பாதிக்கப்பட்டவரின் மாற்றாந்தந்தை மற்றும் அவரது பெற்றோர் உள்ளிட்டோர் தைப்பிங் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தைப்பிங் நீதிமன்ற வளாகத்தில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர் கடந்த வாரம் எட்டு வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது குற்றம்…
சிலாங்கூர் அரசு திடமாகவே உள்ளது: எம்பி திட்டவட்டம்
சிலாங்கூர் அரசிலிருந்து பாஸ் வெளியேறினால் அது கவிழ்ந்து விடும் என்று கூறப்படும் வேளையில் அப்படி எதுவும் நடக்காது என்று அடித்துக் கூறுகிறார் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி. சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கண்டர் அப்துல் சமட், சிலாங்கூர் அரசுக்கு அந்த இஸ்லாமியக் கட்சியின் ஆதரவு தொடரும் என …
எம்ஏசிசி செய்தியாளர் கூட்டம்: பல ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
இன்று நடைபெற்ற மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்ள சில ஊடகங்கள் தவிர்த்து பலவற்றுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆணையத்தின் அதிகாரிகள் செய்தியாளர் கூட்டம் ஒன்று நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. “செய்தியாளர் கூட்டம் எதுவும் நடக்கவில்லை. குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கும் (எம்ஏசிசி தலைவர்) அபு காசிமுக்குமிடையில் ஒரு நேர்காணல் நடந்தது, …
மகாதிர் இஸ்லாத்தின் எதிரிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார்: உத்துசான் குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தம் சொந்தக் கொள்கைகளை மீறி, இஸ்லாத்தின் அப்பட்டமான எதிரியான டிஏபி-யுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டிருப்பதாக அம்னோவுக்குச் சொந்ந்தமான உத்துசான் மலேசியா குற்றஞ் சாட்டியுள்ளது. மகாதிர் தாம் நீண்ட காலமாகக் கடைப்பிடித்து வந்த கொள்கைகளிலிருந்து விலகிச் சென்று விட்டார் என பாஸ் ஆன்மிக …
எம்ஏசிசி-இல் அதிரடி மாற்றம்: உயர் தலைவர்கள் இருவர் விலகல்
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி)த் தலைவர் அபு காசிம் முகம்மட் விரைவில் அப்பதவியிலிருந்து விலகுகிறார். அவரின் இடத்துக்குச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. பதவி விலக அபு காசிமுக்குப் பிரதமர் துறையிலிருந்து நெருக்குதல் வந்ததாம். தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் …
‘தீனி போடுவதாக’ இழித்துரைப்போரைப் பிரதமர் சாடினார்
அரசியலில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து இழித்தும் பழித்தும் பேசுவோரைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடினார். அரசாங்க உதவி பெறுவோரை “pemakan dedak (விலங்குகளுக்கான தீனியைத் தின்பவர்)” என்று வருணித்து கொடுக்கப்படும் உதவியைக் கெடுக்கப் பார்க்கிறார்கள் என்றாரவர். பிரதமர் பெயர்களைக் குறிப்பிடவில்லை. ஆனாலும், தம் முன்னாள் அரசியல் குருவும் …
குற்றத்தைத் தடுக்கும் பொறுப்பில் இருந்தவரே மிரட்டிப் பணம் பறித்தாராம்
அவர் அரசுசாரா குற்றத் தடுப்பு அமைப்பு ஒன்றின் தலைவர். சட்டவிரோதமாக சூதாட்டம் நடந்தால் அது பற்றி போலீசில் தெரிவிக்க வேண்டியது அவருடைய பொறுப்பு. ஆனால், அவரே சூதாட்டதை நடத்தி வந்த ஒருவரை மிரட்டிப் பணம் பறித்து வந்திருக்கிறார். 30-வயது நிரம்பிய அந்த டத்தோவை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் …
அரசாங்கம்: அபு காசிம் சுய விருப்பத்தின்பேரில்தான் பணி விலகுகிறார்
அபு காசிம் முகம்மட் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி) தலைமை ஆணையர் பதவியிலிருந்து சுய விருப்பத்தின்பேரிலேயே ஆகஸ்ட் 1-இல் விலகுகிறார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா கூறினார். ஒரு மாத அறிவிக்கை கொடுத்து பதவி விலக அவர் செய்து கொண்ட விண்ணப்பத்தை மாமன்னர் மலேசிய ஊழல்தடுப்புச் சட்டம் …
கேஎல்ஐஏ2 பெயரை மாற்றுவது வான் போக்குவரத்துச் சட்டத்துக்கு எதிரானது
கேஎல்ஐஏ2 என்ற பெயரை மாற்ற இயலாது என்று கூறும் மலேசிய ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) நிர்வாக இயக்குனர் பாட்லிஷாம் ஜசாலி, அதை மாற்றுவது வான் போக்குவரத்துச் சட்டத்தை மீறுவதாகும் என்றார். கேஎல்ஐஏ2-இன் பெயரை எல்சிடிடி2 என்று மாற்ற வேண்டும் என்று ஏர் ஏசியா விமான நிறுவனம் நடத்திவரும் …
எதிரணியின் தோல்விக்கு எதிரணியே காரணம்- ஆய்வாளர்கள்
அண்மைய இடைத் தேர்தல் தோல்விக்கு வாக்காளர் எண்ணிக்கை குறைந்ததுதான் காரணம் என்று பக்கத்தான் கூறிக் கொண்டிருக்கிறது. அப்படி வாக்காளர்கள் வாக்களிக்க வராமல் போனதற்குக் காரணமே எதிரணியினர்தான் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். ஒண்டிக்கு-ஒண்டி என்று போட்டியிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியது ஒரு காரணம் என்று அரசியல் ஆய்வாளர் லியு …
கடன் தொகை செலுத்தப்படாததற்காக உத்தரவாதமளித்திருந்த நஜிப்பின் மகன்மீது சிஐஎம்பி வழக்கு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகன் முகம்மட் நஸிபுடின் முகம்மட் நஜிப் ஒரு நிறுவனம் வாங்கிய கடனுக்கு உத்தரவாதமளித்திருந்தார். அந்த நிறுவனம் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பதால் கடனுக்கு உத்தரவாதமளித்திருந்த நஸிபிடின்மீது சிஐஎம்பி வழக்கு தொடுத்துள்ளது. வழக்கு ஆகஸ்ட் முதல் நாள் விசாரணைக்கு வரும் என உயர் நீதிமன்ற …
நஜிப்பின் அடுத்த குறி…. ஜாஹிட் ஹமிடியா?
மூத்த செய்தியாளர் ஒருவர்.பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமக்கு அடுத்த இடத்தில் உள்ள அஹ்மட் ஜாஹிட் ஹமிடியைத் தீர்த்துக்கட்ட திட்டமிடக் கூடும் என்று ஆருடம் கூறியுள்ளார். துணைப் பிரதமரான ஜாஹிட் ஹமிடி சுங்கை புசார், கோலா கங்சார் இடைத் தேர்தல்களில் பிஎன் நடவடிக்கை இயக்குனராக இருந்து செயல்பட்டு தேர்தலில் …
ரிம12மில்லியனை போலீசிடம்தான் கொடுத்தோம் : பிணையாளிகளின் உறவினர்கள் திட்டவட்டம்
பிலிப்பீன்சின் தீவிரவாத கும்பலான அபு சயாப்பிடம் சிக்கிக் கொண்டிருந்த நால்வரை விடுவிப்பதற்கு ரிம12 மில்லியன் பிணைப் பணத்தை போலீசிடம்தான் கொடுத்ததாக பிணையாளிகளின் உறவினர்கள் உறுதியாகக் கூறினர். போலீஸ் பிணைப் பணத்தைப் பெறவில்லை என போலீஸ் ப்டைத் தலைவர் காலிட் அபு பக்கார் மறுத்ததை அடுத்து அவர்கள் அதை வலியுறுத்தினர்.…
சர்பையினி மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது வழக்கு தொடுப்பீர்: டிபிஎச் அறக்கட்டளை வலியுறுத்து
ஜனநாயகத்துக்காக போராடும் தியோ பெங் ஹொக் அறக்கட்டளை(டிபிஎச்), சுங்கத்துறை உதவி இயக்குனர் அஹமட் சர்பைனி முகம்மட்டின் மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது வழக்கு தொடுக்கப்படுவதைக் காண விரும்புகிறது. மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த்தின் கவனக்குறைவே அஹமட் சர்பைனியின் மரணத்துக்கு வழிகோலியதாகக் கூறி ரிம213,000 இழப்பீடு கொடுக்க உத்தரவிட்ட முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை டிபிஎச் …
மீரியில் பிகேஆர் பிரமுகர் சுட்டுக் கொலை
சரவாக் தேர்தலில் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் பில் காயோங் இன்று காலை சுடப்பட்டார். பில் மே7 மாநிலத் தேர்தலில் பெகுனு தொகுதியில் போட்டியிட்டார். செனாடின் நகரில் இ-மார்ட் ஓரிட வணிக மையத்துக்கு அருகில் போக்குவரத்து விளக்குப் பகுதியில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என பிகேஆர் அறிக்கை ஒன்று கூறியது.
பிணைப் பணத்தில் ரிம8.8 மில்லியன்தான் அபு சயாப்புக்குச் சென்றதா?
அபு சயாப் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நான்கு சரவாக்கியர்களின் விடுதலைக்காக பி130மில்லியன் (ரிம12 மில்லியன்) பிணைப்பணம் கொடுக்கப்பட்டது ஆனால், அதில் பி100 மில்லியன்(ரிம8.8 மில்லியன்) மட்டுமே கடத்தல்காரர்களின் கைக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது என மணிலா டைம்ஸ் நேற்றிரவு அறிவித்திருந்தது. மீதமுள்ள ரிம3.2 மில்லியனைப் பயங்கரவாதிகளுடன் சேர்ந்து செயல்படும் மலேசிய, பிலிப்பீன்ஸ் …
சிலாங்கூர் அரசுப் பணியாளர்களுக்கு ஹரி ராயா போனஸ்
சிலாங்கூர் அரசு, அதன் பணியாளர்களுக்கு நோன்புப் பெருநாளை யொட்டி 1.5மாத போனஸ் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. ஜூலை முதல் நாள் தொடங்கி போனஸ் வழங்கப்படும் என மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார். மாநிலத்தின் 17,528 அரசுப் பணியாளர்கள் அந்த போனசைப் பெறுவார்கள். இதற்காக மாநில அரசு ரிம45.6 மில்லியனை …
எம்ஏசிசி-இன் கவனக் குறைவே அஹமட் சர்பைனியின் சாவுக்குக் காரணம்: நீதிமன்றம்…
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தின் கவனக்குறைவுதான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு சுங்கத்துறை உயர் அதிகாரி அஹமட் சர்பைனிக்கு மரணத்துக்குக் காரணம் என முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நீதிபதி முகம்மட் ஸவாவி முகம்மட் சாலே தலைமையில் மேல்முறையீட்டை விசாரித்த மூவரடங்கிய நீதிபதிகள் குழு, அவ்வழக்கைத் தள்ளுபடி செய்ததில் உயர் நீதிமன்றம் தவறிழைத்து …
எம்எச்370: முத்தரப்புப் பேச்சில் தேடும் நடவடிக்கையைக் கைவிட முடிவு செய்யப்படலாம்…
எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், இன்று கோலாலும்பூரில் தொடங்கும் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்புப் பேச்சுகளில் காணாமல்போன அவ்விமானத்தைத் தேடும் நடவடிக்கையைக் கைவிடுவதென முடிவு செய்யப்படலாம் என்று கவலை கொண்டுள்ளனர். எம்எச்370 குடும்ப ஆதரவுக் குழுவான Voice 370…
ஐஜிபி: சாபாவில் யாரும் கடத்தப்படவில்லை
சாபாவுக்கு அப்பால் உள்ள கடலில் நான்கு மலேசியர்கள் கடத்தப்பட்டதாகக் கூறும் செய்திகளை இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் மறுத்தார். “அது வெறும் வதந்தி. நம் மக்களில்…
இடைத் தேர்தல்கள் மகாதிருக்கு நல்லதொரு பாடம்- முன்னாள் உயர் நீதிபதி
பிஎன்னுக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த இடைத் தேர்தல்கள் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு நல்ல பாடமாக அமையட்டும் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட். முன்னாள் பிரதமர், அவர்மீதுள்ள நம்பிக்கையையும் வாழ்நாள் சாதனைகளையும் எதிரணியுடன் ஒத்துழைப்பதன் மூலம் கெடுத்துக்கொள்ளக் கூடாது என ஹமிட் உத்துசான்…
வீழ்ச்சியடைந்துள்ள எதிரணி மீண்டும் எழுச்சி பெறும், டிஎபி கூறுகிறது
நேற்று நடந்துமுடிந்த இரண்டு இடைத் தேர்தகள் மற்றும் கடந்த மாதம் நடைபெற்ற சரவாக் மாநில தேர்தல் ஆகியவற்றில் எதிரணி பின்னடைவுகளைச் சந்தித்த போதிலும் பாக்கத்தான் ஹரப்பான் மீண்டும் எழுச்சி பெறும் என்று டிஎபியின் கல்வி பிரிவு தலைவர் லியு சின் தோங் கூறினார். இன்றைய சூழ்நிலை 1995…
நஜிப்: கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் உதவ விரும்புகிறது
2014 ஆண்டில் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு மத்திய அரசாங்கம் அதன் கொள்கையில் மாற்றங்கள் செய்வதற்கு தயாராக இருப்பதாக நஜிப் கூறினார். கிளந்தானை எதிர்கட்சி ஆட்சி செய்த போதிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு தலா ரிம65,000 மதிப்புள்ள வீடுகளை கட்டி கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக…
சுங்கை புசார், கோலகங்சார் இடைத் தேர்தல்: பாரிசான் வெற்றி
சுங்கை புசார் மற்றும் கோலகங்சார் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பாரிசான் வெற்றி பெற்றுள்ளது. இறுதி நிலவரம்: சுங்கை புசார் பிஎன் - 16,800 அமனா - 7,609 பாஸ் - 6,902 பெரும்பான்மை: 9,191 …


