இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
விக்கியின் தமிழ் மக்கள் பேரவையை வரவேற்கிறார் கருணா! இணையவும் திட்டம்
வடக்கில் புதிதாக உதயமாகியுள்ள 'தமிழ் மக்கள் பேரவை' என்ற அமைப்பை வரவேற்றுள்ள முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), அதில் தானும் இணைவது தொடர்பில் பரிசீலிக்கிறார் என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பங்குபற்றலுடன் கடந்த சனியன்று 'தமிழ் மக்கள்…
வடக்கு முதல்வர் – அமைச்சர்கள் இடையே கருத்து முரண்பாடுகள்!
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையில் இணைத் தலைமைப் பதவியை ஏற்றுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளன என அறியமுடிகின்றது. யாழ். மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை மூடிய அறையினுள் வைத்து இரகசியமாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் இணைத்…
புதிய அரசியலமைப்பு அவசியமா..? பிரதமருக்கு வீ.ஆனந்தசங்கரி கடிதம்
தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி புதிய அரசியலமைப்பு அவசியமா? என்ற கோள்வியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளார் அக்கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1970ம் ஆண்டு நான் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய பின்பு பல ஆண்டுகள் நாம் இருவரும் பாராளுமன்றத்தில் இணைந்து கடமையாற்றியாற்றிமையால் அறிமுகப்படுத்த வேண்டியதில்லை…
ஊதிய உயர்வு வழங்காவிடின் தேயிலைத் தோட்டங்களை அரசிடம் கையளியுங்கள்: லக்ஷ்மன்…
தேயிலைத் தோட்டங்களின் மூலம் வருமானம் இல்லாவிட்டாலோ, தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கா முடியாவிட்டாலோ அவற்றை தோட்டக் கம்பனிகள் அரசாங்கத்திடம் கையளிக்க வேண்டும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார். பெருமளவான உள்ளூர் முதலீட்டாளர்கள் தோட்டங்களை பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…
இலங்கை -இந்தியாவுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்! அமைச்சர்…
இலங்கை - இந்தியாவுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். பிபிசி செய்திச்சேவைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்தம் நிலவிய காலகட்டத்துக்கு முன்னர் தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையே படகுப் போக்குவரத்து நடைபெற்றிருந்தது. ஏராளமான பயணிகள் இச்சேவையின்…
கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது! ‘தமிழ் மக்கள் பேரவை’ உருவாக்கம்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப் பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது. இவ்வாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்திற்கு இப்போது…
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக்காயங்களை ஆற்ற வேண்டும்!! ரணில் தெரிவிப்பு
மோதலால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை ஆற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காயம் ஏற்பட்டால் அதனை ஆற்றுவது அவ்வளவு இலகுவான காரியமல்லவென பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவை இராணுவ முகாமில் பயிற்சி பெற்று வெளியேறிச் செல்லும் இராணுவ வீரா்களின் அணிவகுப்பு நேற்று இடம்பெற்ற போது…
விக்னேஸ்வரனின் புதிய அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது பிளவு!…
வடக்கு முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அரசியல் அற்ற புதிய அமைப்பு ஒன்றை அமைத்துள்ளமையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முதலாவது பிளவு என்று இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் பேரவை என்ற இந்த அமைப்பு நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்பின்னர் மூடிய அறைக்குள் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. …
இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?
யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறுவர்கள் உட்பட அனைத்து…
அரசின் பலவீனமும் தமிழர் பிரச்சினையும்
இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத வகையில் புதிய அரசியலமைப்பையும், தேர்தல் முறையையும் ஏற்படுத்தி தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதற்குத் தற்போது இறுதிச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே, பகைமை அரசியலை கைவிடுவோம்" என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…
இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சரியான தீர்வுத் திட்டம் வேண்டும்!- சுரேஸ் பிரேமச்சந்திரன்
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் பொது மக்களே பதில் கூறவேண்டும் என்று கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்பது இதுவரை எவருக்கும் தெரியாது? தமிழ்த் தேசியக்…
இலங்கை சமாதானத்தை நோக்கிய நீண்ட பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது: தோமஸ்…
இலங்கை சமாதானத்தை நோக்கிய கடினமான நீண்ட பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்திற்கு புத்துயிர் அளிப்பதற்கு மக்களுக்கு பலம் உள்ளது என்பதற்கு இலங்கை சிறந்த எடுத்துக் காட்டாகும். இலங்கை தனது அனுபவங்கள் ஊடாக உலகின் ஏனைய நாடுகளுக்கு புத்துணர்ச்சியையும்,…
பாலச்சந்திரனுடன் நின்ற எனது மகன் எங்கே?; ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்…
“இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனுடன் எனது மகன் இருந்தார். பாலச்சந்திரனையும், எனது மகனையும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவத்தினர் கைது செய்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்று தந்தையார்…
நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு செயலகம் அமைக்கும் அரசு
நல்லிணக்கம் தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முகமாக இலங்கை அரசாங்கம் செயலகம் ஒன்றை அமைக்கவுள்ளது இந்த செயலகம், எதிர்காலத்தில் காணாமல் போனோர் மற்றும் நல்லிணக்கம், வன்முறைகளை தடுக்கும் ஆணைக்குழுவை போன்று மேம்படுத்தப்படவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறை, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக பரிந்துரைகள், போன்றவற்றின்…
இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்பு!- மக்ஸ்வெல் பரணகம
இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்களுக்கு இராணுவத்தினரே பொறுப்புக் கூறவேண்டும். இவ்வாறு காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் கடந்த 11ம் திகதியிலிருந்து 16ம் திகதி வரை நடைபெற்ற காணாமல்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வில் சாட்சியமளிப்பதற்காகச் சென்ற காணாமல்போனோரின் உறவினர்கள் பலர்,…
அரசியல் தீர்வுக்குப் பின்னரே அரசியலமைப்பை மாற்றவேண்டும்
நாட்டின் அரசியல் சூழல் மாறிய போதிலும் அரசாங்கங்கள் மாறிய போதிலும் தமிழ் மக்களுக்கான தேசியப் பிரச்சினைக்கான தீர்வானது கடந்த காலம் முழுவதும் எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காணும் நோக்கில் கடந்த காலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் தீர்வானது தமிழ் மக்களை வந்து சேரவில்லை.…
இந்திய, அமெரிக்க நிலைப்பாடு என்ன?
காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அளித்த சாட்சியங்களை அறியும் போது நெஞ்சு வெட்டித்து விடும் போல் உள்ளது. அந்தளவுக்கு எங்கள் மக்கள் தாங்கொணாத் துன்பங்களை தம் இதயங்களில் சுமந்து கொண்டுள்ளனர். அதேநேரம் அவர்கள் சாட்சியம் அளிக்கின்ற போது-அவர்கள் கூறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது எங்கள்…
விடுதலைப் புலிகளின் தளபதிகள் தொடர்பில் சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது
விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர். நிதித்துறை கருவண்ணன். விடுதலைப்புலிகள் அமைப்பில் நிதித்துறையில் இருந்த கருவண்ணன் எனப்படும் சூசைப்பிள்ளை வரதராஜன் ஆகிய எனது கணவரை 2009ம் ஆண்டு மே மாதம் 18ம்…
கடலுக்குள் செல்லுகின்ற நீரையாவது தாருங்கள்: சிவாஜிலிங்கம் உருக்கம்!
2020ஆம் ஆண்டளவில் எல்லோருக்கும் பாதுகாப்பான நீர் என்று ஐ.நா. சொல்லுகின்ற போதிலும் வடபகுதிக்கு ஐந்து வீதமான தூய நீரே கிடைக்கின்றதென வட மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான விவசாய அமைச்சின் வரவு – செலவுத்திட்ட விவாதம் இன்று இடம்பெற்றது. அந்த…
இராணுவ அதிகாரியை விசாரியுங்கள்! ஆதாரத்துடன் தகவல் வழங்கிய சகோதரி !
பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சாட்சியத்தின் பின்பே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.எனது அண்ணாவான பேரம்பலநாதன் பிரதீபன் (வயது36) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 19 வருடங்களாக இருந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 17 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் இராணுவத்திடம் சரணடைந்தார். பின்னர்…
போர்க்குற்ற விசாரணையில் அரசு ஆர்வம் காட்டவில்லை! ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்…
போர்க் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மனித உரிமை விவகாரங்களைக் கையாளுவது நல்லதொரு சமிக்கையாகத் தென்படுகின்றபோதிலும், புதிய அரசு இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை என்று ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் கிறிஸ்ரோப் ஹெய்ன்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை அரசின்…
படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட புலிகளின் காளித் மாஸ்டர், தளபதி மற்றும் வண்ணக்கிளி…
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பயிற்சியாளர் காளித் மாஸ்டர் மற்றும் மோட்டார் பிரிவு தளபதிகளின் ஒருவரும், உள்ளக பாதுகாப்பு பொறுப்பாளருமான வண்ணக்கிளி மாஸ்டர் ஆகியோர் படையினரிடம் போரின் நிறைவில் ஒப்படைக்கப் பட்டனர். அவர்களை படையினர் கொண்டு சென்றனர். அவர்கள் எங்கே? மேற்கண்டவாறு காளித் மாஸ்டரின் மாமன் கே.அமரசிங்கம்…
காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு உதவித்திட்டம் வழங்குவதாக கூறி திசை திருப்ப முயற்சி:…
யாழ் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜானதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள், காணாமல் போன உறவினர்களுக்கு உதவித்திட்டங்களை வழங்குவதாக தெரிவிக்கும் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், காணாமல் போனவர்களை கண்டறியும் ஜானதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள்…


