இந்தியாவின் புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு முன்னுரிமை

அயல் நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் இந்திய அரசின் புதிய கொள்கையின் கீழ் இலங்கை அரசுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான உறவுகள் முன்னர் இல்லாத வகையில் வலுவடையும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின்…

அவர்கள் உயிரோடுள்ளார்களா?

கைது செய்யப்பட்டு, சரணடைந்த இளைஞர்கள், யுவதிகள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிருடன் உள்ளார்களா அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா என்ற விபரம் தெரியாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான உற்றார்கள், உறவினர்கள் தற்போது எம்மண்னில் போராட்ட களத்தில் குதித்துள்ளர்கள். நீதியான அவர்களது கோரிக்கைகளை உலகில் எங்கும் பரந்திருக்கின்ற தமிழ் மக்கள் மட்டுமல்லாது,…

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..!

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின்…

இராணுவ கட்டமைப்புக்குள் தொடர்ந்தும் தமிழர்கள்..! பாராளுமன்றில் குற்றச்சாட்டு

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வினை வழங்கப்போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த அவர் இதன குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்…

ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ய உத்தரவிட்ட பிள்ளையான்..! அம்பலமாகும் உண்மைகள்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுறை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் உயர்நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளது. ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவனேசதுறை சந்திரகாந்தன் பிணை கோரி…

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை..! வெளிப்பட்டது விடுதலைப் புலிகளின் மகத்துவம்

2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினம் தினம் நடைபெறும் குற்ற செயல்கள் இதனை நிரூபணம் செயவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரச இயந்திரம் உரிய…

சிறிலங்காவுக்கு கலப்பு நீதிமன்றம் தேவையா?

‘அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம்’ என்கின்ற சர்ச்சைக்குரிய சொற்றொடரானது இன்று சிறிலங்காவின் இடைக்கால நீதி தொடர்பில் விவாதிக்கப்படும் பேசுபொருளாக மாறியுள்ளது. அனைத்துலக சமூகத்தின் நம்பிக்கை மற்றும் ஆதரவுடன் கூடிய நீதிப் பொறிமுறை ஒன்று சிறிலங்காவிற்கு தேவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைச்…

இலங்கை மிக மோசமான பட்டியலில் உலகளவில் 2ஆம் இடம்..!

உலகில் மக்கள் காணாமல் போதல், காணாமல் ஆக்கப்படுத்தல் போன்ற விடயங்கள் தற்போதும் நீடித்துக்கொண்டே செல்கின்றது எனலாம், அந்தவகையில் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற போரின் போது காணாமல் போதல் என்பது இலங்கையில் சர்வசாதாரண விடயமாகவே சில தரப்பினரால் பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், காணாமல் போதல், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல்…

கொலைக்களமாக மாறும் யாழ்ப்பாணம்: அசாதாரண சூழலின் உச்சம்- கருவோடு சிதைக்கப்பட்ட…

யாழ்ப்பாணமும், வடக்கு மாகாணமும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை அடிக்கடி ஊடகங்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல்வாதிகளும் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இது தொடர்பாக சரியான சட்ட ஒழுங்குகளை நிலைநாட்டுவதற்கு காவல்த்துறையினரும், அரசாங்கமும் தயாரில்லாமல் இருப்பது வேதனையானது. விடுதலைப் புலிகளுடான யுத்தம் முடிவடைந்த நிலையில் வடமாகாணம் முழுவதும் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில்…

தற்போது ஈழத் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் யார்? –…

களத்தில் திரு.சம்பந்தனா?, திரு.விக்னேஸ்வரனா? அல்லது வேறு யாருமா? புலம்பெயர் மேற்குலகில் திரு.உருத்திரகுமாரனா?, இந்தியாவில் திரு.காசி ஆனந்தனா? அல்லது வேறு யாருமா? இக்கேள்விகள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதோ இல்லையோ நிச்சயமாக தமிழ்த் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஐ.நா. உள்ளக விசாரணைக் குழுவின் அறிக்கையின்…

அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும்..! வடக்கு முதல்வர்

உலகம் முழுவதும் உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் அகில உலகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் உழவர் தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியில் இடம்பெற்ற…

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் முல்லைத்தீவில் ஏற்பட்ட மாற்றம்…!

விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், 2009 ஆம் ஆண்டின் பின்னர், குறித்த மாவட்டத்தில் கல்வி நிலை மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற கல்விசார் அமைப்புக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்…

தமிழ் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை தட்டிக்கழித்தார் பிரபாகரன்..! டக்ளஸ் எம்.பி

தமிழ் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளும் அனைத்து தனது சுயலாபத்துக்கான விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் தட்டிக்கழிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து…

யாழில் விடுதலைப்புலிகள்? தீவிர கண்காணிப்பில் இராணுவம்..!!

வடக்கையும், யாழையும் அச்சுறுத்தல் மிகுந்த பகுதியாகவே பாவித்து அதனை முற்று முழுதாக ஆக்ரமிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. அண்மைக்காலமாக இலங்கையில் தென்னிலங்கைத் தரப்பு அரசியல் வாதிகளின் முக்கிய விமர்சனமாக இருந்தது மீண்டும் புலிகள் என்ற வாதமே. ஆட்சிக்கு எதிரான சக்திகள் மற்றும் பௌத்த பிக்குகளும் இணைந்து இந்த…

இலங்கை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டில் டொனால்ட் ட்ரம்ப்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பதவியில் மாற்றம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் 45ம் ஜனாதிபதியாக கடந்த 20ம் திகதி டொனால்ட் ட்ராம்ப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். புதிய ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர், அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட அனைத்து ராஜதந்திரிகளையும் பணி நீக்கி புதிய ராஜதந்திரிகளை நியமிப்பது…

வடக்கு முதல்வருக்கு எதிராக முறைப்பாடு! நடந்தது என்ன?

வட மாகாண முதலமைச்சருக்கு எதிராக மனித உரிமைகள் அமைப்பின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் சாவகச்சேரியில் கோழி இறைச்சிக்கடை ஒன்றை நடாத்தி வருகின்றார். கடையை நடத்திச் செல்ல நகர சபையால் அனுமதி வழங்கப்பட்ட போதிலும் தற்போது…

எழுக தமிழ் பேரணி என்றதும் தீர்வு வருகிறது என்றுரைப்பதோ!

பனங்கட்டி என்ற ஒரு சிறந்த மருத்துவப் பண்டம் கற்பகதருவின் கொடையில் என்று முன்பெல்லாம் தேனீர் அருந்துவதற்கு பனங்கட்டியையே அனுமானமாக கொள்வர். ஆடிப்பிறப்பில் ஆடிக்கூழ்; ஆடி அமாவாசையில் களி இவற்றிற்காக நம் தமிழ் மண்ணில் பனங்கட்டி வியாபாரம் களைகட்டும். அந்தளவிற்கு பனங்கட்டிக்கு மவுசு அதிகம். இப்போது பனங்கட்டி வாங்குவார் இல்லை…

முல்லைத்தீவில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களின் அவலம்

முல்லைத்தீவு மாவட்டத்திலே போருக்குப் பின்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பல குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்காததன் காரணமாக மீளக் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தமது வாழ்க்கையை நடாத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கிராமங்களில் உள்ள மக்கள் தமக்கு வீடு கிடைக்காததன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போரினால் தமது சொத்துகள் அனைத்தும் இழந்து…

உலகத் தமிழர்கள் அனைவரையும் தட்டி எழுப்பிய ஜல்லிக்கட்டு : நாளை…

தமிழகத்தில் 4 நாட்களுக்கு முன்புவரை ஒரே ஒரு அலங்காநல்லூர் ஆக இருந்த இடம் இன்று அடங்காதநல்லூராக முழு இடமும் மாறிவிட்டது என்றால் அதற்கு ஒரே காரணம் இந்த ஜல்லிக்கட்டு போராட்டம். தமிழர்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் அடக்கிய அரசு இனிமேலும் தமது கலாச்சாரத்தில் ஒரு சிறு துளியேனும் மூக்கினைநுழைக்க கூடாதென்பதே…

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட கிழக்கு எழுக தமிழ் பேரணி..!

கிழக்கு எழுக தமிழ் பேரணி பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டுவெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுக தமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில்…

வட மாகாணத்தை வாட்டியெடுக்கும் வரட்சி..! முதலமைச்சரின் நடவடிக்கைகள் என்ன..?

வடமாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்குவது தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் கிராமங்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் வரட்சியானல் பெருமளவு விவசாயம் அழிவடைந்துள்ளதுடன்,…

தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! இரா.சம்பந்தன்

அரசியல் தீர்வுக்கான தற்போதைய சந்தர்ப்பத்தை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இராஜவரோதயம் சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நான்காவது தமிழர் பொங்கல் விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை)…

தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா? முல்லைத்தீவு மக்களின் இன்றைய…

முல்லைத்தீவு - மன்னாகண்டல் பிரதேசத்தில் 110 குடும்பங்களுக்கான மீள்எழுச்சி வேலைத்திட்டத்தை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இன்று(19) ஆரம்பித்துவைத்துள்ளார். குறித்த வேலைத்திட்டத்தின் ஊடாக வீடுகள் புனரமைத்தல், வீதிகள் திருத்தவேலைகள் மற்றும் நீர்வழங்குதல் போன்ற முக்கிய விடயங்களை செயற்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், முல்லைத்தீவில் அண்மை காலமாக வரலாற்று சிலைகள் அமைக்கும் செயற்பாடுகள்…