ஜிஎஸ்டி-யை எதிர்க்கும் அரசுப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்: அரசாங்கம் எச்சரிக்கை

நேற்று பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி)-எதிர்ப்புப்  பேரணியில் கலந்துகொண்ட  அரசாங்கப் பணியாளர்களுக்கு எதிராக  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும்  எனத்  தலைமைச்  செயலாளர்  அலி  ஹம்சா எச்சரித்துள்ளார்.  அவர்கள் பணிநீக்கம்  செய்யப்படும்  அபாயமும்  உள்ளது. அரசுப்  பணியாளர்கள்  அரசாங்கத்தின்  கொள்கைகளையும்  திட்டங்களையும்  ஆதரிக்க  வேண்டுமே  தவிர  எதிர்க்கக்  கூடாது  என்றாரவர்.…

ஜிஎஸ்டியை 62 விழுக்காடு மலேசியர்கள் நிராகரிக்கின்றனர்

  பொருள்கள் மற்றும் சேவைகள் வரியை (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்த மலேசிய அரசாங்கம் 30 ஆண்டுகளாக திட்டமிட்டிருந்ததோடு, சமீபத்தில் அவ்வரியினால் மக்களுக்கு கிடைக்க விருக்கும் நன்மைகள் குறித்து பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த போதிலும், 62 விழுக்காடு மலேசியர்கள் அவ்வரியை நிராகரிக்கின்றனர் என்று மெர்டேக்கா மையம் இன்று அறிவித்தது. நாட்டின் அனைத்து இனங்களையும்…

‘அன்வார் எவ்வளவு விரைவில் சிறைக்குப் போகிறாரோ அவ்வளவுக்கு நல்லது’

முன்னாள்  துணைப்  பிரதமரான  அன்வார்  இப்ராகிம், ஏதாவது  தொல்லை  தந்துகொண்டே இருப்பார்  என்பதால்  அவர் விரைவில்  சிறைக்கு  அனுப்பப்படுவது  மக்களுக்கும்  நாட்டுக்கும்  நல்லது  என்று  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  கூறினார். இரண்டாவது  குதப்புணர்ர்சி  வழக்கும்  தண்டனையும்  தம்மை  ஒழித்துக்கட்டும்  அரசியல்  தந்திரம்  என்று  அன்வார்  கூறிக்கொள்வதை  அபத்தம் …

ஜாஹிட்: ஹுடுட் விசயத்தில் பாஸ் மலாய்க்காரர்களை ஏமாற்றியதா?

பாஸ்  ஹுடுட்  அமலாக்கத்தில்  உண்மையிலேயே  அக்கறை  கொண்டிருக்கிறதா  என  அம்னோ  உதவித்  தலைவரும்  உள்துறை  அமைச்சருமான  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  கேள்வி  எழுப்பியுள்ளார். அது  ஒரு   “அரசியல்  தந்திரம்”  எனக்  கூறப்பட்டிருப்பதை  அடுத்து  அவர்  இவ்வாறு  வினவினார். பாஸ்  மலாய்  ஆதரவுத் தளத்தை  வலுப்படுத்திக்கொள்ளவே  அந்த  நடவடிக்கையை  மேற்கொண்டிருக்கிறது …

பாஸ்: ஹுடுட்மீது என்ன முடிவெடுக்கப்பட்டாலும் ஏற்றுக்கொள்வோம்

நாடாளுமன்றத்தில்  ஹுடுட்மீது  கொண்டுவரப்படும்  தனி  உறுப்பினர்  சட்டவரைவு  நிராகரிக்கப்பட்டாலும்  அம்முடிவை  ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக  இருப்பதாய்  பாஸ்  அறிவித்துள்ளது. பாஸ்,  நாட்டின்  ஜனநாயகக்  கோட்பாடுகளை  மதிக்கும்  ஒரு  கட்சி  என  அதன்  தகவல்  பிரிவுத்  தலைவர்  மாபுஸ்  ஒமார்  கூறினார். கிளந்தானில், இஸ்லாமிய சட்டமான  ஹுடுட்டைக்  கொண்டுவரும்  தனது  நோக்கம் …

கிடெக்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக பேசும் காலிட்டுக்குக் கண்டனம்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம், சர்ச்சைக்குரிய  கின்ராரா- டமன்சாரா விரைவுச்சாலை(கிடெக்ஸ்)  விவகாரத்தில் மக்களின்  நலனைவிட  நிறுவனத்தின்  நலனுக்கே  முன்னுரிமை  அளிப்பதாக  சாடப்பட்டிருக்கிறார். “காலிட்  இப்ராகிமின்  நிலைப்பாடு  வருத்தமளிக்கிறது. மாநில  அரசு  செய்யும் எல்லா  முடிவுகளும்  சிலாங்கூர் மக்களுக்கு  நன்மை  செய்வதாக  இருத்தல்  வேண்டும். “அப்படிச்  செய்யும்போது …

சுமத்ராவில் நில நடுக்கம்: சிலாங்கூரிலும் பேராக்கிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டன

நேற்றிரவு  10.35க்கு,  சுமத்ராவின்  நியாஸ்  தீவுகள் வட்டாரத்தில் 5.7 ரிக்டர்  அளவு கொண்ட நில  நடுக்கம்  தாக்கியது. அதன்  அதிர்வுகள் பேராக்கிலும்  சரவாக்கிலும்  பல  இடங்களில்  உணரப்பட்டன. நில நடுக்கம்,  நியாஸ்  தீவுகளிலிருந்து  68 கிலோ மீட்டர்  தொலைவிலும்  சாபாக்  பெர்னத்திலிருந்து  408  கிலோ  மீட்டர்  தொலைவிலும்  மையம் …

சரவாக்கின் பாத்தாங் சாடோங் தொகுதியை பிகேஆர் இரத்துச் செய்தது

சரவாக்கின்  பாத்தாங்  சாடோங்  தொகுதியில்  கடந்த  வாரம்  நடைபெற்ற கட்சித்  தேர்தலில் மோசடி  நிகழ்ந்திருப்பதாக  தெரிய வந்திருப்பதால்  பிகேஆரின்  மத்திய  தேர்தல்  குழு(ஜேபிபி)  அத்தொகுதியை  இரத்துச்  செய்துள்ளது. மேலும், போட்டியின்றித்  தேர்ந்தெடுக்கப்பட்ட   தொகுதித்  தலைவர்  உள்பட, கட்சியின்  தலைமைப்  பொறுப்புகளுக்கு  வெற்றிபெற்றவர்களை கட்சிநீக்கம்  செய்யவும்  அக்குழுவின்  தலைவர் ஜொஹரி …

எம்எச்370 காணாமல் போனதை அடுத்து குழப்பம் நிலவியதாக அறிக்கை தெரிவிக்கிறது

நேற்று,  மலேசியா, எம்எச்370  காணாமல்  போனபின்னர்  நடந்தவற்றை  விவரமாக  விளக்கும்  அறிக்கையை     வெளியிட்டது. அவ்வறிக்கை,  பாதையை  விட்டு  விலகிய  விமானம்  சென்றிருக்கக்  கூடிய  திசையை  விவரித்ததுடன்  விமானம்  காணாமல்  தெரிந்ததும்  குழப்பம்  நிலவியதாகவும்  குறிப்பிட்டது. விமானம்  காணமல்  போனதற்கும்,  தேடும்பணியைத்  தொடங்க  முடிவெடுப்பதற்குமிடையில்  நான்கு  மணி  நேரம்  கடந்து…

தியன் சுவா: ஹூடுட் சட்டத்திற்கு டிஎபி ஒப்புதல் அளித்தது என்று…

  "பொய்" உரைத்தார் என்ற டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்கின் கடுமையான சாடாலுக்கு ஆளான ஒரு நாளுக்குப் பின்னர், இன்று பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கிளந்தானில் ஹூடுட் சட்டம் அமல்படுத்துவதற்கு டிஎபி ஒப்புக்கொண்டது என்று தாம் தெரிவித்ததாக கூறப்படுவதை மறுத்தார். "அது (ஹூடுட்)…

மாட் சாபு: அன்வார் பேசும் கடைசிக் கூட்டமாகக்கூட இருக்கலாம்

இன்றைய  ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணியை  ஏற்பாடு  செய்தவர்களில்  ஒருவரான  பாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு,  பேரணி  முடியும்வரை  மக்கள்  கலைந்துபோகக்கூடாது  என்று  கேட்டுக்கொண்டார். “நிகழ்வு  முடிவதற்குமுன்  போய்  விடாதீர்கள்.....அன்வார்  இப்ராகிம்  பேசும்வரை  காத்திருங்கள். இதுவே  அவர்  பேசுவதைக்  கேட்கும் கடைசி  வாய்ப்பாகவும்  இருக்கலாம்”. மழையைப்  பற்றிக்  கவலை  வேண்டாம் …

ஜிஎஸ்டியில் கலந்துகொண்ட ‘துரோகிகள்’மீது நடவடிக்கை: கியுபெக்ஸ் எச்சரிக்கை

பொருள், சேவை  வரி-எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்ட அரசுப்  பணியாளர்கள்,  அரசாங்கத்தில்  வேலை  செய்ய  அருகதையற்ற  துரோகிகளாகக்  கருதப்படுவர். அவர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்று  அரசுப்  பணியாளர்  சங்கங்களின்  கூட்டமைப்பான  கியுபெக்ஸின்  தலைவர்  அஸே  மூடா  எச்சரித்துள்ளார். பேரணியில் கலந்துகொண்ட  அரசுப்  பணியாளர்கள், Akujanji(விசுவாசப்  பிரமாணம்) மற்றும்  Ikrar Perkhidmatan(நன்னடத்தை …

தெலோக் இந்தான் டிஏபி எம்பி காலமானார்

தெலோக்  இந்தானின் டிஏபி  எம்பியான  சியா  லியோங்  பெங், புற்று  நோயால்  காலமானார். இன்று  காலை  மணி  7.30க்கு  யுனிவர்சிடி  மலாயா  மருத்துவ  மையத்தில்  சியா  காலமானார்  என  பெர்னாமா  அறிவித்தது. சியாவின் உடல்  இன்று  பிற்பகல்  தெலோக்  இந்தானில்  உள்ள  அவரது  இல்லத்துக்கு  வந்து  சேரும்  என …

ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணிக்கு மக்கள் திரள்கின்றனர்

பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)க்கு  எதிர்ப்புத்  தெரிவிக்க  89  என்ஜிஓ-கள்  ஏற்பாடு  செய்துள்ள  மே  தினப்  பேரணியில்  10,000-க்கும்  அதிகமானோர்  கலந்துகொள்வார்கள்  என  எதிர்பார்க்கப்படுகிறது. தொழிலாளர்  தினத்தில்  நடைபெறும்  இப்பேரணியில் எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கலந்து  கொள்வார்  எனத்  தெரிகிறது. டாட்டாரான்  மெர்டேகாவை  ஒட்டியுள்ள  ஜாலான்  ராஜாவில் பிற்பகல் …

அன்வார்: ஹுடுட் சர்ச்சையால் பக்காத்தானுக்கு எதுவும் ஆகிவிடாது

ஹுடுட்  விவகாரம்  தொடர்பில்  பாஸ், டிஏபி  கட்சிகள்  சர்ச்சையிட்டுக்  கொண்டாலும்  அதனால்  பக்காதான்  ரக்யாட்டுக்கு  ஆபத்தில்லை  என  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  கூறுகிறார். “அவர்கள்  தொடர்ந்து விவாதிக்க  விட்டுவிடுவது  நல்லது. நேற்றுகூட (செவ்வாய்க்கிழமை) அவ்விவகாரம்  பற்றி  நீண்ட  நேரம்  விவாதித்தோம்”,  என்றவர்  சொன்னார். கருத்துவேறுபாடுகள்  நிலவினாலும் …

முஸ்லிம்-அல்லாத மாணவர்கள் இஸ்லாமிய விவகாரம் குறித்து குடையப்பட்டனர்

  மஜ்லிஸ் அமனா ராக்யாட் (மாரா) உபகாரச் சம்பளத்திற்கு மனு செய்திருந்த முஸ்லிம்-அல்லாத மாணவர்கள் இஸ்லாமிய விவகாரங்கள் குறித்து குடையப்பட்டனர். இந்த விவகாரம் சரவாக் அரசியல்வாதிகளின் சினத்தை தூண்டியுள்ளது. நேர்காணலின் போது, ஹூடுட் சட்டம் பற்றியும் முஸ்லிம் தொழுகை குறித்த அவர்களின் அறிவு குறித்தும் அவர்களிடம் கேட்கப்பட்டதாக மாணவர்கள்…

குளுகோரில் போட்டியிடுவது பற்றி மசீச இன்னும் முடிவு செய்யவில்லை

புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில் போட்டியிடுவது  பற்றி  மசீச  இன்னும்  முடிவுக்கு வரவில்லை  என்பதை  அதன்  துணைத்  தலைவர்  வீ கா  சியோங் தெளிவுபடுத்தியுள்ளார். “நேற்று  கட்சி  போட்டியிடுவது பற்றி  மனம்விட்டுப்  பேசினோம். போட்டியிடுவதை  ஆதரித்தும்  எதிர்த்தும் பல்வேறுபட்ட  கருத்துகள்  தெரிவிக்கப்பட்டன”, என்றாரவர். இறுதி  முடிவைக் கட்சித்  தலைவரும்,…

ஹுடுட்டால் பக்காத்தானில் பிளவு விரிவடைகிறது

இஸ்லாமியச்  சட்டத்தைக்  கொண்டு  வருவதில்  பாஸ்  பிடிவாதமாக  இருந்தால், பின்னர்  எதிரணியில்  அதற்கு  இடமில்லை  என்று கடுமையாக  எச்சரித்துள்ளார்   டிஏபி  இடைக்கால  தலைவர்  டான்  கொக்  வாய். இஸ்லாமிய  அரசை  அமைப்பது  பற்றி  பாஸ்  வேண்டுமானால்  தொடர்ந்து  “கனவு  காணலாம்”  ஆனால்,  டிஏபி  அதற்கு  உடன்படாது  என்று  கட்சித்…

காலிட்: நீர்ப்பங்கீடு நாளை முடிவுறும்

கிள்ளான்  பள்ளத்தாக்குக்  குடியிருப்பாளர்கள்  நிம்மதி  பெருமூச்சு  விடலாம். அங்கு  நீர்ப் பங்கீடு  நாளை  முடிவுக்கு  வருவதாக  மந்திரி  புசார்  அப்துல் காலிட்  இப்ராகிம்  அறிவித்துள்ளார். இன்று  பிற்பகல் ஷா  ஆலமில்  செய்தியாளர்  கூட்டமொன்றில் அப்துல்  காலிட்  இதனை  அறிவித்தார். முன்னதாக  காலையில்,   பெர்லிஸில்,  நீர்ச்  சேவை  ஆணையத்தின்  தலைவர் …

மே தினம்: ஜிஎஸ்டி எதிர்ப்புப் பேரணி நடத்த நிபந்தனைகளுடன் போலீஸ்…

  அதிகாரத்தினருடன் நடத்தப்பட்ட ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பொருள்கள் மற்றும் சேவை வரிகளுக்கு (ஜிஎஸ்டி) எதிரான பேரணி ஒன்றை நாளை நடத்துவதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறிகொள்கின்றனர். அப்பேரணியில் பங்கேற்பவர்கள் நாளை டாத்தாரான் மெர்தேக்காவின் எதிர்புறத்திலுள்ள ஜாலான் ராஜாவில் கூடுவதற்கு அனுமதிக்கப்படுவர். ஏற்பாட்டுக்குழுவின் உறுப்பினரான பாஸ்…

ஹுடுட் பக்காத்தானை அழித்துவிடும்

பாஸ்,  கிளந்தானில்  ஹுடுட்  சட்டத்தைச்  செயல்படுத்த  வகைசெய்யும்  சட்டவரைவை  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யும்  முயற்சியைத்  தொடருமானால்,  பக்காத்தான்  ரக்யாட்  வருங்காலத்தில்  வாக்குகளை  இழக்க  நேரும்  என  எட்டு  பெளத்த  சங்கங்களின் கூட்டணி  எச்சரித்துள்ளது. அக்கூட்டணி,  மலேசிய கிறிஸ்துவ  இளைஞர்  சங்கத்துடனும் சமயச் சார்பற்ற இதர  ஆறு  இளைஞர்  அமைப்புகளுடனும் …

எம்எச்370: தேடும்பணியில் புதிய கட்டம்

காணாமல்போன  மலேசிய  விமானத்தைத்  தேடும்பணி  ஒரு  புதிய  கட்டத்தை  அடைந்திருப்பதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. கடலடியில்  தேடும்பணிக்கு  முக்கியத்துவம்  கொடுக்கப்படும்  என்று  கூறிய  ஆஸ்திரேலியாவில்  உள்ள  ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி), மற்றவகை  தொழில்நுட்பங்கள்  பயன்படுத்தப்படும்வரை,  சிறுரக  நீர்மூழ்கிக் கலமான  புளுபின் 21 கடலடித்  தேடலைத்  தொடரும்  என்று  குறிப்பிட்டது. “பிங்கர் ஒலிகள் …

மகாதிர்: சீனர்கள் பணக்காரர்களாகவும் இந்தியர்கள் வழக்குரைஞர்களாகவும் உள்ளனர்

அமெரிக்க  அதிபர்  பராக்  ஒபாமாவின்  கூற்றை  மறுத்த  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  மலேசியாவில்  சீனர்களும்  இந்தியர்களும்  செல்வச்  செழிப்புடன்  வாழ்வதாகக்  கூறினார். “மலேசியாவில், எங்களின்  கொள்கைகள்  எப்படி  இருப்பினும்,  எங்காவது  சீன  ஏழைகளைப்  பார்க்கிறீர்களா? இந்தியர்கள்  மருத்துவர்களாக, வழக்குரைஞர்களாக  இருக்கிறார்கள்”,  என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். முஸ்லிம்-அல்லாதாருக்குச்  சமவாய்ப்புகள்  கொடுக்கப்படவில்லை …