சர்வதேச அளவில் எரிசக்தி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் கடத்தல் மற்றும் பதுக்கல் முயற்சிகள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்க நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில்…
கிட் சியாங் போரெக்ஸ் பணிப்படையை எதிர்கொள்கிறார்
டிஎபி நாடாளுமன்ற தலைவர் லிம் கிட் சியாங் 1991 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளுக்கிடையில் பேங்க் நெகாராவுக்கு அந்நிய நாணயப் பரிவர்த்தனையில் ஏற்பட்ட இழப்பை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பணிப்படையின்முன் தோன்றவிருக்கிறார். அந்தக் காலக்கட்டத்தில் எதிர்க்கட்சியின் தலைவராக இருந்த கிட் சியாங் ஏழு-உறுப்பினர்களைக் கொண்ட பணிப்படையை எதிர்கொள்ளவிருப்பதாகக்…
திரங்கானு பாஸ் எல்லாத் தொகுதிகளிலும் போட்டியிடும்
திரங்கானு பாஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாநிலத்துலுள்ள அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தும். பிகேஆருக்கு இடமளிக்கப்படாது. கடந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் ஆறு திரங்கானு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட்டது. ஒரே ஒரு பிகேஆர் வேட்பாளர், அஸான் இஸ்மாயில், மட்டுமே வெற்றி பெற்றார். திரங்கானு…
சிஎம் அரசுப் பணியாளர் என்கிறபோது பிஎம் யார்? கூலியாளா?- மகாதிர்
அரசுப் பணியில் உள்ள பிரதமர்(பிஎம்) நஜிப் அப்துல் ரசாக் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் என்று தாம் தொடுத்த வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குழப்பம் தருவதாக உள்ளது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். மகாதிர் வேறு இருவருடன் சேர்ந்து தொடுத்த அவ்வழக்கை விசாரித்த …
மலாய்க்காரர்கள் என்றால் மற்றவர்களைத் தாக்கிப் பேசலாம் எனப் பொருள்படாது
பாஸ் பேராளர் ஒருவர் தம் கட்சியினர் இதர இனங்களையும் சமயங்களையும் இடித்துரைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். கூட்டரசு அரசமைப்பு மலாய்க்காரர்களுக்கும் இஸ்லாத்துக்கும் தனி இடம் அளித்திருப்பது உண்மைதான் என்றுரைத்த நெகிரி செம்பிலான் பேராளர் அபு ஸரிம் அப்துல் ரஹ்மான், அதை வைத்து மற்றவர்களைத் தாக்கிப் பேசுவது …
ஹிண்ட்ராப் ஸக்கீரின் பிஆர் தகுதியை அகற்ற ஐநா உதவியை நாடுகிறது
இந்தியக் குடிமகனாகிய ஸக்கீர் நாய்க் பயங்கரவாதம் சம்பந்தப்பட்டவற்றில் தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படுவதையொட்டி அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிரந்தமாகத் தங்கும் தகுதியை (பிஆர்) அகற்ற மலேசிய அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறுமாறு பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (ஹிண்ட்ராப்) ஐநா பாதுகாப்பு மன்றத்தின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவுக்கு (சிடிசி) கடிதம் எழுதியுள்ளது. நேற்று,…
இஸ்லாம் அவமதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், இதர சமயங்களை அவமதிக்காதீர்
இஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீருக்கு மலேசியாவில் நிரந்தர வசிப்பிட தகுதி (பிஆர்) அளிக்கப்பட்டிருப்பதைத் தற்காப்பதற்கு இதர சமயங்களை அவமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று இன்னொரு சக போதகர் வான் ஜி வான் ஹுசேன் அறிவுறுத்துகிறார். "ஹிண்ட்ராப் (பெசத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா) ஸக்கீர் மலேசிய குடிமகனாவதை ஏற்றுக்கொள்ளவில்லை. "நாம் ஹிண்ட்ராப்…
நஜிப் அரசு ஊழியரல்ல, நீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் மற்றும் இருவர் பிரதமர் நஜிப் அரசுப் பணியில் சட்டப்பூர்வமான செயலை தவறாக செய்ததாக அவருக்கு எதிராகத் தொடர்ந்திருந்த வழக்கை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. நஜிப் ரசாக், பிரதமர் என்ற முறையில் ஓர் அரசு ஊழியர் அல்ல, ஆகவே…
குவான் எங் பாஸிடம் கூறுகிறார்: முஸ்லிம் அல்லாதவர் பிரதமர் ஆகும்…
முஸ்லிம் அல்லாதவர்கள் மலேசியாவின் பிரதமர் ஆகும் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இன்று கூறினார். நேற்று, பாஸ் கட்சியின் உலாமா மன்றம் மலாய்-முஸ்லிம் மட்டுமே பிரதமராக முடியும் என்பதை உறுதி செய்வதற்கு மலேசிய அராமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும் என்று நிறைவேற்றியுள்ள…
சேவியர்: மற்ற தமிழ்ப்பள்ளிகளின் நிலையையே களும்பாங் தமிழ்ப்பள்ளி பிரதிபலிக்கிறது!
கல்வி துணை அமைச்சர் கமலநாதனின் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உலு பெர்ணம் களும்பாங் தமிழ்ப்பள்ளியில் கடந்த இரண்டு வருடங்களாக ஆசிரியர்கள் இல்லை அல்லது பற்றாக்குறையைக் கண்டித்து மாணவர்கள் வகுப்பைப் புறக்கணித்திருப்பது, அவ்விவகாரம் புரையோடிய புண், நீண்ட காலமாகத் தீர்வின்றி இழுக்கடிக்கப்பட்டுள்ள விவகாரம் என்பதனையே காட்டுகிறது.…
சாபாவுக்குள் நுழைய டோனி புவாவுக்குத் தடை
டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சாபாவில் அடியெடுத்து வைப்பதினின்றும் தடுக்கப்பட்டார். 1எம்டிபி மீதான மூன்று-நாள் கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக இன்று பிற்பகல் 12.50க்கு கோத்தா கினாபாலு அனைத்துலக விமானம் வந்து சேர்ந்த அவரைக் குடிநுழைவுத்துறை அதிகாரி ஒருவர் தடுத்து நிறுத்தினார். “மாநில அரசிடமிருந்து காலையில் உத்தரவு வந்ததாக அவர் …
பிகேஆர்- பாஸ் உறவு முறிவதற்கு செலினா கோமெஸ் காரணம்- பாஸ்…
பிகேஆருடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுவதற்கு அமெரிக்கப் பாடகர் செலினா கோமெஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டதும் ஒரு காரணம் என பாஸ் இளைஞர்கள் கூறுகிறார்கள். அது, பிகேஆருக்கு இஸ்லாத்தை வலுப்படுத்துவதில் அக்கறை இல்லை என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு என ஷா ஆலம் பாஸ் இளைஞர் பேராளர் அபிடுல்லா பாஹிம் …
பிகேஆருடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக இருந்தால் பாஸ் சிலாங்கூரில் பதவிகளிலிருந்தும் வெளியேற…
பாஸ் , கெடா, அலோர் ஸ்டாரில் நடைபெறும் அதன் ஆண்டுக் கூட்டத்தில் பிகேஆருடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ள முடிவு செய்திருந்தால் சிலாங்கூர் அரசில் அந்த இஸ்லாமிய கட்சி வைத்துள்ள பதவிகளையும் துறக்க வேண்டும். பிகேஆரின் உறவுகள் வேண்டாம் என்று தீர்மானித்து விட்டால் அதுதான் பாஸ் அடுத்துச் செய்யக் கூடிய “மதிக்கத்தக்க, …
இசி கடிதம் வெளியிட்டது உண்மையா?
அரசியல் கட்சிகளுக்குக் கூடுதல் வாக்காளர் பட்டியலின் பிரதிகள் வழங்குவதை நிறுத்திக்கொள்ளுமாறு உத்தரவிட்டு தேர்தல் ஆணைய(இசி) செயலாளர் அப்துல் கனி சாலே எழுதிய கடிதம் என்று கூறப்படும் ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அது உண்மையான கடிதம்தானா என்று அமனா இளைஞர் தலைவர் முகம்மட் சனி ஹம்சா …
ஏன் மலாக்கா அம்னோ அரசியல்வாதியின் மீது குற்றம் சாட்டுவதில் தாமதம்?
மலாக்காவில் ஓர் அம்னோ அரசியல்வாதி மீது ஊழல் குற்றம் சாட்டப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் அவர் காணாமல் போய்விட்டார் என்று கூறப்படுவது பற்றி, அதுவும் அவருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தும், சந்தேகத்தை எழுப்புகிறது என்று பிகேஆர் புக்கிட் கட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின்…
மாணவர்கள் குண்டர்தனத்திற்கு, கல்வி முறையும் காரணம் – கே.எஸ். பவானி
கிள்ளான் வட்டாரத்தில் 18 மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டது சமீப காலத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம், அனைத்து தரப்பினர்களின் கவனத்தையும் மீண்டும் பள்ளி மாணவர்கள் குண்டர்கும்பலில் ஈடுபடும் பிரச்சனையின் பக்கம் திருப்பியுள்ளது. இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. குண்டர்கும்பல்களில் பள்ளி மாணவர்கள் ஈடுபடுவது,…
பாஸ் எவருடனும் ஒத்துழைக்கும், அதன் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்டால்
பாஸ் யாருடனும் ஒத்துழைக்க முடியாது என்று அதன் கதவுகளை இழுத்து மூடிக்கொள்ளவில்லை. அது ஒத்துழைக்க தயாராகவே உள்ளது. “டிஏபி, பார்டி அமனா நெகரா (அமனா) அல்லது வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் ஒத்துழைக்க நாங்கள் தயார்”, என பாஸ் ஆன்மிகத் தலைவர் ஹஷிம் ஜாசின் …
மாநில அரசின் புலனாய்வில் சமயப் பள்ளி குற்றம் ஏதும் செய்யவில்லை
சமயப் பள்ளி மாணவர் ஒருவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டதால் இறந்தார் என்று சந்தேகிக்கப்பட்டாலும் மாநில சமய விவகாரத் துறையின் விசாரணையில் அந்தப் பள்ளிமீது எந்தக் குற்றமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஜோகூர் ஆட்சிக்குழுவில் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ள அப்ட் முத்தலிப் அப்ட் ரகிம், ஜோகூர் இஸ்லாமிய சமய விவகாரத் …
பிரதமர், அமைச்சர்கள் அலவன்சுகள் குறைக்கப்பட வேண்டும்: பாஸ் கோரிக்கை
நாட்டின் செலவின நிர்வாகம் நல்ல முறையில் நடக்கிறது என்பதைக் காண்பிக்கும் வகையில் பிரதமரும் அமைச்சர்களும் அவர்களின் அலவன்சுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரிவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அக்கோரிக்கையை விடுத்த பாஸ் மகளிர் தலைவர் நூரிடா முகம்மட் சாலே, அந்த விசயத்தில் கூட்டரசு அரசாங்கம் பாஸின் நிர்வாகத்தில் உள்ள …
‘ஆரஞ்சும்’ ‘நீலமும்’ ஒன்றுசேர்ந்து கிளந்தானைக் கைப்பற்றத் திட்டமிடுகின்றன
அமனா கட்சி பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இரகசியமாக ஒத்துழைத்து வருவதாக பாஸ் குற்றம் சாட்டியுள்ளது. அவ்விரண்டும் சேர்ந்து பாஸிடமிருந்து கிளந்தானை கைப்பற்ற முனைந்திருப்பதாக பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கூறினார். “அண்மையில் துணைப் பிரதமர் (அஹ்மட் ஜாஹிட் ஹமிட்) கிளந்தானில் பேசியபோது அம்மாநிலத்தை நீல …
அரசாங்கம் ஆய்ந்தறிந்துதான் செலவு செய்கிறது
அரசாங்கம் எப்போதும் நன்கு சிந்தித்து, வரம்புக்குட்பட்டுத்தான் செலவு செய்கிறது, ஊதாரித்தனமாக செலவிடுவதில்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். “செலவு செய்வதில் அவசரம்காட்டக் கூடாது. “பணம் கடன் வாங்கினால் அது ஆக்கப்பூர்வமான முதலீட்டுக்காகத்தான் இருக்க வேண்டும்”, என நிதி அமைச்சருமான நஜிப் கூறினார். நிதி அமைச்சின் மிகச் …
ஸக்கீரின் தவறுகளை நிரூபியுங்கள் அல்லது நிறுத்துங்கள் சண்டையை என்கிறார் அஸ்ரி
இந்திய இஸ்லாமிய சமயப் போதகர் ஸக்கீரின் தவறுகளை நிரூபிக்குமாறு அவரை எதிர்க்கும் தரப்பினருக்கு பெர்லிஸ் முப்தி அஸ்ரி சைனுல் அபிடின் சவால் விட்டுள்ளார். இல்லை என்றால், மலேசிய முஸ்லிம்களும் இந்துக்களும் சண்டையை நிறுத்தி விட்டு இணக்கமான உறவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். "ஸக்கீர் நாய்க்…
அம்னோ இளைஞர்கள் மலாய், பூமிபுத்ரா சிறப்புரிமைகளைத் தொடர்ந்து தற்காப்பார்கள்
தேசிய உருமாற்றத் திட்டத்தை (டிஎன்50) நாட்டில் அமலாக்கம் செய்த போதிலும், மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் மலாய் மற்றும் பூமிபுத்ராக்களுக்கான சிறப்புரிமைகளை அம்னோ இளைஞர்கள் தற்காப்பார்கள். அம்னோ இளைஞர்கள் இயக்கம் அதன் இன்றைய நிலையிலிருந்து ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என்று அம்னோ இளைஞர்கள் துணைத் தலைவர் கைருல்…
ஹிண்ட்ராப் மீது நடவடிக்கை எடுக்க ஐஎஸ்எ மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும்,…
சில 'தீவிரவாத" அமைப்புகள் பெடரேசனின் அதிகாரப்பூர்வ சமயமான இஸ்லாத்தின் தகுதிக்கு சவால் விடுவதாகக் கூறப்படுவதை எதிர்கொள்ள அகற்றப்பட்ட உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (ஐஎஸ்எ) மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஒரு புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள 22 மலாய்-முஸ்லிம்கள் அடங்கிய அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது. பாரிசான் பெர்திண்டாக் மிலாயு…


