பாஸ்டன் குற்றவாளிக்கு மரண தண்டனை?

பாஸ்டன் மாரத்தான் போட்டியின் போது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்திய குற்றவாளி, மருத்துவமனையில் நேற்று கைது செய்யப்பட்டான். டிசோஹர் சர்னேவ் என்ற அந்த நபர், பயங்கர ஆயுதங்களை பயன்படுத்தி பெரிய அளவில் தாக்குதல் நடத்தி பலரையும் கொலை செய்த குற்றத்திற்காக அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றவாளி…

அணு ஆயுதத் தடையை மீறிய வடகொரியா, ஈரான்: ஐ.நா கவலை

ஐ.நா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினர்களான P5 நாடுகள், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தின் மறு ஆய்வை 2015ம் ஆண்டில் நடத்துவதற்காக ஜெனீவாவில் இரண்டு நாள் ஆயத்தக் கூட்டம் நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், அணு ஆயுதத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச அணுசக்தி மையம்(IAEA)…

நைஜீரியா: மோதல்களில் சிக்கி 185 பேர் பலி

நைஜீரியாவின் வடக்கில் இஸ்லாமியவாத ஆயுததாரிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நடந்த உக்கிர சண்டையில் குறைந்தபட்சம் 185 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சாட் நாட்டுடனான எல்லைக்கு அருகில் உள்ள பாகா என்ற ஊரில் ராக்கெட் எறிகுண்டு வீச்சுகள் மற்றும் பெருமளவான துப்பாக்கிச் சூட்டுடன் கடந்த வெள்ளியன்று கடும்…

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான முஸாரப்புக்கு வீட்டுக்காவல்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஜெனரல் முஸாரப் அவர்கள் இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் அவரது சொந்தவீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் 6 வருடங்களுக்கு முன்னதாக நீதிபதிகளை சட்டத்துக்கு விரோதமாக தடுத்து வைத்தது குறித்து நீதிமன்ற வழக்கு ஒன்றில் அவர் முன்னதாக ஆஜராகியிருந்தார். அப்போது அந்த நீதிபதிகள் மீது…

“பீரின் சுவையே ஒருவரை குடிகாரராக்கும்”

ஒருவருக்கு பிடித்தமான பீரின் சுவை கூட அவரது மூளையை தூண்டி, மேலும் அவரை குடிக்கத்தூண்டுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். பீரின் சுவையே அதை குடிப்பவரின் மூளையிலிருந்து டோபோமைன் என்கிற வேதிநொதிமத்தை உருவாக்கி அவர்கள் மேலும் அதிகமாக குடிக்கவேண்டும் என்கிற உணர்வை உருவாக்குவதாக இந்த ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதாவது பீரில்…

இரானில் கடும் நிலநடுக்கம்- 40 பேர் பலி?, டில்லியில் கட்டிடங்கள்…

இரானின் தென்கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானுடனான எல்லைக்கு அருகே 7.8 புள்ளிகள் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது. இலகுவில் செல்ல முடியாத, சனநெருக்கடி மிக்க சிஸ்டான் பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. பலியாகியிருப்போரின் எண்ணிக்கை குறித்து குழப்பம் காணப்படுகிறது. எவரும் இதில் உயிரிழக்கவில்லை என்று மாகாண…

அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு : 3 பேர் பலி:141 காயம்

பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது.போட்டி முடியும் நேரத்தில் ‌வெடிகுண்டு வெடித்தது.இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்‌ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது. இச்சம்பவத்தில்…

ரஷிய அதிபர் புதினை பிளாக்லிஸ்ட்டில் போட்ட பின்லாந்து

மாஸ்கோ: ரஷியாவின் அதிபர் விளாடிமீர் புதினை கிரிமினல் நடவடிக்கைகளில் தொடர்புடையவராக குறிப்பிட்டி பிளாக்லிஸ்ட்டில் பட்டியலிட்டதற்காக பின்லாந்து மன்னிப்பு கோரியுள்ளது. பின்லாந்து நாட்டுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டிருக்கும் பிளாக்லிஸ்ட்டில் ரஷிய அதிபர் புதினின் பெயர்ம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் உருவானது. இதைத் தவிர்க்கும்…

நண்பர்கள் கற்பழித்து, இணையதளத்தில் படம் வெளியிட்டதால் சிறுமி தற்கொலை

அமெரிக்காவில் விடுமுறை நாள் விருந்தில் நண்பர்கள் கற்பழித்து, இணையதளத்தில் படம் வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாள். டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம், ஓடும் பஸ்சில் ஒரே பெண்ணை 6 காமுகர்கள் கற்பழித்து சிதைத்து, அந்த பெண் உயிரிழந்த சம்பவத்தின் வடு இன்னும் நம்…

சிலி நாட்டில் இலவசக் கல்வி கோரி போராட்டம்

இலவசக் கல்வி கோரி சிலி நாட்டின் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் முக்கிய நகரங்களில் தெருக்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலையை மூடி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரமடக்கும் பொலிஸாருடன் மோதி, வீதிப்போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளை அடித்து நொருக்கியதால், தலைநகர் சந்தியாகோவில் நடந்த ஆர்ப்பாட்டம் கலவரத்தில்…

பாதுகாப்பு உஷார் நிலையை தென்கொரியா அதிகரித்தது

வடகொரியா நடுத்தர தூர எவுகணை ஒன்றை சோதனை செய்வதற்கான சமிஞ்ஞைகளுக்கு மத்தியில், தென்கொரியா தனது பாதுகாப்பு உஷார் நிலையின் அளவை அதிகரித்துள்ளது. 3000 கிலோ மீட்டர் தூரம் வரை போகக்கூடிய, முன்னெப்போதும் சோதனை செய்திராத, ஒரு வகை ஏவுகணைக்கு எரிபொருள் நிரப்பி வடகொரியா தயார் நிலையில் வைத்திருப்பதாக அமெரிக்க,…

தெற்கு சூடானில் தாக்குதல்: இந்திய வீரர்கள் ஐவர் பலி

தெற்கு சூடான் நாட்டில் அமைதி பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ வீரர்கள், ஐந்து பேர், அந்நாட்டு பிரிவினைவாதிகள் தாக்கியதில் பலியாயினர். ஆப்ரிக்க நாடான சூடான் நாட்டில் நீண்ட காலமாக உள்நாட்டு சண்டையை அடுத்து, 2011ல் தெற்கு சூடான் தனியாக பிரிந்தது. எனினும், கும்ருக் பகுதியில் அதிக வன்முறை காணப்பட்டதால்,…

ஈரான் அணு ஆலைக்கு அருகில் பூகம்பம் : 30 பேர்…

ஈரானின் ஒரேயொரு அணு ஆலை அமைந்துள்ள புஷேர் நகருக்கு அருகே ஏற்பட்ட ஒரு பூகம்பத்தில், குறைந்தபட்சம் 30 பேராவது இறந்துபோனதுடன், 800 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அந்த பூகம்பத்தின் மையம் நகருக்கு தென்கிழக்கே 100 மைல் தூரத்தில் நிலைகொண்டிருந்தது என்றும், அதன் வீரியம் 6.3 என்றும் அமெரிக்க நிலவியல் ஆய்வு…

இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சர் காலமானார்

இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரிட்டனின் முன்னாள் பிரதமரான மார்கரெட் தாட்சர் திங்கட்கிழமை லண்டனில் காலமானார். அவருக்கு வயது 87. சர்வதேச அரங்கில் பல ஆண்டுகள் ஆளுமை செலுத்தி வந்த அவர் சில காலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பக்கவாத நோய் தாக்கியதை அடுத்து அமைதியாக அவரது உயிர்…

வடகொரியா நான்காவது அணுசோதனை : தென்கொரியா குற்றச்சாட்டு

சீ‌யோல்: வடகொரியா தனது நான்காவது அணுகுண்டு சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. வடகொரியா, தற்போது ஐ.நா.மற்றும் சர்வதேச விதிமுறைகளை மீறி கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது மூன்றாவதுஅணு சோதனையை நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் கண்டனம் தெரிவித்தன. தற்போது தென்கொரிய எல்லையில் ராக்கெட்…

ஆசியாவில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அனுமதிக்க முடியாது: சீன அதிபர்

சுயநலத்துக்காக, ஆசிய பகுதியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பவர்களை அனுமதிக்க முடியாது,'' என, சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆசிய பொருளாதாரம் குறித்த மூன்று நாள் மாநாடு, பீஜிங்கில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் சார்பில், கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சர், சச்சின் பைலட், அமெரிக்க தொழிலதிபர், பில்கேட்ஸ் உள்ளிட்டோர்…

அமெரிக்காவைத் தாக்க படைகளுக்கு வடகொரியா ‘அனுமதி’

அமெரிக்காவுக்கு எதிராக, அணு குண்டுத் தாக்குதல்களை நடத்தும் சாத்தியக்கூறு உட்பட, அனைத்து தாக்குதல்களையும் நடத்த, வட கொரியா தனது ராணுவப் படைகளுக்கு இறுதி அனுமதி தந்திருப்பதாகக் கூறுகிறது. அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதித் தீவான குவாமில் அமைந்திருக்கு அதன் தளத்தைச் சுற்றி, ஏவுகணைத் தற்பாதுகாப்பை பலப்படுத்தத் தொடங்கியதை அடுத்து…

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த அடையாளம் கண்டுபிடிப்பு

செவ்வாய்கிரகத்தை ஆராய்வதற்காக மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பி ஆராய்ந்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையா ளமாக நம்பப்படும் பெர்குளோரேட்ஸ் என்ற உப்புகள் படிமங்களை இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ளது. இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களைச் சூடுபடுத்தும்போது குளோரினேட்டட் ஹைட்ரோ…

“மூளை ஸ்கேன் மூலம் எதிர்காலக் குற்றவாளிகளை அடையாளம் காணலாம்”

ஒரு குற்றவாளி மீண்டும் குற்றமிழைக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதை அவரது மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் அமைந்துள்ள மைண்ட் ரிசர்ச் நெட்வொர்க்கில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் மூளையின் குறிப்பிட்ட பாகத்துடைய ஸ்கேன் முடிவுகளை ஆராய்வதன்…

மியான்மரில் 50 ஆண்டுகளுக்குப் பின் தனியார் நாளிதழ்கள் வெளியாகின

யாங்கூன்: மியான்மர் நாட்டில் கடந்த 50 ஆண்டுகாலமாக தனியார் நாளிதழ்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அந்நாட்டில் நேற்று முதல் மீண்டும் தனியார் நாளிதழ்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 1964-ம் ஆண்டு நீவின் என்பவரது சர்வாதிகார ஆட்சியில் தனிநபர்களின் வர்த்தகம் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. இதில் பத்திரிகைகளும் அடக்கம். அரசாங்கமே…

சிறைகைதிகளின் பாதங்களை கழுவி முத்தமிட்ட பாப்பரசர்

பாப்பரசர் முதலாம் பிரான்ஸிஸ் ரோமில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இரண்டு பெண்கள் உட்பட 12 சிறை கைதிகளின் பாதங்களை கழுவியுள்ளதுடன் முத்தமிட்டு ஆசிர்வாதம் செய்துள்ளார். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரோமில் ஏற்பாடு செய்யபட்ட புனித வியாழன் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அங்கு கெஸல் டீல்…

புகழ் பெற்ற ஈபிள் கோபுரத்தில் வெடிகுண்டு புரளி

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின், புகழ் பெற்ற, 'ஈபிள்’ கோபுரத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து அங்கிருந்த, 1,500 சுற்றுலாப் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ், தலைநகர் பாரீசில், உலக அதிசயங்களில் ஒன்றான, 'ஈபிள் டவர்’ உள்ளது. இந்த கோபுரத்தில், வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில்…

கடாபியின் குடும்பத்தினருக்கு ஒமான் புகலிடம் வழங்கியுள்ளது

லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஒமான் அறிவித்துள்ளது. சர்வதேச போலிஸாரினால் தேடப்பட்டுவருவோர் பட்டியலிலுள்ள இருவரும் இதில் அடங்கியுள்ளதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், அவர்களை நாடு கடத்துவது தொடர்பான கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தை அவசியமற்றது எனவும் லிபியா கூறியுள்ளது. கடாபியின்…