ரெடாட்ரூடைடு அல்லது "ரெட்டா" என்ற மூலப்பொருளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. மலேசியாவில் பயன்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை ரெடாட்ரூடைடு அடங்கிய எந்தவொரு தயாரிப்பும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை. ரெடாட்ரூடைடு,…
பத்து கவான் வீடுகளில் விரிசல்கள்
செபராங் பிறை செலாத்தான், பத்து கவானில், கம்போங் மஸ்ஜித்தில் உள்ள எட்டு வீடுகளில் விரிசல்கள் தோன்றியிருப்பதற்கு அருகில் நடக்கும் கல்லுடைப்பு வேலைகள்தான் காரணம் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் (கேப்) கூறுகிறது. குவாரியில் நடக்கும் கல்லுடைப்பு வேலைகளால் சுமார் 200 குடியிருப்பாளர்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலாகவே பிரச்னைகளை எதிர்நோக்கி வந்திருப்பதாகவும் …
அல்வின், அலி ஆகியோரைக் கைது செய்ய இண்டர்போல் உதவி நாடப்படுகிறது
அரசியல் அடைக்கலம் தேடி வெளிநாடு சென்றுள்ள அலி அப்ட் ஜலில், அல்வின் டான் ஆகியோரின் இருப்பிடம் அறியவும் அவர்களைக் கைது செய்யவும் போலீசார் அனைத்துலகப் போலீசான இண்டர்போலின் உதவியை நாடியுள்ளனர். இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இதனைத் தெரிவித்தார். மூன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டின் பேரில் …
உலகம் மூன்று நாள்களுக்கு இருளில் மூழ்கும் என்பது வெறும் புருடா
டிசம்பர் மாதம் உலகில் மூன்று நாள்களுக்கு இருள் சூழ்ந்திருக்கும் என்ற செய்தி வெறும் புருடா என்றும் அதை நம்ப வேண்டாம் என்றும் தேசிய பரவெளி நிறுவனம்(அங்காசா) ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. சமூக ஊடகங்களில் வலம் வந்த அச்செய்தி அமெரிக்க வான், விண்வெளி நிர்வாகத்தின்(நாசா) தலைவர் சார்ல்ஸ் போல்டனை மேற்கோள் …
எம்ஏஎஸ்-ஸுக்கு ஏற்பட்ட நிலை FGV-க்கும் நேரலாம்
அரசாங்கம், கடந்த ஈராண்டுகளாக பெல்டா குளோபல் வெண்ட்சர்ஸ் (FGV)ஹோல்டிங்ஸ் நிறுவனம் கண்டுவரும் மோசமான அடைவுநிலையைத் தடுத்து நிறுத்தாவிட்டால் புரோட்டோன், மலேசிய விமான நிறுவனம் போன்றவை சென்ற வழியே அதுவும் செல்லக்கூடும் என எம்பி ஒருவர் எச்சரித்துள்ளார். 2012-இலிருந்து இவ்வாண்டு அக்டோபர் முடிய அந்நிறுவனத்தின் பங்கு விலைகள் 36.77 விழுக்காடு …
பயங்கரவாத மிரட்டல்மீது வெள்ளை அறிக்கை
அரசாங்கம், மலேசியர்கள் சம்பந்தப்பட்ட பயங்கரவாத மிரட்டல் குறித்து மக்களுக்குத் “தெரிவிக்க” விரைவில் வெள்ளை அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். கோ சுங் சென் (டிஏபி-காப்பார்)-னின் வினாவுக்கு இவ்வாறு பதிலளித்த உள்துறை அமைச்சு, அறிக்கை “தயாராகி வருவதாக”க் கூறியது. ஆனால், அது எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதை அது …
இஸ்லாத்துக்குக் கடப்பாடு கொண்டவர்தானா கைரி? பெர்காசா கேள்வி
இப்ராகிம் அலி பைபிளைக் கொளுத்தப்போவதாக மிரட்டல் விடுத்ததைத் தேச நிந்தனை குற்றம்தான் என்று விடாமல் கூறிக்கொண்டிருக்கும் அம்னோ இளைஞர் தலைவர் இஸ்லாத்துக்குக் கடப்பாடு கொண்டர்தானா என பெர்காசா வினவுகிறது. “அம்னோ இளைஞர் தலைவர் எந்தச் சமயத்துக்காகப் போராடுகிறார்?”, என பெர்காசா இளைஞர் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ் ஓர் …
நீதிமன்றத்துக்கு வெளியில் சைபூல் சட்டைகளுக்கு தீ வைக்கப்பட்டது
புத்ரா ஜெயாவில் நீதி மாளிகைக்கு வெளியில் அன்வார் இப்ராகிம்- ஆதரவாளர்கள் சிலர் முகம்மட் சைபூல் புஹாரி பெயர் பொறிக்கப்பட்ட இரண்டு டி-சட்டைகளுக்குத் தீ வைத்த சம்பவமும் அதன் பின்னர் நீதிமன்றத்தைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளைமீறி உள்ளே செல்ல முயன்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே பிகேஆர் இளைஞர் பகுதியைச் …
கூண்டில் இருந்தாலும் குறும்பு போகவில்லை
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் வழக்கு நடைபெறும் கூட்டரசு நீதிமன்றத்தில் பார்வையாளர்களுக்காக சுமார் 70 இருக்கைகள் உள்ளன. ஆனால், காலை எட்டு மணிக்கு முன்னதாகவே அத்தனையும் நிரப்பப்பட்டு விட்டன. இருக்கைகள் கிடைக்காதவர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அப்போது அன்வார் குறுக்கிட்டு, “இருக்கைகள் இல்லாவிட்டால் என்ன, இங்கே கூண்டுக்குள்…
அன்வார் வழக்கு: ஸ்ரீராம் கோபால் நடத்துகிறார்
அன்வார் இப்ராகிம் குதப்புணர்ச்சி வழக்கு II இல் அன்வாரின் மேல்முறையீடு விசாரணை இன்று பெடரல் உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அன்வாரின் தற்காப்பு குழுவுக்கு பெடரல் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஸ்ரீராம் கோபால் தலைமை ஏற்றுள்ளார். தற்காப்புக் குழுவின் விவாத்தை ஸ்ரீராம் கோபால், என். சுரேந்திரன், ராம் கர்பால் மற்றும்…
ஒருவரை சிறையிலடைத்தால், 10,000 பேர் எழுவர்
மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் உரையாற்றுவதற்கு பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், அவர் அங்கு பேசினார். 2,000 க்கும் மேற்பட்ட மாணவர்களும் தன்னார்வலர்களும் முன்னதாக ஏற்பாடு செய்திருந்தவாறு பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தேவான் துங்கு சான்செலர் கட்டடத்தின்முன் உரையாற்றுவதை சாதித்துக் காட்டினர். மாணவர்களும்…
அன்வாருடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் யுஎம்முக்குள் சென்றனர்
ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் தன்னார்வலர்களும் மலாயா பல்கலைக்கழக வாயிற்கதவை உடைத்து பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்றனர். அங்கிருந்து அவர்கள் அன்வாருடன் தேவான் துங்கு சான்செலரை நோக்கி சென்றனர். அங்கு அன்வார் உரை நிகழ்த்த தடை செய்யப்பட்டுள்ளது. அன்வார் அவரது குடும்பத்தாருடன் நான்குசக்கர வண்டியில் இரவு மணி 9.40 க்கு…
அன்வாரின் உரையைக் கேட்க யுஎம் வாயிற்கதவு முன்பு கூட்டம் கூடுகிறது
அன்வார் பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று பல்கலைக்கழகம் மாணவர்களை எச்சரித்துள்ளது. ஆனாலும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்றிரவு பேசுவதைக் கேட்க பல்கலைக்கழக முன்வாயிலில் கூட்டம் கூடியுள்ளது. சுமார் 500 மாணவர்களும் அன்வார் ஆதரவாளர்களும் கோலாலம்பூர் கேட்டின் முன்பு மழைத்தூறலையும் பொருட்படுத்தாமல் அன்வாருக்காக காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில்…
இப்ராகிம் அலியின் “பைபிள் எரிப்பு” மிரட்டல் தேச நிந்தனையானதல்ல
மலாய் மொழியிலான பைபிள் பிரதிகளை எரிக்கப் போவதாக பெர்காசாவின் இப்ராகிம் அலி விடுத்திருந்த மிரட்டல் விவகாரத்தில் இதுவரையில் மௌனியாக இருந்து வந்த சட்டத்துறை அலுவலகம் (ஏஜி) இன்று வாய் திறந்து இப்ராகிம் அலியின் மிரட்டல் தேச நிந்தனைப் போக்கைக் கொண்டதல்ல என்று அறிவித்துள்ளது. பினாங்கு, ஜெலுத்தோங்கில் பொதுமக்களுக்கு, முஸ்லிம்கள்…
சைபுல்: உண்மை வெளிவந்து என் கெளரவம் காக்கப்பட வேண்டும்
அன்வார் இப்ராகிம் தன்னைக் குதப்புணர்ச்சிக்கு ஆளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ள முகம்மட் சைபுல் புஹாரி அஸ்லா, நாளை நீதிமன்றத்தில் உண்மை வெளிவர வேண்டும், அப்போதுதான் தன் கெளரவம் காக்கப்படும் என்கிறார். குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுபட எதிரணித் தலைவர் ஏற்பாடுகள் செய்துவருவதாக பேச்சு அடிபடுவதாகவும் அது உண்மையாக இருக்கக்கூடாது என்றும் அவர் …
யுஎம் சுல்தானின் சொல்லை மதிக்க வேண்டும்
மலாயாப் பல்கலைக்கழகம், அதன் வேந்தர் பேராக் சுல்தான் பல்கலைக்கழகச் சுதந்திரம் காக்கப்படுவது அவசியம் எனக் கூறியிருப்பதைக் கருத்தில்கொண்டு அதன் முன்னாள் மாணவரும் எதிரணித் தலைவருமான அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவைத் தடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களிடையே அன்வார் பேசுவதைத் தடுக்கும் யுஎம்-மின் செயல், சுல்தான் நஸ்ரின் முய்ஸுடின்…
சிறப்பு நோக்கங்களுக்கான கப்பல் சரக்குக் கப்பலாக மாறியது
யுனிவர்சிடி மலேசியா திரெங்கானு (யுஎம்டி), ரிம14 மில்லியன் செலவில் ‘சிறப்புப் பணிகளுக்குப் பயன்படும்’ கப்பலொன்றைக் கட்டத் திட்டமிட்டது. ஆனால், இறுதியில் உருவானதோ ஒரு சரக்குக் கப்பலாகும். அந்த வகையில் பணம் “வீணானதாக” பொதுக் கணக்குக் குழு (பிஏசி), இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கண்டித்துள்ளது. இத்திட்டம்மீது மலேசிய …
விரைவில் வருகிறது- மூன்றாவது கூட்டணி
பிஎன்னும் பக்கத்தான் ரக்யாட்டும் உள்ளுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருக்கையில் ‘இடச்சாரிகளை’க் கொண்ட ஒரு புதிய அரசியல் கூட்டணி உருவாகி வருகிறது. ஜனவரியில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் புதிய கூட்டணியை அமைப்பதில் முனைப்புக் காட்டும் கட்சிகள் பார்டி சோசலிஸ் மலேசியா(பிஎஸ்எம்)-வும் பார்டி ரக்யாட் மலேசியாவும் ஆகும். அவை, சாபா, சரவாக் …
என்ஜிஓ-கள்: உலகம் கூட்டரசு நீதிமன்றத்தை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருகிறது
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்கு எதிரான மேல்முறையீடு நாளை விசாரணைக்கு வரும்போது மலேசியாவின் உச்ச நீதிமன்றம் அனைத்துலகத் தரத்துக்கு ஏற்ப நடந்துகொள்கிறதா என்பதை உலகம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும். “கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு மலேசிய நீதித்துறையின் தரத்தைத் தீர்மானிக்கும். “மலேசியா, ஏற்கனவே கண்டனத்துக்கு இலக்காகியுள்ள நீதித்துறையின் …
துணிச்சல் பெருங்கள், யுஎம்முக்கு அன்வார் அறிவுறுத்தல்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவர் பயின்ற மலாயா பல்கலைக்கழகத்தை (யுஎம்)இன்று சாடினார். நாளை அப்பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கும் ஒரு நிகழ்ச்சியில் பேசுவதற்காக அவருக்கு அழைப்பு விடுத்த மாணவர் மன்ற தலைவருக்கு காரணம் கோரும் கடிதம் கொடுக்கப்பட்டிருப்பது பற்றி கருத்துரைத்த அவர், மாணவர் விவகாரங்களுக்கான யுஎம் உதவி…
அலி உயிரை காப்பாற்றிக்கொள்ள வெளியேறியதாகக் கூறுகிறார்
தன்னார்வலர் அலி அப்துல் ஜாலில் நான்கு முறை கைது செய்யப்பட்டவர்; பல தேச நிந்தனை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர். இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தைரியமாக இருந்தவர் திடீரென்று நாட்டை விட்டு வெளியேறினார். அலி நாட்டை விட்டு வெளியேறி இறுதியில் சுவீடன் நாட்டில் தஞ்சம் புகுந்தார். அதற்குக் காரணம் தேச…
ஹெலோயீன் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு
அக்டோபர்பெஸ்ட் பீர் கொண்டாட்டம் மற்றும் நாய் தொடுதல் நிகழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாமிய மிதவாதிகள் இப்போது நெகிரி செம்பிலானில் நடத்தப்படவிருக்கும் ஹெலோயீன் (Halloween) கொண்டாட்டதிற்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல இஸ்லாமிய கூட்டத்தினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஓர் அனைத்துலக பள்ளியில் நடத்தப்பட விருந்த ஹெலோயீன் இரவு…
அன்வார் சிறைத் தண்டனையையும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டையும் எதிர்பார்க்கிறார்
குதப்புணர்ச்சி வழக்கு II இல் சிறைத் தண்டனையையும் அத்துடன் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டையும் எதிர்பார்ப்பதாக எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியாகினிடம் கூறினார். குதப்புணர்ச்சி வழக்கில் தாம் சிறையிலடைக்கப்பட்டாலும், தாம் நீண்ட காலத்திற்கு சிறையில் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு அதிகாரிகள் தேச நிந்தனைக்…
அரசுத்தரப்பு: அன்வாருக்கு ஐந்தாண்டு போதாது
அன்வாருக்குக் குதப்புணர்ச்சி வழக்கு-2இல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய ஐந்தாண்டுச் சிறை போதாது என்றும் கூடுதல் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழகுரைஞர்கள் கூறியுள்ளனர். கூட்டரசு நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு முன்வைத்துள்ள வாதத் தொகுப்பு மலேசியானியின் பார்வைக்குக் கிட்டியது. அதில், அவர்கள் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் தவறு …


