விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
நஜிப் அவர்களே, விமர்சனத்தால் நாட்டுக்கு நன்மையே
நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் சென். பெர்ஹாட்டின் முன்னாள் ஆசிரியர் அப்துல் காடிர் ஜாசின், தாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பொருளாதாரத்தை நிர்வகித்து வரும் முறையைக் குறைகூறியது சரியான ஒன்றே என்கிறார். நாடு நல்லதொரு பொருளாதாரத்தைப் பெற்றிருக்க விமர்சனங்கள் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். பொருளாதாரம் நல்ல முறையில் …
நிலச் சரிவு நிகழ்ந்த ஜாலான் மகாமேருவில் இரண்டு தடங்கள் திறக்கப்பட்டன
நேற்று மாலை புக்கிட் துங்குவில் நிகழ்ந்த நிலச் சரிவால் மூடப்பட்ட மகாமேரு சாலை இன்று காலை மீண்டும் போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டது. நாடாளுமன்றத்திலிருந்து புத்ரா வணிக மையம் நோக்கிச் செல்லும் அச்சாலையின் மூன்று தடங்களில் இரண்டு திறக்கப்பட்டதை அடுத்து அங்கு போக்குவரத்து சுமூகமாக நடைபெற்று வருவதாக போக்குவரத்து போலீஸ் …
ரபிஸி: ஜிஎஸ்டி விளக்கமளிப்புக்கு நிறைய செலவிடுவது அதன் நோக்கத்தைத் தோற்கடிக்கும்…
பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) பற்றி விளக்கமளிக்க ஒரு இயக்கத்தைத் தொடங்கி அதற்காக பெரும்பணத்தைச் செலவிடுவது எந்த நோக்கத்துக்காக அந்த வரி அடுத்த ஆண்டில் அமல்படுத்தப்படவிருக்கிறதோ அந்த நோக்கத்தையே தோற்கடித்து விடும் என்று பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி கூறினார். “பற்றாக்குறை நிலையைச் சரிக்கட்டவும் செலவுகளைக் குறைக்கவும் ஜிஎஸ்டி…
மகாதிர்: புத்ரா ஜெயாவில் ஹார்ட் ரோக் கபே இருக்கலாம், தப்பில்லை
புத்ரா ஜெயாவில் ஹார்ட் ரோக் கபேயைத் திறப்பதால் கேடு எதுவும் நேர்ந்துவிடாது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். நாட்டின் நிர்வாக தலைநகரமானது அது கேளிக்கைகளுக்கு எதிரானது அல்ல. ஆனால், மதுபானங்கள், கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு அங்கு இடமில்லை என்பதை அவர் வலியுறுத்தினார். “நமக்குப்…
கிறிஸ்துவர்களுக்கு மலாய்மொழி பைபிளா? நம்பலாமா?
‘மலாய்க்காரர்களிடையே கிறிஸ்துவ சமயத்தைப் பரப்பும் முயற்சி இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொறுப்பு’ சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்)க்கு உண்டு. அப்படிப்பட்ட முயற்சிகள் இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது என ஷியாரியா வழக்குரைஞர் சங்கத் தலைவர் மூசா ஆவாங், மலேசியாகினிக்கு அனுப்பிவைத்த அறிக்கையில் குறிப்பிட்டார்.. ஆனால், ஒரு விசயம்தான் நெருடலாக…
பிஎஸ்எம் தலைவர்: முஸ்லிம்களிடம் மதப் பிரச்சாரம் செய்தோம் என்பதற்கு ஆதாரமில்லை
மலேசிய பைபிள் கழகம் (பிஎஸ்எம்), முஸ்லிம்களிடம் மதப் பிரச்சாரம் செய்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் அதனிடமிருந்து கைப்பற்றப்பட்ட பைபிள்களை மாநில அரசு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. 1985-இலிருந்து பைபிள்களை விநியோக்கும் ஒரு மையமாகத்தான் பிஎஸ்எம் செயல்பட்டு வருகிறது என அதன் தலைவர் லீ…
பைபிள் கழகத்துக்குள் செல்ல எம்பிபிஜே அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது
பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற (எம்பிபிஜே), அதிகாரிகள் இன்று மலேசிய பைபிள் கழக(பிஎஸ்எம்) த்துக்குள் சென்று சோதனை செய்ய விரும்பினார்கள். ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த வாரம் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை (ஜயிஎஸ்) பிஎஸ்எம்மில் அதிரடிச் சோதனை நடத்தியது நினைவிருக்கலாம். இதன் தொடர்பில் பிஎஸ்எம் தலைமைச் …
அல்லாஹ் விவகாரத்தில் புத்ரா ஜெயா தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்
“அல்லாஹ்” என்னும் சொல்லைப் பயன்படுத்துவது தொடர்பில் முரண்பாடான கொள்கைகள் இருப்பதால் அச்சொல்லை முஸ்லிம்-அல்லாதார் பயன்படுத்தலாமா கூடாதா என்பதில் புத்ரா ஜெயா தீர்க்கமான ஒரு முடிவைச் செய்திட வேண்டும் என சிலாங்கூர் அரசு, விரும்புகிறது. அவ்விவகாரத்தில் விளக்கம் கேட்டு மாநில அரசு உள்துறை அமைச்சுக்குக் கடிதம் எழுதும் என சிலாங்கூர்…
டிஏபி: சூதாட்ட வரியைக் கொண்டு மலாய்க்காரர்-அல்லாதாருக்கு உதவலாம்
சூதாட்டம் வழியாகப் பெறும் வருமானத்தைத் தனிக் கணக்கில் போட்டுவைத்து அதை முஸ்லிம்-அல்லாதாரின் நலனுக்கும் கல்விக்கும் கலாச்சார நடவடிக்கைகளுக்கும் செலவிடலாம் என்ற கருத்தை டிஏபி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அப்படிச் செய்வதால் “ஒரே கல்லில் இரண்டு மாங்காயை வீழ்த்தியவர்கள் ஆவோம்” என்கிறார் சிரம்பான் எம்பி அந்தோனி லொக். அது, ஹலால்-அற்ற வருமானம் …
ஹாங் காங் ஊடக சக்கரவர்த்தி ரன் ரன் ஷா 107…
ஹாங் காங்கிலும் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளிலும் சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் கோலோச்சிய ரன் ரன் ஷா இன்று 107-வது வயதில் காலமானார். ஹாங் காங்கில் அவரது இல்லத்தில் குடும்பத்தார் சூழ்ந்திருக்க ஷா அமைதியாகக் கண் மூடினார் என அவரது நிறுவனம், டெலிவிஷன் புரோட்காஸ்ட்ஸ் லிமிடெட்(டிவிபி) …
தூங்குமூஞ்சி கவுன்சிலர் சிஎம்மிடம் குட்டுப் பட்டார்
நேற்று பினாங்கு முனிசிபல் மன்ற(எம்பிபிபி) கவுன்சிலர்கள் பதவி-உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் சடங்கின்போது ஒரு கவுன்சிலர் தூங்கி விழுவதை முதலமைச்சர் லிம் குவான் எங் கவனித்து விட்டார். பின்னர், லிம் தம்முரையில் அதை சுட்டிக்காட்டினார். கவுன்சிலரின் பெயரைக் குறிப்பிடாமலேயே, “அது முறைகேடானது. (கவுன்சிலர்) இப்படியா பதவியைத் தொடங்குவது”, என்றவர் கடிந்து கொண்டார்.…
கம்போங் செட்டி ஊடாக செல்லும் சாலையால் வீடுகள் உடைபடலாம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கம்போங் செட்டிக்குப் பக்கத்தில் கொண்டோமினியமும் தங்கும் விடுதியும் கட்டப்படுவதால் பாரம்பரியச் சிறப்புமிக்க அந்தக் கிராமம் பாதிக்கப்படாது என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தாலும் கிராமத்தின் ஊடே ஒரு சாலை கட்டப்படும் எனத் தெரிவதால் அச்சாலையால் குறைந்தது 13 வீடுகளாவது இடிக்கப்படலாம். கம்போங் செட்டி நடவடிக்கைக் குழுப் பேச்சாளர் டி.…
கிறிஸ்துவர்களுக்கு ஆதரவாக பேசும் மரினாவுக்கு பெர்காசா கண்டனம்
பெர்காசா, முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசாமல் கிறிஸ்துவர்களை அதரிக்கும் சமூக ஆர்வலர் மரினா மகாதிருக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “பொதுமக்களுக்குத் தெரியும், ஓரினச் சேர்க்கையாளர் போன்றோருக்காகக் குரல் கொடுப்பவர்களில் ஒருவர்தான் மரினா மகாதிர் என்பது. “நேற்று கிள்ளான் தேவாலயத்துக்குக் கிறிஸ்துவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த அவரது நோக்கம்தான் என்ன? “இன்னொரு …
மசீசவும் கெராக்கானும் குவான் எங்மீது பாய்ந்தன
கிறிஸ்துவர்களை எதிர்க்கும் அம்னோவை கெராக்கான் ஆதரிப்பதாகக் கூறுவதன்வழி டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஏற்கனவே பதற்றமடைந்துள்ள நிலைமையை மேலும் மோசமாக்கப் பார்க்கிறார் எனக் கெராக்கானும் மசீசவும் சாடியுள்ளன. “கெராக்கானுக்கு எதிரான கண்மூடித்தனமான ஒரு குற்றச்சாட்டைச் சுமத்தியதன்வழி லிம், சமயங்களுக்கிடையில் அதிகரித்துவரும் பதற்றத்தைக் குறைக்க ஒரு அரச…
ஜயிஸின் அதிரடிச் சோதனைக்கு வருத்தம் தெரிவித்த என்யுசிசி அதைத் தப்பென்று…
தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றம் (என்யுசிசி), இன்று அதன் தொடக்கக் கூட்டத்தில், மலேசிய பைபிள் கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது பகாசா மலேசியா, இபான் மொழி பைபிள்கள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டது. ஆனால், புத்ரா ஜெயா ஆதரவில் செயல்படும் அம்மன்றம், அந்நடவடிக்கை தப்பு எனச் சொல்லத்…
சிஎம்: சுல்தான் எனச் சுயமாக அறிவித்துக் கொண்டிருப்பவருக்கு அவ்வாறு கூறிக்கொள்ள…
ராஜா நூர் ஜான் ஷா ராஜா துவாவுக்கு தம்மை மலாக்கா சுல்தானாக பிரகடனப்படுத்திக் கொள்ளும் உரிமை கிடையாது. மலாக்காவின் ஆட்சி அதிகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூட்டரசு அரசமைப்பும் மலேசிய சட்டங்களும் வரையுறுத்துள்ளன என முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன் கூறினார். “கூட்டரசு அரசமைப்பு மலாக்கா யாங் டி-பெர்துவா …
பிகேஆர்: சகிப்புத்தன்மை இன்மையால் மலேசிய வருகை ஆண்டு பாதிக்கப்படும்
சமயச் சகிப்புத்தன்மை குறைந்திருப்பதும் ஒரு சமயத்துக்கு எதிராக இன்னொரு சமயத்தவர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதும் சுற்றுப்பயணிகளுக்கு அச்சத்தைக் கொடுத்து ‘2014 மலேசிய வருகை ஆண்டு’ திட்டங்களைக் கெடுத்து விடலாம் என சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான் எச்சரித்துள்ளார். “மலேசியா சமய உரிமைகளைச் சகித்துக்கொள்ளாத நாடுகளில் ஒன்று எனப் பெயர்…
நிதானம் தேவை: அரசு ஊழியருக்கு பிரதமர் அறிவுறுத்தல்
‘அல்லாஹ்’ சொல்லைப் பயன்படுத்தும் விவகாரம் பதற்றமிக்க சூழல் உருவாக்கி இருந்தாலும் அரசுப் பணியாளர்கள் அமைதியாகச் செயல்பட்டு சமூகங்களிடையிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தினார். இன்று காலை பிரதமர்துறை ஊழியர்களிடையே மாதாந்திர உரை நிகழ்த்திய நஜிப், அப்படிப்பட்ட பிரச்னைகள் மிகவும் பாடுபட்டு…
புத்ரா ஜெயாவில் ஹாட்ரோக் கபே? கூடவே, கூடாது: பெர்காசா
புத்ரா ஜெயாவில் ஹாட்ரோக் கபே ஒன்றை நிறுவும் திட்டத்தை பெர்காசா இளைஞர் பகுதி எதிர்க்கிறது. அதன் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ், நேற்று விடுத்த அறிக்கையொன்றில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மதினா நகரை அடிப்படையாக வைத்து புத்ரா ஜெயாவை உருவாக்கியுள்ளார் எனக் குறிப்பிட்டார். “எனவே, இஸ்லாத்தை…
523 தமிழ்ப்பள்ளிகள் இருக்குமா? இருக்காதா?
-மு. குலசேகரன், ஜனவரி 5, 2014. நாட்டிலுள்ள 523 பள்ளிகளில் எந்தப் பள்ளியையும் நாங்கள் மூட விடமாட்டோம் என்று சூளுரைத்தவர்கள் இன்று பேரா மாநிலத்தில் இயற்கை சாவை எதிர் நோக்கியிருக்கும் சுமர் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு என்ன வைத்தியம் செய்து உயிர் கொடுக்கப் போகிறார்கள் ? இன்னும் புதிதாக…
கிறிஸ்துவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசாங்கத்தை மரினா வன்மையாகக்…
கடந்த ஒரு வார காலமாக கிறிஸ்துவ தேவாலயங்களுக்குமுன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் போவதாக மிரட்டி வரும் மிதவாத தரப்பினர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்காக அரசாங்க தலைவர்களை சமூக ஆர்வலர் மரினா மகாதிர் வன்மையாக கண்டித்தார். செகிரிடேரியட் சோலிடேரிட்டி முஸ்லிம் கிள்ளான் போன்ற முஸ்லிம் அமைப்புகள் கிறிஸ்துவர்கள் அரசாங்கம்…
அச்சுறுத்தல் இருந்தாலும், தேவாலயம் “அல்லா” என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்துகிறது
ஆர்ப்பாட்டத்திற்கான அச்சுறுத்தல்களுக்கிடையில், கிள்ளான், லேடி ஆப் லூர்ட்ஸ் சர்ச் இன்று அதன் மலாய் மொழி பிராத்தனையில்"அல்லா" என்ற சொல்லை தொடார்ந்து பயன்படுத்தியது. பிராத்தனையின் போது அச்சொல் குறைந்தது நான்கு முறை பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், பிராத்தனையின் பெரும் பகுதியில் கடவுளைக் குறிக்கும் "துஹான்" மற்றும் "பாப்பா" என்ற சொற்கள்…
சிலாங்கூர் அம்னோ “அல்லா” எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தடையை மீறியது
கிறிஸ்துவர்கள் "அல்லா" என்ற சொல்லை பயன் படுத்துவதை எதிர்க்கும் ஆர்பாட்டத்தில் கட்சி உத்தரவையும் மீறி இன்று சிலாங்கூர் அம்னோ உறுப்பினர்கள் கிள்ளானில் பங்கேற்றனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் லேடி ஆப் லூர்ட்ஸ் சர்ச்சின் முன்பு நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு எதிரான கடும் கண்டனங்களைத் தொடர்ந்து,…


