மலேசிய சோசியாலிஸ் துணைத் தலைவர் எஸ். அருட்செல்வனை விசாரிக்கத் தண்டனைச் சட்டத்தின் 353வது பிரிவைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது என்று சுவாராம் கூறியது. மலேசியாவின் போராட்ட மரபைப் பின்பற்றும் ஒரு நடைமுறையான அமைதியான போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நெருங்குவதை காவல்துறையினர் தடுத்ததே இதற்குக் காரணம் என்று அதன் நிர்வாக இயக்குநர் அசுரா…
பாஸ் கட்சியால் பிஎஸ்எம் தலைவர் தொகுதியில் சர்ச்சை தொடர்கிறது
கோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியில் பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் பிகேஆரின் சின்னத்தில் போட்டியிடுவார் எனப் பேசி முடிவுகாணப்பட்டுள்ள வேளையில் இப்போது பாஸ் கட்சியால் பிரச்னை உருவாகும்போல் தெரிகிறது. அத்தொகுதிமீது அதுவும் கண்வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. சினார் ஹரியானில் வெளியாகியுள்ள ஒரு செய்தியை அடுத்து இப்படியொரு பேச்சு அடிபடுகிறது. சுபாங்…
ஒதுக்கப்பட்டதால் அம்னோ மகளிர் துணைத் தலைவி ஏமாற்றம்
தம்மை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு வேட்பாளராக நிறுத்தாது குறித்து அம்னோ மகளிர் துணைத் தலைவி காமிலியா இப்ராஹிம் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளார். அந்தப் பிரிவின் உயர் தலைவர்கள் ஆற்றியுள்ள பங்கை கூட்டணி அங்கீகரிக்கத் தவறி விட்டதையே அது காட்டுகிறது என அவர் சொன்னார். மகளிர்…
கேமிரன் ஹைலண்ட்ஸில் பழனிவேலை எதிர்த்து எம் மனோகரன் போட்டி
நடப்பு தெலுக் இந்தான் டிஏபி எம்பி எம் மனோகரன், கேமிரன் ஹைலண்ட்ஸ் நாடாளுமன்றத் தொகுதிக்கான போராட்டத்தில் மஇகா தலைவர் ஜி பழனிவேலை எதிர்த்துக் களமிறங்குவார். டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று அந்தத் தகவலை அறிவித்தார். பழனிவேல் மஇகா தலைவராகவும் கூட்டரசு அமைச்சராகவும் இருப்பதால் அந்த…
பிஎன் பயமுறுத்துகின்றது, வளங்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றது என பெர்சே சாடுகிறது
பிஎன் தனது பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அச்சத்தை மூட்டுவதாகவும் அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் பெர்சே குற்றம் சாட்டியுள்ளது. "அரசாங்க மாற்றம் இடையூறுகளை ஏற்படுத்தும் எனக் கூறி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்த பிஎன் தலைவர்கள் இன்னும் முயன்று வருகின்றனர்," என அந்த அமைப்பைச் சேர்ந்த ஐரின் பெர்ணாண்டஸ் இன்று…
அரசியல் வன்முறை: நஸ்ரிக்கும் போலீசுக்கும் பெர்சே பாராட்டு
தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அமைப்பு, அரசியல் வன்செயல்களுக்கு எதிராக போலீசார் விரைந்து நடவடிக்கை எடுப்பர் என்று அறிவித்துள்ள பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீசைப் பாராட்டியுள்ளது. அதேவேளை, விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அரசியல் வன்செயல்கள் மீதான போலீஸ் விசாரணை…
நஜிப் நேர்மை வாக்குறுதியை மீறியதாக வெளிப்படைக் கழகம் கூறுகிறது
பிஎன் தலைவர் நஜிப் ரசாக், பல்வேறு சலுகைகளை வழங்கியதின் மூலமும் தம்மை ஆதரிக்குமாறு அரசு ஊழியர்களைக் கேட்டுக் கொண்டதின் மூலமும் தாம் கையெழுத்திட்ட நேர்மை வாக்குறுதியை மீறியுள்ளதாக மலேசிய அனைத்துலக வெளிப்படைக் கழகம் கூறியுள்ளது. அது சுட்டிக் காட்டியுள் சில விஷயங்கள்: 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட…
பாஸில் ஜைட் இப்ராகிமுக்கு இடமில்லை
கிளந்தான் பாஸ், கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான தகியுடின் ஹசானைக் களமிறக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், முன்னாள் பிரதமர்துறை அமைச்சர் ஜைட் இப்ராகிமுக்கு அங்கு வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பு இல்லை என்றாகிவிட்டது. அத்துடன் கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் மகன்…
இந்து மதத்தை இழிவுபடுத்தியவருக்கு நஜிப் அங்கிகாரம்; இந்தியர்கள் கொதிப்பு
இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்தியர்களிடையே கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்) இந்து சமயத்தையும் இந்துக் கடவுள்களையும் பகிரங்கமாக இழிவுபடுத்திப் பேசி, இந்தியர்களின் மனதைப் புண்படுத்திய முன்னாள்…
ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் நஜிப் இன்று கையொப்பமிடுகிறார்
ஹிண்ட்ராப் மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டிற்காக வரைந்துள்ள அதன் ஆறு கூறுகள் அடங்கிய பெருந்திட்டத்தை பாரிசான் ஏற்றுகொண்டுள்ளது. அது குறித்த சில அறிவிப்புகளை பிரதமர் நஜிப் இன்று செய்வார் என்று ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என். கணேசன் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார். பிரதமர் கலந்துகொண்டு ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் கையொப்பமிடும்…
பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு கூடுகிறது
பினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியலிலிருந்து விடுபட்ட மூன்று பிஎன் தலைவர்கள் தங்கள் ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்ததைத் தொடர்ந்து மே 5 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு மேலும் பல பினாங்கு பிஎன் உறுப்புக் கட்சிகளின் தொகுதிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன. கெராக்கானைச் சேர்ந்த பிஎன் மாச்சாங்…
தேர்தல் அறிக்கை மீதான விவாதத்துக்கு நஜிப் வரவில்லை
நேற்று கோலாலும்பூர், சிலாங்கூர் அசெம்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் கொள்கை அறிக்கை மீதான விவாதத்துக்கு, அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்டதுபோல் நஜிப் வரவில்லை. பெர்சே, நஜிப்புக்கும் மாற்றரசு கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் முன்கூட்டியே அழைப்பு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், நஜிப் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. தம் பிரதிநிதியாக…
‘அம்னோ கேலாங் பாத்தாவை இன போர்க்களமாக மாற்றுகிறது’
"சீனப் பெண்களை விலைமாதர்கள் என்றும் இந்தியர்களைப் பிச்சைக்காரர்கள் என்றும் வருணித்தது எந்தக் கட்சி என்பதையும் முஹைடின் மலேசியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்" 'இனவத' டிஏபி-யை நிராகரிக்குமாறு முஹைடின் கேலாங் பாத்தா வாக்காளர்களிடம் சொல்கிறார் அல்பர்ட்தான்98: அந்த மனிதர் (அம்னோ துணைத் தலைவர் முஹைடின் யாசின்) சொல்வதை நீங்கள் நம்புகின்றீர்களா ?…
ஹிண்ட்ராப், நஜிப் சந்திப்பா?
ஹிண்ட்ராப் முன்வைத்த அதன் ஆறு கூறுகள் அடங்கிய பெருந்திட்டத்தை பிரதமர் நஜிப் ஏற்றுக்கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் இன்று (ஏப்ரல் 18) மாலை மணி 6.00 அளவில் பிரிக்பீல்ட்ஸ் விவேகனந்தா தமிழ்ப்பள்ளியில் நடக்க திட்டமிடப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப்புடனான சந்திப்பின்போது கையெழித்திடுவார் என்று கூறும் எஸ்எம்எஸ் செய்தியைப் பலர் பெற்றுள்ளனர். அந்த எஸ்எம்எஸ்…
சுல் நோர்டின் நியமனம் குறித்து மஇகா, பிஎன் வேட்பாளர்கள் கருத்துச்…
பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி மஇகாவையும் மற்ற பிஎன் கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் நிலைபாட்டினைத் தெரிவிக்க வேண்டும். தெரிவிப்பார்களா? என்று சவால் விடுத்துள்ளார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ. சுல்கிப்ளியை பிஎன் வேட்பாளராக…
பெர்சே 3.0 பேரணியை மோசமாக கையாண்டதாக போலீஸ் மீது குறை…
கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியை போலீசார் கையாண்ட முறை 2012 அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் உணர்வுகளுக்கு ஏற்ப அமைந்திருக்கவில்லை என சுஹாக்காம் என்ற மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது. அந்தப் பேரணி தொடர்பாக போலீசார் மீது தெரிவிக்கப்பட்ட புகார்களை விசாரித்த…
கனி டாக்டர் மகாதீருடைய ‘பிரதிநிதியாக’ செயல்படுகிறார் என கிட் சியாங்…
வரும் பொதுத் தேர்தலில் தம்மைப் 'புதைப்பதற்கு' முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் வகுத்துள்ள திட்டத்திற்கு பிரதிநிதியாக கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதியில் தம்மை எதிர்க்கும் அப்துல் கனி ஒஸ்மான் செயல்படுவதாக டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் குற்றம் சாட்டியுள்ளார். தமக்கு எதிராக கனி நிறுத்தப்படுவது,…
எதிர்ப்பு இருந்தாலும் பினாங்கு வேட்பாளர் பட்டியல் ‘இறுதியானது’
13வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தெரிவு செய்யப்படாதவர்களும் கைவிடப்பட்டவர்களும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் பினாங்கு பிஎன் தனது வேட்பாளர் பட்டியலை மறு ஆய்வு செய்யாது. அந்தப் பட்டியல் இறுதியானது. உள் சதிகாரர்கள் மீதான தனது நிலையில் பிஎன் கூட்டணி உறுதியாக இருக்கிறது என மாநில பிஎன் தலைவர் தேங் சாங்…
நஸ்ரி: அரசியல் வன்செயல்களைப் பொறுப்பதற்கில்லை
13வது பொதுத் தேர்தலின்போது அரசியல் வன்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், பிஎன்- ஆதரவாளர்களாக இருந்தாலும்கூட, அதிகாரிகள் விட மாட்டார்கள். “அவர்கள் பிஎன் ஆதரவாளர்களாக இருந்தால்கூட நடவடிக்கை எடுப்போம். தப்புக்குத் தப்பு சரியாகிவிடாது”, என்று பராமரிப்பு அரசாங்கத்தின் சட்ட விவகார அமைச்சரான முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று கோலாலும்பூரில்…
மசீச: 1மலேசியா வெற்றிகண்டு அஞ்சுகிறது பக்காத்தான்
பக்காத்தான் ரக்யாட், 1மலேசியா கொள்கையின் வெற்றி கண்டு அது மக்களின் நெஞ்சைக் கவர்ந்திருப்பதை எண்ணி பயந்து போயிருப்பதாக மசீச நினைக்கிறது. அதுதான், 13வது பொதுத் தேர்தலில் 1மலேசியா அடையாளச் சின்னம் பயன்படுத்தப்படுவதற்கு பக்காத்தான் ரக்யாட்டுடன் தொடர்புகொண்ட என்ஜிஓ-வான சொலிடேரிடி அனாக் மூடா மலேசியா (எஸ்ஏஏஎம்) திடீர் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு…
கனி: மந்திரி புசார் பதவியை முடித்துகொள்வதில் பரம திருப்தி
ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒத்மான், தம் அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரத்தான் அம்னோ தம்மை கேலாங் பாத்தாவில் களமிறக்குவதாக டிஏபி கூறிக்கொள்வதை மறுக்கிறார். தாம் கேலாங் பாத்தா வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை வைத்து டிஏபி அவ்வாறு கூறுவதில் உண்மையில்லை என்றாரவர். கனி, இன்று ஜோகூர் பாரு தங்குவிடுதி…
அன்வாரின் புகழைக்கண்டு அஞ்சவில்லை என்கிறார் போட்டியாளர்
முன்னாள் பினாங்கு பாஸ் தேர்தல் இயக்குனர் மஸ்லான் இஸ்மாயிலிடம் பெர்மாத்தாங் பாவில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமை எதிர்க்கும் பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பினாங்கில் கவனத்தைக் கவரும் இன்னொருவர் பினாங்கு அம்னோ இளைஞர் தலைவர் ரீஸல் நயினா மரைக்கான். அவர் கப்பாளா பத்தாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்குகிறார்.…
‘தண்டா புத்ராவை’ திரையிடுவதற்காக ஜோகூர் UiTM விரிவுரைகளை ரத்துச் செய்தது
'தண்டா புத்ரா' திரைப்படத்தை மாணவர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டும் என்பதற்காக இன்று காலை ஜோகூர் UiTM என்ற மாரா தொழில்நுட்பப் பல்கலைகழகத்தில் எல்லா விரிவுரைகளும் ரத்துச் செய்யப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. "பட்டப்படிப்பு மாணவர்களுக்குக் கட்டாய நிகழ்வு: தண்டா புத்ரா திரையிடப்படுவது" என்னும் தலைப்பைக் கொண்ட குறிப்பு நேற்று…
காலிட்: அந்த ‘செக்ஸ் வீடியோ’வைப் பார்க்க எனக்கும் ஆசைதான்
தம்மைக் களங்கப்படுத்தும் பாலியல் காணோளி ஒன்று வெளியிடப்படும் என்ற மருட்டலுக்கு எதிர்வினையாற்றியுள்ள சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அது வெளியிடப்படுவதில் தமக்கும் தம் மனைவிக்கும் “மகிழ்ச்சியே” என்றார். “அப்படி ஒன்று வெளிவந்தால் நான் அரசியல் ஈடுபாட்டை நிறுத்துவேன், பின்னர் இனிதே உலகை வலம்வரலாம் என்பதை நினைத்து…