இந்தியாவிலிருந்து ஆசிரியர்களைக் கொண்டு வரும் யோசனைக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை

இந்தியாவிலிருந்து ஆங்கில மொழி ஆசிரியர்களைக் கொண்டு வரும் யோசனை பற்றி ஆழமாக ஆராயப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த நடவடிக்கை அரசாங்கத்துக்கு நன்மையைக் கொண்டு வருமா என்பதை நிபுணர்கள், தேசிய ஆசிரியர் சங்கம், கல்வி அமைச்சு ஆகியவை முதலில் விவாதிக்க வேண்டும் என…

முன்னாள் கெரக்கான் தலைவர் லிம் கெங் எய்க் காலமானார்

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் கெரக்கான் தலைவருமான லிம் கெங் எய்க் இன்று காலமானார். அவருக்கு வயது 73. 1980ம் ஆண்டு தொடக்கம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு அவர் கெரக்கான் கட்சிக்குத் தலைமை தாங்கினார். 2007ம் ஆண்டு அவர் விலகிக் கொண்டார். ஒய்வு பெறுவதற்கு முன்னர் அவர் எரிசக்தி, நீர்…

கோபிந்த்: தீபக்-கின் கடன்கள் பற்றி எங்களுக்குத் தெரியாது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு எதிராக வணிகரான தீபக் ஜெய்கிஷன் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு ஈடாக அவருடைய கடன்கள் தீர்க்கப்பட்டது குறித்த தகவல்கள் தமக்கும் பெட்டாலிங் ஜெய எம்பி டோனி புவா-வுக்கும் தெரியும் எனக் கூறப்படுவதை டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ நிராகரித்துள்ளார். "தீபக்கின் கடன்கள் பற்றியோ…

‘2 ஆண்டுகளில் 10 கொள்ளைச் சம்பவங்கள்; ஆனாலும் கலங்கவில்லை’

கேகே சூப்பர்மார்கெட் ஹொல்டிங்ஸ் பெர்ஹாட், ஆண்டுக்கு 134 குற்றவியல் சம்பவங்கள் தன் கடைகளில் நிகழ்வதாகவும் அவற்றில் பாதிக்கு மேற்பட்டவை கொள்ளைச்சம்பவங்கள் என்றும் தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி ஆயுதம்தாங்கிய கொள்ளையடிக்கப்பட்டால் யாருமே கலங்கிப் போவார்கள். ஆனால், கேகே சூப்பர்மார்கெட் பணியாளர் ஹசிம் மக்ரபலி (வலம்) அப்படியெல்லாம் கலங்கிப்போகின்றவர் அல்ல. கடந்த…

உங்கள் கருத்து: முகமட் ஜின், திருடப்பட்ட நிலத்தை முதலில் திருப்பிக்…

"இரண்டாவது வாய்ப்பைக் கேட்பதற்கு முன்னர் நீங்கள் முதலில் மக்களிடமிருந்து திருடிய நிலத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்." சிலாங்கூர் பிஎன்: மலிவான நில விவகாரத்தை டிஏபி அரசியல் ரீதியில் திசை திருப்புகின்றது லிம் சொங் லியாங்: கையும் களவமாக பிடிபட்ட பின்னர் ஒரு குற்றவாளி எத்தனை வழிகளில் கதை சொல்லமுடியும்…

21-12-2012: உலக அழிவு பற்றிய நம்பிக்கை பொய்த்தது!

21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உலகம் அழியும் என்று நம்புவோர் நூற்றுக்கணக்கானோர் அந்நிகழ்வுக்காக காத்திருந்தனர். பண்டைய மாயா நாகரீக கணிப்பின் அடிப்படையில் இவர்கள் இந்த நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். மெக்ஸிகோவிலும் மத்திய அமெரிக்காவிலும் அழிந்துபோன மாயா சமூகத்தாரின் கோயில்களைச் சுற்றி பெருமளவில் இதற்கு முன்பு இல்லாத அளவில் மக்கள் கூடியிருந்தனர். உலகம்…

குறைந்தபட்ச சம்பளத்தைத் தாமதப்படுத்துவதாக அமைச்சின்மீது சாடல்

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் திட்டத்தை அமல்படுத்தாமல் தாமதப்படுத்துவதாக கூட்டரசு அரசாங்கம் கடுமையாகக் Read More

13வது பொதுத் தேர்தல் வேட்பாளர்களை எம்ஏசிசி ஆராய வேண்டும் என்ற…

13வது பொதுத் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளர் பட்டியலை வேட்பாளர்களுடைய பின்னணிகளை ஆராய்வதற்காக எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்பிக்க வேண்டும் என்ற யோசனையை அம்னோ ஆதரித்துள்ளது. அந்தத் தகவலை அம்னோ உதவித் தலைவர்களில் ஒருவரான ஷாபியி அப்டால் இன்று வெளியிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்…

தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்தோருக்கு ரிம27,000-க்கு மேல் அபராதம்

கேஎல் அனைத்துலக வினான நிலையத்திலும் (கேஎல்ஐஏ) குறைந்தவிலை விமான முனையத்திலும்( எல்சிசிடி) தடைசெய்யப்பட்ட இடங்களில் புகை பிடித்த 244 பேருக்கு ரிம27,000க்குமேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்டோரில் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளும் உள்ளிட்டிருந்தனர். தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைத்த குற்றத்துக்காக ஒவ்வொருவருக்கும் ரிம250 அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறிய சிலாங்கூர் சுகாதார இயக்குனர்…

ங்கே-இன் நிறுவனத்துக்கு நிலம் கொடுக்கப்பட்டது பற்றி நிக் அசீஸ் விளக்கம்

டிஏபி தலைவர் ங்கே கூ ஹாமுக்கு நிலம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுவது பற்றி விளக்கமளித்த கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட், முதலில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு அந்த 10,536 ஹெக்டார் தோட்ட நிலம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டதாகவும் பின்னர் அதை ங்கே வாங்கினார் என்றும் கூறினார்.  …

ஜைனுடின் கருத்துக்கள் மீது சுசிலோ நஜிப்பிடம் புகார் செய்தார்

முன்னாள் இந்தோனிசிய அதிபர் பிஜே ஹபிபி தமது நாட்டுக்குத் துரோகம் செய்துள்ளதாக முன்னாள் மலேசியத் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின் தெரிவித்த கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சந்தித்த அதிபர் சுசிலோ பம்பாங் யூதயோனோ, ஜைனுடின் அறிக்கை பற்றி கவலை…

“இந்திய வம்சாவளியினரின் ரத்தம் ஓடுவதால் நான் பெருமை கொள்கிறேன்’, மகாதீர்…

அரசுக்கு இந்நாட்டில் உள்ள இந்திய முஸ்லிம்கள் அளித்து வரும் ஆதரவு பாராட்டத்தக்கதாகும் என்று முன்னாள் பிரதமர் புகழ்ந்துரைத்தார். மலேசியாவில் சிறுபான்மையினராக இந்திய முஸ்லிம்கள் இருந்தாலும் அவர்கள் எல்லா சமயங்களிலும் தங்களின் பிளவுபடாத ஆதரவை அரசாங்கத்திற்கு தெரிவித்து வந்துள்ளனர். இது உண்மையில் நன்றி பாராட்டத்தக்கதாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு…

மலிவுவிலை நிலம்: டிஏபியால் திரிபுபடுத்தப்படுகிறது, சிலாங்கூர் பிஎன்

2008-க்குமுன் சிலாங்கூரில் பிஎன் ஆட்சி செய்த காலத்தில் அக்கூட்டணிக்கு நிலம் குறைந்த விலையில் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருப்பது பற்றி சிலாங்கூர் பிஎன் செயலாளர் முகம்மட் ஸின் முகம்மட்டிடம் வினவியதற்கு அவர் அக்கேள்விக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தார். அவ்விவகாரத்தை டிஏபி அரசியல் நோக்கத்தில் திரிபுபடுத்துவதாக   வருணித்த அவர், 2008-க்குமுன் நடந்ததாகச் சொல்லப்படும் அதை இப்போது…

கேமரன் மலையில் ஈவிரக்கமின்றி உடைக்கப்படும் ஏழை இந்தியர்களின் வீடுகள்

நேற்று கேமரன் மலையில் காலி நிலத்தில் கட்டப்பட்டிருந்த ஏழை இந்தியர் ஒருவரின் வீடு எவ்வித முன்னறிவிப்புமின்றி நில இலாகாவினரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (18.12.2012) பிரிஞ்சாங் நகரின் அருகில் ஓர் ஏழை இந்தியர் எழுப்பிய சிறிய குடிசை வீட்டினை ஈவிரக்கமின்றி இடித்து தரைமட்டமாக்கியுள்ளது கேமரன் மலை நில அலுவலகம்.…

‘டாத்தாரான் ஆக்கிரமிப்பு’ மாணவருக்கு ஒரு மாத சிறைத் தண்டனை

கடந்த ஏப்ரல் மாதம் மாணவர் இயக்கம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (DBKL) அதிகாரி ஒருவர் தமது கடமைகளை செய்வதற்குத் தடையாக இருந்ததற்காக 'டாத்தாரான் ஆக்கிரமிப்பு' மாணவர் ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. மாணவர் போராளியான…

வரி கட்டாத மலிவான பிஎன் நிலத்தை சிலாங்கூர் பறிமுதல் செய்ய…

"அந்த நிலத்தை ஒரு சதுர அடி ஒரு ரிங்கிட் என்ற விலைக்கு அவர்கள் பெற்றார்கள். இருந்தும் அவர்களுக்கு நில வரியை கொடுக்க மனமில்லை. பிசாசுகள் மட்டுமே அப்படிச் செய்யும்" மலிவாக பெற்ற நிலத்துக்கு சிலாங்கூர் அம்னோ வரி கொடுக்கவில்லை அடையாளம் இல்லாதவன்#007: அதிகாரத்தில் இருந்த போது நிலத்தையும் சொத்துக்களை…

உங்கள் கருத்து: டாக்டர் மகாதீர் ஆட்சிக்கு வரும் வரை மலேசியா…

"மகாதீர் முகமட் என்ற பெயரில் ஒரு சாபக்கேடு நமக்கு வரும் வரையில்  மலேசியா உண்மையில் இறையருள் பெற்ற நாடாகத் தான் திகழ்ந்தது" மலேசியா இறையருள் பெற்ற நாடு என்கிறார் டாக்டர் மகாதீர் ஸ்டார்ர்: நாட்டின் ஆற்றலை மதிப்பீடு செய்ய முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பயன்படுத்தும் ஒப்பீடுகள்…

‘பிஹாய் தேசியப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு ‘மட்டம்’ போடுவது குவா…

கிளந்தானில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள பிஹாய் தேசியப் பள்ளி ஆசிரியர்கள் வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு மட்டுமே மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பது பற்றி குவா மூசாங் கல்வித் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் துறையின் அதிகாரிகளுடன் நவம்பர் முதல் தேதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது அது பற்றித் தெரிவிக்கப்பட்டதாக பிஹாய் தேசியப்…

100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு போடப்படும் என மூசா…

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய ஆலோசகர் குழு முன்னள் உறுப்பினரான ரோபர்ட் பாங், தமக்கு எதிராக தெரிவித்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் மீட்டுக் கொள்ள வேண்டும் அல்லது 100 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் எனக்…

தீபக் ‘ஆதரவாளர்’ அடையாளம் இரண்டாம் பட்சமே என்கிறது பிகேஆர்

தீபக் ஜெய்கிஷன் கொடுத்துள்ள தகவலுடன் ஒப்பிடுகையில் அவருக்கு ஆதரவு அளிக்கின்றவர்களுடைய அடையாளம் இரண்டாம் பட்சமே என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார். அல்தான்துயா ஷாரிபு கொலை தொடர்பில் புதிய ஆதாரங்களையும் ஊழல், ஆதாரங்களை அதிகாரிகள் மறைத்தது ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும்  தீபக் அளித்துள்ளார் என இன்று அன்வார்…

ஆசிரியர் பயிற்சியை நிறுத்துவீர்-யுனிடாருக்கு ரபிஸி வலியுறுத்து

ஆசிரியர் பயிற்சி வழங்கும் தனியார் உயர்கல்விக் கூடங்கள், அங்கு பயிற்சிபெற்று இன்னும் வேலை கிடைக்காதிருக்கும் 7,000 பேரின் விவகாரத்துக்கு அரசாங்கம் தீர்வு காணும் வரை ஆசிரியர் பயிற்சியை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிகேஆர் கூறியுள்ளது. ஆசிரியர் பயிற்சி பெற்று இன்னும் வேலையில்லாதிருப்போரின்  பிரச்னைக்குத் தீர்வுகாண அரசாங்கம் எந்தவொரு…

டிஏபி: நிலவரி கட்டாத நிலத்தைப் பறிமுதல் செய்க

பிஎன் மலிவான விலையில் நிலங்களை அகப்படுத்திய விவகாரங்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் டிஏபி, ஈராண்டுகளாக நிலவரி கட்டப்படாதிருக்கும் பூச்சோங் அம்னோவுக்குச் சொந்தமான நிலத்தைப் பறிமுதல் செய்யுமாறு சிலாங்கூர் மந்திரி புசாரைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அது, 2008-க்குமுன் பிஎன் ஆட்சிக்காலத்தில் குறைந்த விலையில் பெறப்பட்ட 24 நிலங்களில் ஒரு பகுதியாகும் என்று சுபாங்…

அன்வார்: கள்ளப் பண வெளியேற்றம் மீது பாங்க் நெகாரா பேச…

நாட்டிலிருந்து வெளியே செல்லும் கள்ளப் பண அளவு கூடிக் கொண்டே போகும் பிரச்னை பற்றி நடத்தப்படும் விவாதத்தில் பாங்க் நெகாரா கவர்னர் ஜெட்டி அக்தார் கலந்து கொண்டு பேச வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். ஜிஎப்ஐ என்ற உலக நிதி நேர்மை அமைப்பு…