முகிதின் யாசின் தலைமையிலான பெர்சத்து தங்களை மிஞ்சிவிடுமோ என்ற "அச்சம் மற்றும் பொறாமை" காரணமாகவே, பாஸ் கட்சி அதனுடன் உறவை முறித்துக் கொண்டதாக ‘உரிமை’ கட்சியின் தலைவர் ப. ராமசாமி இன்று தெரிவித்துள்ளார். அவர் தனது முகநூல் பதிவில், பாஸ் கட்சி பெர்சத்துடனான உறவைத் துண்டிக்காவிட்டால், பெர்சத்துவின் செல்வாக்கு…
மூத்த தலைவர்களால் தீர்வு காண முடியும்: பக்கத்தான் இளைஞர்கள் நம்பிக்கை
பக்கத்தான் ரக்யாட்டின் மூத்த தலைவர்கள் சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தால் கட்சிக்குள் உருவாகியுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஆற்றல் தங்களுக்கு உண்டு என்பதைக் காண்பிக்க வேண்டும். அதற்கு அவர்கள் ஒன்றாக அமர்ந்து கூடிப் பேசுவது அவசியம் என அதன் இளைஞர் தலைவர்கள் இன்று ஓர் அறிக்கையில் கூறினர். அதன் பொருட்டு …
ஞாயிற்றுக்கிழமை காலிட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும்
பாஸ், டிஏபி இரண்டுமே, அப்துல் காலிட் இப்ராகிம் சிலாங்கூர் மந்திரி புசராக தொடர்வதை ஆதரிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய உயர்தலைமைத்துவக் கூட்டங்களை ஆகஸ்ட் 10-இல் நடத்துகின்றன. இவற்றில் பாஸ் மத்திய குழு என்ன முடிவெடிக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். டிஏபி, காலிட்டுக்குப் பதில் ஒரு பெண்மணி மந்திரி …
சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்தி ஒன்றுபடுங்கள், வான் அசிஸா
மாற்றத்தை விரும்பும் மக்களை நாம் பிரதிநிதிக்கிறோம் என்பதை மனதில் நிலைநிறுத்தி உறுதியாக இருங்கள் என்று பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் இன்று பக்கத்தான் ரக்யாட் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சண்டையிட்டுக்கொள்வதை நிறுத்தி விட்டு மலேசிய மக்களின் விருப்பங்கள் பற்றி சிந்திப்பதற்காக ஒன்றுபடுங்கள் என்று…
அம்மண விழாவில் கலந்துகொண்ட 15 பேரை போலீஸ் அடையாளம் கண்டுள்ளது
பினாங்கு தெலோக் பாகாங் தேசிய வனப் பாதுகாபுப் பகுதியில் நிர்வாணக் கேளிக்கைகளில் கலந்துகொண்டதற்காக பிடிபட்ட 15பேரில் எழுவர் மலேசியர்கள் என பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி கூறினார். அந்நிகழ்வு தொடர்பில் போலீசார் 10 வாக்குமூலங்களைப் பதிவு செய்திருப்பதாக ரஹிம் தெரிவித்தார் “பிடிபட்ட 15 பேரில் எழுவர்…
ரபிஸி: காலிட்டை அகற்ற சிலாங்கூரை இழக்கலாம்
பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, மந்திரி புசார் நெருக்கடியின் காரணமாக திடீர் தேர்தல் நடத்தப்பட்டால் பக்கத்தான் ரக்யாட் சிலாங்கூரை இழக்கும் அபாயம் இருப்பதை ஒப்புக்கொள்கிறார். என்றாலும், “அரசாங்கத்தை இழப்பதைவிட கொள்கைகளைக் கட்டிக்காப்பதே முக்கியம்” என்றவர் நம்புகிறார். “மாநில அரசை இழக்க நேரும் என்றால் அப்படியே ஆகட்டும். ஆனால்,…
ரிஸல்மான் விசாரணைக்காக நியு சிலாந்து அனுப்பப்படுவார்
மலேசிய அரசாங்கம் முன்னாள் தூதரக இராணுவ அதிகாரி ரிஸல்மானை நீதிமன்ற விசாரணைக்காக நியு சிலாந்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறது. “இதன் தொடர்பில் மலேசியாவும் இந்தோனேசியாவும் தேவையான சட்ட நடைமுறைகள் குறித்து விவாதித்து வருகின்றன”, என வெளியுறவு அமைச்சின் அறிக்கை ஒன்று கூறிற்று. இவ்விவகாரத்தில் ஒரு மாத…
சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடப்பதை மசீச விரும்புகிறது
சிலாங்கூர் மந்திரி புசார் சர்ச்சை தொடர்பில் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டு திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மசீச கேட்டுக்கொண்டுள்ளது. “புதிதாக தேர்தல் நடத்தப்பட்டால், பிஎன் சிலாங்கூரில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என நம்புகிறோம்”, என சிலாங்கூர் மசீச தொடர்புக் குழுச் செயலாளர் இங் சொக் சின் கூறினார்.…
காலிட்டுக்கு காரணம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது
பிகேஆர் ஒழுங்கு வாரியம், சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிமுக்கு அவர் கட்சியின் முடிவை ஏற்று பதவி விலக மறுப்பது ஏன் என்று காரணம் கேட்டுக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. “ஆகஸ்ட் 8-இல் அல்லது அதற்குமுன் அவர் கடிதத்துக்குப் பதிலளிக்க வேண்டும்”, என ஒழுங்கு வாரியத் தலைவர் டான் …
பினாங்கில் நிர்வாண விளையாட்டு விழா?
‘பினாங்கு தெலோக் பகாங்கில் நிர்வாண விளையாட்டு விழா 2014’ எனத் தலைப்பிடப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதை வைத்து அம்னோ-ஆதரவு வலைப்பதிவுகள் பினாங்கு அரசு பாலியல் முறைகேடுகளுக்கு இடமளிப்பதாகக் குறைகூறி வருகின்றன. ஒரு வலைப்பதிவு முதலைமைச்சர் லிம் குவான் எங், சுற்றுலா, பண்பாட்டு அமைச்சர் …
வல்லினத்தின் குறும்படப் பட்டறை
26.7.2014ல் வல்லினம் ஏற்பாட்டில் குறும்படப்பட்டறை ஒன்று கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் நடைப்பெற்றது. இந்தப் பட்டறையை இயக்குனர் சஞ்சை குமார் பெருமாள் மற்றும் செந்தில் குமார் முனியாண்டி ஆகியோர் வழிநடத்தினர். நாட்டில் குறும்படப்போட்டிகள் அதிகமாக நடந்துகொண்டிருக்கும் சூழலில் , குறும்படத்துக்கான அடிப்படை தேவை குறித்து இப்பட்டறை விவாதித்தது. கருவிகளும்,…
டிஏபி-இன் தந்திரத்தில் மலாய்க்காரர்கள் ஏமாந்து போகக் கூடாது
டிஏபி, இளம் மலாய்ப் பெண்களைப் “பயன்படுத்தி” மலாய்க்காரர்களுக்கு வலை விரிக்கிறது என்றும் மலாய் இளைஞர்கள் அந்த வலையில் விழுந்து விடக் கூடாது என்றும் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் இர்மோஹிசாம் இப்ராகிம் எச்சரித்துள்ளார். மலாய்க்காரர் ஆதரவுக்கு பக்கத்தான் பங்காளிகளான பாஸ் மற்றும் பிகேஆரையே என்றென்றும் நம்பியிருக்க முடியாது என்பதை டிஏபி …
சிலாங்கூரில் புதிய தேர்தல் பக்கத்தானுக்கு சாவுமணியாகும்
சிலாங்கூர் மாநிலத்தில் புதிதாக தேர்தல் நடத்துவது பக்கத்தான் அழிவுக்குத்தான் வழிகோலும் என்று எச்சரிக்கிறார் அரசியல் ஆய்வாளர் வொங் சின் ஹுவாட். அப்படி ஒரு தேர்தல் நடத்தப்பட்டால், மக்கள் பிஎன்னுக்கு வாக்களிப்பார்கள் என்பதைவிட பெரும்பாலோர் வாக்களிக்கவே வர மாட்டார்கள் என்பதே சரியாக இருக்கும். “மேலும், மூன்றாம் தரப்பு ஒன்றும் மூக்கை …
சிலாங்கூரில் தேர்தல் நடத்துவது அவசியம் என்கிறார் சட்ட நிபுணர்
சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ், சிலாங்கூருக்குப் புதிய மந்திரி புசாரை நியமனம் செய்வது சரியான முடிவாக இருக்காது என்று அரசமைப்பு வல்லுனர் பேராசிரியர் அப்துல் அசீஸ் பாரி கூறினார். சுல்தான் அப்படிச் செய்தால், காலிட் இப்ராகிம் சர்ச்சையில் அவர் குறிப்பிட்ட ஒரு தரப்புக்குச் “சாதகமாக நடந்துகொள்வதாக”க் குற்றம் சாட்டப்படலாம். எனவே,…
சமையல்காரர் விவகாரத்தில் குவான் எங்கை ஆதரிக்கிறது பெர்காசா
உள்ளூர் உணவு வகைகளை விற்பனை செய்யும் அங்காடிக் கடைகளில் அந்நிய சமையல்காரர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைத்துள்ளது. மலாய்க்காரர் உரிமைக்காக போராடும் பெர்காசாதான் லிம்மின் பேச்சுக்கு வரவேற்பு அளித்துள்ளது. லிம்மின் பரிந்துரைக்கு ஏற்கனவே மசீச …
காலிட்: தவறு செய்தேனா? எம்ஏசிசி-இடம் புகார் செய்யுங்கள்
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், தம்மைக் குற்றம் சொல்லும் கட்சி சகாக்கள் தாங்கள் சொல்வது உண்மை என்று நம்பினால் மலேசிய ஊழல்-தடுப்பு வாரியத்திடம் தாராளமாக புகார் செய்யலாம் எனக் கூறியுள்ளார். “பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் கடுமையானவை. ஆனால், அவற்றில் …
இஸ்ரேலைத் தண்டிக்க வர்த்தக உறவுகளை முறித்துக்கொள்வது பற்றி மலேசியா பரிசீலிக்கும்
காசா சண்டை தொடர்பில் இஸ்ரேலுடன் வர்த்தகம் செய்யும் சீனா, ஜப்பான், அமெரிக்கா முதலிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களுடன் உள்ள வர்த்தகத் தொடர்புகளை மலேசியா மறுபரிசீலனை செய்ய விருக்கிறது. இஸ்ரேலைத் தண்டிக்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்படும் என அனைத்துல வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் கூறினார் என …
முஜாஹிட்: பக்கத்தானே மலேசியாவுக்கு சிறந்த தேர்வு
முஜாஹிட் யூசுப் ராவா, பக்கத்தான் ரக்யாட்டே முதிர்ச்சிபெற்ற அரசியலுக்கான சிறந்த தளம் என்று நம்புகிறார். நாட்டில் ஒரு மாற்றத்தை உண்டுபண்ண, ஒரு புதிய அரசியலை உருவாக்க, அரசியல் முதிர்ச்சி மிகவும் அவசியம் என்று பாஸ் பாரிட் புந்தார் எம்பி வலியுறுத்தினார். பக்கத்தான் சில பிரச்னைகளை எதிர்நோக்கினாலும் பக்கத்தான் ரக்யாட் …
பிசிஎம்-இன் ஹுவான் கர்ப்பாலின் ஓட்டுனரை ஜாமினில் வெளியில் கொண்டுவந்தார்
பார்டி சிந்தா மலேசியா(பிசிஎம்)-வின் உதவித் தலைவர் ஹுவான் செங் குவான், டிஏபி முன்னாள் தலைவர் காலஞ்சென்ற கர்ப்பால் சிங்கின் கார் ஓட்டுனர் சி. செல்வத்தைச் சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்திருக்கிறார். கண்மூடித்தனமாக காரோட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார். ஒரு மாதமாக சிறையில் இருந்த அவரை ரிம5,000 பிணை செலுத்தி ஹுவான் …
பிகேஆர் கூட்டத்தில் காலிட்டை விலக்குவது பற்றி விவாதிக்கப்பட்டது?
அப்துல் காலிட் இப்ராகிம், சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தால் பிகேஆரிலிருந்து நீக்கப்படலாம் என்று கட்சி வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. நேற்று, பெட்டாலிங் ஜெயா, ட்ரோபிகானாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் காலிட்டை விலக்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாம். “காலிட்டைப் பதவியிலிருந்து அகற்ற இது ஒரு …
டிஏபி: ஜோகூர் பாலத்தில் சாலைக்கட்டண உயர்வு சட்டப்படி சரியானதா?
ஜோகூர் பாருவில், சிங்கப்பூருக்குச் செல்லும் வழியான ஜோகூர் பாரு சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, குவரண்டின் (CIQ) வளாகத்தில் சாலைக்கட்டணம் உயர்த்தப்பட்டது “சட்டப்படி” செய்யப்பட்ட ஒன்றா என ஜோகூர் எதிரணித் தலைவர் பூ செங் ஹாவ் கேள்வி எழுப்பியுள்ளார். “ஆகஸ்ட் முதல் நாள் சாலைக்கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதற்குமுன், 1984ஆம் ஆண்டு …
நஸ்ரி: குற்றவாளிகள் இன்றி எம்எச் 17வழக்கை மலேசியாவில் நடத்த முடியாது
எம்எச் 17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம்மீது மலேசியாவில் வழக்கு நடத்துவது சாத்தியமற்றது என்கிறார் முன்னாள் சட்டவிவகார அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ். “(எம்எச் 17-ஐ சுட்டு வீழ்த்திய) கிளர்ச்சிக்காரர்களை விசாரணைக்கு இங்கு (மலேசியாவுக்கு) கொண்டுவர முடியாது என்கிறபோது அது போலி வழக்காகத்தான் இருக்கும்”, என அந்தச் சுற்றுலா, பண்பாட்டு …
வேதா: மஇகா-வே ரிம 540 மில்லியன் எங்கே போனது?
இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, இந்திய சமூகத்துக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடுத்ததாகச் சொல்லப்படும் ரிம540 மில்லியன் எப்படிச் செலவிடப்பட்டது என்பதை மஇகா தலைவர் ஜி.பழனிவேல் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தத் தொகை பற்றி நஜிப்பே இவ்வாண்டு தொடக்கத்தில் பிரதமர்துறை துணை அமைச்சர் பதவியிலிருந்து வேதமூர்த்தி …
என்ஜிஓ: CIQ சாலைக்கட்டண உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வீர்
சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா(எஸ்ஏஎம்எம்) சிங்கப்பூருக்குச் செல்லும் வழியான ஜோகூர் பாரு சுங்கத்துறை, குடிநுழைவுத்துறை, குவரண்டின் (CIQ) வளாகத்தில் சாலைக் கட்டணத்தை அளவுமீறி உயர்த்தும் முடிவைக் கண்டித்துக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. “பொதுப் போக்குவரத்து நிறுவனங்களும், ஊழியர்களும் பாதிக்கப்படும் மற்றவர்களும் அம்முடிவுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய …


