்  முகம்மட்   வலியுறுத்தினார். இப்போதைய   ஆட்சியில்   மக்கள்   துன்பங்களை   அனுபவிக்கிறார்கள்  என்று   1981-இலிருந்து   2003வரை   ஆட்சியிலிருந்த   முன்னாள்  பிரதமர்   கூறினார். “நாட்டை  மேம்படுத்தும்   திறனை   வெளிப்படுத்திய   அரசாங்கத்திடமே   திரும்பிச்  செல்ல   வேண்டும்.…

1எம்டிபி கணக்கறிக்கை இரகசியமானதல்ல என்று அறிவிக்கக் கோரும் அஸ்மின் முயற்சி…

கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்,     தலைமைக்   கணக்காய்வாளரின்  1எம்டிபிமீதான   கணக்குத்  தணிக்கை  அறிக்கையை  ஓர்  இரகசிய  அறிக்கை  அல்ல   என்று  அறிவிக்க   வேண்டும்  எனக்  கோரி  சிலாங்கூர்  மந்திரி  புசார்   அஸ்மின்   அலியும்   முன்னாள்   அம்னோ   உறுப்பினர்    ஜாஹிட்  முகம்மட்  அரிப்பும்  செய்து  கொண்ட  விண்ணப்பத்தை  நிராகரித்தது. அஸ்மினுக்கும்   ஜாஹிட்டுக்கும்  …

‘மகாதீர் காலமோ, நஜிப் காலமோ, கிளாந்தானின் நிலையில் மாற்றமில்லை’

டாக்டர் மகாதீரோ, நஜிப்போ, இருவரின் ஆட்சி காலத்தின் போதும், கிளாந்தான் மக்களின் நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று பாஸ் கூறியுள்ளது. “முன்பு மகாதீர் அம்னோவின் தலைவர், இப்போது நஜிப், கொள்கைகள் திட்டங்கள் ஒரே மாதிரியானவைதான். நேற்றிரவு, கிளாந்தானில் நடைபெற்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, “மகாதீர் பிரதமராக…

ஃபெல்டா நிலம் குறித்த ரஃபிஸியின் ஆவணங்கள் நாளை வெளியிடப்படும்

கோலாலம்பூர், ஜாலான் செமாராக்கில் உள்ள தனது நிலம், திரும்பப் பெறப்பட்டுவிட்டது என்று ஃபெல்டா அறிவித்த ஒரு வாரத்திற்குப் பின்னர், இன்று பிகேஆர் வேறுவிதமாக விவாதிக்கத் தொடங்கியுள்ளது. “என்னிடம் சில ஆவணங்கள் உள்ளன, அந்த நிலத்தை ஃபெல்டா நிரந்தரமாக இழந்துவிட்டது என்ற என் வாதத்தை மேலும் உறுதிபடுத்த, அவற்றை நான்…

1எம்டிபி-இல் தோல்வி ஏற்பட்டது என்பதை நஜிப் ஒப்புக் கொண்டார்

1எம்டிபி  நிர்வாகத்தில் தோல்விகளும் பலவீனங்களும் இருந்தன என்பதை மறுபடியும் ஒப்புக் கொண்ட பிரதமர் நஜிப், அரசியல் நலன்களுக்காக நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத்த, சில தரப்பினர் இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டினார். இன்று கோலாலம்பூரில், இன்வெஸ்ட்மலேசியா 2018 பேசிய நஜிப், 1எம்டிபி -க்கு வலுவாக சவால்களை இட்டதோடு;…

நஜிப்: சீனாவைவிட இங்கு ஜப்பானிய முதலீடு அதிகம், அதை யாரும்…

மலேசியாவில்    சீனாவைவிட   ஜப்பான்   அதிகம்   நேரடி  முதலீட்டைச்  செய்துள்ளது.  அதற்காக   யாரும்   நாட்டின்  இறையாண்மை  ஜப்பானுக்கு  விற்கப்படுவதாகக்  குறை  சொல்வதில்லை  எனப்   பிரதமர்   நஜிப்   அப்துல்  ரசாக்   சுட்டிக்காட்டினார். “சீனாவிலிருந்தும்  ஹாங்காங்கிலிருந்தும்   ரிம63 பில்லியன்   எஃப்டிஐ   இங்கு  முதலீடு    செய்யப்பட்டுள்ள  வேளையில்   ஜப்பானிலிருந்து   கூடுதலாக,  ரிம70 பில்லியன்  முதலீடு …

ஆத்திரம்கொண்ட பிஎன் ஆதரவாளர்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்- முன்னாள் இசி…

பிஎன்மீது   ஏமாற்றமடைந்தும்   அதன்     தலைமைத்துவத்தை  எதிர்க்கத்   துணிவு   இல்லாதவர்கள்   பேசாமல்  தேர்தலைப்  புறக்கணிக்கலாம்   என    தேர்தல்  ஆணைய  முன்னாள்    தலைவர்   அப்துல்   ரஷிட்   அப்துல்  ரஹ்மான்   கூறினார். “அப்படிப்பட்டவர்கள்  வாக்களிக்கச்  செல்ல   வேண்டாம்  என்கிறேன். “எங்களை   ஆதரிப்பவர்கள்    சென்று   வாக்களிக்கட்டும்”,  என  அந்த  பெர்சத்து   உதவித்    தலைவர்   இன்று …

பொதுப் போக்குவரத்தைப் புறக்கணித்தேனா? புரியாமல் பேசுகிறார் நஜிப் என மகாதிர்…

தேசிய  காரான  புரோட்டோன்மீது  கொண்ட  மோகத்தால்  பொதுப்  போக்குவரத்தைப்   புறக்கணித்தார்  என்று   பிரதமர்  நஜிப்   அப்துல்   ரசாக்  குற்றஞ்சாட்டியிருப்பதைக்  கேட்டு    டாக்டர்   மகாதிர்   முகம்மட்   சிரித்தார். “இப்படிப்பட்ட   பேச்சை  அவர்  கண்ணாடியைப்   பார்த்துத்தான்   பேச   வேண்டும். வேறு  யாரும்   அதைக்  கேட்க   மாட்டார்கள்”,  என  மகாதிர்  புத்ரா  ஜெயாவில்   …

9 நாடாளுமன்ற இடங்களைக் கொண்டு மஇகாவால் இந்தியர்களுக்குப் போராட முடியுமா?

222  நாடாளுமன்ற  இடங்களில்   9-க்கு  மட்டுமே  போட்டியிட  விரும்பும்  மஇகாவால்  இந்திய  சமூகத்தின்  நலன்காக்க   எப்படிப்   போராட    முடியும்  என்று    பிகேஆர் தலைவர்   ஒருவர்  கேள்வி   எழுப்புகிறார். எதிர்க்கட்சிகளின்  வாக்குறுதிகளில்   ஏமாந்துவிட   வேண்டாம்  என்று   அறிக்கை  விட்டுள்ள   மஇகா   தலைவர்    டாக்டர்   எஸ்.சுப்ரமணியத்துக்குப்  பதிலடியாக   பிகேஆர்   இளைஞர்   செயல்குழு  …

எக்ஸ்சேஞ் 106 கோபுரம், கேஎல்சிசி கோபுரத்தைவிட உயரமானது

பிரதமர் நஜிப்பின் பெருமைக்குரிய மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றான, ‘எக்ஸ்சேஞ் 106 கோபுரம்’ மலேசியாவின் ஆக உயர்ந்த கட்டிடம் என்ற பெயரை எடுக்கவுள்ளது. துன் ரசாக் எக்ஸ்சேஞ்-இன் ஒரு பகுதியான இக்கோபுரத்தின் கட்டுமானப் பணிகள், இவ்வாண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 492 மீட்டர் உயரம் கொண்ட அக்கோபுரம், பெட்ரோனாஸ்…

பாதிரியார் கோ தவிர்த்து காணாமல்போன மற்றவர்கள்மீதான சுஹாகாம் விசாரணை தொடர்கிறது

கடந்த  வாரம்,     காணாமல்போன   பாதிரியார்  ரேய்மண்ட்  கோ  மீதான  விசாரணையை  நிறுத்தி   வைப்பதாக     அறிவித்திருந்த    சுஹாகாம்    காணமல்போன   மற்ற   சமூக   ஆர்வலர்கள்மீதான  விசாரணையை  இன்று  காலை  மீண்டும்   தொடங்கியது. காலை  மணி  11.30க்குத்  தொடங்கிய  சுஹாகாம்   விசாரணை  பெர்லிஸ்  ஹோப்   என்ற  அமைப்பைத்   தோற்றுவித்த   அம்ரி   ச்சே   மாட் …