சிங்கப்பூர் மலாய்க்காரர்கள் திருடனை “:பெஞ்சூரி” என்கின்றனர், மலேசிய மலாய்க்காரர்கள் திருடனை…

  சிங்கப்பூர் காமெடியன் ஃபாக்கா ஃபஸ் தாம் வேடிக்கையாக பேசுகையில் பிரதமர் நஜிப்பை ஒரு திருடனுக்கு ஒப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். தாம் யாரையும் எதற்காகவும் குற்றம் சாட்டவில்லை என்று கூறிய அவர், தாம் வெறுமனே தற்போதைய சம்பவங்கள் குறித்து கேலியாக பேசியதாக கூறினார். ஆனால், அவரது அறிக்கை சிலாங்கூர்…

வாட்ஸ்அப்பில் பிரதமரை அவமதிப்பு செய்ததற்காக மூத்த குடிமகன் கைது

  பெட்டாலிங் ஜெயா, கம்போங் துங்குவைச் சேர்ந்த ஒரு 76 வயது முதியவர் வாட்ஸ்அப் சேட்டில் பிரடமர் நஜிப்பை அவமதிக்கும் ஒரு படத்தை பகிர்ந்து கொண்டதற்காக இன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஜோகூர் நீதிமன்றம் ஒன்றின் துணை பதிவாளர் நோரிடாயா அப்துல் மானாப் அம்முதியவரை செவ்வாய்கிழமை வரையில் தடுப்புக் காவலில்…

கைருடின்: ஏன் நஜிப்பையும் விடுப்பில் போகச் சொல்வில்லை?

  இரு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கும் பினாங் மாநில முதமைச்சர் குவான் எங் நற்பண்புவாய்ந்தவராக நடந்து கொண்டு விடுப்பில் செல்ல வேண்டும் என்று பாஸ் கட்சியின் ஆன்மீக தலைவர் ஹருன் டின் ஆலோசனை கூறியிருந்தார். ஆனால், இந்த ஆன்மீக தலைவர் ஹருன் ஏன் அம்மாதிரியான ஆலோசனையை நஜிப்புக்கு வழங்கவில்லை…

லிம்முக்கான நன்கொடை மக்கள் மனமுவந்து கொடுத்தது, மர்மான வெளிநாட்டு நன்கொடையாளரிடமிருந்து…

மாநில முதல்வர் லிம் குவான் எங்கின் போராட்டத்திற்காக மக்கள் வழங்கிய நன்கொடைகள் மக்கள் மனமுவந்து வழங்கியதாகும், மர்மமான வெளிநாட்டு நன்கொடையாளரிலிடமிருந்து பெறப்பட்டதல்ல என்று பினாங் அம்னோ துணைத் தலைவர் ரீஸால் மரைக்கான் நயைனா மரிக்கானுக்கு நினைவுறுத்தப்பட்டது. லிம்மின் சமீபத்திய வழக்கிற்காக நன்கொடையளிக்கும் சுமையை மக்களுக்கு டிஎபி உண்டுபண்ணி இருப்பதாக…

பாதுகாக்க வேண்டியவர்களே அடக்குமுறையாளர்களாக மாறிவிட்டார்களே- மகாதிர் அங்கலாய்ப்பு

நாட்டைப்  பாதுகாக்கும்  பொறுப்பில்  இருப்பவர்கள்,  அடக்குமுறையில்  இறங்கி  விடுகிறார்களே  என   முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அங்கலாய்த்துக்  கொண்டிருக்கிறார். “என்னிடம்  நான்கு  முறை  போலீஸ்  விசாரணை  செய்து  விட்டது.  ஹரி  ராயாவுக்குப்  பின்னர்   இன்னும்  ஒரு  விசாரணை    காத்திருக்கிறது. “இதை  நான்  பதிவு  செய்த  பிறகு  மேலும்  ஒரு …

‘ரிம2.6 பி. கொடுக்க அரபு கொடையாளர் இல்லை, அதனால்தான் டிஏபி…

டிஏபி  பினாங்கு  மாநிலத்தை  ஆட்சி  செய்தாலும்  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்குக்குப்  பிணைப்பணம்  கட்டுவதற்கு  டிஏபி-யிடம்  காசில்லை. அதனால்தான்  அது  நன்கொடை   கேட்டுப்  பொதுமக்களிடம்   செல்கிறது. “பொதுமக்களின்  அன்பளிப்புகளையும்  நன்கொடைகளையும்  நம்பியுள்ள  ஒரு  கட்சிக்கு   ரிம1 மில்லியன்  சிறிய  காசல்ல”, என  புக்கிட்  மெர்தாஜாம்  எம்பி  ஸ்டீபவ்  சிம் …

‘அம்னோ என்றால் குவான் எங் எல்லாப் பதவிகளையும் இழந்திருப்பார்’

பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  மட்டும்  அம்னோ  உறுப்பினராக  இருந்தால்  ஊழல்  குற்றம்  சாட்டப்பட்டவுடன்  கட்சியிலிருந்தும்  அரசாங்கப்  பதவிகளிலிருந்தும்  இயல்பாகவே  இடைநீக்கம்  செய்யப்பட்டிருப்பார். புதிதாக  நியமிக்கப்பட்ட   வீடமைப்பு,  நகர்ப்புற  நல்வாழ்வு  மற்றும்  ஊராட்சி  அமைச்சர்  நோ  ஒமார்  இவ்வாறு  கூறினார்.  அம்னோ  சட்டத்தை  மதிக்கும்  கட்சி  என்றாரவர்.…

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ லிம் குறித்து கீர் தோயோ

பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்மீது  குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது  பற்றிக் கருத்துரைத்த  முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  டாக்டர்  கீர்  தோயோ  “முற்பகல்  செய்யின்  பிற்பகல்  விளையும்”  என்பார்களே  அது  இதுதான்  என்றார். “நான்  சிறைக்கு  அனுப்பப்பட்டதைத்  தனக்குக்  கிடைத்த  மிகப்  பெரிய   வெற்றியாக  டிஏபி  கொண்டாடியது. “லிம் குவான்…

குவான் எங்-கினால் 14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் வெற்றி வாய்ப்பு…

பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கைது  செய்யப்பட்டுக்  குற்றம்  சாட்டப்பட்டிருப்பது   டிஏபி-இல் ஒரு  நெருக்கடியை  உருவாக்குவதோடு   அடுத்த  பொதுத்  தேர்தலில்  எதிரணியின்  வெற்றி  வாய்ப்பையும்   கெடுக்கப்  போகிறது   என்கிறார்கள்  அரசியல்  ஆய்வாளர்கள். ஏனென்றால்,  டிஏபி  தலைமைச்  செயலாளர்  குற்றவாளி  என்று  தீர்ப்பளிக்கப்பட்டு முதலமைச்சர்  பதவியையும்  சட்டமன்ற  உறுப்பினர் …

பில் காயோங் கொலை தொடர்பில் ஐவர் கைது

ஜூன்  21-இல், பிகேஆரின்  மீரி  கிளை  செயலாளர்  பில்  காயோங்  லூத்தோங்கில்  கொலையுண்ட  சம்பவம்  தொடர்பில்  போலீசார்  ஐவரைச்  சந்தேகத்தின்பேரில்  கைது  செய்துள்ளனர். 22க்கும்  41வயதுக்குமிடைப்பட்ட  அவர்களில்  நால்வர்  ஆண்கள்,  ஒருவர்  பெண். அந்த  ஐவரும்  நேற்றிரவும்  இன்று  காலையும்  செய்யப்பட்டதாக  சரவாக்  சிஐடி  தலைவர்  எஸ்ஏசி  தேவ் …

சீனர்களிடையே மதிப்பைக் கூட்டிக்கொள்ள அஸ்மின் அதிகம் செய்ய முடியும்

சிலாங்கூர்   மந்திரி புசார்  அஸ்மின்  அலியின்  அடைவுநிலைமீது  மெர்டேகா  மையம்  நடத்திய  ஆய்வில்  மந்திரி  புசார்  நன்றாகவே  செயல் படுகிறார்  என்று  பெரும்பாலோர்  கருத்துத்  தெரிவித்திருந்தாலும்  மலாய்,  இந்திய  வாக்காளர்களுடன்  ஒப்பிடுகையில்  சீனர்களில்  54  விழுக்காட்டினர்  மட்டுமே   அவர்மீது திருப்தி  கொண்டிருப்பது  தெரிய  வந்துள்ளது. ஆனாலும்,  சீனர்களில்  54 …

பினாங் டிஎபி: குவான் எங் பதவி துறக்க வேண்டியதில்லை

பினாங் முதலமைச்சர் குவான் எங் பதவி துறக்கவோ விடுமுறையில் செல்லவோ வேண்டியதில்லை என்று பினாங் மாநில டிஎபி இன்று முடிவெடுத்துள்ளது. இன்று காலையில் குவாங் எங் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாடு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குவான் எங்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை.…

எரிபொருள் விலை கூடுகிறது

  நாளையிலிருந்து எரிபொருள் விலை அதிகரிப்பு காண்கிறது. ஒரு லீட்டர் ரோன்95 ரிம1.75 க்கும், ரோன்97 ரிம2.10 க்கும் மற்றும் டீசல் ரிம1.60 க்கும் விற்கப்படும். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும் முதல் விலை உயர்வு இதுதான்.    

எம்டியுசி: விமான நிறுவனம் ராயாவுக்கு முன்பே பணியாளர்களின் சம்பளப் பாக்கியைக்…

மலேசிய  தொழிற்சங்கக்  காங்கிரஸ் (எம்டியுசி), ஒரு  விமான  நிறுவனம்  அதன்  பணியாளர்களுக்குக்  கொடுக்க  வேண்டிய  சம்பளப் பாக்கியை  ஹரி  ராயாவுக்கு  முன்பே  கொடுத்தாக  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுத்துள்ளது. சுமார்  300  பணியாளர்கள்  கடந்த  மூன்று  மாதங்களாக  தங்களுக்கான  சம்பளமும்  ஆறு  மாதங்களாக   அலவன்சுகளும்  கொடுக்கப்படாமல்  இருப்பதாகக்  கூறினார்கள்.…

அடுத்த பொதுத் தேர்தலில் பல்முனைப் போட்டிதான், வேறு வழியில்லை- அமனா

பார்டி  அமனா  ரக்யாட்,   அடுத்த  பொதுத்  தேர்தலில்  பிஎன்னையும்  பாஸையும்  எதிர்த்து  பல்முனைப்  போட்டிகளில்  ஈடுபட  வேண்டியிருக்கும்  என்பதை  அதன்  பக்கத்தான்  ஹராபான்  தோழமைக்  கட்சிகளுக்கு  நினைவுபடுத்தியது. இதனை  எதிர்கொள்ள  கூட்டணி  தன்னைத்  தயார்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என  அமனா  தொடர்பு  இயக்குனர்   காலிட்  சமட்  நேற்றிரவு  ஒரு …

ஹரி ராயா ஜூலை 6 என்றால் அரசு ஊழியர்களுக்கு ஜூலை…

ஜூலை  6-இல் ஹரி  ராயா  கொண்டாடப்பட்டால்  ஜூலை  8  அரசுப்  பணியாளர்களுக்குச்  சிறப்பு விடுமுறை  கொடுக்க  அரசாங்கம்  இணக்கம்  தெரிவித்திருப்பதாக  அரசாங்கத்  தலைமைச்   செயலாளர்  அலி  ஹம்சா  அறிவித்தார். ஆனால்,  ஹரி  ராயா  ஜூலை  5  என்றால்  சிறப்பு  விடுமுறை  கிடையாது.

குவான் எங்மீது விரைவாக செயல்பட்டதுபோல் 1எம்டிபி விசயத்தில் செயல்படாதது ஏன்?…

அதிகாரிகள்  அதிவேகமாகச்  செயல்பட்டு  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்மீது  நடவடிக்கை  எடுத்திருக்கும்  விதத்தைச்  சமூக  அமைப்புகள்  குறைகூறியுள்ளன. அவ்விவகாரம்மீது  தனித்தனியே  அறிக்கைகள்  வெளியிட்டிருக்கும்  பெர்சேயும்  ஊழல்  எதிர்ப்பு  அமைப்பான  சி-4ம்,  மற்ற  ஊழல்  வழக்குகளில்,  1எம்டிபி  ஊழல்,  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பில்லியன்  ரிங்கிட்  நன்கொடை  …

குவான் எங், பாங் லி குற்றச்சாடுகளை மறுத்து விசாரணை கோரினார்

  பினாங்கு மாநில முதலமைச்சர் குவான் எங் மற்றும் பாங் லி கூன் ஆகிய இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் பினாங்கு ஜியோர்ஜ் டவுன் செசன்ஸ் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட பின்னர், சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்பாண்டியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி வழக்கை பினாங் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற சம்மதம்…

போலீசார் விடுவிக்கப்பட்டது மலேசியாவின் மனித உரிமை கடப்பாட்டின்மீது சந்தேகம் கொள்ள…

மலேசியா  எந்த  அளவுக்கு  மனித  உரிமை  மீறல்களை முடிவுக்குக்  கொண்டுவரும்  கடப்பாட்டில்  அக்கறை  கொண்டிருக்கிறது  என   அம்னெஸ்டி  இண்டர்நேசனல்  அமைப்பு   கேள்வி  எழுப்பியுள்ளது. என். தர்மேந்திரனின்  இறப்புக்குக்  காரணமானவர்கள்  என்று  குற்றஞ்சாட்டப்பட்டிருந்த  நான்கு  போலீஸ்  அதிகாரிகள்  விடுவிக்கப்பட்டதை  அடுத்து  அது  இப்படி வினவியது. அந்நால்வரும்  2013--இல்,  போலீஸ்  காவலில் …

குவான் எங் நீதிமத்திற்கு கொண்டுவரப்பட்டார்

  போலீசாரும் எம்எசிசி புடைசூழ பினாங் மாநில முதலமைச்சர் குவான் எங் இன்று காலையில் நீதி மன்றத்திற்கு கொண்டுவரப்பட்டார். அவருக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும். மலேசிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் 2009 செக்சன் 23 மற்றும் குற்றவியல் சட்டம் செக்சன் 165 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்படுகிறார்.…

குவாங் எங் கைது செய்யப்பட்டார்

பினாங்கு மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் மலேசிய ஊழல் எதிரிப்பு ஆணயத்தால் (எம்எசிசி) இன்று மாலை கைது செய்யப்பட்டார். குவான் எங் இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும், அவர் நாளை காலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்றும் அவரின் தந்தையும் டிஎபியின் மூத்த தலைவருமான லிம்…

காரில் சென்று கொண்டிருந்த நிறுவன மேலாளர் சுடப்பட்டார்

சிரம்பானிலிருந்து   கோலாலும்பூரில்  உள்ள  தம்   அலுவலகத்துக்குக்  காரில்  சென்று  கொண்டிருந்த  ஒரு  நிறுவனத்தின்   பொது  மேலாளர்  இன்று  சுடப்பட்டார். மோட்டார்  சைக்கிளில்  வந்த  இரு  ஆடவர்கள்  ஆறு  தடவை  அவரை  நோக்கிச்  சுட்டனர்  என   கோலாலும்பூர்  போலீஸ்  தலைவர்  அமர்  சிங்   கூறினார்.   வடக்கு- தெற்கு  நெடுஞ்சாலையில்  தேசா …

திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் நஜிப் சிலாங்கூரைத் திரும்பக் கைப்பற்றுவார்

திடீர்  தேர்தல்  நடத்தப்பட்டால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்தான்  வெற்றி  பெறுவார்,  சிலாங்கூரைக்கூட  அவர்  திரும்பக்  கைப்பற்ற  முடியும்  என்று  கூறியுள்ளார்  நஜிப்பின்  மிகப்  பெரிய  எதிரியான   டாக்டர்  மகாதிர்   முகம்மட். “இப்போதைக்கு  எதிரணி   சீர்குலைந்து  கிடக்கிறது.  அவர்கள்  (தேர்தலைச்  சந்திக்க)  தயாராக  இல்லை.  பிஎன்னிடம்  இருப்பதுபோன்ற   தேர்தல் …