மின்னணு சிகரெட் திரவங்களில் கலக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ள, சந்தையில் புதிதாக உருவெடுத்துள்ள "பியூ பியூ" (Piu Piu) என்ற புதிய வகை செயற்கை போதைப்பொருள், நாட்டில் மின்-சிகரெட்டுகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதை நிரூபிக்கிறது. ஃபெண்டானில் மற்றும் மனோவியல் இரசாயனங்களின் (psychoactive chemicals) கலவையான இந்த போதைப்பொருள், கடுமையான…
நா காக்க: முன்னாள் சிஜே-க்கு அம்பிகா அறிவுறுத்தல்
முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் கருத்துச் சொல்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று அம்பிகா ஸ்ரீநிவாசன் அறிவுறுத்தியுள்ளார். நீதிபதிகள் பணி ஒய்வு பெற்று விட்டாலும்கூட எண்ணிப் பேசுதல் வேண்டும், ஏனென்றால் அவர்களின் கருத்து நீதித்துறையைப் பாதிக்கும் என்று இப்போது என்ஜிஓ-வான நெகாராகூ-வுடன் தம்மை இணைத்துக் கொண்டிருக்கும் …
‘கட்சித் தேர்தலில் பிகேஆரின் சாதனையோ சாதனை’: அம்னோ எம்பி கிண்டல்
கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மிக நீண்ட காலம் எடுத்துக்கொண்ட அரசியல் கட்சி எதுவென்றால் அது பிகேஆர்தான் என அம்னோ எம்பி நோ ஓமார் கூறினார். நான்கு மாதங்களாகியும் அதன் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படாமலிருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் கேலி செய்தார். 133 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட இந்தோனேசியாகூட அதன் தேர்தலைக் …
டிஏபி, எம்பி மாற்றத்துக்குப் பச்சை விளக்குக் காண்பித்தது
பிகேஆர் யாரை மந்திரி புசாராக முன்மொழிந்தாலும் அவரை டிஏபி ஆதரிக்கும். நடப்பு மந்திரி புசார் காலிட் இப்ராகிமிடம் பொறுமை இழந்ததன் விளைவாக அது இம்முடிவுக்கு வந்துள்ளது. “மந்திரி புசாரிடம் இப்போதெல்லாம் பேச முடிவதில்லை”, என சிலாங்கூர் டிஏபி-இன் மூத்த அதிகாரி ஒருவர் மலேசியாகினியிடம் அலுத்துக் கொண்டார். யாருடைய கருத்தையும் …
ஏர் அல்கேரி விமானத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை
ஏர் அல்கேரி நிறுவனம், பெர்கினா பாசோ-விலிருந்து அல்ஜீரியா சென்று கொண்டிருந்த அதன் விமானத்துடன் திடீரென்று தொடர்புகொள்ள முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது. “வாகாடூகூ-விலிருந்து அல்ஜியர்ஸ் சென்று கொண்டிருந்த ஏர் அல்கேரி விமானத்துடன், புறப்பட்ட 50 நிமிடங்களுக்குப் தொடர்பு அறுந்துபோனது”, என விமான நிறுவனம் கூறியதாக ஏஎப்பியை மேற்கோள்காட்டி தேசிய செய்தி …
பெர்காசா: காலிட் செல்லாக் காசாகி விட்டார் அன்வாருக்கு
அப்துல் காலிட் இப்ராகிம் கட்சிக்குப் பயன்பட மாட்டார் என்று பிகேஆர் நினைக்கிறது. அதனால்தான் அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து தூக்க முடிவு செய்துள்ளது என பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி கூறினார். “காலிட் பதவி விலகவோ விட்டுக்கொடுக்கவோ விரும்பவில்லை. அன்வார்தான், அவரால் இனி பயனில்லை என நினைத்து அவரை …
மகாதிர்: யூதர்கள் நாஜிகளை விட மோசமானவர்கள்
யூதர்கள் முன்னர் பட்ட துன்பங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் காசா-வில் பெருகி ஓடும் இரத்த ஆறு உணர்த்துகிறது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “ஜெர்மனியில் நாஜிகளின் துன்புறுத்தலுக்கு ஆளானபோது யூதர்கள் உலகின் பரிவையும் ஆதரவையும் வேண்டி நின்றார்கள். அப்படியெல்லாம் துன்பப்பட்டிருந்தாலும் துன்பத்தின் வலியை அவர்கள் புரிந்துகொண்டிருக்கவில்லை.…
ஏவுகணை வைத்திருப்பதாகக் கூறவில்லை என்கிறார்கள் கிளர்ச்சிக்காரர்கள்
கிளர்ச்சிப்படையினர் ரஷ்யாவிடமிருந்து BUK ஏவுகணைகளைப் பெற்றிருப்பதை ஒப்புகொண்டதாக வெளிவந்துள்ள செய்தியை உக்ரேன் பிரிவினைவாத படைகளின் தலைவர் அலெக்சாண்டர் கொடாகோவ்ஸ்கி மறுக்கிறார் என த கார்டியன் அறிவித்துள்ளது. ராய்ட்டர் நேர்காணல் ஒன்றில், அவர் அவ்வாறு கூறியதாக சொல்லப்படுகிறது. கொடாகோவ்ஸ்கி-க்கு நெருக்கமானவர்களும் அச்செய்தியை மறுத்துள்ளனர். எம்எச்-17 விழுந்து நொறுங்கியதிலிருந்து உக்ரேன் அரசாங்கமும் …
பாஸ் இளைஞர்கள் காலிட் சிலாங்கூர் எம்பி-ஆக தொடர்வதை விரும்புகிறார்கள்
காலிட் இப்ராகிமே சிலாங்கூர் மந்திரி புசாராக தொடர வேண்டுமென்று கூறும் பாஸ் இளைஞர் பகுதி, அவரை மாற்றுவதற்காகக் கூறப்படும் காரணம் “சரியானதல்ல” என்கிறது. பாஸ் சிலாங்கூரைப் போலவே அதன் இளைஞர் பகுதியும் காலிட் தொடர்ந்து சிலாங்கூர் மந்திரி புசாராக இருப்பதையே விரும்புகிறது என அதன் தலைவர் ஷியார்ஹான் ஹுமாய்சி …
மந்திரி புசார் தேர்வில் தலையிடும் அதிகாரம் சுல்தானுக்கு கிடையாது, அசிஸ்…
மந்திரி புசார் யார் என்பதை மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையுடைய கட்சி முடிவு செய்துவிட்ட பின்னர் அதில் தலையிடும் அதிகாரம் சிலாங்கூர் சுல்தானுக்கு கிடையாது என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். சரவாக்கில் அப்துல் தாயிப் மாமுட் இடத்தில் அடினான் சாதெம் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட…
விரைவு பேருந்தில் தீ; 41 பேர் தப்பினர்
இன்று நண்பகலில் கோலாலும்பூரிலிருந்து கிளந்தானில் கோத்தா பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு பேருந்தில் தீ பிடித்துக் கொண்டது. ஆனால். அதில் பயணித்த 39 பயணிகளும் இரண்டு ஓட்டுனர்களும் காயமின்றித் தப்பினர். கோலா லிப்பிஸ் அருகில் அவ்விபத்து நிகழ்ந்ததாக லிப்பிஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பிரெண்டெண்ட் அப்துல் ரசாக் …
அன்வாருக்கு அதிகார வெறி பிடித்துவிட்டது அதனால்தான் மனைவியை எம்பி ஆக்க…
டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலை சிலாங்கூர் மந்திரி புசாராகும் அன்வார் இப்ராகிமின் முயற்சி பற்றிக் குறிப்பிட்ட முன்னாள் பாஸ் உதவித் தலைவர் ஹசன் அலி அதை “கிறுக்குத்தனம், பேராசை,நம்பிக்கை இழந்த நிலை” என வருணித்தார். வான் அசீசாவை எம்பி பதவியில் அமர்த்துவது அவரையே திருப்பித் தாக்கப் போகிறது …
முன்னாள் சிஜே தேச நிந்தனை புரிந்தாரா ? விசாரணை தேவை-…
முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் திங்கள்கிழமை நோன்பு திறக்கும் நிகழ்வு ஒன்றில் ஆற்றிய உரைக்காக போலீசார் அவரை தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என்கிறார் மலேசிய இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி. ஹமிட்டின் பேச்சு மலாய்க்காரர்களிடையே சினத்தைத் தூண்டும் நோக்கம் கொண்டது என்றவர் சொன்னார். “இன…
எம்எச் 17 சுட்டுவீழ்த்தப்பட்டதற்கு நாடாளுமன்றம் கண்டனம்
இன்று நடந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம், கடந்த வியாழக்கிழமை உக்ரேய்னில் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயலுக்குக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது. எம்எச் 17மீது தீர்மானம் ஒன்றைத் தாக்கல் பேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், விமானம் விழுந்து நொறுங்கிய பகுதிக்குள் செல்ல அனுமதி …
டிஏபி வான் அசீசாவை ஆதரிக்கிறது; பாஸ் காலிட்டை விரும்புகிறது
மந்திரி புசார் பதவியில் காலிட் இப்ராகிமுக்குப் பதிலாக டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலை அமர்த்தும் பிகேஆர் முயற்சி தொடர்பில் சட்டமன்ற உறுப்பினர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா, வான் அசீசாவை ஆதரிப்பதாக பெரித்தா ஹரியான் கூறியுள்ளது. பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட்…
எம்எச்17: உயிரிழந்தவர்களுக்கு நியு யோர்கில் மலேசியர்கள் அஞ்சலி
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய உலகம் முயன்று கொண்டிருக்கும் வேளையில், நேற்றிரவு நியு யோர்கில் உள்ள மலேசியர்கள் அச்சம்பவத்தில் உயிரிழந்த 298 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். மலேசியர்களுடன் அமெரிக்கர்கள், சிங்கப்பூரர்கள், மொரோக்கோ நாட்டவர், …
‘பினாங்கில் இஸ்லாத்துக்கு ஆபத்து என முன்னாள் சிஜே பிதற்றுகிறார்’
பினாங்கில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் மாலிக் காசிம், அந்த வடக்கத்தி மாநிலத்தில் இஸ்லாத்துக்கு ஆபத்து என்று கூறிக்கொண்டிருக்கும் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட்டை விளாசித் தள்ளியுள்ளார். முன்னாள் தலைமை நீதிபதியின் கூற்று “அர்த்தமற்றது, ஆதாரமற்றது, செவிவழி கேட்டதை வைத்துப் பேசப்பட்ட …
‘அன்வாருக்கு சிலாங்கூர் அரசமைப்பு புரியவில்லை’
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், சிலாங்கூர் மந்திரி புசாராக தம் மனைவியைத் தேர்ந்தெடுத்திருப்பது அவருக்கு மாநில அரசமைப்புப் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காண்பிப்பதாக சிலாங்கூர் பாரிசான் நேசனல் (பிஎன்) தலைவர் நோ ஒமார் கூறுகிறார். “மந்திரி புசாரை மாற்ற வேண்டுமானால் அதற்கு இரண்டு வழிகள்தான் உண்டு. இப்போதைய மந்திரி …
ஐயோ! டிஎபி ஆளும் பினாங்கில் இஸ்லாத்திற்கு ஆபத்து, அலறுகிறார் முன்னாள்…
பினாங்கு தீவில் முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை வெளிப்படுத்தி பேசிய முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகமட், தடுத்து நிறுத்தப்படாவிட்டால் அது பரவக்கூடும் என்று கூறுகிறார். அவர் குறிப்பிட்டவற்றில் ஒன்று, அம்மாநிலத்தில் இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பு பெறுவதில் சிரமம் இருக்கிறது ஏனென்றால் இதர சமய அமைப்புகளும் அவர்களுக்குரிய…
நூற்றுக்கணக்கானோர் நீதிகேட்டு தூதரகங்கள்மீது படையெடுப்பு
எம்எச் 17 துயரச் சம்பத்தில் பலியானவர்களுக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிஎன் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கிட்டதட்ட 500 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் ரஷ்ய, உக்ரேனிய தூதரகங்கள் உள்ள சாலைகளிலும் ஐநா அலுவலகத்திலும் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் "Justice 4 MH17" என்ற வாசகம் …
காலிட்: நான் இன்னமும் எம்பி-தான்; எதுவரை என்றால்……
தாம் இன்னமும் சிலாங்கூரின் மந்திரி புசார்தான் என்பதை வலியுறுத்திய அப்துல் காலிட் இப்ராகிம், தம்மை வெளியேற்ற விரும்பினால் சட்ட முறைப்படிதான் அதைச் செய்ய வேண்டும் என்றார். முன்பு, அடுத்த தேர்தல்வரை மந்திரி புசாராக தொடர்வது உறுதி என்று சொல்லி வந்தவரின் பேச்சு இப்போது மாறியுள்ளது. மந்திரி புசார் பதவி …
முன்னாள் சிஜே: பினாங்கில் இஸ்லாத்துக்கு ஆபத்து
பினாங்கில் முஸ்லிம்கள் பிரச்னைகளை எதிர்நோக்குவதாகவும் தீர்வுகாணாவிட்டால் நிலைலை மோசமடையும் என்றும் முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் எச்சரித்துள்ளார். இஸ்லாமிய நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவதுகூட சிரமமாக இருக்கிறது என முன்னாள் முப்தி ஒருவர் குறைப்பட்டுக் கொண்டதாக அவர் சொன்னார். ஏனென்றால் மற்ற சமய தரப்பினரும் தங்களுக்கும் உரிய …
ஹுடுட் பற்றிப் பேசவில்லையா? மறுக்கிறார் அன்வார்
ஹுடுட் விவகாரம் பற்றித் தாம் பேசுவதே இல்லை என்று சரவாக் டிஏபி குற்றம் சாட்டியிருப்பதை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் மறுத்தார். ஜூலை 9-இல், சிலாங்கூர் கிளப்பில் நடந்த ஒரு கருத்தரங்கில்கூட அது பற்றிப் பேசியதாக அவர் சொன்னார். “இன, சமய வேறுபாடின்றி எல்லாருக்கும் நீதி தேவை…
நஜிப்புக்கு அவரின் அரசியல் வைரிகளும் பாராட்டு
லிம் கிட் சியாங்கும் அன்வார் இப்ராகிமும் எம்எச் 17 விவகாரத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கையாளும் விதத்தைப் பாராட்டியுள்ளனர். மலேசிய வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனும் டிவிட்டரில் பிரதமரைப் பாராட்டினார். கறுப்புப் பெட்டிகளைப் பெறும் முயற்சியில் நஜிப் வெற்றி பெற்றதற்காக லிம் பாராட்டுத் தெரிவித்துக் …


