ஓர் ‘அசாதாரண’ எம்.பி. வாழ்க்கையில் ஒரு நாள்

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜுக்கு, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதியில் நீண்டதொரு வரலாறு உள்ளது. இது 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது, அவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் தனது மருத்துவப் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தபோது, சுங்கை சிப்புட்டில் உள்ள  ஒரு தோட்டப்பள்ளியில் தன்னார்வளராக தனது சேவையைத்…

இருமொழி திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளிலிருந்து அகற்ற – தியாகுவின் 350 கிமீ…

இருமொழி திட்டத்தை தவறாக கையாண்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மீது கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களுக்கு இடையே, இந்தத் திட்டம் தமிழ்க்கல்வியின் கட்டமைப்பையே உடைத்துவிடும் வகையில் உள்ளது என்பதை உணரவைக்க ஒரு நீண்ட நடைப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார் தியாகு. மருந்தியல் பட்டதாரியான தியாகு, வயது 27,…

யோகா சவூதி அரேபியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது

    -எம். கிருஷ்ணமூர்த்தி, நவம்பர் 17, 2017. நவம்பர் 2008 இல், மலேசிய தேசிய பாட்வா மன்றம் யோகாவுக்கு தடைவிதித்தது. மலேசியாவின் உயர்நிலை இஸ்லாமிய அமைப்பான, பாட்வா மன்றம், இஸ்லாமியர்கள் யோகா பயிற்சியில் ஈடுபடுவதற்கு தடை விதித்தது, ஏனென்றால் யோகாவில் இந்து சமயம் சார்ந்த கூறுகள் இருப்பதாகவும்…

எம்பி சுரேந்திரன்: இந்தியர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் வெற்று வாக்குறுதிதான்!

  நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி அரசாங்கம் மலேசிய இந்தியச் சமூகத்திற்கு அதிகாரமளிக்க வாக்குக் கொடுத்திருப்பதாக கூறினார். 14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் பிஎன் தலைவர்களால் இது போன்ற பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆகவே,…

ஜாஹிர் நாயக் விரையில் இந்தியாவுக்கு அனுப்பப்படுவார்!

ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 10, 2017 - நாடுகடத்தப்படும் நடவடிக்கையில் தன்னுடைய நிலை நாளுக்கு நாள் இறுகுகிறது’ என்பதை ஏறக்குறைய உணர்ந்து கொண்ட சமய பிரச்சாரகர் முனைவர் ஜாஹிர் நாயக், இந்தியாவிற்குத் திரும்ப ஆயத்தமாகிறார் என்றே தெரிகிறது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னம், இவரைப் பற்றி மலேசிய இந்திய சமுதாயத்தின்…

நவம்பர் 7 2017 – அக்டோபர் புரட்சியின் 100-வது ஆண்டு…

அக்டோபர் புரட்சியின் 100-வது நிறைவாண்டு இன்று. அக்டோபர் புரட்சி 1917-ல் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சிகர நடவடிக்கைகளின் சிறப்பம்சமாக இருந்தது, இது பிப்ரவரி புரட்சிக்குப் பின்னர், அந்த ஆண்டின் மார்ச் மாதம் தொடங்கியது. நவம்பர் 7, 1917 (அந்நேரத்தில் ரஷ்யாவில் பயன்படுத்தப்பட்ட ஜூலியன் காலண்டர்படி அக்டோபர் 25, 1917) அன்று,…

சமயவாரியான   சலவைக்  கடையும்  சட்டமும்

- கி.சீலதாஸ், நவம்பர் 4, 2017.    முஸ்லிம்களுக்கு  மட்டுமே  என்கின்ற  சலவைக்  கடை  மூவாரில்  இயங்கியது.  இந்தச்  செய்தி  பத்திரிக்கைகளில்  வந்ததும்  பொதுவாகவே  மலேசியர்கள்  சங்கடப்பட்டனர்.  வெளிநாட்டவர்கள்கூட  புருவங்களை  உயர்த்தி  ஆச்சரியப்பட்டனர்.  சுதந்திரத்துக்கு  முன்னும்  பின்னும்  இப்படி  ஒரு  வியாபார  அணுகுமுறை  கடைபிடிக்கப்பட்டதில்லை.  ஆனால்,  இக்காலகட்டத்தில்  இப்படிப்பட்ட …

ஆபத்தான  மௌன கலாச்சாரம்

- கி. சீலதாஸ், அக்டோபர் 29, 2017.   மௌனவிரதம், மக்களின்  மௌனப்புரட்சி, பொன்னான மௌனம் போன்ற சொற்றொடர்கள்  நமக்குப்  பழகப்பட்டவைகளாகும். மௌனவிரதமானது ஒருவர் ஒரு குறிப்பிட்ட நாளில், நிர்ணயிக்கப்பட்ட  நேரத்தில்  பேசாமல்  இருப்பதைக்  குறிக்கும்.  உண்ணாவிரதம்  போல்  மௌனவிரதம்  மேற்கொள்ளப்படுவதும்  இயல்பு. மௌன  குழுமத்தைச்  சேர்ந்ததுதான்  பொன்னான …

ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்: மஇகா பதில் சொல்ல வேண்டும்!

2018-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இந்தியர்களுக்கு ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளதாகவும், அதற்கான காரணங்களை மஇகா தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி, பிரதமர் நஜிப் அவர்கள் எம்ஐபி என்ற மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தை அறிவித்தார். அதன் வழி 2022 வாக்கில் மலேசிய இந்தியர்களின் கல்வி மற்றும்…

தமிழ் உயர்நிலைப்பள்ளி – என்னதான் பிரச்சனை?

ஞாயிறு நக்கீரன், அக்டோபர் 24, 2017.  தமிழர்கள், தங்களின் தாய்மொழியான தமிழுக்காக ஓர் உயர்நிலையைப்பள்ளியை இந்த நாட்டில் அமைத்துக் கொள்ளக் கூடாதா? முடியாதா? மலேசியாவில் தமிழ் உயர் நிலைப்பள்ளியை அமைக்க சட்டத்தில் இடம் இல்லை என்று காலமெல்லாம் கல்வி அமைச்சு சொல்லி வருகிறது. அந்தச் சட்டம் எங்கிருந்து வந்தது?…

மாயநிலை வாழ்வு

கி. சீலதாஸ், அக்டோபர் 13, 2017. சமயம்,  அரசியல்,  சமயக்  கல்வி,  சமய  அரசியல், அரசியல்  சித்தாந்தம்,  செழுமையான  பொருளாதார  நிலை  போன்றவை  மனிதனை  எந்த  இலக்குக்குக்  கொண்டு  செல்கிறன?   ஆழ்ந்து  சிந்திக்க  வேண்டிய   விஷயம்.  சமயமும்,  சமயக்  கல்வியும்  ஒருவனின்  மனத்தில்  பதிந்து  கிடக்கும்  பாசிப்பிடித்த  மூர்க்க …

தாய்மொழிப்பள்ளிகளை சூதாட்ட, மதுபான நிறுவனங்களிடம் கையேந்த வைத்த தந்தை நஜிப்!

ஜீவி காத்தையா, அக்டோபர் 3, 2017. மலேசிய அரசாங்கம் தாய்மொழிப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு (சீன மற்றும் தமிழ்மொழிப்பள்ளிகள்) நிதியை வாரிவாரிக் கொட்டுகிறது என்று கூறப்படுகிறது. அதிலும், மற்ற பிரதமர்களைவிட அதிகமாக அள்ளிக் கொட்டிக் கொண்டிருப்பவர் பிரதமர் நஜிப் ரசாக் என்றும் கூறப்படுகிறது. தாய்மொழிப்பள்ளிகளில் தமிழ்ப்பள்ளிகளுக்கு நஜிப் வழங்கும் நிதி உதவிகள்…

பாஸ் கரைகிறது!

‘ஞாயிறு’ நக்கீரன் - வெண்வண்ண வட்டத்தை உள்ளடக்கிய பச்சை வண்ணக் கொடிகள் படபடக்க தனிப்பெரும் செல்வாக்கோடும் எழுச்சியோடும் விளங்கிய பாஸ் கட்சிக்கென்று ஒரு தனி மரியாதை தேசிய அளவில் பிரதிபலித்தது. 14 கட்சிகள் அடங்கிய தேசிய முன்னணியையே பொதுத் தேர்தல்களில் மண்டியிட வைத்து மாநில ஆட்சிகளை தன்னந்தனியாகக் கைப்பற்றிய அந்தக்…

50 ஆண்டுகளாக இந்தியர்களுக்கு பாரிசான் அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை, சுப்ரா…

  -மு. குலசேகரன். செப்டெம்பர் 26, 2017 நடந்து முடிந்த 71 ஆவது மஇகாவின் தேசியப் பேராளர் மாநாட்டில் பிரதமருக்கு நன்றி கூறுகையில் அதன் தலைவர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் ஓர் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்: . அதாவது அப்துல் ரஹ்மன், அப்துல் ரசாக், ஹுசேன் ஓன், மகாதீர்,…

சமயப் பள்ளியில் ஏற்பட்ட தீ

கி. சீலதாஸ், செப்டெம்பர் 20, 2017.   14.9.2017இல்,  கோலாலம்பூரில்  உள்ள ஓர்  இஸ்லாமிய  சமயப்  பள்ளியில்  ஏற்பட்ட  தீயில்  இருபத்திரண்டு  மாணவர்களும்,  இரண்டு  காவலாளிகளும்  மாண்டனர்.  இந்தச்  சமயப்  பள்ளியைப்  பயன்படுத்துவதற்கான  அனுமதி  இன்னும்  வழங்கப்படவில்லை.  ஈராண்டுகளுக்கு  முன்னர்  கட்டடவரை  படங்களைச்  சமர்ப்பித்திருக்கிறது  பள்ளி  நிர்வாகம்.  சமீபத்தில்தான் …

மலேசியாவின் பிறப்பும், சோதனையும்

  - கி.சீலதாஸ், செப்டெம்பர் 14, 2017.      ஆகஸ்ட் 31, 1957இல்  மலாயா  கூட்டரசு  சுதந்திரம்  பெற்றது.  மலாயாவின்  தெற்குப்  பகுதியின்  நுணியில்  சிங்கப்பூர்  பிரிட்டிஷாரின்  கட்டுப்பாட்டிற்குள்  சுயாட்சி  நாடாக  இயங்கிக்  கொண்டிருந்தது.  சிங்கப்பூர்  முன்னொரு  காலத்தில்  ஜொகூர்  நாட்டின்  ஒரு  பகுதியாக  இருந்தது.  மலாயா …

வல்லினத்தின் 9-ஆவது இலக்கிய விழா!

கடந்த ஒவ்வொரு ஆண்டைப் போலவே இவ்வாண்டும் வல்லினம் கலை இலக்கிய விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டு 100 -ஆவது வல்லினம் இதழை ஒட்டி இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. கடந்த எட்டு ஆண்டுகளாக வல்லினத்தின் பயண அனுபவ ஆவணப்பட காட்சியோடு நிகழ்ச்சி தொடங்கும். களஞ்சிய வெளியீடு இவ்விழாவுக்கென…

இலக்கியவாதியா, அரசியல்வாதியா, பாரதி?

‘ஞாயிறு’ நக்கீரன், செப்டெம்பர் 11, 2017.  மாகவி பாரதியாருக்கு இன்று நினைவு நாள்.  இந்தியா என்ற பத்திரிகையின் ஆசிரியராக விளங்கினாலும்  இந்தியாவை பாரதம் என்று அழைக்கத்தான் பிடிக்கும் பாரதிக்கு. பிறந்தது முதலே புரட்சி மனப்பான்மை கொண்டிருந்த பாரதி, இந்திய விடுதலைப் போராட்டம் கோபாலகிருஷ்ண கோகலே தலைமையில் மிதவாதிகள் ஓர் அணியாகவும்…

ரொகிங்யா, தமிழர் படுகொலைகளும் – அதில் மதமும் அரசியலும்!

ஞாயிறு நக்கீரன்,  செப்டெம்பர் 10, 2017.  நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தேசத் தந்தை துங்கு அப்துல் ரகுமான் சிலோன் என்னும் தீவு நாட்டிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டார். இன்றைய இலங்கையின் அன்றைய பெயர் அதுதான்; அந்த நாட்டின் விமானத் தளத்தில் அடி வைத்ததும் அவரை ஆச்சரியமும் பிரமிப்பும் தொற்றிக்…

கோலாலம்பூர் கார்கோசாவில் மலாயாவின் சுதந்திரப் போராட்ட வரலாற்று கண்காட்சி

-எம். சாமிநாதன், செப்டெம்பர் 7, 2017. மலாயா (மலேசியா) பிரிட்டீஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்று கடந்த ஆகஸ்ட் 31-துடன் அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. மலேசியாவின் சுதந்திரம் தங்கத் தாம்பாலத்தில் தரப்படவில்லை. இரத்தம் சிந்தப்பட்டது. உயிர்கள் பறிக்கப்பட்டன. பறிக்கப்பட்ட உயிர்களில் ஒன்று இந்நாட்டுத் தொழிலாளர்களுக்காகப் போராடிய, பிரிட்டீஷ் பேரரசை ஆட்டம் காண…

மலாயா அரசியல் சாசனமும் ஒதுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களும்

ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 28, 2017.   மலாயாக் கூட்டமைப்பு என்ற பெயரில் அறுபது ஆண்டுகளுக்கு முன்னம் இந்த மலைத்திருநாடு விடுதலைப் பெற்றது. இன்று நாம் வாழும் சுதந்திர வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட அந்த வரலாற்று நிகழ்ச்சியை அறுபதாவது முறையாக இன்னும் ஒரு சில நாட்களில், இம்மாத நிறைவில் கொண்டாட…

தமிழ்வழிக் கல்விக்குக் கோடரிக் காம்பு, மஇகா-வே!

ஞாயிறு நக்கீரன், ஆகஸ்ட் 27, 2017.  மஇகா-வின் தமிழ்வழிக் கல்விக்கான துரோகம் தொடர்கிறது. டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு, டத்தோ பாதுகா கோமளா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்ந்து தற்பொழுது டத்தோ ப.கமலநாதன், இருமொழிவழிக் கல்விக்கு இடையறாது ஆதரவு அளிப்பதன்வழி  தமிழ் மொழிக்கல்விக்குக் கோடரிக் காம்பாகத் திகழ்கிறார். புத்தாயிரத்தாம் ஆண்டு தொடக்கக் காலத்தில்…

‘காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு’ நூல் வெளியீடும்…

மலேசிய சோசலிசக் கட்சி, நூசா ஜெயா கிளை ஏற்பாட்டில், ‘The Forgotten Malaysian Indian History in Colonial Era’ (காலனித்துவக் காலத்தின் மறக்கப்பட்ட மலேசிய இந்தியர் வரலாறு) எனும் வரலாற்று நூல் வெளியீடும் கருத்துக்களமும் கீழ்க்கண்டவாறு நடைபெறவுள்ளது :- நாள்   : ஆகஸ்ட் 26, 2017 (சனிக்கிழமை)…