அமெரிக்க பத்திரிகையாளரின் உடலை விற்கிறோம்: விலைபேசும் ஐ.எஸ்.ஐ.எஸ்

சிரியாவில் தலைத் துண்டித்து கொல்லப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளரின் உடலை விற்க ஐ.எஸ்.ஐ.எஸ் பேரம் பேசி வருகின்றனர். ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தாங்கள் பிணைக்கைதியாய் பிடித்து வைத்திருந்த அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலேவை (James Foley) தலைத் துண்டித்து கொடூரமாக…

ரஷிய மேற்பார்வையில் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சு: சிரியா அதிபர் ஆர்வம்

ரஷியாவின் மேற்பார்வையில், அந்த நாட்டில் கிளர்ச்சியாளர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் சிரியா அதிபர் பஷர் அல்-அஸாத் ஆர்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிரியா அரசு செய்தி நிறுவனமான "சனா' தெரிவித்துள்ளதாவது: ரஷிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மிகயீல் போக்தனோவ், சிரியா அதிபர் அல்-அஸாதை வியாழக்கிழமை சந்தித்தார். அப்போது, சிரியா…

சீனர்களை மணந்த வியட்நாமிய பெண்கள் மாயம்

சீனாவின் வடபகுதியில், ஹெபேய் என்னும் மாகாணத்தில் சீனர்களை திருமணம் செய்த வியட்நாமிய பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை. சீனர்களை திருமணம் செய்த வியட்நாமிய பெண்கள் மாயம்   கிராமப்புறங்களில் உள்ள வறிய சீன ஆண்களை திருமணம் செய்த இந்தப் பெண்களை சீனப் போலிஸார் தற்போது தேடி வருகின்றனர். இந்த…

ஓரினச் சேர்க்கையாளருக்கு கல்லடி கொடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ்! கொடூர சம்பவம்

ஈராக்கில் ஓரினச் சேர்க்கையாள நபர் ஒருவரை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தூக்கி வீசி கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது. இந்நிலையில் ஈராக்கை சேர்ந்த ஓரினச் சேர்க்கையாள நபர்…

கைதிகளை நிர்வாணப்படுத்தி சித்ரவதை: அமெரிக்க உளவுத்துறையின் ரகசியங்கள் அம்பலம்

அமெரிக்க உளவுத்துறை சிஐஏ தீவிரவாத சந்தேக நபர்களை விசாரணையில் என்ற பெயரில் சித்ரவதை செய்திருப்பதாக யு.எஸ். செனட் புலனாய்வு குழு குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் விவகாரம் தொடர்பாக அல்கொய்தா இயக்கத்தினர் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்களை கைது செய்து கியூபாவின் குவாண்டனாமோ ரகசிய சிறையில் சிஐஏ அடைத்தது.…

பாலஸ்தீன அமைச்சரை அடித்துக் கொன்ற இராணுவம் (வீடியோ இணைப்பு)

பாலஸ்தீன அமைச்சர் ஒருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்துக்கு இடைப்பட்ட மேற்குக்கரை பகுதியில் உள்ள துர்முசியா என்ற கிராமத்தில் நடைபெற்றுவரும் இரு நாட்டவர்களுக்கும் இடையேயான போராட்டத்தை பார்வையிட பாலஸ்தீன அமைச்சர் ஜையாத் அபு (jayath abu) இன் இன்று அங்கு சென்றிருந்தார். அப்போது இஸ்ரேல்…

2014ம் ஆண்டு குழந்தைகளுக்கு கொடூரமான ஆண்டானது: ஐ.நா. சபை குழந்தைகள்…

2014ம் ஆண்டை குழந்தைகளுக்கு கொடூரமான  ஆண்டாக ஐ.நா. சபையின் குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் உலகம் முழுவதும் பல்வேறு வன்முறை சம்பவங்களால் 15 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 2014ம் ஆண்டை குழந்தைகளுக்கு எதிரான ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள…

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே அதிகரித்துக்கொண்டே போகும் இடைவெளி

ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே அதிகரித்துக்கொண்டே போகும் இடைவெளியைக் குறைக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக நாடுகள் கோரப்பட்டுள்ளன. ஆடம்பர உடையுடன் செல்லும் பெண்ணை பார்க்கும் ஏழை சீனர்   ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது அதிகமாக காணப்படுவதாக பொருளாதார ஒத்துழைப்பு…

விமானப் பயணம், ஐ போன்.. சீனப் பிச்சைக்காரர்களின் நிஜக் கதை…

விமானத்தில் பயணம், ஐ போன் 6 பிளஸ் என்ற விலை உயர்ந்து செல்போன் என மிக ஆடம்பர வாழ்க்கைய வாழ்ந்து வரும் சீனாவின் தொழில்முறைப் பிச்சைக்காரர்கள் குறித்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சோங்கிங் நகராட்சியில் இருக்கும் சில பிச்சைக்காரர்கள்…

மாலத்தீவில் பொது விடுமுறை நீடிப்பு

கடும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மாலத்தீவின் தலைநகர் மாலேயில் அரசு பொது விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மூலம் கொண்டுவரப்படும் நீர் பாட்டில்கள் மாலேயில் இயங்கிவந்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலை கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் வெகுவாக சேதமடைந்தது. விமானம் மூலமும் கப்பல் மூலமும் இந்தியா, இலங்கை…

அனகோண்டாவின் வயிற்றில் ஒரு மணி நேரம் உயிருடன் இருந்த வாலிபர்:…

வாஷிங்டன், டிச.8-  அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரொசோலி என்ற இளைஞர் இயற்கை ஆர்வலர், தயாரிப்பாளர் மற்றும் சாகசக்காரர் என்று பன்முக திறமை கொண்டவர். சமீபத்தில் இவர் சமூக வலைத்தளமான டுவிட்டரில், ‘அனகோண்டா உயிரோடு விழுங்கும் முதல் நபராக நான் இருப்பேன்' என்ற வீடியோவை பதிவேற்றம் செய்து பரபரப்பை உண்டாக்கினார்.…

நைஜீரியா சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்

நைஜீரியாவில் சிறையொன்றிலிருந்து இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பினர். வாரி நகரில் அமைந்துள்ள சிறையில் சனிக்கிழமை காலையில் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிலர் அங்கிருந்த காவலர்களை மிரட்டி சிறைக் கைதிகளை விடுவித்ததாக அச்சிறைச்சாலையின் துணைக் கண்காணிப்பாளர் இப்ராஹிம் கம்பாரி தெரிவித்தார். தப்பிய கைதிகளில் பத்து பேர் காவலர்களிடம் பின்னர் சிக்கினர் என்று…

மேலும் ஓர் அமெரிக்க கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதை விசாரிக்க பெருநடுவர்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், மேலும் ஒரு கருப்பின இளைஞர் காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பூர்வாங்க விசாரணை மேற்கொள்ள பெருநடுவர் குழு (கிராண்ட் ஜூரி) ஒன்றை அமைக்கவிருப்பதாக மாவட்ட அரசு வழக்குரைஞர் கூறியுள்ளார். நியூயார்க் நகரிலுள்ள புரூக்லின் பகுதியில், அகாய் கேர்லி (28) என்ற இளைஞர் காவலர் ஒருவர்…

பாகிஸ்தான் தாக்குதல்: அல்-காய்தா தலைவர் சாவு

அல்-காய்தா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகளுக்கான தலைவர் அட்னான் ஷுக்ரிஜுமா, பாகிஸ்தான் ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ராணுவம் சனிக்கிழமை கூறியது. சவூதியில் பிறந்த அவர், நியூயார்க் சுரங்க ரயிலில் குண்டு வெடிப்பு நிகழ்த்தத் திட்டமிட்டதாக அமெரிக்காவால் தேடப்பட்டு வந்தவர். இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ மக்கள் தொடர்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்…

சிறைக்கைதிகளின் உறுப்புக்களை வெட்டி எடுக்கும் சீனா! அதிர்ச்சித் தகவல்

மோசமான குற்றங்கள் புரிந்து மரண தண்டனை விதிக்கப்படும் கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றிய பின்னர், அவர்களின் உடல் உறுப்புகளை சீனா அகற்றி வருகிறது. உலகிலேயே சீனாவில் மட்டும்தான் இந்த வழக்கம் உள்ளது. இவ்வாறு அகற்றப்படும் உடல் உறுப்புகள், மாற்று அறுவை சிகிச்சை செய்கிறவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இப்படி மரண தண்டனை…

மாலைத்தீவில் குடிநீர் இல்லை; அவசர நிலை பிரகடனம்

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தீவுத் தேசமான மாலத் தீவுகளின் தலைநகரில் பாதுகாப்பான குடிநீர் தீர்ந்துபோயுள்ளதையடுத்து அந்நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வேகமாகக் குறைந்துவரும் புட்டிகளில் அடைக்கப்பட்ட குடிநீரை பெற்றுக் கொள்வதில் மக்களிடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. கடைகள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. தலைநகர் மாலேயிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில்…

“மனிதர்களுக்கு உள்ள சட்டரீதியான உரிமைகள் சிம்பன்ஸிகளுக்குக் கிடையாது”

40 வயதாவதாக நம்பப்படும் டாமி என்ற இந்த சிம்பன்ஸி 10 ஆண்டுகளுக்கு முன்பாக பேட்ரிக்கிடம் வந்து சேர்ந்தது.   மனிதர்களுக்கு இருக்கும் அதே உரிமை சிம்பன்ஸி குரங்குகளுக்குக் கிடையாது என்றும் உரிமையாளரிடமிருந்து அதனை விடுவிக்கச் சொல்ல முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டரீதியான கடமைகள் கிடையாது…

நாடு திரும்பணும்: ஐ.எஸ்.ஐ.எஸ் ஜிகாதிகளின் கண்ணீர் கடிதங்கள்

சிரியா மற்றும் ஈராக்கிற்கு போரில் பங்கேற்க சென்ற பிரெஞ்ச் ஜிகாதிகள், அங்கே இருக்கும் அதிக குளிர் மற்றும் வீட்டில் இருப்பது போல சுகமான வசதிகள் இல்லாததால், தாய் நாட்டுக்கு திரும்பிவர விருப்பம் தெரிவித்துள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் போர் முனையில் இருக்கும் பிரெஞ்சு ஜிகாதிகள் சிலர் தங்கள் குடும்பங்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும்…

மக்களை கொன்று குவிக்கும் போகோ ஹராம் தீவிரவாதிகள்: 150 பேர்…

நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் தனி நாடு கோரி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் மக்களை கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பகுதிகளில் அமைந்த டமாடுரு நகரில் கடந்த 1ம் திகதி போகோ ஹரம்…

உக்ரைன் – கிளர்ச்சியாளர்களிடையே புதிய ஒப்பந்தம்

உக்ரைனின் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள லுகான்ஸ்க் மாகாணத்தில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய ஒப்பந்தம், அந்த நாட்டு அரசுக்கும்,  கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐரோப்பிய பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓ.எஸ்.சி.இ.) திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில், அரசு தரப்பினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அறிவிக்கப்படாத சமரச ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.…

வட கொரியத் தலைவர் பெயரை மற்றவர்கள் வைக்கக்கூடாது – அரச…

என் பெயர் எனக்கு மட்டும்தான் -- வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் வட கொரியாவில், நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னின் பெயரை வைத்துக் கொண்டுள்ள மற்றவர்கள் தங்களின் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டே, தற்போதையத் தலைவரின் தந்தை…

தற்கொலைப் படையாக மாறும் பறவைகள்! அச்சுறுத்தும் தலீபான்கள்

தலீபான் தீவிரவாதிகள் பறவைகளை தற்கொலைப் படையாக பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் பார்யப் (Faryab) பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பறவை ஒன்று பறந்து சென்றுள்ளது. அந்த பறவையை இராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தியபோது, அது பலத்த படுகாயங்களுடன் கீழே விழுந்தது. இதனையடுத்து அதை…

ஐ.எஸ் தலைவரின் மனைவி- மகன் கைது: சுற்றிவளைத்த இராணுவம்

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவரின் மனைவி மற்றும் மகனை லெபனான் நாட்டு இராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்பாக்தாதி. இவர் சமீபத்தில் அமெரிக்க நடத்திய வான்வழி தாக்குதலில் இறந்ததாக…