கொல்கத்தா மருத்துவமனையில் தீ; மூச்சுத் திணறி 73 பேர் மரணம்!

இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ  விபத்தில் 73 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தார்கள்.  சாவு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று  மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். தெற்கு கல்கத்தாவில் ஏ.எம்.ஆர்.ஐ.…

தமிழக கேரள எல்லையில் பதற்றம் தொடருகிறது!

தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் பதட்டம் இன்னமும் தணியவில்லை. சரியாக சொல்ல வேண்டுமெனில் தமிழகப் பகுதிகளில் போராட்டம் வலுத்துக் கொண்டிருக்கிறது. இங்கே நிலைமை இயல்பாகிவிட்டது, தாராளமாக வாருங்கள் என் கேரள அதிகாரிகள் கூறினாலும் கம்பம் பகுதி மக்கள் அதற்கு செவிமடுப்பதாகத் தெரியவில்லை. கம்பம் பகுதியில் வாகனப் போக்குவரத்து முற்றிலுமாக…

பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டுதுண்டாக உடையும்!

முல்லை பெரியாறு அணையை உடைத்தால் இந்தியா துண்டு துண்டாக உடையும் என்று வைகோ சென்னை தீ.நகரில் வைத்து தெரிவித்துள்ளார். "தந்தையும் தம்பியும்" புத்தகம் வெளியீட்டு விழா தி.நகரில் நேற்று நடந்தது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மதிமுக பொதுச் செயலாளர்…

ஹிட்லர் திறந்துவைத்த விளையாட்டுத் திடல் இடிக்கப்பட்டது

சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லரால் திறந்து வைக்கப்பட்ட 'Deutschlandhalle' என்ற விளையாட்டுத் திடல் பழுதடைந்ததால் நேற்று (4.12.2011) இரவு இடிக்கப்பட்டது. அவருடைய பெருமையை பறைசாற்றும் இந்த விளையாட்டுத் திடல் 2013-ம் ஆண்டு ஒரு புதிய கருத்தரங்க மற்றும் கண்காட்சி திடலாக உருமாறப் போகின்றது. ஜேர்மனியின் இந்த திடலை இடித்த போது 200 மீற்றர் சுற்றளவில்…

அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியது

ஈரானில் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவத்தின் விமானப்படை சுட்டுவீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை கைவிட மறுத்து வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கு இங்கிலாந்தும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஈரானில்…

‘பணிப்பெண்ணுடன் பாலியல் உறவு முட்டாள்தனமானது’

அனைத்துலக நாணய நிதியத்தின் ( ஐ.எம்.ஃஎப்) முன்னாள் தலைவரான டாமினிக் ஸ்ட்ராஸ் கான், நியூயார்க் நகர நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஒரு பணிப்பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டது முட்டாள்தனமானது என்றாலும் அது சம்மதத்தின் பேரிலேயே நடைபெற்றது என்று ஒரு புத்தகம் தற்போது கூறுகிறது. இந்த ஆண்டு மே மாதம்…

பிரிட்டன் ஈரான் மோதல் முற்றுகிறது!

பிரிட்டனில் இருக்கும் ஈரானின் தூதரகம் மூடப்பட வேண்டும் என்றும் அதில் பணிபுரியும் பணியாளர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் நாட்டை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரானில் உள்ள பிரிட்டன் தூதரகத்துக்குள் எதிர்ப்பாளர்கள் புகுந்து தாக்கிய சம்பவம் நடைபெற்று ஒரு நாள் கழித்து இந்த நடவடிக்கையை…

மைக்கேல் ஜாக்சன் மருத்துவருக்கு நான்காண்டு சிறை

மறைந்த உலகப்புகழ் பெற்ற பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இறப்பிற்கு காரணமாக இருந்ததாக கூறப்படும் மருத்துவருக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாப் மியூசிக் மற்றும் பாடலுடன் கூடிய நடனத்தின் மூலம் உலக இளைஞர்கள‌ை தன்வசமாக்கியவர் மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் தன்னுடைய வீட்டில் திடீரென…

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் இராணுவம் எச்சரிக்கை!

நேட்டோ படைகள் தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்காக, மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது. இவ்விவகாரம் மேலும் பல மோசமான விளைவுகளை உருவாக்கும் என பாகிஸ்தான், இராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் இருந்து முதல் தாக்குதல் நடத்தப்பட்டது என வெளியான தகவல்களையும் அது மறுத்துள்ளது. கடந்த 26-ம் தேதி…

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம்: கனிமொழிக்கு பிணை!

2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவின் திஹார் சிறையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு நேற்று டில்லி மேல் நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஊழல் மோசடி விவகாரத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கடந்த மே மாதம் 20-ம் தேதி கைது செய்யப்பட்டு 6…

தமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜர்

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு விசாரணைக்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்று கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவர் மீதான விசாரணைகள் தொடர்வதால் இன்றும் நீதிமன்றத்துக்கு அவர் செல்லவேண்டும். ஜெயலலிதா 1991-ம் ஆண்டில் இருந்து 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்தபோது 66 கோடி இந்திய…

கர்ணல் கடாபியின் மகன் கைது!

லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாஃபியின் மகன் சய்ஃப் அல்-இஸ்லாம் அந்நாட்டின் தென்மேற்கே உள்ள பாலைவன நகரான உபாரியில் கிளர்ச்சிப் படையினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதின் பின்னர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பேசிய சய்ஃப் அல்-இஸ்லாம் தான் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள நிழற்படமொன்றில் சய்ஃப் அல்-இஸ்லாமின்…

அணுகுண்டு, அணு ஆயுதம் தாங்கும் ஏவுகணை தயாரிக்கிறது ஈரான்

ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான அனைத்துலக அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.) அறிக்கை, நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து, மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள், ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. அதேநேரம், ஐ.ஏ.இ.ஏ. அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு…

கடாபியின் கடைசி நாட்கள் பற்றி கூறுகிறார் அவரது பாதுகாவலர்

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி, தன் கடைசி நாட்களில் உணவைத் தேடியலைந்தார். பாதுகாப்புக்காக ஒவ்வொரு வீடாக மாறினார் என அவரது பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். லிபியாவின் முன்னாள் தலைவர் மும்மர் கடாபி, கடந்த மாதம் 20-ம் தேதி கிளர்ச்சியாளர்களினால் உயிருடன் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். கடாபியின்…

சிரியா மக்கள் மீது அந்நாட்டு இராணுவம் தாக்குதல்; 3,500 பேர்…

சிரயா தலைவர் பஷர் அல் அசாத்துக்கு எதிராகப் போராடும் அந்நாட்டு மக்கள் மீது சிரிய இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 3,500 பேர் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. மன்றத்தின்  மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. சபஷர் அல் அசாத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், அரபு லீக் ஒரு…

ஐ.நா., பொதுச் செயலாளர் லிபியாவுக்கு திடீர் பயணம்

லிபியாவில் கர்ணல் கடாபியின் ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் முதன்முறையாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து ஐ.நா.செய்தி தொடர்பாளர் மார்ட்டின் நெஸிர்கி கூறுகையில்; லிபியாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா.பொது செயலாளர் பான் கீ மூன் முதலில் அங்குள்ள…

கடாபியின் மகன் சரண் அடைகிறார்!

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபியின் மகன்களுள் ஒருவரான சயீப் அல் இஸ்லாம் (வயது 39) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் (ஐ.சி.சி.,) சரண் அடைவதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறார். கிளர்ச்சியாளர்களினால் கடாபியும் அவரது மற்றொரு மகன் முட்டாசிமும் கொல்லப்பட்ட நிலையில், சயீப் அல் இஸ்லாம் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை.…