ஆர்பிகேக்கு எதிராக ஏஜி போலீஸ் புகார்

சட்டத்துறைத்   தலைவர்   முகம்மட்  அபாண்டி    அலி, வலைப்பதிவர்    ராஜா   பெட்ரா   கமருடினுக்கு    எதிராக    போலீசில்   புகார்   செய்துள்ளார். மலேசியாகினி   அபாண்டியைத்   தொடர்புகொண்டு    விசாரித்தபோது   மூன்று  நாள்களுக்கு   முன்பு   புகார்   செய்ததாகக்    கூறினார். “கிறிமினல்   அவதூறுக்காக   புகார்    செய்தேன்”,  என்றாரவர்.    மேல்விவரம்  எதையும்    அவர்   தெரிவிக்கவில்லை. ஆர்பிகே    என்ற    பெயரில்  …

சுகாதார அமைச்சர் : சில மருத்துவமனைகளில் மருந்துகள் குறைவாக இருப்பது…

சில மருத்துவமனைகளில், குறிப்பிட்ட சில மருந்துகள் பற்றாக்குறை இருப்பதை ஒப்புக் கொண்ட சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், ஆனால், அதற்கும் ‘நிதி சிக்கலுக்கும்’ சம்பந்தம் இல்லை என்றார். “தளவாடங்கள், விநியோகப் பிரச்சனைகளால் சில மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் போய் சேருவதில்லை, இதனால் மருந்து பற்றாக்குறை ஏற்படுவதுண்டு. அது…

அமைச்சர்கள் இல்லாததால் நாடாளுமன்றத்தில் தர்மசங்கடமான சூழ்நிலை!

இன்று நாடாளுமன்றத்தில் மலேசிய அறிவுசார்ந்த சொத்து கோர்பொரேசன் மசோதா 2017 தாக்கல் செய்யப்பட்ட போது அதை வழிமொழிவதற்கு நாடாளுமன்றத்தில் அமைச்சர்களோ துணை அமைச்சர்களோ இல்லாததால் நாடாளுமன்றம் அதன் நடவடிக்கைகளை சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டிய தர்மசங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. துணை அமைச்சர் ஹென்றி சம் அந்த மசோதாவை…

கேமரனில் ‘பிரிமா’ வீடுகள் 2 லட்சத்திற்கும் மேல் – மக்கள்…

கேமரன் மலையில் ‘பிரிமா 1மலேசியா’ வீடுகள் ரிம 2 இலட்சத்திற்கும் மேல் விலை போவதால், அவற்றை வாங்க வசதியில்லாமல் கேமரன் மலை மக்கள் அல்லல்படுகின்றனர். கேமரன் மலை மாவட்ட அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பம் செய்தும், தங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அம்மக்கள் வருத்தம் தெரிவித்தனர். இன்று, மதியம் 12 மணியளவில்,…

இனவாத-எதிர்ப்புச் சட்டம் நமக்குத் தேவையில்லை- பிரதமர்துறை

அரசாங்கம்    இனவாத-எதிர்ப்புச்   சட்டம்   அல்லது    பாகுபாடு-எதிர்ப்புச்  சட்டத்தைக்   கொண்டுவர    எண்ணங்   கொண்டிருக்கவில்லை.   ஏனென்றால், ஒரு  பல்லினச்   சமுதாயத்தில்   சட்டத்தின்   மூலமாக    ஒற்றுமையைக்   கொண்டுவருவது   சிறந்த   முறை   ஆகாது. அப்படிப்பட்ட     சட்டங்கள்   தேவையில்லை,   ஏனென்றால்   நாட்டில்   ஒற்றுமை   நல்ல   நிலையில்    கட்டுப்பாட்டுக்கு   உட்பட்ட    நிலையில்   உள்ளது   என  பிரதமர்துறை   நேற்று   …

ஷாபியின் முன்னாள் செயலாளர்கள் பிணையில் விடுதலை

சாபாவின்  கிராமப்புற     மேம்பாட்டுக்காகக்  கொடுக்கப்பட்ட     ரிம1.5  பில்லியன்   நிதியில்   நிகழ்ந்ததாகக்  கூறப்படும்    முறைகேடுகள்  தொடர்பில்   தடுத்து   வைக்கப்பட்டிருந்த     முன்னாள்  கூட்டரசு   அமைச்சரான   முகம்மட்   ஷாபி    அப்டாலின்   முன்னாள்  செயலாளர்கள்  இருவரை    புத்ரா  ஜெயா   மெஜிஸ்திரேட்    நீதிமன்றம்   இன்று   விடுவித்தது. இருவரையும்   ரிம 15,000  பிணையிலும்   ஒருவரின்   உத்தரவாதத்தின்     பேரிலும்   …

பினாங்கு சாலை விபத்தில் எண்மர் பலி, 33பேருக்குக் காயம்

இன்று  காலை   வடக்கு- தெற்கு  நெடுஞ்சாலையில்  இரண்டு    தொழிற்சாலை  பேருந்துகளும்   ஒரு   வேனும்  மோதிக்கொண்டதில்     எண்மர்    கொல்லப்பட்டனர். அவ்விபத்து   காலை   மணி   5.40    அளவில்   பினாங்கு,  செபராங்   பிறையில்     கிலோமீட்டர்    147-இல்,   ஜூரு   டோல்    சாவடிக்கு   முன்னதாக    நிகழ்ந்ததாக    அறிவிக்கப்பட்டது. பேருந்துகள்  பிறை   சோனி    தொழிற்சாலைக்கும்    பாயான்  லெப்பாஸில்  …

மலேசிய மருத்துவச் சங்கம் : அரசாங்கம் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி-யை அகற்ற…

பொருள் , சேவை வரி (ஜி.எஸ்.டி) மற்றும் வாழ்க்கை செலவினங்கள் அதிகரிப்பால், அதிகமான மக்கள் இன்று , தனியார் மருத்துவமனைகளை விட, அரசாங்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறவே விரும்புகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவை தனியார் மருத்துவமனையிலிருந்து அரசாங்க…

தஞ்சோங் பூங்கா நிலச்சரிவில் பலியான அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன

தஞ்சோங் பூங்கா கட்டுபடி-விலை   வீடமைப்புத்  திட்டத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மாண்ட 11 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இன்று காலை, இறுதியாக மீட்கப்பட்ட இரு உடல்கள் - முகமட் மோனிருல் இஸ்லாம் என்ற வங்காளதேச தொழிலாளியும், யுவான் கொவ்க் வெர்ன், 27, எனும் மலேசியரும் ஆவர். மோனிருல்…

ஐஎஸ் தொடர்புடைய 300க்கு மேற்பட்டோர் கைது

இவ்வாண்டு   அக்டோபர்  6வரை,   இஸ்லாமிய   பயங்கரவாத    இயக்கமான    ஐஎஸ்ஸுடன்    தொடர்புள்ள   95  மலேசியர்கள்    உள்பட,    மொத்தம்    346  பேர்   கைது    செய்யப்பட்டிருப்பதாக     துணைப்     பிரதமர்   அஹ்மட்   ஜாஹிட்   ஹமிடி      கூறினார். தவிர,    53   மலேசியர்கள்  ஈராக்கிலும்   சீரியாவிலும்       பயங்கரவாத     நடவடிக்கைகளில்  ஈடுபட்ட   தகவலும்   உள்துறை     அமைச்சுக்குக்  கிடைத்திருப்பதாக    அவர்  …

நிலச் சரிவுமீது போலீஸ் புகார்

பினாங்கில்  11  பேரைக்  காவு   கொண்ட   நிலச்   சரிவு    குறித்து    போலீசில்   புகார்    செய்யப்பட்டுள்ளது. நிலச்    சரிவுச்  சம்பவத்தில்   “நிபுணத்துவக்  கவனக்குறைவு”   நிகழ்ந்துள்ளதா     என்பதைக்   கண்டறியவே   போலீஸ்   புகார்   என   மாநில    ஆட்சிக்குழு    உறுப்பினர்    செள   கொன்  இயு   கூறினார். போலீஸ்   புகார்     செய்யுமாறு   பினாங்கு    தீவு    மாநகராட்சி   …

விளக்கமளிப்பு முழுவதுமே “அம்னோவுக்குச் சாதகமாக இருந்தது”

பிஎன்    தேர்தல்    இயந்திரத்தின்   14வது  பொதுத்   தேர்தலுக்கான   விளக்கமளிப்பு    அநியாயத்துக்கு   “அம்னோவுக்குச்   சாதகமாக  இருந்தது”    என   பார்டி   ரக்யாட்    சரவாக் (பிஆர்எஸ்)  தலைவர்    ஜேம்ஸ்   மாசிங்  குறைப்பட்டுக்கொண்டார். கடந்த    சனிக்கிழமை   பிஎன்  தலைமையகம்    அமைந்துள்ள   மினாரா    டத்தோ   ஒன்னில்    நடைபெற்ற   அக்கூட்டத்தில்   பிஎன்னின்   உறுப்புக்  கட்சிகள்   ஒவ்வொன்றிலிருந்தும்   பத்துப்  …

ஜோ லோ இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இண்டர்போல் உதவி நாடப்பட்டது-…

ஜோ  லோ  என்ற   பெயரில்   பிரபலமாக   விளங்கும்   லோ  டெக்   ஜோ   இருக்கும்   இடத்தைக்  கண்டுபிடிக்க   அனைத்துலக   போலீஸ்   அமைப்பின்(இண்டர்போல்)    உதவியை    அரசாங்கம்    நாடியிருக்கிறது. உள்துறை    அமைச்சர்    அஹ்மட்   ஜாஹிட்   ஹமிடி   இன்று    நாடாளுமன்றத்தில்    இதை    உறுதிப்படுத்தினார். போலீஸ்   லோ  இருக்கும்   இடத்தை   அறிய    இண்டர்போல்    உதவியை   நாடுமா   என்றும்  …

தஞ்சோங் பூங்கா திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை- அமைச்சு

பினாங்கு     அரசு     தஞ்சோங்  பூங்கா   கட்டுபடி-விலை   வீடமைப்புத்  திட்டத்தைக்  கண்காணிக்கத்   தவறிவிட்டதாக   இயற்கை   வள,  சுற்றுசூழல்   அமைச்சு    கூறியது.  அந்த வீடமைப்புத்    திட்டத்தில்    கடந்த    சனிக்கிழமை    ஏற்பட்ட    நிலச்சரிவில்   பதினொரு   பேர்   பலியானார்கள். அந்த   வீடமைப்புத்   திட்டத்தின்    மேம்பாட்டாளரான    தாமான்   ஸ்ரீபூங்கா    சென்.   பெர்ஹாட்    அனுமதியின்றியே    அத்திட்டத்தை  மேற்கொண்டிருந்ததாக   …

மாட் சாபு: பாஸ் தலைவர்களுக்கு நான் கொடியவன், ஆனால் இரகசியமாக…

  அமனா கட்சியை தோற்றுவித்த ஈராண்டுகளுக்குப் பின்னர், கட்சியின் தலைவர் முகமட் சாபு இன்று ஓர் இரகசியத்தை வெளியிட்டார். பாஸ் கட்சியிலிருக்கும் சில தலைவர்களும் உறுப்பினர்களும் தம்மை ஒரு கொடியவன் என்று பகிரங்கமாக கூறிக்கொண்டிருந்த போதிலும், அவர்கள் தம்மை கட்சியில் மீண்டும் சேர்ந்துகொள்ளும்படி இரகசியமாக கெஞ்சுகின்றனர் என்று அவர்…

பினாங்கு ஃபோரம் : நிலச்சரிவு அபாயங்கள் குறித்து 2 முறை…

தஞ்சோங் பூங்கா கட்டுமான தளத்தில், நிலச்சரிவு ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதை, பினாங்கு அரசுக்கு இரண்டு முறை தெரியப்படுத்தி உள்ளதாக, அரசு சாரா நிறுவனங்களின் கூட்டணியான ‘பினாங்கு ஃபோரம்’  தெரிவித்தது. இவ்வாண்டு மட்டும் இரண்டு முறை, ஜனவரி மற்றும் மே மாதங்களில், நிலச்சரிவு ஏற்படும் சாத்தியம் இருப்பதால், இந்தத் திட்டம்…

மாபுஸ்: பாஸ் வேட்பாளர்களாகப் போட்டியிட்டால், அது மக்களுக்குத் துரோகம் இழைத்ததாகும்

பக்கத்தான் ஹரப்பானுடன் தொடர்ந்து உறவு பாராட்டி வரும் பொக்கோக் சேனா நாடாளுமன்ற உறுப்பினர் மாபுஸ் ஒமார் 14 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார் என்று பாஸ் அறிவுத்துள்ளது பற்றி கருத்துரைத்த மாபுஸ், தாம் போட்டியிட அனுமதிக்கப்பட்டாலும் தற்போதைய சூழ்நிலையில் அதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன் என்று…

பினாங்கு நிலச்சரிவு : 6 பேரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

லெங்கோக் லெம்பா பெர்மாய், தஞ்சோங் பூங்கா , ஜார்ஜ் டவுன், மலிவுவிலை வீடுகள் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்று காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கின. இதுவரை 6 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, எட்டு பேர் இன்னமும் மண்சரிவில் சிக்கிக் கொண்டுள்ளனர். நேற்று…

நிலச்சரிவு கண்ணிமைக்கும் நொடியில் நடந்துவிட்டது, பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்

தஞ்சோங் பூங்கா நிலச்சரிவில் தப்பித்த வங்காள தேசக் கட்டுமான தொழிலாளர்கள் சிலர் கண்ணிமைக்கும் நொடியில், ஏறக்குறைய ஒரு நிமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துவிட்டது என்று கூறியுள்ளனர். “சம்பவம் நிகழ்ந்தபோது நான், கீழ்த்தளத்தில் இரும்பைப் பொறுத்திகொண்டு இருந்தேன். இரும்பு எடுக்க நான் மேலே சென்றபோது, பெரும் சத்தத்துடன் மண் சரிந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.”…

நிலச்சரிவு : பாரிசான் தலைவர்கள் பினாங்கு அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்றனர்

இன்று காலை, பினாங்கு தஞ்சோங் பூங்காவில் நடந்த நிலச்சரிவு சம்பவம் குறித்து, பிரதமர் நஜிப் தனது சோகத்தை வெளிபடுத்தினார். "தேடல் மற்றும் மீட்பு பணி நன்றாக செல்ல, நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்," என்று அவர் தனது டுவிட்டர் வழியாகக் கூறினார். இன்று இரவு 8 மணிக்கு நிறுத்தப்பட்ட தேடும்…

குவான் எங் : நிலச்சரிவு சோகமான நிகழ்வு, மாநில விசாரணை…

ஜோர்ஜ் டவுன், தஞ்சோங் பூங்கா, லெங்கோ லெம்பா பெர்மாயில், மலிவு விலை வீட்டுத் திட்டக் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பற்றி விசாரிக்க, சிறப்பு விசாரணை ஆணையத்தை மாநில அரசு அமைக்கவுள்ளது. இன்று அதிகாலையில் ஏற்பட்ட அந்நிலச்சரிவில், புதையுண்ட 14 பேரில், மூவர் இறந்துவிட்டனர், படுகாயம் அடைந்த ஒருவர்…

ஷாபியின் கைது ஹரப்பானுக்கு நல்லதுதான்

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பார்டி வாரிசான் சாபாவின் தலைவர் ஷாபி அப்டாலை கைது செய்தது ஒருவகையில் சாபா மக்களுக்கும் பக்கத்தான் ஹரப்பானுக்கும் நல்லதுதான் என்று ஓர் அமனா பேராளர் அக்கட்சியின் மாநாட்டில் கூறினார். அமனா தலைவர் முகமட் சாபுவின் கொள்கை உரை மீதான விவாதத்தில் பங்கேற்று…

பினாங்கில் நிலச்சரிவு: மூவர் இறந்தனர்; 11 பேர் புதையுண்டர்

  பினாங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று தொழிலாளர்கள் இறந்ததுடன் 11 பேர் புதையுண்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மலேசியர், மற்ற இருவரும் வங்காளதேசிகள். பினாங்கு மாநகர் மன்ற தலைவர் மரிமுனா ஷரீப் நிலச்சரிவு தஞ்சோங் பூங்காவில் ஏற்பட்டதை உறுதிப்படுத்தினார். இச்சம்பவம் காலை மணி 8.30 அளவில் ஏற்பட்டது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின்…