பிள்ளை பராமரிப்பு விவகாரத்திலிருந்து நழுவுகிறது அரசாங்கம்

குழந்தை  பராமரிப்பு  உள்பட, வெவ்வேறு  சமயத்தவர்  சம்பந்தப்பட்ட  திருமணப்  பிரச்னைகள்  மாநில  அளவில்  தீர்த்துக்கொள்ளப்பட  வேண்டியவை என்கிறார்  பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோம்.  ஏனென்றால், ஷரியா  நீதிமன்றமும்  இஸ்லாமிய  விவகாரங்களும்  மாநில  அரசுகளின்  அதிகாரத்துக்கு  உட்பட்டவை. “அவற்றைக்  கூட்டரசு  அரசாங்கத்திடம்  கொண்டு  வராதீர்கள். மாநில  அரசுகளுக்கே  திரும்பிச் …

பாஹ்மிக்கும் நண்பர்களுக்கும் ஆதரவாக மாணவர்கள் யுஎம்-மை ஆக்கிரமிப்பார்கள்

வெள்ளிக்கிழமை  மலாயாப்  பல்கலைக்கழக (யுஎம்) மாணவர்கள் அப்பல்கலைக்கழகத்தை  ‘ஆக்கிரமித்துக்  கொள்வர்’. கடந்த  வாரம் பல்கலைக்கழக  வளாகத்தில்  பேரணியில்  கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள்  எண்மருக்கு  எதிராக எடுக்கப்படும்  ஒழுங்கு  நடவடிக்கைக்  கண்டிக்கும்  வகையில்  அவர்கள்  அந்நடவடிக்கையை  மேற்கொள்வார்கள். மாணவர்  ஒற்றுமையைக்  காண்பிக்க, அவர்கள்   காலை மணி  9--இலிருந்து  மாலை  மணி…

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்: நீதிமன்றம் தீர்ப்பு

எம்பிகள்  நாடாளுமன்றத்திலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்டிருக்கும்  வேளையில்  அவர்களுக்கு  சம்பளமும் மற்ற  ஊதியங்களும்  வழங்கப்பட   வேண்டும்  என்ற  தீர்ப்பை  கூட்டரசு  நீதிமன்றம் இன்று  நிலைநிறுத்தியது. 2009-இல்  ஒராண்டுக்  காலம்  இடைநீக்கம்  செய்யப்பட்டிருந்தபோது  தமக்குச்  சம்பளம் கொடுக்கப்படாமல்  நிறுத்தி  வைக்கப்பட்டதை  அடுத்து  பூச்சோங்  எம்பி  கோபிந்த்  சிங்  டியோ  சம்பளம்  கொடுக்கப்பட …

எஸ்பிஎம் வினாத்தாளில் இனச் சர்ச்சையைத் தூண்டும் தலைப்புகளைக் கண்டு எம்பி…

Info Didik  வெளியிட்டிருக்கும்  எஸ்பிஎம்  மேற்கோள்  நூல்  ஒன்றில்  பகாசா  மலேசியாவில்  கட்டுரை  எழுதும் பகுதியில்  “சீனர்கள்  மலாய்க்காரர்களைக்  கொல்ல  விரும்புகிறார்கள்”  என்ற  தலைப்பில்  கட்டுரை  எழுதுமாறு  மாணவர்கள்  கேட்டுகொள்ளப்பட்டிருந்து  கண்டு சிபு டிஏபி  எம்பி  ஒஸ்கார்  லிங் அதிர்ச்சி  அடைந்தார். அதுபோல் பல  தலைப்புகள். அது  முந்திய  ஆண்டுகளில்  வெளிவந்த …

நீதிமன்றத்துக்கு வெளியில் ‘அன்வாரைக் கைது செய்’, ‘வாழ்க சைபுல்’ முழக்கங்கள்

இன்று  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கு  விசாரணை  முடிந்த  பின்னரும்  சைபுல்  ஆதரவாளர்கள் சுமார்  100 பேர்  கலைந்து செல்லாமல்  நீதிமன்றத்துக்கு  வெளியிலேயே  சுற்றிக்  கொண்டிருந்தனர். கைகளில் அறிவிப்புப்  பலகைகளை  ஏந்தி  இருந்த  அவர்கள் "Tangkap Anwar"(அன்வாரைக்  கைது  செய்), "Hidup Saiful” (சைபுல்  வாழ்க)…

பைபிள் விவகாரத்தில் சுல்தானின் ஒப்புதலை நாடுகிறார் எம்பி

  சிலாங்கூர் பைபிள் விவகாரத்தில் மாநில அரசு சுல்தானின் ஒப்புதலை நாடுகிறது. அதன் பின்னர் அதற்கு ஒரு தீவு காணப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி இன்று கூறினார். பறிமுதல் செய்அயப்பட்ட பைபிள்கள் சம்பந்தமாக ஜாயிஸ் மற்றும் மைஸ்சுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. நல்ல விளைவுகளைக்…

ரிம1 பில்லியன் இழப்பீடு நெடுஞ்சாலை பராமரிப்பாளர்களுக்கு

கூட்டரசு  அரசாங்கம்,,  2008-இலிருந்து 2013-வரை சாலைக்  கட்டணத்தைக்  கூட்டாமல்  இருப்பதற்காக   நெடுஞ்சாலை  பராமரிப்பாளர்களுக்கு  ரிம1 பில்லியன்  இழப்பீடு  கொடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் ங்கா  கொர்  மிங்-குக்கு  வழங்கப்பட்ட  எழுத்து  வடிவிலான  பதிலில்  பொதுப்பணி  அமைச்சு  இதனைத்  தெரிவித்தது. 2014ஆம்  ஆண்டுக்கு  மேலும்  ரிம400 மில்லியன்  அவற்றுக்குக்  கொடுக்க  வேண்டியிருக்கும். 15…

தேர்தல் தொகுதி வரைபடங்கள் பொதுமக்களுக்கு விற்கப்படாது

தேர்தல்  ஆணையம் (இசி) புதிய  தேர்தல்  தொகுதிகளை  முடிவு செய்ததும் அந்தந்த  தொகுதிகளில்   அவற்றைக்  காட்சிக்கு  வைக்கும்.  அவற்றைப்  பார்த்து  பொதுமக்கள்  தங்கள்  தொகுதிகள்  பற்றித்  தெரிந்துகொள்ளலாம். தொகுதிகள்  பற்றிக்  கருத்துத்  தெரிவிக்க  விரும்வோர் அப்போது  அவற்றைப்  படம்  பிடித்து  வைத்துக்கொள்ள  வேண்டும். ஏனென்றால்,  புதிய  தொகுதிகள்  அங்கீகரிக்கப்பட்டு …

சிலாங்கூரில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: எம்பி திட்டவட்டம்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின் அலி  அம்மாநிலம்  நீதியையும்  மிதவாதத்தையும்  நிலைநிறுத்த  பாடுபடும்  என உறுதி  கூறியுள்ளார். பெட்டாலிங்  ஜெயாவில்  முஸ்லிம்  ஜனநாயகவாதிகள் கருத்தரங்கில்  பேசிய  அவர்,  “தீவிரவாதிகளுக்கும்” “வெறியர்களுக்கும்”  சிலாங்கூர் மாநிலத்தில்  இடமில்லை  என்றார். “அந்த  வகையில்,  அப்படிப்பட்ட  உணர்வுகளுக்கு  சிலாங்கூர்  மாநில  நிர்வாகத்தில்  இடமிருக்காது  என்பதையும் …

அஸ்மின், ஃபாட்வாவை எதிர்ப்பது எங்களது உரிமை

  சிலாங்கூர் இஸ்லாமிய விவகார மன்றம் சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் (எஸ்ஐஎஸ்) என்ற அமைப்புக்கு எதிராக விடுத்திருந்த ஃபாட்வாவை எதிர்ப்பது தங்களுடைய உரிமை என்று அந்த அமைப்பு கூறுகிறது. சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய எஸ்ஐஎஸின் திட்ட நிருவாகி சூரி கெம்பெ தங்களுடைய அமைப்பின்…

பாஸ்: ரசாலி இருக்கையில் பக்கத்தான் எதற்கு?

பிஎன்/அம்னோ-வில்  முன்னாள்  நிதி  அமைச்சர்  தெங்கு  ரசாலி  போன்ற ஒருவர் இருக்கும்போது  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  பக்கத்தான்  ரக்யாட்  போன்ற  அரசியல்  எதிரிகள்  தேவையில்லை. தெங்கு  ரசாலி,  கடந்த  வாரம்  நஜிப்  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்த  2015  பட்ஜெட்டைக்  குறைகூறியிருப்பதை  அடிப்படையாக  வைத்து  பாஸ்  ஆய்வு  மைய …

பாஹ்மிக்கு ஆதரவு தெரிவிக்க யுஎம் மாணவர்கள் ஒன்றுதிரள வேண்டும்

எதிரணித்  தலைவர் அன்வார்   இப்ராகிமின்  சொற்பொழிவு  நிகழ்வில்  கலந்து கொண்டதற்காக  மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்)த்தின்  ஒழுங்கு  நடவடிக்கையை  எதிர்நோக்கும்  மாணவத்  தலைவர்  பாஹ்மி  சைனலுக்கு  ஆதரவாக யுஎம்  மாணவர்கள்  ஒன்றுதிரள  வேண்டும்  என  மாணவர்  அமைப்பு  ஒன்று கேட்டுக்கொண்டிருக்கிறது. நவம்பர் 7-இல், பாஹ்மி  விசாரிக்கப்படும்போது  மாணவர்கள்  அணி திரண்டு  பாஹ்மிக்கு …

திண்டாக் தொகுதி வரைபடங்களை இணையத்தில் வெளியிடும்

திண்டாக் மலேசியா விரைவில் மலேசிய  தேர்தல்  தொகுதிகளின்  வரைபடங்களை இணையத்தில்  வெளியிடும். ஒரு  என்ஜிஓ-வின்  தன்னார்வர்கள்  கைப்பணத்தைச்  செலவிட்டு  வரைபடங்களை  உருவாக்கி  இணையத்தில்  போட  முடியுமானால் பல  மில்லியன்  ரிங்கிட்  வ்சதியுள்ள தேர்தல்  ஆணையம்(இசி)  அவ்வாறு  செய்ய  தடை  ஏதுமில்லை  என்பதைக்  காண்பிக்கவே  அவ்வாறு  செயவதாக  திண்டாக்  மலேசியா …

பிபிஎஸ் தொடர்பில் ஏஜி கட்டளைக்காகக் காத்திருக்கிறது போலீஸ்

தன்னார்வக் காவல்  படையினர்(பிபிஎஸ்) 157  பேர்மீது  அடுத்த  கட்ட  நடவடிக்கையைத்  தொடர  சட்டத்துறைத்  தலைவர் (ஏஜி)  அலுவலகத்தின்  கட்டளைக்காகக்  காத்திருப்பதாக  பினாங்கு  போலீஸ்  தலைவர்  அப்துல்  ரகிம் ஹனாபி  கூறினார். ஆகஸ்ட்  31-இல்,  கைதுசெய்யப்பட்ட அவர்கள்  மீதான  விசாரணை  முடிந்து  விசாரணை  அறிக்கை  ஏஜி-இடம்  கொடுக்கப்பட்டிருப்பதாக  அவர்  சொன்னார்.…

பிஎஸ்எம்: டிபிபிஏ வந்தால் தொழிலாளர் உரிமை மேலும் பறிபோகலாம்

புத்ரா ஜெயா,  1959ஆம்  ஆண்டு தொழிற்சங்க  சட்டம்    பசிபிக் வட்டார பங்காளித்துவ  உடன்பாட்டுக்கு (டிபிபிஏ)  இசைவாக இருக்க  வேண்டும்  என்பதற்காகவே  அதில்  திருத்தங்கள்  கொண்டு   வர  முனைந்துள்ளது  என்று  பார்டி  சோசலிஸ்  மலேசியா(பிஎஸ்எம்)  எச்சரித்துள்ளது. ஏற்கனவே,  1959 தொழிற்சங்கச்  சட்டம் தொழிலாளர்களின்  அடிப்படை  உரிமைகளான  தொழிற்சங்கம்  அமைத்தல்,  கூட்டாக …

கிட் சியாங்: ஒன்றுக்கும் உதவாத பிஎன் உச்சமன்ற கூட்டம்

  நாட்டில் நிகழ்கின்ற சில முக்கியமான விவகாரங்கள் பற்றி ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தத் தவறிய பாரிசான் பங்காளித்துவ கட்சிகளை இன்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சாடினார். "நேற்றிரவு, பிஎன் உச்சமன்றம் அதன் அபூர்வமான கூட்டங்களில் ஒன்றை நடத்தியது.…

பெர்சே: யுஎம் தாக்குதளுக்கு எதிராக சுதந்திரம் தற்காக்கப்பட வேண்டும்

  மலாயா பல்கலைக்கழகம் மாணவர்களின் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தியது பற்றி குறிப்பிட்ட அரசு சார்பற்ற அமைப்பான பெர்சே மாணவர்களின் சுதந்தரத்தைத் தற்காக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டது. கடந்த திங்கள்கிழமை மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் உரையாற்றுவதற்காக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதனை…

“அல்லா” புத்தகங்கள் விடுவிக்கப்பட்டன

  கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட "அல்லா" என்ற சொல்லைக் கொண்ட பொருள்களை விடுவிக்குமாறு உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிட் உத்தரவிட்டுள்ளார். அப்பொருள்கள் கைப்பற்றப்பட்டதற்கும் தமது அமைச்சுக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய அவர், அது கஸ்டம்ஸ் இலாகாவின் செயல் என்றும் அந்த இலாக நிதி அமைச்சின்…

யுஎம் கலகக்கார மாணவர் ஃபாமிக்கு எதிராக ஒன்பது குற்றச்சாட்டுகள்

  எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அதில் பங்கேற்றதற்காக பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவர் ஃபாமி மீது மலாயா பல்கலைக்கழகம் ஒன்பது குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. இன்றையத் தேதி இடப்பட்டுள்ள கடிதத்தில் நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒரு ஒழுங்கு…

எப்பவும் அன்வார்தானா? ஆஸி முன்னாள் நீதிபதி கேட்கிறார்

எலிசபெத் இவாட் ஆஸ்திரேலியாவின்    கூட்டரசு  நீதிமன்றத்தின்  முதலாவது  பெண்  நீதிபதியாகப்  பணியாற்றி  ஓய்வு  பெற்றவர். 81-வயதான  அந்த  அம்மையார்  அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி வழக்கைப்  பார்ப்பதற்காக  மலேசியா  வந்துள்ளார். அவருக்கு  ஒன்று  புரியவில்லை. இந்தக்  குதப்புணர்ச்சி  சட்டம்  எப்போதுமே  எதிரணித்  தலைவரைக்  குறி  வைத்தே  பாய்கிறதே அது ஏன் …

ஜைட்: மலேசியா ஐநாவிலிருந்து விலகி ஐஎஸ்-ஸில் சேர்வதே மேல்

அரசாங்கத்தால்  தாராண்மைவாதத்தை  ஏற்க  முடியாவிட்டால்  அது  ஐநாவிலிருது  விலகி  இஸ்லாமிய  அரசு  (ஐஎஸ்) என்னும்  கிளர்ச்சி  இயக்கத்துடன்  சேர்வதே  மேல்  என  ஜைட்  இப்ராகிம்  கூறுகிறார். “ஐநா-விலும்  பாதுகாப்பு  மன்றத்திலும்  உறுப்பு  நாடாக  இருந்தால்  தாராளமயக்  கொள்கை  கொண்ட  உலகை  நீங்கள்  ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள்  என்றுதான்  அர்த்தமாகும். “மனித உரிமை,…

மலேசிய பிணையாளியைக் கொல்லப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல்

பிலிப்பின்சில்  மலேசியர்  ஒருவரைக் கடத்திவைத்துள்ள  தீவிரவாதிகள், நவம்பருக்குள்  பிணைப்பணம்  கொடுக்காவிட்டால்  அவரைக்  கொல்லப்போவதாக  மிரட்டியுள்ளனர். தம்  கணவர்  சான்  சாய்  சியும்  உடல்நலம்  குன்றியிருப்பதாக  முஸ்லிம்  தீவிரவாதிகள்  என்று  சந்தேகிக்கப்படும்  கடத்தல்காரர்கள்  தெரிவித்ததாக  சின்  பெக்  இங்குயென்  சாபாவில்  செய்தியாளர்களிடம்  கூறினார். சான்,  ஜூன்  மாதம் சாபா, குனாக் …

மகாதிர்: நான் பிரதமர் ஆக மாட்டேன்; நஜிப்புக்கு கவலை வேண்டாம்

டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  தாம்  மீண்டும்  நாட்டை  வழிநடத்த  வந்துவிடலாம்  என்று   பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்  கவலைப்பட வேண்டியதேயில்லை  என்கிறார். இன்று  காலை  புத்ரா  ஜெயாவில், பன்னாட்டு  இஸ்லாமிய  கருத்தரங்கு  ஒன்றில்  அவர்  இவ்வாறு  கூறினார். அதில்  பார்வையாளராகக்  கலந்துகொண்டிருந்த  வணிகர் ஒருவர்,  மகாதிர்  மட்டும்  ஆட்சியில் …