ரெடாட்ரூடைடு அல்லது "ரெட்டா" என்ற மூலப்பொருளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மலேசியாவில் பயன்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை ரெடாட்ரூடைடு அடங்கிய எந்தவொரு தயாரிப்பும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை. ரெடாட்ரூடைடு,…
அன்வார்: மகாதிருடன் சமரசம் செய்துகொள்வதற்கில்லை
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிரை மன்னிக்கத் தயார். ஆனால், அவர் இழைத்த தீமைகளை மறப்பதற்குத் தயாராக இல்லை; அவற்றை மறந்து அவருடன் கைகுலுக்கி சமரசம் செய்துகொள்ளத் தயாராக இல்லை. “மகாதிர் பணி ஓய்வு பெற்ற பின்னர்(2003-இல்) அவரைப் பற்றி என்றும் நான் கடுமையாக …
அன்வாருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது, அரசு தரப்பு…
அன்வார் குதப்புனர்ச்சி வழக்கு II இல் மேல்முறையீட்டு நீதிமன்றம் விதித்த ஐந்து ஆண்டு சிறை தண்டனை போதாது என்று அரசு தரப்பு வழக்குரைஞர் குழு கூறுகிறது. விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு சிறை தண்டனை பொதுநல நீதியின் நோக்கத்தை எட்டவில்லை என்று அரசு தரப்பு வழக்குரை குழு முன்வைத்துள்ள வாதத்தை…
எங்களுடைய பொதுக்கூட்டத்தில் தலையிடாதீர், அம்னோ கெராக்கானுக்கு சொல்கிறது
எதிர்வரும் அம்னோ பொதுக்கூட்டத்தில் இதர கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார். கெராக்கானை பின்பற்றி அம்னோவும் அதன் பொதுக்கூட்டத்தில் உணர்ச்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிக்கும் பேராளர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கெராக்கான் தலைமைச் செயலாளர் லியாங் டெக்…
கிட் சியாங்: ஹலோ காலிட், மலேசியர்கள் குறைந்த ஞாபசக்தி உடையவர்கள்…
சுயேட்சை போலீஸ் புகார்கள் மற்றும் தவறான நடத்தை ஆணையம் (ஐபிசிஎம்சி) அமைக்கப்படுவதற்கு போலீஸ் தரப்பு கடும், ஏன், அச்சம்தருகிற அளவிலான எதிர்ப்பைத் தெரிவித்ததின் விளைவாக முன்னாள் பிரதமர் அப்துல்லா படாவி ஐபிசிஎம்சிக்கு மாற்றாக பல்லில்லாத இஎஐசி கொண்டு வந்தார். நேற்று, போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு…
அன்வார்: எனக்குத் தடை விதிக்க யும்முக்கு என்ன உரிமை இருக்கிறது?
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் திங்கட்கிழமை அவருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கை எதிர்கொள்ளவிருக்கிறார். அதே தினத்தில் அவர் மலாயா பல்கலைக்கழகத்தில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் அங்கு உரையாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தடையோ இல்லையோ, அன்வார் உரையாற்றுவது நிச்சயம். தாம் உரையாற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது…
பினாங்கில் வெளிநாட்டு சமையல்காரர்களுக்குத் தடை
பினாங்கில் அங்காடிக் கடைக்காரர்கள் வெளிநாட்டுச் சமையல்காரர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளத் தடை விதிக்கப்படும். ஒரு ஆய்வில் 86 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்ததை அடுத்து பினாங்கு அரசு அம்முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து அக்கொள்கை நடப்புக்கு வருவதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார். “வெளிநாட்டவர் சமையல்காரர்களுக்கு உதவியாக, கடை …
எதிர்ப்புக்கிடையே அன்வாரின் சொற்பொழிவை நடத்துவதில் மாணவர்கள் தீவிரம்
பல்கலைக்கழக அதிகாரிகளின் மருட்டலையும் பொருட்படுத்தாமல் எதிரணித் தலைவர் அன்வாரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வதில் யுனிவர்சிடி மலாயா மாணவர் சங்கம் (பிஎம்யுஎம்) உறுதியாக உள்ளது. சொற்பொழிவு நடத்தப்படுவது பற்றிப் பல்கலைக்கழகம், அதன் ஏற்பாட்டாளரும் பிஎம்யுஎம் தலைவருமான பாஹ்மி சைனலுக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியிருப்பதாக இன்று பெரிதா ஹரியான் கூறியது.…
சிலாங்கூரில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் புத்துயிர் பெறும்
சிலாங்கூர் அரசு அம்மாநிலத்தில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்குப் புத்துயிர் அளிக்க ரிம 20மில்லியன் நிதி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதில் குறைந்த-விலை வீடுகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என வீடமைப்புக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இஸ்கண்டர் அப் சமட் கூறினார். “இதன்கீழ் உதவிபெறும் நான்கு வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை அடையாளம் …
உதயாவின் சிறைக் கொடுமைகளை சுஹாகாம் விசாரிக்க வேண்டும்
காஜாங் சிறையில் ஏற்பட்ட கொடூர அனுபவங்கள் என அதன் முன்னாள் கைதிகளில் ஒருவரான பி..உதயகுமார் சொல்லியிருப்பவை உண்மையானவையா என்பது குறித்து மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) விசாரணை நடத்த வேண்டும் என்று புரோஹாம் வலியுறுத்தியுள்ளது. “சிறைகளுக்கு வருகை அளிக்கவும் அங்குள்ள நிலவரங்கள்மீது பொது விசாரணை நடத்தவும் சுஹாகாம் சட்டம் …
என்ஜிஓ: அன்வார்மீது அரசியல் வழக்குகள் தொடுப்பதை நிறுத்துக
அனைத்துலக மனித உரிமைப் போராட்ட அமைப்பு ஒன்று, அரசாங்கம் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்மீது “அரசியல்-நோக்கம் கொண்ட வழக்குகள் தொடுப்பதை” நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. “குற்றச்செயல் எனக் கருதப்பட முடியாத ஒன்றுக்காக அன்வார்மீது வழக்கு தொடுப்பதானது, ஓர் அரசியல் எதிரியை அகற்ற அரசாங்கம் எவ்வளவு தூரம் செல்லத் …
ரிஸால்மான் இன்று நியு சிலாந்து செல்கிறார்
நியு சிலாந்தில் பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்தை எதிர்நோக்கியுள்ள முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயில் இன்று வெலிங்டன் அனுப்பப்படுவதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. நியு சிலாந்து போலீஸ் அதிகாரிகளும் மலேசிய இராணுவ அதிகாரிகள் இருவரும் அவருடன் செல்வார்கள் என அமைச்சின் அறிக்கை ஒன்று கூறிற்று.
இஸ்மா: மலாய்க்காரர்கள் “வந்தேறிகள்” அல்ல; பயணிகள்
மலாய்க்காரர்களை "வந்தேறிகள்" என்று முத்திரை குத்துவது முறையல்ல என்று இக்காதான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) கூறுகிறது. அவர்கள் உண்மையிலே "பயணிகள்". இங்கு வந்தவர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். ஆகவே, கெராக்கான் மாநாட்டில் பேசிய டான் லாய் சூன் மலாய்க்காரர்களை "வந்தேறிகள்" என்று கூறியது வரலாற்று உண்மைகளுக்கு முரணானது என்று…
எம்எச்370 சரக்குப் பட்டியல் ஒளித்துவைக்கப்பட்டுள்ளதில் சதியா?
காணமல் போன எம்எச்370 தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரை பிரதிநிதிக்கும் ஓர் அமைப்பு அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த முழுசரக்குப் பட்டியல் ஒளித்துவைக்கப்படிருப்பது ஒரு சதியா என்று வினவியுள்ளது. 200 பேரை ஏற்றிச் சென்ற எம்எச்370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது எவ்விதத்…
கொடூரமான மலேசிய சிறையில் உதயகுமார்
காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உதயகுமார் தமக்குக் கொடுக்கப்பட்ட பல்துலக்கும் தூரிகையைக் காட்டி இதுதான் தமக்கு பல்துலக்குவதற்கு கொடுக்கப்பட்டது. அது முற்றிலும் தேய்ந்து போனதாகும் என்றார். "இதனை அவருடன் சிறையில் இருந்த ஐவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வழக்கமாக அதிகமானோர் இருப்பதுண்டு. நான் வார்டனைக் கேட்டதற்கு இதற்கு காரணம்…
தீபாவளி வாழ்த்துகள்
செம்பருத்தி. கோம் அதன் வாசகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனைத்தமலேசியர்களுக்கும் அதன் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. இந்நாட்டில் நமக்கும் வரலாறு உண்டு, அதனைத் தெரிந்து கொள்ள நாம் இத்தீப திருநாளில் நமக்கு நாமே ஆணையிட்டுக்கொள்ள வேண்டும். இந்நன்னாளில் லங்காசுகத்தை முதன்முதலில் ஆண்ட இந்து மன்னன் மாறன்…
கையூட்டுப் பெற்றதற்காக 2012-இலிருந்து 273 போலீசார் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
கையூட்டு பெற்றதாக சந்தேகிக்கப்படும் போலீஸ்காரர்களை விசாரிக்கும் பொறுப்பை எப்போதுமே மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி) ஒப்படைத்து விடுவதாக போலீஸ் கூறியது. குற்றமிழைக்கும் அதிகாரிகளை போலீஸ் பாதுகாப்பதில்லை, உடனடி நடவடிக்கைக்காக எம்ஏசிசி-இடம் ஒப்படைக்கப்படுவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் தெரிவித்தார். “ஒழுங்குவிதி மீறல்கள், நடைமுறை மீறல்கள்…
நாடாளுமன்றத்துக்கு முழுமையான சீரமைப்பு தேவை
சட்ட முன்வடிவுகளைக் கொண்டுவந்து அவற்றை நிறைவேற்றுமுன்னர் அவை பற்றிப் பொதுமக்களின் கருத்தைத் தெரிந்துகொள்வது முக்கியம். அதற்கேற்ப நாடாளுமன்றத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்று முன்னாள் உயர்கல்வி துணை அமைச்சர் சைபுடின் அப்துல்லா முன்மொழிந்திருக்கிறார். புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டங்கள் பற்றியோ திருத்தங்கள் பற்றியோ எம்பிகளுக்கு, பிஎன் கட்சியினர் உள்பட, விளக்கம் …
அமைச்சரவை ஏஜி-க்காக முடிவு செய்வதில்லை
மலாய்மொழி பைபிள்களை எரிக்கப்போவதாக மிரட்டிய பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிமீது நடவடிக்கை எடுப்பதில்லை என்பது அமைச்சரவை செய்த முடிவு அல்ல என்கிறார் பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி. அவிவகாரம் பற்றி தாமும் போக்குவரத்து அமைச்சரும் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று அவர் கூறினார். அவ்விவகாரத்தில் அமைச்சரவை…
“ஆம், மலாய்க்காரர்கள் வந்தேறிகள்தான், ஆனால் முதலில் வந்தோம்”
மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான். ஆனால் அவர்கள் முதலில் வந்தவர்கள் என்று முன்னாள் அமைச்சர் ஸைனுடின் மைதின் ஒப்புக் கொண்டார். நேற்று கெராக்கான் மாநாட்டில் அதன் ஜொகூர் பேராளர் டான் லாய் சூன் சீனர்களையும் இந்தியர்களையும் வந்தேறிகள் என்று கூறி வரும் அம்னோ தலைவர்களை சாடியதோடு மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று…
மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று கூறிய கெராக்கான் உறுப்பினர் இடைநீக்கம் செய்யப்பட்டார்
நேற்று கெராக்கான் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் ஜொகூர் மாநில பேராளர் டான் லாய் சூன் இன்று அக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் தமது உரையில் சீனர்களையும் இந்தியர்களையும் வந்தேறிகள் என்று கூறி வரும் அம்னோ தலைவர்களைக் கண்டித்ததுடன் மலாய்க்காரர்களும் வந்தேறிகள்தான் என்று கூறினார். டான் லாய் சூன்…
ஜஹிட்: தாய்மொழிப் பள்ளிகளை மூடவேண்டிய நேரம் வந்தாயிற்று
ஒற்றுமையின் பொருட்டு தாய்மொழிப் பள்ளிகளை அகற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஜஹிட் ஹமிடி கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “வந்த நாட்டை மறந்து விடுங்கள். ஏனென்றால், இன்று நாம் அனைவருமே மலேசியர்கள்”, என்றவர் கூறியதாக அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு அறிவித்துள்ளது. தாய்மொழிப் பள்ளிகள் …
நாங்கள் புல்லுருவிகளா? கெராக்கான்மீது பெர்காசா பாய்ச்சல்
கெராக்கான் மாநாட்டில் “புல்லுருவி” என்ஜிஓ-கள் பற்றிக் குறிப்பிடப்பட்டது பெர்காசாவை மறுபடியும் உசுப்பி விட்டிருக்கிறது. சிலாங்கூர் பெர்காசா தலைவர் யஹ்யா அபு பக்கார், மலாய் மேலாண்மைக்காக போராடும் அந்த அமைப்பைக் கருத்தில் வைத்துதான் கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங், அவ்வாறு குறிப்பிட்டாரா என முகநூலில் வினவினார். “கெராக்கான் …
தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும்: உள்துறை அமைச்சர் ஹமிடிக்கு குலா கண்டனம்
-மு. குலசேகரன், அக்டோபர் 20, 2014. இன்றைய உத்துசான் மலேசிய நாளிதழில் உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமிடி நாட்டில் உள்ள எல்லாப் பள்ளிகளையும் ஒரே மொழிப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற தமது தனிப்பட்ட கருத்தை தெரிவித்ததாக செய்தி வந்துள்ளது. இந்தச் செய்தி மிகவும் கண்டனதுக் குறியது. இந்த…


