7 வயதில் அறுவைசிகிச்சை செய்த சிறுவன்! உங்களால் நம்பமுடிகிறதா?

தன்னுடைய ஏழு வயதில் தீக்காயம் ஏற்பட்ட பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த சிறுவன் தற்போது புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரித் ஜஸ்வால், இவர் தான் இன்று உலகம் போற்றும் ஜீனியஸாக எல்லோராலும் இன்று புகழப்படுகிறார். 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம்…

ஒரு குடம் தண்ணீருக்காக பல திருமணமா? அநியாயத்தின் உச்சகட்டம்

இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை என்பது என்றுமே தீர்க்க முடியாத ஒரு பிரச்சனையாக உள்ளது. அதுவும் கோடைகாலங்களில் அருகில் உள்ள குளம், குட்டைகள் வற்றவிட்டால் கிராமங்களில் வசிக்கும் மக்களின் நிலமை மிகவும் பரிதாபமாக உள்ளது. தண்ணீரை சேகரிப்பதற்காக இவர்கள் பல மைல் தூரம் நடந்துசெல்ல வேண்டியுள்ளது. அப்படி எடுத்து வரும்…

வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள்: மத்திய அமைச்சரின் அலட்சிய கருத்து

தங்களின் சொந்த பணத்தையே வங்கிகளில் பல மணி நேரம் காத்திருந்து பெற்றுக்கொண்டு செல்லும் மக்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கிண்டலடித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களை தியாகம் செய்துவிட்டு ஏடிஎம்களில் தவம் கிடக்கிறார்கள்.…

ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு?” – வழக்கறிஞர் எஸ்.துரைசாமி எழுப்பும் கேள்விகள்

அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கவர்னர் வித்யசாகர் ராவ் சென்று வந்தது, ஜெயலலிதாவிடம் இருந்த துறைகளை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கியது ஆகியவை குறித்து கவர்னரின் துணைச் செயலாளரும் கவர்னர் மாளிகை தகவல் தொடர்பு அதிகாரியுமான மோகனிடம் ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்’ கீழ் கடந்த அக்டோபர் 24-ம் தேதியிட்டு,…

நான் சாப்பிடும் உணவில் விஷ மாத்திரை கலக்கப்பட்டது! நளினியின் சிறை…

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும் என்ற தலைப்பில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் நான்காவது பகுதி இது. நான் சொன்னதை மிக நிதானமாக, அதே கூர்மையான பார்வையோடு கவனித்தபடியே இருந்தார் பிரியங்கா. அவசியம் என்றால் மட்டுமே கேள்வி கேட்டார். அப்போதுதான்…

திருப்பதி: செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 3 தமிழக தொழிலாளர்கள் கைது!

திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு கும்பல் ஒன்று செம்மரக்கட்டைகளைக் கடத்துவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கடத்தல் கும்பலைச் சரணடையும்படி எச்சரித்த போலீசார், வானத்தை நோக்கிச் சுட்டனர். ஆனால், போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய…

திருமணமான பெண்கள் 500 கிராம் தங்கம், ஆண்கள் 100 கிராம்…

திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம் என இந்திய அரசின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதிலிருந்தே மத்திய அரசு பல அதிரடி அறிவிப்புகளை…

மனைவியின் சடலத்துடன் போராடிய கணவனின் அவலநிலை: காரணம் என்ன?

உத்திரபிரதேச மாநிலத்தில் ரூபாய் நோட்டு தடையால் தினக்கூலி ஒருவர் தனது மனைவியின் இறுதிச்சடங்கை நடத்துவதற்கு பணம் இல்லாமல் 2 நாட்களாக வங்கி வாசலில் காத்திருந்த அவலநிலை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத என்ற அறிவிப்பால், வங்கி கணக்கில் பணம் இருந்தாலும் அதை…

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகளுக்கு ரூ.2,000 கோடி

புதுடில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் அகதிகளாக உள்ளவர்களுக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது; இந்தக்…

திருச்சி அருகே படுபயங்கர தீவிபத்து! 10 பேர் உடல் சிதறி…

திருச்சியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் படுபயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருக்கெயுள்ள முருகப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்ட தொழிற்சாலை இயங்கி வருகிறது. சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் மாசுபாடு,…

புயல் வலுவடைந்தது! இன்று முதலே கனமழைக்கு வாய்ப்பு- மக்களுக்கு ஓர்…

சென்னையை நோக்கி வரும் புயல் டிசம்பர் 2ம் திகதி கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு…

பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நாம்…

நவம்பர் 8 ஆம் தேதி முதல் பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து மக்கள் பல சிரமங்களை சந்தித்துவருகின்றனர். எனவே நாம் இதில் இருந்து என்ன பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்குப் பார்ப்போம். பணத்தை முதலீடு செய்யுங்கள்…

டைம்ஸ் பத்திரிக்கையின் இந்த ஆண்டின் நாயகன் இவரா?

அமெரிக்க பத்திரிக்கையான ‘டைம்ஸ்’ நடத்தும் ‘இந்த ஆண்டின் நாயகன்’( Person of the Year) என்ற பட்டத்திற்கான இணையதள வாக்கெடுப்பில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்பை விட முன்னிலையில் உள்ளார். அமெரிக்க பத்திரிக்கையான ‘டைம்ஸ்’ 1927-ம் ஆண்டு முதல் ஆண்டின் நாயகன் என்ற பட்டத்தை…

குடும்பத்தினரின் பசியை போக்க குடும்பக் கட்டுப்பாடு செய்த நபர்

உத்திரபிரதேச மாநிலத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் குடும்ப பசியை போக்குவதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டார். புரண் சர்மா(45) என்பவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அன்றாடம் கூலித்தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில், 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த…

தமிழகத்தில் சுமார் 8 லட்சம் பழங்குடியினர் வாழ்கிறார்கள்.. நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: தமிழகத்தில் 7 லட்சத்து 94 ஆயிரம் பழங்குடியினர் வசித்து வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திருவள்ளூர் தொகுதி அதிமுக உறுப்பினரும், மக்களவை அதிமுக குழுத் தலைவருமான டாக்டர் பி.வேணுகோபால், " தற்போது மொத்த பழங்குடியின மக்கள் தொகை விவரம் என்ன?" என்று…

வறுமையின் உச்சக்கட்டம்… கைக்குழந்தையுடன் பெண் செய்யும் கொலை நடுங்க வைக்கும்…

பணத்தினை தண்ணீராக செலவழிக்கும் பணக்காரர்கள் ஒருபக்கம்... ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் வாடும் மக்களும் மற்றொரு பக்கத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். பணம் படைத்தவர்கள் தனது குழந்தைகளை மிகவும் ஆடம்பரமாகவே வளர்த்து வருகின்றனர். ஆனால் பணம் இல்லாமல் ஏழை என்ற வார்த்தையால் ஒதுங்கியிருக்கும் சில மனிதர்கள் படும்…

ரூபாய் நோட்டுகள் விடயத்தில் ரிசர்வ் வங்கியின் அடுத்த அதிரடி மாற்றம்

இந்தியாவில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் எடுப்பதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. கடந்த 8-ம் திகதியன்று ரு.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன் பின்னர் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுப்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை…

மோடியால் தூக்கத்தை தொலைத்த கறுப்பு பண முதலைகள், ஐடி அதிகாரிகள்

டெல்லி: மோடியின் அதிரடி நடவடிக்கையால் கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் மட்டும் அல்ல வருமான வரித்துறை அதிகாரிகளும் தூக்கத்தை இழந்துள்ளனர். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார்.…

பஞ்சாப் சிறை உடைப்பு.. தப்பியோடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர்…

டெல்லி: பஞ்சாப்பில் நேற்று நடந்த சிறை உடைப்பு சம்பவத்தில் தப்பியோடிய காலிஸ்தான் விடுதலை முன்னணி தலைவர் ஹரிமிந்தர் மின்டூ டெல்லியில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள நாபா சிறைச்சாலையில் ஆபத்தான தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்றுகாலை…

வங்கிகளுக்கு லீவ்…. ஏடிஎம்களில் பணமில்லை… மக்கள் தவிப்பு: மதுரையில் ஏடிஎம்கள்…

மதுரை: நாட்டில் புழக்கத்தில் இருந்த 500,1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகிவிட்டது. சில்லறை தட்டுப்பாட்டால் தினக்கூலிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பளம் பெறும் ஊழியர்கள், அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் செயல்பாடு மற்றும் தினந்தோறும் வெளியாகும் அறிவிப்புகள் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.…

எல்லையில் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியது – மனோகர் பாரிக்கர்

பானாஜி: எல்லையில் தாக்குதலை நிறுத்தக் கோரி பாகிஸ்தான், இந்தியாவிடம் கெஞ்சியதாக பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதி அருகே உள்ள மாச்சல் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவுடன் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர்…

பிரபாகரன் பிறந்தநாள்! சென்னையில், கோவையில் கொண்டாட்டம்- சுவரொட்டிகளை கிழித்த பொலிசார்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 62வது பிறந்த நாளை, உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் இன்று கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாம் தமிழர் கட்சியின் குருதி பாசறை சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில்…

ரூபாய் அறிவிப்பை எதிர்த்து தமிழகத்தில் நாளை மறுநாள் கடையடைப்பு.. 50…

சென்னை: பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நாளை மறுநாள் கடையடைப்புக்கு அழைப்புவிடுத்துள்ளது. த.வெள்ளையன் தலைமையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டம் புரசைவாக்கத்தில் நடைபெற்றது பொதுச் செயலாளர் கே.தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது…