சிறைச்சாலையை விடுங்கள், புத்ரா ஜெயா பற்றிப் பேசுங்கள் : குவான்…

டிஏபி, சீனர்- அல்லாதாரின்  ஆதரவைப்  பெற விரும்பினால்  கடந்தகால,  கடினப்போக்குக் கொண்ட  அணுகுமுறைகளைக்  கைவிட்டு  பரிவுமிக்க,  இதமான  அணுகுமுறைகளைக்  கைக்கொள்ள  வேண்டும் என  அதன்  தலைமைச்  செயலாளர் லிம்  குவான்  எங்  வலியுறுத்தினார். இன்று,  பத்து பகாட்டில்,  ஜோகூர்  டிஏபி  ஆண்டுக்கூட்டத்தைத்  தொடக்கிவைத்து  உரையாற்றிய  பினாங்கு  முதலமைச்சருமான லிம், …

கைரி: பிஎன் தலைவர்களின் இணைய அணுகுமுறை எடுபடவில்லை

பிஎன் தலைவர்கள்  சிலரது  இணைய  அணுகுமுறை பொதுமக்களைக் கவரவில்லை  என்கிறார்  அம்னோ இளைஞர் தலைவர்  கைரி ஜமாலுடின்.  “பிஎன் தலைவர்கள் பலர்  சமூக  வலைத்தளங்களில்  ஆர்வத்துடன்  ஈடுபாடு  காட்டுவதைப்  பார்க்கிறேன்.  ஆனால், அவர்கள்  தங்கள்  ஆதரவாளர்களுடன்  பேசுகிறார்களே  தவிர அவர்களுக்கு  அப்பாற்பட்டவர்களுடன்,  யாரையும் சாராமல்  தனியே  இருப்பவர்களுடன்  பேசுவதாகத் …

ஜயிஸ் அதிரடிச் சோதனை தொடர்பில் “பிடிவாதமாக மெளனம் காக்கும்” பிரதமரை…

மலேசிய பைபிள் கழகத்தில்  அதிரடிச்  சோதனை  நடத்தி  மலாய்மொழி  பைபிள்கள்  பறிமுதல்  செய்யப்பட்ட  விவகாரம்  தொடர்பில் “பிடிவாதமாக மெளனம் காக்கும்” பிரதமர் அப்துல்  ரசாக்கை  சரவாக்கின்  இபான் கிறிஸ்துவ சமூகத்தினர் சாடியுள்ளனர். ஜனவரி 2-இல்,  சிலாங்கூர்  இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்)  மேற்கொண்ட அச்சோதனை,  அமைச்சரவையின் 10-அம்ச ஒப்பந்தம் …

சீபோர்ட் தமிழ்ப்பள்ளி: வகுப்புகளை நடத்த பெற்றோர்களே ஏற்பாடு செய்கின்றனர்

  சீபோர்ட் தமிழ்ப்பள்ளி இதுவரையில் கிளானாஜெயாவில் இயங்கிய இடத்திலேயே நிலைநிறுத்துவதற்காக போராடி வரும் பெற்றோர்கள் அப்பள்ளியில் பாட வகுப்புகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யவிருக்கின்றனர், ஏனென்றால் சிலாங்கூர் மாநில கல்வி இலாகா அப்பள்ளியில் வகுப்புகளை நடத்துவதற்கு ஆசிரியர்களை தர மறுத்து விட்டது. இன்று பின்னேரத்தில் துணைக் கல்வி அமைச்சர் பி.…

பாஸ்: தீர்த்தம் முஸ்லிம்களை கிறிஸ்துவர்களாக மாற்றாது

  முஸ்லிம்கள் கிறிஸ்துவ தேவாலயத்தில் காலடி வைத்தாலோ, தீர்த்தம் அவர்களுடைய உடம்பில் பட்டுவிட்டாலோ அவர்கள் எப்படியோ கிறிஸ்துவர்களாகி விடுவார்கள் என்ற அவர்களின் பயம் அறிவுக்கு ஒவ்வாதது என்று  பாஸ் கட்சியின் பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் முஜாஹிட் யுசுப் ராவா கூறுகிறார். "தேவாலயத்திற்கு போனதும் திடீரென்று கிறிஸ்துவர் ஆகிவிடுவது…

தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றதிற்கு போர்கால நடவடிக்கைகள் தேவை!

  -மு. குலசேகரன், ஜனவரி 11, 2014.   சுதந்திரம் பெற்ற பொழுது நமக்கு 1000 பள்ளிகள் இருந்தன. இப்பொழுது காலச்சக்கரத்தினால் நசுக்கப்பட்டு மிஞ்சி இருப்பவை வெறும் 523 பள்ளிகளே !   தமிழ் பிள்ளைகள் தமிழ்ப்பள்ளிகளைவிட தேசியப்பள்ளிகளில் சேர வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்து வருகிறது.…

சீக்கியர்கள் ‘அல்லாஹ்’ சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்

சீக்கியர்கள்  இறைவனைக்  குறிக்க  ‘அல்லாஹ்’ என்னும்  சொல்லைத்  தொடர்ந்து  பயன்படுத்துவார்கள். அச்சொல்லைப்  பயன்படுத்த  சீக்கிய  சமூகத்துக்குத்  தடை  இல்லை  என மூத்த  வழக்குரைஞர்  கர்பாலா  சிங்  கூறினார். “அது  சீக்கியர்  புனித  நூலான குரு கிரந்த்  சாஹிப்பில்  உள்ளது. எப்போதுமே  இருந்து  வந்துள்ளது. அதைத் தொடர்ந்து  பயன்படுத்தி  வருவோம்.…

பெர்சே 3.0 வழக்கில் அன்வார், அஸ்மின் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி

கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றம்,  2012 பெர்சே  3.0 பேரணியில் கலந்துகொண்டதற்காக அன்வார் இப்ராகிம்,  அஸ்மின்  அலி,  பட்ருல்  ஹிஷாம்  ஷரின் ஆகியோர்  மீதும் மேலும்  மூவர்மீதும்  சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை   இன்று  தள்ளுபடி செய்தது. கடந்த  வாரம் மேல்முறையீட்டு  நிதிமன்றம்,  பேரணிக்குத்  தடைபோட்ட  ஒரு  மெஜிஸ்ட்ரேட்டின்  ஆணை  சட்டவிரோதமானது  என்று …

போலீஸ் ‘இரத்தம் சிந்த’ச் சொன்ன முப்தியையையும் விடவில்லை, விசாரித்தது

புத்தாண்டுக்கு  முதல்நாள்  விலை-உயர்வை  எதிர்த்து  பேரணி  நடத்தியவர்களைக்  கொல்வது  தப்பில்லை  என்று  கூறிய  பேராக்  முப்தி  ஹருஸ்ஸானி  ஜக்கரியாவிடம்  போலீசார்  ஏற்கனவே  வாக்குமூலம் பதிவு  செய்து  விட்டனர். “அதில்  (தேசியப்  பாதுகாப்புக்கு) மிரட்டல்  விடுவதாக  எதுவும்  இருக்குமானால்  அதன்மீது  விசாரணை நடத்தப்படும்.  “குறிப்பிட்ட  சிலர்தான்  பாதுகாப்புக்கு  மிரட்டல்  என்பதில்லை.…

மகாதிர்: ஐஎஸ்ஏ திரும்ப வர வேண்டும்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  நாட்டின் நிலைத்தன்மைக்குக் குழிபறிக்கும் “தீவிரவாத  சிறுபான்மைக் கும்பலின்”  செயல்களை ஒடுக்க  உள்நாட்டுப் பாதுகாப்புச்  சட்டத்தை (ஐஎஸ்ஏ) அரசாங்கம் திரும்பக்  கொண்டுவர  வேண்டும்  என  வலியுறுத்தினார். முதிர்ச்சியற்ற  அக்கும்பல்  மற்ற  சமயத்தவரை  உணர்ச்சி வசப்பட வைக்கும் வகையில்  பேசி  வருவதுடன்  நாட்டின் இணக்க…

ஒழுங்கு வாரியத்தின் முடிவைத் தள்ளிவைக்கும் முயற்சியில் ஷாபி தோல்வி

பிரபல  வழக்குரைஞர்  முகம்மட்  ஷாபி  அப்துல்லா  வழக்குரைஞர்,  ஒழுங்கு வாரியம் அவருக்கு விதித்த  ரிம5,000 அபராதத்தைத்  தள்ளுபடி  செய்ய நீதிமன்றத்தில்  செய்திருந்த முறையீடு  வெற்றிபெறவில்லை. வழக்குரைஞர் தொழில் ஒழுங்குவிதியை  மீறினார்  என்பதற்காக  2012, செப்டம்பரில்  வாரியம்  அவருக்கு  அந்த அபராதத்  தொகையை  விதித்திருந்தது. “வழக்குரைஞர்  மன்றத்தின்  முடிவில்  நீதிமன்றம்…

பாவ வரி தொடர்பில் டிஏபி-இன் பரிந்துரைக்கு பெர்காசா ஆதரவு

அடிக்கடி  முட்டி  மோதிக்கொள்வதையே  வழக்கமாகக் கொண்ட டிஏபியும்  மலாய்க்காரர்  உரிமைகளுக்காக  போராடும் என்ஜிஓ-வான பெர்காசாவும்  பாவ  வரிகளைப்  பொறுத்தவரை  ஒத்த  சிந்தனையைக்  கொண்டிருப்பதாக  தெரிகிறது. பாவ  வரிகள்  மூலம்  கிடைக்கும்  வருமானத்தை  அரசாங்கம்  தொகுநிதிக் கணக்கில்  சேர்க்காமல்  தனியாக  வைக்க  வேண்டும்  என்று  டிஏபி-இன்  சிரம்பான்  எம்பி   அந்தோனி…

அனைத்துசமயக் குழு: ஜயிஸின் அதிரடிச் சோதனை வருந்தத் தக்கது

மலேசிய  பைபிள் கழகத்தில்  மேற்கொள்ளப்பட்ட  அதிரடிச்  சோதனையை  எண்ணி வருந்துவதாக  மலேசிய அனைத்துசமய  மன்றம்  கூறியது. ஜனவரி  2-இல், சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை (ஜயிஸ்) அங்கு  அதிரடிச் சோதனை  மேற்கொண்டு    மலாய்மொழி  பைபிள்கள் பலவற்றைக் கைப்பற்றிய  சம்பவம் “சட்ட  விரோதமானது”  என  மலேசிய  பெளத்தம், கிறிஸ்துவ, இந்து, …

26 பொருள்களின் விலை உயரும்

எல்லாத் துறைகளிலும்  விலையேற்றம்  நடப்புக்கு  வந்த  பின்னர் குறைந்தது  26 பொருள்கள்  மற்றும்  சேவைக் கட்டணங்கள்  விலை உயரும்  என்கிறார் யுனிவர்சிடி  உத்தாரா மலேசியா(யுயுஎம்)  பேராசிரியர்  ஒருவர். நேற்று  சினார்  ஹரியான்  ஏற்பாடு  செய்திருந்த  விலை உயர்வு  மீதான  கருத்தரங்கத்தில்  கலந்துகொண்டு  பேசிய  யுயுஎம்  பொருளாதாரப்  பேராசிரியர்  அமிர் …

மலேசியாவில் மனித உரிமைகள் கூட்டமைப்புக்குத் தடை

கோமங்கோ என்ற மனித உரிமைகள் கூட்டமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது, மலேசியா கடுமைவாத இஸ்லாமிய குழுக்களுக்கு அடிபணிந்து வருவதைக் காட்டுகிறது என சாடுகிறார் சுவராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம். இவரின் தொலைபேசி பேட்டியை (இங்கே சொடுக்கவும்) பிபிசி தமிழோசை இன்று வெளியிட்டது. இதன் ஒருங்கிணைப்பாளர் சிவராமகிருஷ்ணனின் கேள்விகளுக்குப் பதிலளித்த…

விசாரணைக்காக அமைச்சரின் உதவியாளர் கைது

அமைச்சரின்  சிறப்பு  அதிகாரி  ஒருவரும்,  டத்தோ  பட்டம்  கொண்ட ஒரு வணிகர் உள்பட  மேலும்  இருவரும் ஊழல் தொடர்பான  விசாரணைக்கு உதவியாக தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர். அமைச்சின் சுத்திகரிப்பு  வேலைக்கான  குத்தகை  தொடர்பில் அம்மூவரிடமும்  விசாரணை  நடப்பதாக  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம்  அதன்  அறிக்கையில்  கூறி  இருந்தது. தடுத்து வைக்கப்பட்டவர்களின் …

ஜயிஸ் மற்றவர் சமய உரிமைகளை மீறவில்லை

சிலாங்கூர்  இஸ்லாமிய  சமய  விவகார மன்றம் (மயிஸ்), அதன் அமலாக்கப்  பிரிவான மாநில  இஸ்லாமிய  விவகாரத் துறை (ஜயிஸ்),  அதிரடிச்  சோதனை  நடத்தி  பைபிள்  பிரதிகளைக் கைப்பற்றிய  நடவடிக்கையைத்  தற்காத்துப்  பேசியுள்ளது. ஜயிஸ்  மற்றவர்களின்  சமய  உரிமைகளை  மீறியதாகக்  குறைகூறப்படுவது  பற்றிக்  கருத்துரைத்த  மயிஸ்  தலைவர் முகம்மட்  அட்சிப் …

பாதர் லாரன்ஸ் மீதான விசாரணையை போலீஸ் கைவிடாது

கத்தோலிக்க  வார  இதழான த ஹெரால்ட்-இன்  ஆசிரியர்  பாதர்  லாரன்ஸ்  எண்ட்ரு  மீதான   விசாரணை  அறிக்கை சட்டத்துறை தலைவர் (ஏஜி)  அலுவலகம்  அனுப்பப்பட்டு  அது  போதாது என்று  ஏஜி திருப்பி  அனுப்பி விட்டாலும்கூட  போலீஸ்  அவர்மீதான விசாரணைக்  கைவிடப்போவதில்லை. அவர்மீதான  விசாரணை  தொடரும். ஏஜி  அலுவலகம்  அனுப்பப்படும்  ஆவணங்கள்,…

‘ஹெரால்ட்’ ஆசிரியர் முஸ்லிம்களின் மனத்தைக் காயப்படுத்தப் புறப்பட்டிருக்கிறார்

கத்தோலிக்க  வார இதழ்  ஆசிரியர்  பாதர்  லாரன்ஸ்  அண்ட்ரு, சிலாங்கூர் தேவாலயங்களில் இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்னும் சொல்  தொடரந்து  பயன்படுத்தப்பட்டு  வரும்  என வலியுறுத்தி  வருவது  அவர் “முஸ்லிம்களின் மனத்தை நோகடிப்பதில்” முனைப்பாக  இருக்கிறார்  என்பதைக்  காண்பிக்கிறது. முன்னாள் பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட் இவ்வாறு  குறிப்பிட்டதாக …

யுஎஸ் இமாம்: ‘அல்லாஹ்’என்ற சொல்ல தடைபோடுவது இறைவனைக் களங்கப்படுத்தும் செயல்

இறைவன்  பெயரைப்  பாதுகாப்பதாகக்  கூறும் மலேசிய இஸ்லாமிய  அதிகாரிகள்  உண்மையில்  அல்லாஹ்-வின் பெயரைக் “களங்கப்படுத்துகிறார்கள்” என அமெரிக்க  இமாம் ஒருவர்  கூறியுள்ளார். மலேசியாவில்  முஸ்லிம்- அல்லாதார்  ‘அல்லாஹ்’ என்று சொல்ல  தடைவிதித்திருப்பது  திருக்குர்ஆன் போதனைகளுக்கு  எதிரானது  என  செண்ட்ரல்  புளோரிடா  இஸ்லாமியக்  கழகத்தின்  தலைவரான  இமாம்  முகம்மட்  முஸ்ரி …

டிஏபி: கோமாங்கோ-வைச் சட்டவிரோதமானது என அறிவித்தது கேலிக்குரியது

என்ஜிஓ-களின் கூட்டமைப்பான  கோமாங்கோவைச் சட்டவிரோதமானது என்று  உள்துறை  அமைச்சு அறிவித்திருப்பதை  டிஏபி-இன் டோனி  புவா  கேலி  செய்துள்ளார். நடப்பு உள்துறை  அமைச்சரான  அஹமட் ஜாஹிட்  ஹமிடி,  பெர்சே 2.0-ஐ  சட்டவிரோத அமைப்பு  என்று  அறிவித்த  முன்னாள் அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேனை  “மிஞ்சப் பார்க்கிறார்  என புவா  கூறினார். “பெர்சே …

முகைதின் எழுத்தாளர்களை ‘அவமதித்தார்’ என உதயசங்கர் இடித்துரைத்தார்

துணைப் பிரதமர் முகைதின் யாசின்  எழுத்தாளர்கள்  அரசாங்க- ஆதரவாளர்கள்  என்று  கூறியதன்வழி  அறிவுஜீவிகளை  அவமதித்து  விட்டார்  என எழுத்தாளர் உதயசங்கர் எஸ்.பி. கூறினார். அப்படிக் கருத்துரைப்பது  படைப்புத்திறனாளிகளின்  அறிவுத்திறத்தையும் அவர்களின் நேர்மையையும்  கண்ணியத்தையும்  களங்கப்படுத்துவதாகும்  என்றாரவர். சர்ச்சைக்குரிய  இண்டர்லொக் நாவலை  மாணவர்-பதிப்பாக  திருத்தி  வெளியிட  ஒரு  குழு  அமைக்கப்பட்டபோது …

ஆறுமாதம் கூடாரங்களில் வாழ்ந்தவர்களுக்கு ஒரு விடிவு காலம்

தங்கள்  வீடுகள் இடிந்து  விழலாம்  என்று  அஞ்சியதால்  அவற்றுக்குத்  திரும்பிச் செல்ல  மறுத்து வெளியில் பல மாதங்களாகக் கூடாரங்கள்  அமைத்துக்கொண்டு அவற்றிலே  வாழ்க்கை  நடத்தி  வந்த டிங்கில் தாமான்  பெர்மாத்தா  அடுக்குமாடி  குடியிருப்பாளர்களுக்கு  இப்போது  ஒரு நல்ல  செய்தி  கிடைத்துள்ளது.  கூட்டரசு  அரசாங்கம்  அவர்களுக்குப் புது  வீடுகள் கட்டிக்கொடுக்க …