இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழர்களிடம் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஐந்து யோசனைகள்!
இனப்பிரச்சினை தீர்வுக்காக தமக்கு ஐந்து யோசனைகள் கிடைத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது தனிப்பட்டவர்கள் மற்றும் குழுக்களிடம் இருந்து இந்த யோசனைகள் கிடைத்துள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகளை தாம் வரவேற்பதாக அறிவித்திருந்தார்.…
ஐ.நா விசாரணையில் துணிந்து சாட்சியமளிக்க வேண்டும்: விநாயகமூர்த்தி எம்.பி
வட கிழக்கு மாகாணங்களில் படையினரின் தேவைகளுக்காக நிலச் சுவீகரிப்பு உச்ச அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்தின் மூலம் அல்லது இந்திய அரசாங்கத்தின் மூலம் இப் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என நம்ப முடியாது. ஐ.நா சபை ஊடாக அல்லது சர்வதேசத்தின் ஊடாக மட்டுமே தீர்க்க முடியும் என…
தமிழ்மொழி மற்றைய மொழிகளுக்கு சமாந்தரமாக அமுல்படுத்த வேண்டும்!
தமிழ்மொழி மற்றைய மொழிகளுக்கு நிகராக சமாந்தரமாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் பாஸ்கராவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை கொழும்பு மாநகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அண்மையில் கொழும்பு மாநகர சபையில் தமிழ் மொழியானது மற்றைய மொழிகளுக்கு உள்ள அந்தஸ்துடனும் மற்றைய மொழிகளுக்கு சமாந்தரமாகவும் நிறைவேற்றபட வேண்டும்…
ஐநா மனித உரிமைகள் பேரவை 26 வது அமர்வு! இலங்கை…
இலங்கையில் இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் சலோகா பெயானியின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், எதிர்வரும் 12ம் திகதி இலங்கையில் போரினால் உள்நாட்டில்…
இலங்கை இந்தியா உறவுக்குள் தமிழீழம் சிறைப்பட்டுக் கிடக்கிறது – ஆங்கில…
இலங்கையுடன் இந்தியா எந்த தருணத்திலும் முரண்பட்டுக் கொள்வதை விரும்பாது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், இலங்கையின் பல்வேறு தொழில்துறைகளில் இந்தியா கால்பதித்துள்ளது. இந்தியாவின் நூற்றுக் கணக்கான நிறுவனங்கள் இலங்கையில் தொழில்புரிய தொடங்கியுள்ள நிலையில், இலங்கையுடனான உறவு இந்தியாவின் பொருளாதாரத்துக்கும் முக்கியமானதாக அமைந்துள்ளது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ தொடர்புகளும்…
இலங்கை: போரில் காணாமல் போனவர்கள் குறித்து 18,000 புகார்கள்
இலங்கை உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவால் ஏற்படுத்தப்பட்ட குழு, பொதுமக்களிடம் இருந்து இதுவரையில் சுமார் 18,590 புகார் மனுக்களை பெற்றுள்ளது. “”காணாமல் போன பாதுகாப்புப் படையினரின் உறவினர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள 5,000 புகார்களையும் சேர்ந்து, மொத்தம் 18,590 புகார் மனுக்கள்…
ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி சிறிலங்காவிடம் கோருகிறார் நவநீதம்பிள்ளை
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நடத்தப்படும், நம்பகமான உண்மை கண்டறியும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி சிறிலங்கா அரசாங்கத்திடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனிவாவில் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 26வது அமர்வில், ஐ.நா மனித உரிமை…
வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக்குழுவினை நவனீதம்பிள்ளை அறிவிப்பார்!
எதிர்வரும் 10ம் திகதி இலங்கை குறித்த விசாரணைக் குழுவினை ஐக்கிய நாடு;கள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பெயரிட உள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி மனித உரிமைப் பேரவையின் சாதாரண அமர்வுகள் ஆரம்பமாகவுள்ளன. அதற்கு முன்னதாக விசாரணைக் குழு நியமிக்கப்பட…
கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு…
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு ஜூன் மாதம் 11ம் திகதி திருக்கோயில் காட்டுப் பகுதியில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளினால்ää 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை செய்யப்பட்டதாக…
தமிழீழத்தை உருவாக்க பொருத்தமான இடம் தமிழ்நாடு
இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜெயலலிதா விடுத்துள்ள கோரிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை செய்ய…
ஈழத் தமிழர்களுக்கு மோடியால் நன்மை விளையும்!- உருத்திரகுமாரன்
இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்று இலங்கை திரும்பியிருக்கிறார் அதிபர் ராஜபக்ச. இனி, 'ஈழ விவகாரத்தில் முந்தைய காங்கிரஸ் அரசின் அணுகுமுறையையே இப்போதைய இந்திய அரசு கைக்கொள்ளுமா?’ என்பதுதான் இலங்கைத் தமிழர்களிடம் எழுந்திருக்கும் கேள்வி. இது தொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர்…
இராணுவ ஆட்சேர்ப்பு பொறியினுள் அகப்படவேண்டாம்! தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அனந்தி…
எமது மக்கள் மேல் திணிக்கப்படும் இராணுவ மேலாதிக்கத்தில் எமது இளைஞர் யுவதிகளையும் பங்கு கொள்ள வைக்கும் ஒரு பயங்கர சதியை நிறைவேற்ற முயற்சி செய்வதையிட்டு நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எம்மை நாமே பாதுகாக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன். இலங்கை இராணுவத்திற்கு கட்டாய…
அரசியல் தீர்வுத்திட்டம்: மக்களிடம் ஆலோசனை கோருகிறது ததேகூ
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டமொன்றை வரைவதற்காக பொது மக்களிடமிருந்தும், அரசியல் ஆர்வலர்கள், அரசியல் ஆய்வாளர்கள், தமிழ் மக்களின் இனப்பிரச்சினை விவகாரங்களில் தீவிரமாக செயற்பட்டு வரும் அரசியல் கட்சிகள், புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் ஆகியோரிடமிருந்து ஆக்கபூர்வமான தீர்வுத்திட்ட ஆலோசனைகளை வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் ஊடகப்…
படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன?- முல்லைத்தீவில்…
இறுதிப்போரில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களது நிலை என்ன? போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை முன்வைத்து அவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 5ம் திகதி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய…
யேர்மனி மற்றும் பிரான்ஸில் மலேசியா தூதரகத்துக்கு முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு
புகலிடம் கேட்டு அகதிகளாக வாழ்ந்துவரும் தமிழர்களைக்கூட மலேசியா தொடர்ச்சியாக சிங்களக் கொலையாளிகளிடம் ஒப்படைத்துவருவது மிக மோசமான தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையாகும். இவ் நடவடிக்கைக்கு எதிராக கடந்த நாட்கள் யேர்மனியில் பேர்லின் மற்றும் பிராங்க்போர்ட் நகரிலும் பிரான்ஸ் நாட்டிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. யேர்மனியில் பேர்லினில் மலேசியா தூதரகத்துக்கு…
தனி ஈழத்துக்கான கருத்துக் கணிப்பை ஐநாவில் வலியுறுத்த ஜெயலலிதா கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சற்றுமுன் நேரில் சந்தித்துப் பேசினார். தமிழக பிரச்னைகளுக்கு தீர்வு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் மோடியை சந்திக்க சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை டெல்லி…
இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு அரசாங்கம் ஒத்துழைக்கப் போவதில்லை – ரம்புக்வெல
தமக்கு எதிரான விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை என்ற முடிவில் அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என்று, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான விசாரணைக்காக 13 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது…
கொபி அனான், புலிகளின் கிழக்குத் தலைவரின் மறைவிற்காக இரங்கல் செய்தி…
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான், தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குத் தலைவர் உயிரிழந்த போது இரங்கல் செய்தி அனுப்பி வைத்தவர் என திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தலைவர் கௌசல்யன் உயிரிழந்த போது, அனான் இரங்கல்…
இந்திய மீனவர்களை விடுவிக்குமாறு ராஜபக்ச உத்தரவு
தலைமன்னார் கடற்பகுதியில் வைத்து ஞாயிறு அன்று கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நேற்று திங்கட்கிழமை இரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இந்த 29 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது அவர்களை ஜூன் 16…
இலங்கை தமிழர்களுடன் நேரடி உறவு கூடாது – இந்தியாவுக்கு சுப்ரமணியம்…
பங்களாதேஸில் உள்ள இந்துக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுடன் தொடர்பு கொள்கின்ற உரிமை பாகிஸ்தானுக்கு கிடையாது. அதேபோன்று இலங்கையில் உள்ள தமிழர்களுடன் நேரடிய உறவினை பேணும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது என்று ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இலங்கை…
அரசின் மீள் குடியேற்றம் உதட்டளவில்! நில ஆக்கிரமிப்பு உச்ச கட்டத்தில்
கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்ணனி ஏற்பாடு செய்திருந்த நில ஆக்கிரமிற்கு எதிரான பேராட்டத்தில் அரசின் நிலவிடுவிப்பு என்பது உதட்டளவிலும், நில ஆக்கிரமிப்பு நிஜமாகவும் நடைபெறுவதாகவும் கொழும்பு மாநகரசபை உறுப்பினரான சி. பாஸ்கரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்ட ஒன்றே பொதுமக்கள் காணியில்…
இலங்கை இந்துக்களுக்கு இந்தியப் பிரதமர் உதவக் கோரிக்கை
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் மதமாற்றத்தைத் தடைசெய்யுமாறு கோரியும், இந்து மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க, புதிய இந்தியப் பிரதமர் உதவ வேண்டும் எனக் கோரியும் ஊர்வலமொன்று நடத்தப்பட்டிருக்கின்றது. இலங்கை இந்திய இந்துமக்கள் நட்புறவுக் கழகமும், இந்து சமயப் பேரவையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்ததாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவராகிய யோகராஜா…
ஐ.நா விசாரணைக்குழு இந்த வாரம் அறிவிப்பு! ஆய்வு நடைபெறுகிறது- இந்திய…
இலங்கையில் நடந்த போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான குழுவை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இன்னமும் நியமிக்கவில்லை. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் இந்த விசாரணைக்குழுவின் உறுப்பினர்கள் தொடர்பாக ஆய்வு செய்து வருவதாகவும், கடந்த வாரம் பலரது…