நஜிப்பை இடி அமினுக்கு ஒப்பிட்ட மகாதிரிடம் போலீஸ் விசாரணை

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்    உகாண்டா சர்வாதிகாரி   இடி அமினைப் போன்றவர்  என்று வருணித்த  முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டை   போலீசார் விசாரணை   செய்கிறார்கள். இதனை உறுதிப்படுத்திய மகாதிரின்   வழக்குரைஞர்    புத்ரா ஜெயாவில்    உள்ள பெர்டானா  …

பகாங் மாநில முப்தியின் அறிக்கையின் பிரதிபலிப்பா பூச்சோங் ஜெயா குண்டு…

  மலேசியப் பிரதமர் நஜிப் துன் ராசாக் நாட்டை மிக  ஆபத்தான காலத்தை நோக்கி இட்டுச் செல்கிறார் என்பதற்கு  சான்றாக பூச்சோங் ஜெயா ப்போல்வட் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக இன சமய விவகாரங்களை தூண்டும் ஆபத்தான போக்கினை  எல்லா மலேசியர்களும் நீண்டக்காலமாக தவிர்த்து வந்துள்ளனர்.  …

பங்: செம்போர்னாவில் உறுப்பினர்கள் வெளியேறியதுபோல் பாகோ, கெடா அம்னோவிலும் நிகழ்ந்து…

பாகோ  எம்பி  முகைதின்  யாசினும்  கெடா  முன்னாள்  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரும்  கட்சிநீக்கம்  செய்யப்பட்டதற்கு  எதிர்ப்புத்  தெரிவிப்பதற்காக  பாகோவிலும்  கெடா  அம்னோவிலும்  உறுப்பினர்கள் பெரும்  எண்ணிக்கையில் கட்சியை  விட்டு  வெளியேறும்  நிலை  ஏற்பட்டு  விடக்  கூடாது  என  அம்னோ  உச்ச  மன்ற  உறுப்பினர்  பங்  மொக்தார்  ரடின்  …

ஹுஸ்னியும் வாஹிட்டும் 1எம்டிபி ஊழலுக்குப் பயந்து ஓடினார்களா? மாபுஸ் கேள்வி

1எம்டிபி  ஊழல்  சர்ச்சை  தொடரும்  வேளையில்  நிதி  விவகாரங்களைக்  கவனித்து  வந்த  இரு   அமைச்சர்கள் ,  ஹுஸ்னி  ஹனட்ஸ்லாவும்   அப்துல்  வாஹிட்  ஒமாரும்  பதவி  விலகியது  ஏன்  என்று  பாஸ்  எம்பி  மாபுஸ்  ஒமார்  கேட்கிறார். “ஹுஸ்னியும்  வாஹிட்டும்  பதவி  விலகியது   ஆயிரத்தொரு  கேள்விகளை  எழுப்புகிறது..... நாட்டை  உலுக்கிக்…

‘மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கத்தில் சேர வாரீர்’- ஹுஸ்னிக்கு ஜைட் அழைப்பு

டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்  தலைமையில்  செயல்படும்  மலேசியாவைப்  பாதுகாப்போம்  இயக்கத்தில்  சேர்ந்து  கொள்ள  முன்னாள்  இரண்டாவது  நிதி  அமைச்சரான  ஹுஸ்னி  ஹனாட்ஸ்லாவுக்கு  அழைப்பு  விடுத்திருக்கிறார்  ஜைட்  இப்ராகிம். ஹுஸ்னி  அமைச்சர்  பதவியிலிருந்து   விலகிய  செய்தி   அனைவரும்   அறிந்ததுதான். ஆனால்,  அவர்  அம்னோ  பொருளாளர்  பதவி  உள்பட  அம்னோவிலும்  பிஎன்னிலும் …

அமைச்சரவை சீரமைப்பு: சரவாக் தலைவர்களுக்கு ஏமாற்றம்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நேற்று  அறிவித்த  அமைச்சரவை  சீரமைப்பு  சரவாக்  தலைவர்கள்  பலருக்கு   ஏமாற்றமளித்துள்ளது. பார்டி  பெசாகா  பூமிபுத்ரா  பெர்சத்து (பிபிபி)  மூத்த  உதவித்  தலைவர்  டக்லஸ்  உங்கா  எம்பாஸ்,  தாம்  காலி  செய்த  தோட்டத்  தொழில்,  மூலப்  பொருள்  அமைச்சுக்கு  ஒரு  சரவாக்கியர்தான்  நியமிக்கப்படுவார்  என்று …

‘காஃபீர் ஹர்பி’ விவகாரத்தில் பகாங் சுல்தான் மெளனம் கலைய வேண்டும்

பகாங்  முப்தி  இஸ்லாத்தை  எதிர்க்கும்  முஸ்லிம்- அல்லாதார்  ‘காஃபீர்   ஹர்பி’  என்று  முத்திரை  குத்தியிருப்பது  குறித்து  பகாங்  சுல்தான்  கருத்துரைக்க  வேண்டும்  என  அரசமைப்பு  வல்லுனர்  அப்துல்  அசீஸ்  பாரி  வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களில்  சுல்தான்களே  இஸ்லாமிய  சமயத்  தலைவர்களுமாவர்  என்பதால்  பகாங்  முப்தி  மாநில  சுல்தானின்  அதிகாரத்துக்கு  உட்பட்டவராகிறார்.…

பூச்சோங்கில் குண்டு வெடிப்பு: எண்மருக்குக் காயம்

பூச்சோங் ஐஓஐ போல்வார்டில்  இரவு  விடுதி  ஒன்றுக்கு   முன்புறம்  நிகழ்ந்த  குண்டு வெடிப்பில்  எண்மர்  காயமடைந்தனர். குண்டு  வெடிப்பு  இரவு  மணி  1.30க்கு  நிகழ்ந்ததாக சிலாங்கூர்  போலீஸ்  துணைத்  தலைவர்  அப்துல்  ரகிம்  ஜாப்பார்   தெரிவித்ததாக  த  ஸ்டார்  ஆன்லைன்  கூறியது. ஒரு  கையெறிக்குண்டுதான்  அந்த  வெடிப்புக்குக்    காரணம் …

கோபிந்த்: முப்தி விசயத்தில் ஐஜிபி என்ன செய்யப் போகிறார்?

டிஏபி-யை  ‘காஃபீர்  ஹர்பி’ என்று  பகாங்  முப்தி  அப்துல்  ரஹ்மான்  ஒஸ்மான்   பிரகடனம்  செய்த  விவகாரத்தில்  போலீஸ்  என்ன  செய்யவுள்ளது  என்று  கோபிந்த்  சிங்  டியோ  கேள்வி  எழுப்புகிறார்.  இக்கேள்விக்கு  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  பதிலளிக்க  வேண்டும்  என்று  அவர்  விரும்புகிறார். “டிஏபி  இஸ்லாத்தை …

பகாங் முப்திக்கு எதிராக வான் ஜி போலீசில் புகார்

டிஏபி-யை  ‘காஃபீர் ஹர்பி’  என்று  பிரகடனப்படுத்திய  பகாங்  முப்திக்கு  எதிராக   பிகேஆர்  இளைஞர்  தலைவர்  ஒருவர்  போலீசில்  புகார்  செய்துள்ளார். இன்று காலை  மணி  11.45க்கு  அப்புகாரைச்  செய்த  பிகேஆர்  இளைஞர்  சமயப்  பிரிவின்  தலைவர்  வான்  ஜி  உசேன்,  அது  போலீஸ்  விசாரணை  செய்ய  வேண்டிய  முக்கிய …

சியா விமானத்தில் தீ: யாரும் காயமடையவில்லை

இன்று   அதிகாலை  மிலான்  சென்று  கொண்டிருந்த  சிங்கப்பூர்  விமான  நிறுவனத்தின்  விமானம்  ஒன்று  தீப்  பற்றிக்  கொண்டதால்  அது  மீண்டும்  சிங்கப்பூரின்  சாங்கி  விமான  நிலையத்துக்கே  திரும்பியது. விமானத்தில்  இருந்த  பயணிகள் எவரும்  காயமடைவில்லை என  விமான  நிறுவன,  விமான  நிலைய   அதிகாரிகள்  தெரிவித்தனர். அந்த  சியா விமானம் …

நஜிப் இன்று புதிய அமைச்சரவையை அறிவிப்பார்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்   புதிய  அமைச்சரவையை   இன்று  பிற்பகல்  மணி  3.15க்கு  அறிவிப்பார்  என்று  எதிர்பார்க்கப்படுகிறது. புத்ரா  ஜெயாவில்,  பிரதமர்  அலுவலகத்தில்   நடைபெறவுள்ள  சிறப்புச்   செய்தியாளர்   கூட்டமொன்றில்  கலந்துகொள்ள  ஊடகங்களுக்கு  அழைப்பு  அனுப்பப்பட்டிருக்கிறது. நஜிப்   மூன்றாவது  முறையாக அவரது  அமைச்சரவையில்  மாற்றங்களைச்  செய்கிறார்.

முகைதின் -முக்ரிஸ் புதிய கட்சி தொடங்கலாமா?

முக்ரிஸ்  மகாதிரின்  ரசிகர்  மன்றம்  அதன்  முகநூல்  பக்கத்தில்  ஒரு  புதிய  கட்சி  அமைப்பது  பற்றி  இணையத்தில்  ஓர்  ஆய்வைத்  தொடங்கியுள்ளது. அம்னோவிலிருந்து  வெளியேற்றப்பட்ட  அந்த  முன்னாள்  கெடா  மந்திரி  புசாரும்  அம்னோவின்  முன்னாள்  துணைத்  தலைவரான  முகைதினும்   இடைநீக்கம்  செய்யப்பட்ட  அம்னோவின்  முன்னாள்  உதவித்   தலைவர்  ஷாபி …

அரசாங்கம் வாடகை மட்டும் கொடுக்கிறது; வேறு பண உதவி செய்வதில்லை…

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தலைமையில்  செயல்படும்  பெர்டானா  தலைமைத்துவ  அறக்கட்டளை   அரசாங்கம்   அதற்குப்  பண  உதவி   செய்திருப்பதாகக்  கூறப்படுவதை  மறுக்கிறது. அறக்கட்டளையில்  அமைந்துள்ள  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டின்    அலுவலகத்துக்கான   வாடகைப்  பணத்தை    மட்டும்   அரசாங்கம் கொடுப்பதாக  அது  நேற்றிரவு  வெளியிட்ட  அறிக்கை  ஒன்றில்  கூறியது/ அம்னோ …

முகைதினையும் முக்ரிசையும் நீக்கும் முடிவுக்கு பெர்லிஸ் அம்னோ ஆதரவு

கட்சியின்  முன்னாள்  துணைத்  தலைவர்  முகைதின்  யாசினையும்  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரையும்  கட்சிநீக்கம்  செய்யும்  அம்னோ  உச்ச  மன்ற  முடிவை  பெர்லிஸ்   அம்னோ  முழுமையாக  ஆதரிக்கிறது. உச்ச  மன்றம்  கடந்த  வியாழக்கிழமை  உதவித்  தலைவர்  ஷாபி  அப்டாலையும்  இடைநீக்கம்  செய்தது. பெர்லிஸ்   அம்னோ  தலைவர் …

‘காஃபீர் ஹர்பி’சர்ச்சை கவனத்தைத் திசைதிருப்பும் மலிவான அரசியல் உத்தி

ஹுடுட்டை  எதிர்க்கும்  டிஏபி-யையும்  மற்றவர்களையும்  காஃபீர் ஹர்பி  என்று பகாங்  முப்தி  பிரகடனம்  செய்ததும்  அதைத் தொடர்ந்து   எழுந்துள்ள  சர்ச்சையும்  நாட்டின்  கவனத்தைத்  திசைதிருப்பும்  ஒரு  மலிவான  அரசியல்  தந்திரம்  என  பிகேஆர்  தலைவர்  ஒருவர்  வருணித்துள்ளார். “அம்னோ  பரிதவிக்கிறது,  மலேசிய   மக்களைக்  கவரவும்  அவர்களின்  ஆதரவைப்  பெறவும் …

நஜிப்: இஸ்லாத்திற்கு எதிரானவர்களையும் அவர்களுடன் இணைந்தவர்களையும் நிராகரிப்போம்

  இஸ்லாமிய சமயத்தைப் பாதுகாப்பதற்காக இஸ்லாத்திற்கு எதிரானவர்களையும் அவர்களுடன் இணைந்து வேலை செய்பவர்களையும் நிராகரிக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் மலேசியர்களை கேட்டுக் கொண்டார். "இந்த புண்ணிய பூமியில் இஸ்லாம் மீதான போராட்டத்தில் நாம் விட்டுக்கொடுக்க முடியாது. இஸ்லாத்தை விரும்பாதவர்களை நாம் நிராகரிக்கிறோம். அவர்கள் யார் என்றும் அவர்களுடன்…

“கஃபீர் ஹார்பி” மீது கருத்துரைக்க மசீச தலைவர் மறுத்து விட்டார்

பகாங் மாநில முப்தி அப்துல் ரஹ்மான் ஓஸ்மான் டிஎபி கட்சியை "கஃபீர் ஹார்பி" என்று முத்திரை குத்தி இருப்பது குறித்து கருத்துரைக்க மசீச தலைவர் லியோ தியோங் லாய் மறித்து விட்டார். தமது கருத்தை பின்னொரு சமயத்தில் தெரிவிப்பதாக அவர் கோலாலம்பூரில் செய்தியாளர்கள் இரண்டாவது தடவையாக கேட்ட கேள்விக்கு…

அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல், மா கூறுகிறார்

  சரவாக் மாநிலத் தேர்தல் மற்றும் இம்மாதம் நடைபெற்ற இரண்டு இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் பாரிசான் பெரும் வெற்றி பெற்றததைத் தொடர்ந்து மலேசியாவின் 14 ஆவது பொதுத் தேர்தல் 2017 ஆண்டில் நடைபெறும் என்று கெராக்கான் கட்சியின் தலைவர் மா சியு கியோங் ஆருடம் கூறினர். இதற்கு காரணம்…

இடைத் தேர்தல் தோல்விக்கு மற்றவர்கள்மீது பழி போடுவதை நிறுத்துவீர்: எதிரணியைக்…

சிறையில்   இருக்கும்   முன்னாள்  எதிரணித்  தலைவர்   அன்வார்   இப்ராகிம்,   எதிரணியினர்  சுங்கை  புசார்,  கோலா  கங்சார்  இடைத் தேர்தல்  தோல்விக்கு  ஒருவர்மீது  மற்றொருவர்  பழிபோடுவதை  முதலில்  நிறுத்த  வேண்டும்  என்று  கூறினார். “எதிரணி  தேர்தல்  முடிவை  அடக்கத்துடன்  ஏற்றுக்கொண்டு  அதன்  பலவீனங்களைக்  கவனமாகக்  கண்டறிய  வேண்டும். “சாக்குபோக்கு  சொல்லிக் …

அம்னோ கிளர்ச்சிக்காரர்கள் 3எம் கட்சி அமைக்க ஆலோசனை

கிளர்ச்ச்சிக்கார  அம்னோ  கிளைத்  தலைவர்களைக்  கொண்ட  கெராக்கான்  கெத்துவா  சாவாங்கான்  மலேசியா (ஜிகேசிஎம்),  ஒரு  புதிய  கட்சி  அமைப்பது  பற்றி  ஆலோசித்து  வருகிறது. ஆண்டுத்  தொடக்கத்தில்  அம்னோவிலிருந்து   வெளியேறிய   முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நேற்று  கட்சியிலிருந்து  நீக்கப்பட்ட   முன்னாள்  துணைத்  தலைவர்  முகைதின் யாசின்,  அம்னோ …

முப்தியின் தீவிரவாத கருத்தைக் கேட்டு ‘மிதவாத’ நஜிப் மெளனம் காப்பது…

ஹுடுட்  சட்டம்  கொண்டுவரப்படுவதை  எதிர்க்கும்  டிஏபி-யை   'kafir harbi' என்று  பகாங்  முப்தி   முத்திரை  குத்தியிருப்பது   குறித்து   எதுவும்  கருத்துரைக்காமல்  மெளனம்  சாதிக்கும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  பிகேஆர்  சாடியது. “வன்முறையைத்   தூண்டிவிடக்  கூடியது  பகாங்  முப்தியின்  அடாவடிப்  பேச்சு.  இது  மோசமான,  கொடூரமான  விளைவுகளை  ஏற்படுத்தலாம்”,…

கட்சிநீக்கம் நியாயமானதே- ஜோகூர் எம்பி

கட்சியின்  முன்னாள்  துணைத்  தலைவர்  முகைதின் யாசினையும்  முன்னாள்  கெடா  மந்திரி  புசார்  முக்ரிஸ்  மகாதிரையும்  விலக்கும்  கட்சி   உச்சமன்றத்தின்  முடிவை  ஏற்பதாக  ஜோகூர்  அம்னோ  அறிவித்துள்ளது. அம்முடிவு  நியாயமானது  என  ஜோகூர்  அம்னோ  நம்புவதாக  ஜோகூர் மந்திரி  புசார்  காலிட்   நோர்டின்  தெரிவித்தார்  என  பெர்னாமா  கூறியது.…