அதிர்ஷ்டமில்லாத ஏழாம் எண்ணை எம்ஏஎஸ் கைவிடுமா?

மலேசிய  விமான  நிறுவனத்துக்கு(எம்ஏஎஸ்)  ஏற்பட்ட  இரண்டு  பேரிடர்களிலும்  சம்பந்தப்பட்ட  விமானங்கள்  7 என்ற  எண்ணைக் கொண்டிருந்ததால்- ஒன்று எம்எச்370, இன்னொன்று  எம்எச்17-  7-எண்  அதிர்ஷ்டமில்லாத  எண்போல்  தெரிவதாக  பிஎன்  எம்பி  ஒருவர்  இன்று  நாடாளுமன்றத்தில்  கூறினார். அதனால்  7-ஆம் எண்ணை  எம்ஏஎஸ்  விமானங்களுக்குப்  பயன்படுத்தாமல்  இருப்பது  பற்றி  அரசாங்கம் …

அன்வார்-ஆதரவு இயக்கத்தை போலீஸ் ஒடுக்க வேண்டும்

அம்னோ  தலைவர்  ஒருவர்,  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  ஆதரவான 'Rakyat Hakim Negara' இயக்கத்துக்கு  எதிராக  போலீசார்  கடும்  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என  வலியுறுத்தினார். குதப்புணர்ச்சி  வழக்குமீதான  அன்வாரின்  மேல்முறையீடு  அக்டோபர் 28, 29 ஆகிய  நாள்களில் கூட்டரசு  நீதிமன்றத்தில்  இறுதி  விசாரணைக்கு  வருவதையொட்டி  அவ்வியக்கத்தை …

பெட்ரோலுக்குக் கூடுதல் விலை கொடுக்கிறோம், அதனால் கார் விலை குறைய…

அரசாங்கம்  இனியும் கார்களுக்கு வரம்புமீறி வரிகள்  விதிப்பதை  பெட்ரோல்  உதவித்  தொகையைக்  காண்பித்து  நியாயப்படுத்திக்  கொண்டிருக்க  முடியாது  என்று  கூறும் பிகேஆர்  பாண்டான்  எம்பி  ரபிஸி  ரம்லி,  கடந்த  ஓர்  ஆண்டில்  புத்ரா  ஜெயா  பெட்ரோல்  விலையில்  40 சென் உயர்த்தியிருப்பதைச்  சுட்டிக்காட்டினார். “இதுவரை  கூட்டரசு  அரசாங்கம்  பெட்ரோலுக்கும்…

தேச நிந்தனை புகார் தொடர்பில் ஜாஹிட்டிடம் போலீஸ் விசாரணை

தேச  நிந்தனை  கருத்துகளைச்  சொன்னதாக  பேராக்  டிஏபி புகார்  செய்திருப்பதை  அடுத்து,  போலீசார்  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியிடம்  வாக்குமூலம்  பதிவு  செய்துள்ளனர். இதைத்  தெரிவித்த  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார் மேல்விவரங்கள்  தெரிவிக்க  மறுத்தார். “விசாரணை  தொடர்கிறது. அவரிடம் (ஜாஹிட்) வாக்குமூலம் பெற்றிருக்கிறோம்”,…

எம்பி: ஹிஷாமின் சகோதரருக்கு ரிம77மில்லியன் குத்தகை ஏன் கொடுக்கப்பட்டது?

தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனின்  சகோதரருக்கு  ரிம77 மில்லியன்  குத்தகை  கொடுக்கப்பட்டது  பற்றி டிஏபி  எம்பி  டோனி  புவா  கேள்வி  எழுப்பியுள்ளார். மது போத்தல்களுக்கு பாதுகாப்பு  முத்திரைகள்  இடும்  குத்தகையை  அரச  மலேசிய  சுங்கத்  துறை  ஹரிஸ்  ஒன்  உசேனுக்கு(வலம்)  கொடுத்திருப்பதாக  பெட்டாலிங்   ஜெயா  உத்தாரா  எம்பி  கூறினார்.…

உதவித் தொகை கொடுப்பதற்கு போக்குவரத்து-தொடர்பான வருமானமே போதும்

மலேசியாவில்  போக்குவரத்துத்  தொடர்பான  வரிகள், லைசென்ஸ்  கட்டணங்கள்  முதலியவற்றின்  வழியாகக்  கிடைக்கும்  வருமானமே  எரிபொருள் உதவித்  தொகை  கொடுப்பதற்குப்  போதுமானதாகும்  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  கூறினார். அந்த  வகையில்  கிடைக்கும்  வருமானம்  ரிம17.3 பில்லியன். அதே  வேளையில்  பெட்ரோலுக்கும்  டீசலுக்கும்  உதவித்  தொகையாகக்  கொடுக்கப்படுவது …

பிகேஆர் எம்பி: நஜிப்பின் கணக்கு ‘தப்பு’

அடுத்த  ஆண்டில்  அதிகரிக்கப்படும் 1மலேசியா  மக்கள்  உதவித்தொகை(பிரிம்),  பொருள், சேவை  வரியால்(ஜிஎஸ்டி)  ஏற்படும்  செலவுகளைச் சரிக்கட்ட  போதாது என்கிறார்  கிளானா ஜெயா  எம்பி  வொங்  சென். ஜிஎஸ்டிக்காக  நான்கு  பேரடங்கிய  ஒரு  குடும்பம்  சுமார் ரிம1,080  செலவிட  வேண்டிவரும். இதனுடன்  ஒப்பிடும்போது, பிரிம் உதவித்தொகையில்  ரிம300 தான் கூட்டிக் …

குலா: புதிய பாலர்பள்ளி எங்கே?

பாலர்பள்ளிகள் கட்டுவதற்கு (2014 ஆண்டு பட்ஜெட்டில்) ரிம58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்நிதியிலிருந்து சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் எத்தனை பாலர்பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் கல்வி அமைச்சரிடம் கேள்வி கேட்டிருந்தார். அவர் இன்னொரு கேள்வியையும் கேட்டிருந்தார். அனைத்து மொழிப்பள்ளிகளிலும் 100…

எந்த பைபிளாவது எரிக்கப்பட்டுள்ளதா?, பிஎன் எம்பி கேட்கிறார்

பைபிளை எரிக்கப் போவதாக மிரட்டல் விடுத்த பெர்காசா தலைவர் இப்ராகிம் அலிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதற்காக எதிரணியினர் அரசாங்கத்தைக் கடுமையாக குறைகூறி வந்தனர். அதனால் சினமடைந்த ஒரு சாபா பாரிசான் எம்பி அப்புனித நூல் எரிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரத்தை காட்டுமாறு எதிரணியினரிடம் கேட்டுக்கொண்டார். "பொதுத் தேர்தலில்…

நடவடிக்கை எடுக்க ரோஸ் தயக்கம், மஇகா தலைவர்கள் நஜிப்பின் உதவியை…

  எதிர்வரும் வியாழக்கிழமை 2,500க்கும் மேற்பட்ட மஇகா கிளைத் தலைவர்களும் இதர தலைவர்களும் புத்ரா ஜெயாவில் பிரதமர் நஜிப்பிடம் ஒரு மகஜர் அளிக்க விருக்கின்றனர். கடந்த ஜனவரில் நடந்த மஇகா தேர்தல் குறித்து சங்கங்கள் பதிவாளரிடம் (ரோஸ்) தாக்கல் செய்யப்பட்ட புகார்கள் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து…

பிரிம் உதவியும் கிடையாது வருமான வரிக்குறைப்பும் இல்லை

பட்ஜெட்  2015, நடுத்தர  வருமானம்  பெறும்  தரப்பினரைத்தான் கசக்கிப்  பிழிகிறது  என பொருளாதார  சிந்தனைக்  குழாம்  ஒன்று  கூறுகிறது. ஆண்டுக்கு  ரிம55,000-இலிருந்து  ரிம100,000வரை  வருமானம்  பெறும்  இப்பிரிவினருக்கு அரசாங்கத்தின்  உதவித்  தொகை  கொடுக்கப்படுவதில்லை; வருமான  வரிக்குறைப்பினாலும்  அவர்கள் பயனடைவதில்லை  என  பினாங்குக்  கழகம்  குறிப்பிடுகிறது. “நடுத்தர  வருமானம் பெறும் …

நஜிப் போஸ்டர் மீது செருப்பைக் காட்டியவர் மீது விசாரணை

  கடந்த வாரம், நாடாளுமன்றத்திற்கு வெளியில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் நஜிப் போஸ்டர் மீது செருப்பைக் காட்டியவர் மீதான விசாரணையை போலீசார் முடித்துக் கொண்டுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட அந்த நபரை போலீசார் கடந்த சனிக்கிழைமை கைது செய்ததாகவும் அவரை அன்றே போலீஸ் பிணையில் விடுவித்ததாகவும் செந்துல் மாவட்ட…

மைகார்ட் கொடுத்து இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் அம்னோவில் சேர்க்கப்படுகின்றனர்

சாபாவின்  மாநில  சீரமைப்புக் கட்சி(எஸ்ஆர்பி)த்  தலைவர்  ஜெப்ரி  கிட்டிங்கான், பாகிஸ்தான், இந்தியா  ஆகிய  நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மைகார்ட்  கொடுக்கப்பட்டு  அம்னோ  உறுப்பினர்களாக்கப்படுவதாகக்  கூறுகிறார். இது  இப்போது  சாபாவில்  ஒரு  புது  மிரட்டலாக  உருவாகி வருவதாகக்  கூறிய  அவர்  பிலிப்பினோக்களுக்கு  மைகார்ட்  கொடுப்பது  குறைந்திருப்பதாக  தெரிவித்தார். “இப்பதியவர்கள்  மைகார்ட்  பெறுவதற்கும் …

அகோங், மாநில ஆட்சியாளர்கள் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்குப் பெறுகின்றனர்

  அடுத்த ஆண்டு ஏப்ரல் ஒன்றிலிருந்து அமலாக்கப்படவிருக்கும் ஜிஎஸ்டி என்ற பொருள்கள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து பெட்ரோலிய பொருள்கள் தவிர இதர அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளிலிருந்து அகோங் மற்றும் மாநில ஆட்சியாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று அரசாங்கம் வெளியிட்ட கெஜட்டில் இத்தகவல் தரப்பட்டுள்ளது. "Goods and…

பாஸ்: சிலாங்கூரை பிகேஆரும் டிஏபி-யும் மட்டும் ஆளவில்லை

பாஸ்  தன்  எதிர்ப்பையும்  மீறி  சிலாங்கூரில்  அக்டோபர்பெஸ்ட்  விழா  நடத்தப்பட்டதைக்  கண்டு  ஏமாற்றமடைந்துள்ளது. சிலாங்கூர்  பக்கத்தான்  மாநிலம்  என்றும், “டிஏபியும்  பிகேஆரும்  மட்டும்  அதை ஆளவில்லை”  என்றும்  கூறிய  பாஸ்  உலாமா  மன்ற உதவித்  தலைவர்  மாபோட்ஸ்  முகம்மட்,  தாங்கள்  எதிர்ப்புத்  தெரிவித்ததை  மற்ற  இரண்டு  கட்சிகளும்  கருத்தில் …

பெங் ஹோக்-கின் மரண விசாரணையைக் கமுக்கமாக நடத்த வேண்டிய அவசியமில்லை

டிஏபி  அரசியல்   உதவியாளரான  தியோ  பெங்  ஹோக்கின் மரணத்துக்கான  காரணத்தைக்  கண்டறிய  போலீசார்  மேற்கொண்டிருக்கும்  புலனாய்வைக்  கமுக்கமாக  நடத்த  வேண்டியதில்லை. சிரம்பான்  எம்பி,  தியோ  கொக்  சியோங்குக்கு  அளித்த எழுத்து  வடிவிலான  பதிலில்  உள்துறை  அமைச்சு  அவ்விசாரணையின்  நிலையைத்  தெரிவிக்க இயலாது  என்று  கூறியதை  அடுத்து இவ்வாறு  கூறப்பட்டது.…

அமைச்சர்: தர வரிசையில் மலேசிய பத்திரிகைகள் தாழ்ந்த இடத்தில் இருப்பதற்கு…

மலேசியாவில்  பத்திரிகை  சுதந்திரம்  தாழ்ந்து  போனதற்கு டிஏபிதான் காரணமாம்.  தகவல், பல்லூடக  அமைச்சர்  அஹமட்  ஷப்ரி  சிக்  கூறுகிறார். இன்று  நாடாளுமன்ற  கேள்வி  நேரத்தின்போது,  இங்கா  கோர்  மிங் (டிஏபி- தைப்பிங்),  எல்லைகளற்ற  செய்தியாளர்கள்  அமைப்பின் பத்திரிகைச்  சுதந்திர தரவரிசைப்  பட்டியலில்  (பிஎப்ஐ)  இடம்பெற்றுள்ள  180  நாடுகளில்  மலேசியா …

‘Hot Porn’ என்ற தலைப்பைக் கண்டு கொதிப்படைந்துள்ளது என்ஜிஓ

ஒரு  செய்திக்கு  இப்படியா  தலைப்பிடுவது  என்று  சீறி  எழுந்த என்ஜிஓ-வான  மகளிர்  உதவி  அமைப்பு  (டபிள்யுஏஓ),   “அது  பாலியல்  உணர்வுகளைத் தூண்டுகிறது,  பெண்களை அவமதிக்கிறது, கலாச்சாரப்  பண்புகளைச்  சற்றும்  மதிக்காதது”  என்று  சாடியுள்ளது. அக்டோபர்  12-இல், த  ஸ்டார்  நாளிதழில்,  கோலாலும்பூரில், சைம் டார்பி  கோல்ப்  போட்டியில்  கலந்துகொண்ட …

ரித்வான்: மலேசியாவில் மாடுகளைவிட பன்றிகள் அதிகமாக இருப்பது எப்படி?

சர்ச்சைகுரிய  கல்வியாளர்  ரித்வான்  டீ  அப்துல்லா,  ஆகக்  கடைசியாக  நேற்று  சினார்  ஹரியானில்  எழுதியிருந்த  பத்தியில்  மலேசியாவில் ஜனநாயகத்தின் குறைபாடுகள்  பற்றியும்  பன்றிகள்  எண்ணிக்கை  அதிகமாக  இருப்பது  பற்றியும்  கருத்துத்  தெரிவித்துள்ளார். “பன்றிகள்  பற்றி  இழிவாக  பேச  வரவில்லை. ஏனென்றால்  அவையும்  அல்லாவின்  படைப்புகளே. ஆனால், ஆடு, மாடு, …

பாஸ்: குறைந்த வருமானம் பெறுவோர் ‘பிஎன் சிறை’யில் வசமாக சிக்கிக்…

2015 பட்ஜெட் குறைந்த  வருமானம்  பெறுவோரைச் சிக்க வைக்கும்  ஒரு  பொறி  என்று  கூறும்  பாஸ்  உதவித்  தலைவர்  துவான்  இப்ராகிம்  துவான்  மான்,  அது  அவர்கள்  என்றென்றும்  அரசாங்கத்தின்  சலுகைகளை  நம்பியிருக்கும்  ஒரு  நிலையை  உருவாக்கியுள்ளது  என்றார். “உதவித்  தொகையைக்  குறைத்து  பிரிம் உதவித்  தொகையை  அதிகரித்திருப்பதன்வழி …

எல்லா தேச நிந்தனை வழக்குகளிலும் ஏஜி ஒரே மாதிரியாகவே நடந்துகொள்ள…

இஸ்மா  தலைவர்  அப்துல்லா  ஸேக்கின் தேச  நிந்தனை  வழக்கு  ஒத்திவைக்கப்பட்டதைச்  சுட்டிக்காட்டி  மற்ற  தேச  நிந்தனை  வழக்குகளிலும்  அதேபோன்ற  நிலைப்பாட்டையே  சட்டத்துறைத்  தலைவர்  பின்பற்ற வேண்டும்  என  டிஏபி  கேட்டுக்கொண்டிருக்கிறது. அரசமைப்புக்கு  எதிராக  யுனிவர்சிடி  மலாயா  இணைப்  பேராசிரியர்  அஸ்மி  ஷாரோம்  தொடுத்துள்ள  வழக்கின்  முடிவு  தெரியும்வரை  எல்லா…

நஜிப்பின் அதிகாரிகளே பூமிபுத்ராக்களின் பங்குரிமை குறைவாக இருப்பதற்கு பொறுப்பு

பூமிபுத்ராக்கள்  30 விழுக்காடு  பங்குரிமையை  இன்னும்  அடையாமல் இருக்கிறார்கள்  என்றால்  அதற்கு பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  தொலைநோக்கையும் இலட்சியத்தையும்  புரிந்துகொள்ளாமல்  பணிபுரியும்  அதிகாரிகளே  காரணம்  என்கிறார்  ஒரு  துணை  அமைச்சர். “பிரதமரின்  உத்வேகமும்  நோக்கமும்  அவர்களுக்கு  இல்லை. பிரதமரின்  போராட்டத்தை  அவர்கள் மதிப்பதில்லை”,என  விவசாயம்,  விவசாயம்-சார்ந்த  தொழில் …

எம்எச்17 விழுந்து நொறுங்கிய இடத்துக்குச் செல்ல அனுமதி கிடைத்தது

கிழக்கு  உக்ரேனில் எம்எச்17 விழுந்து நொறுங்கிய  இடத்துக்குச்  செல்ல  ஆய்வுக்குழுவினருக்கு அனுமதி  அளிக்கக் கிளர்ச்சிப்  படையினர்  முன்வந்திருக்கிறார்கள். விமானம்  விழுந்து  நொறுங்கிய  இடத்துக்குச்  சென்று அங்கு  சிதறிக்  கிடக்கும்  பயணிகளின்  உடமைகளைச்  சேகரிக்க  மீட்புக்குழு  அனுமதிக்கப்படும்  என  டச்சு  நீதி  அமைச்சின் பேச்சாளர்  ஜீன்  பிரான்ஸ்மேன்   தெரிவித்ததாக  சிஎன்என் …