அன்வார்: அஸ்மினை மீண்டும் இயக்குனர் ஆக்குவீர்

சிலாங்கூர்  மாநில  மேம்பாட்டுக் கழக (பிகேஎன்எஸ்) இயக்குனர்  பொறுப்பிலிருந்து  அஸ்மின்  அலியை  நீக்க  யாரும்  உததரவிடவில்லை  என்றால்  அவரைத்  திரும்பவும்  இயக்குனராக அமர்த்தலாமே  என்று  அன்வார்  இப்ராகிம்  கூறினார். இயக்குனர்  வாரியத்திலிருந்து  அஸ்மின்  நீக்கப்பட்டதில் சரியான நடைமுறை  பின்பற்றப்படவில்லை  என்பது  தெரிகிறது  என்றாரவர். “மாநில  அரசு  அதை ஒப்புக்கொள்கிறது,…

கேஜே: பொருள்கள் விலை கூடியதற்கு எரிபொருள் விலை உயர்வு காரணமல்ல

உணவுப்பொருள் விலைகள்  மிகவும்  உயர்ந்து  போயிருப்பதற்கு  எரிபொருள்  விலை  உயர்வு  காரணமல்ல  என்கிறார்  இளைஞர், விளையாட்டு  அமைச்சர்  கைரி  ஜமாலுடின். இன்று   கோலாலும்பூர்  மொத்த  விற்பனைச்  சந்தைக்குச்  சென்று  பார்வையிட்ட  கைரி,  பொருள்கள்  விலை  உயர்ந்ததற்கு  மோசமான  வானிலையும் பொருள்களின்  வரத்து  குறைந்து  போனதுமே  காரணம் என்பதை  அங்கு …

ஆட்சிக் குழுதான் அஸ்மியை நீக்க உத்தரவிட்டதாம்- பிகேஎன்எஸ் கூறுகிறது

சிலாங்கூர் மாநில  மேம்பாட்டுக்  கழகம் (பிகேஎன்எஸ்), பிகேஆர்  துணைத்  தலைவர் அஸ்மின்  அலியின்  பிகேஎன்எஸ் இயக்குனர்  பதவியை  நீட்டிக்க  வேண்டாம்  என மாநில  ஆட்சிக்குழுவிடமிருந்து  உத்தரவு வந்ததாகக்  கூறுகிறது. “பிகேஎன்எஸ் சட்டவிதிகளின்படி  வாரிய  உறுப்பினர்களை  நியமனம்  செய்யும்  அதிகாரம்  மாநில  ஆட்சிக்குழுவுக்குத்தான்  உண்டு, பொது  மேலாளருக்கு இல்லை”, என…

மசீச: கைப்பற்றிய பைபிள்களைத் திருப்பிக் கொடுப்பீர்

சிலாங்கூர்  அரசு  தன்  பொறுப்பைத்  தட்டிக்  கழிக்காமல்  சிலாங்கூர்  இஸ்லாமியத்  துறை(ஜயிஸ்),  மலேசிய  பைபிள்  கழகத்தில் அதிரடிச்  சோதனை  நடத்தியபோது  கைப்பற்றிய  பைபிள்  பிரதிகளைத்  திருப்பிக்  கொடுக்க  வேண்டும்  என்று மசீச  வலியுறுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய  அதிரடிச்  சோதனை  குறித்து  பக்காத்தான்  ரக்யாட்டால்  வழிநடத்தப்படும்  மாநில  அரசு  விளக்கம்  கொடுத்ததே …

‘துடோங்’ விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கேட்க வேண்டும்

ஒரு முஸ்லிம்  ஆசிரியையிடம்  அவரது  “துடோங்”கை  அகற்றச்  சொன்னவர்கள்  24 மணி  நேரத்துக்குள்  மன்னிப்பு  கேட்க  வேண்டும்  என  அம்னோ இளைஞர் கல்விப்  பிரிவு  கோரிக்கை  விடுத்துள்ளது.  மன்னிப்பு  கேட்கப்படாவிட்டால்  கல்வி  அமைச்சு  அப்பள்ளி  தலைமையாசிரியரை  பணிநீக்கம்  செய்ய  வேண்டும்  என  அப்பிரிவின்  தலைவரும்  இளைஞர்  பகுதி  நிர்வாகக் …

பினாங்கு அங்காடி வியாபாரிகள் தவறான இடத்தில் கோபத்தைக் காட்டுகிறார்கள்

பினாங்கில்  அங்காடி  வியாபாரிகள், உணவைக்  கையாளும் சரியான  முறைகளைக்  கற்பிக்கும் பயிற்சி  வகுப்புகளில்  கலந்துகொண்டு ஜனவரி   23-க்குள் ஒரு சான்றிதழைப்  பெறாதுபோனால்  அபராதம்  விதிக்கப்படலாம்  அல்லது சிறையிடப்படலாம்  என்ற  அச்சத்தால்  உந்தப்பட்டவர்களாய் பறிற்சி  வகுப்புகளில்  தங்களைப் பதிந்துகொள்ள முந்துகிறார்கள். அது  சுகாதார  அமைச்சின் கட்டளை  என்பதை  அறியாது  பலர் …

எம்ஏசிசி: ஊழலை வெறும் “நினைப்புத்தான்” எனக் குறைத்து மதிப்பிடவில்லை

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி), ஊழலை எதிர்க்கும்  கடப்பாடு  தனக்கு  உண்டு  என்பதை  உணர்ந்தே  செயல்படுவதாகவும்  அவ்விவகாரத்தை  என்றும்  “குறைத்து மதிப்பிட்டது”  இல்லை  என்றும்  கூறியது.  அந்த  ஆணையத்தின்  தலைவர்  அபு  காசிம்  முகம்மட்  ஊழல்  என்பது  வெறும்  “நினைப்புத்தான்” என்று  சொன்னதே  இல்லை  என அதன்  வியூக …

மேயர்: வரி உயர்வுக்கு எதிராக 166,000 ஆட்சேபணைகள்

கோலாலும்பூர்  மாநகர்  ஆட்சி  மன்ற(டிபிகேஎல்)த்தின் சொத்து  மதிப்பீட்டு  வரியை  உயர்த்தும்  முடிவுக்கு  இதுவரை மாநகர்  சொத்துரிமையாளர்களில்  166,000 பேர்  ஆட்சேபணை  தெரிவித்திருக்கிறார்கள்  என மேயர் அஹ்மட்  பீசல்  தாலிப்  கூறினார். “மார்ச்  31வரை  ஆட்சேபணை  தெரிவிக்கலாம். தொடர்ந்து  ஆட்சேபணைகள்  வந்து  கொண்டிருந்தால்  ஆட்சேபணைக்  காலத்தை  நீட்டிப்பது  பற்றி  டிபிகேஎல் …

ஜெப்ரி: சாபா மக்களுக்கு வெள்ள உதவி கிடையாதா?

திரெங்கானுவிலும்  பாகாங்கிலும்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  ரிம20 மில்லியன்  மதிப்புள்ள  உதவி  வழங்கப்படும்  என  அறிவித்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், தங்களுக்கு ஒரு  உதவியும்  வழங்காதது  ஏன்  என்று   சாபா, சரவாக்  மாநிலங்களில்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்கள்  கேள்வி  கேட்கின்றனர்.  “தீவகற்பத்தில்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவிக்குமேல்  உதவி  செய்யப்படுவதைப்  பார்க்கும் …

ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை … தெரு ஆர்ப்பாட்டங்கள்தான்

பிகேஆர்  எம்பி,  மார்ச்  மாதம்  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணைய (எம்ஏசிசி)  சட்டத்தில்  எதிர்பார்க்கப்படும்  திருத்தங்களைச் செய்த  பின்னரும்  எம்ஏசிசி-யால்  விசாரிக்கப்படும்  சில  முக்கிய  புள்ளிகள்  தண்டிக்கப்படாமல்  போனால் மிகப்  பெரிய  அளவில்  பேரணிகள்  நடத்தப்படும்  என  எச்சரித்துள்ளார். தாங்களே அவற்றைத்  தூண்டிவிடப்போவதாகவும்  அவர்  தெரிவித்தார். சட்டத்தில்  ஓட்டைகள்  இருப்பதால் …

முன்னாள் போலீஸ் அதிகாரி ஜூட் பெரேரா வழக்குரைஞர் தொழில் செய்ய…

வழக்குரைஞர்  மன்றம்,  முன்னாள் போலீஸ்  அதிகாரி  ஜூட் பெரேரா-வை   வழக்குரைஞர் தொழில் செய்ய  அனுமதிக்கக்கூடாது என்று  செய்துகொண்டிருந்த  மனுவை கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றம்,  ஏற்றுக்கொண்டது.   பெரேரா, அன்வார்  இப்ராகிமின்  குதப் புணர்ச்சி  வழக்கில் முக்கிய  போலீஸ்  விசாரணை  அதிகாரியாக  இருந்தவர்  என்பது  குறிப்பிடத்தக்கது. போலீஸ்  படையிலிருந்து  பணி ஓய்வு …

‘நீர்’ தொடர்பில் பிகேஆர் விடுக்கும் எச்சரிக்கை

கூட்டரசு  அரசாங்கம்  நீர்  சேவை  தொழில்  சட்டத்தின்  114-ஆம் பகுதி  வழங்கும்  அதிகாரத்தைப்  பயன்படுத்தி  சிலாங்கூரில்  நீர்  கட்டணத்தை உயர்த்தவும்  நீர்  சேவை வழங்க  சலுகை  பெற்றுள்ள  நிறுவனங்களுக்கு  நியாயமற்ற  இழப்பீடுகளைக்  கொடுக்கவும் முற்படக்  கூடாது  என  பிகேஆர்  வியூக  இயக்குனர்  ரபிஸி  ரம்லி  எச்சரித்துள்ளார். அச்சட்டத்தைப்  பயன்படுத்த …

‘மலாக்கா சுல்தான்’ விருதுகள் வழங்க திட்டமாம்

‘மலாக்கா சுல்தான்’ எனத்  தம்மைச்  சுயமாக  பிரகடனம்  செய்து  கொண்டிருக்கும் ராஜா நூர் ஜான் ஷா  ராஜா  துவா, மலாக்காவுக்கு  அருகில்  பூலாவ்  புசாரில்,    ‘அரச’ விருதுகளையும்  பட்டங்களையும்  பதக்கங்களையும்  வழங்கும்  சடங்கு  ஒன்றை  நடத்த  திட்டமிடப்பட்டிருப்பதற்கு  எதிராக  இரண்டு  போலீஸ்  புகார்கள்  செய்யப்பட்டுள்ளன. ஆயர்  கெரோ போலீஸ் …

சுவாராம்: பேரணிகளில் குழப்பம் ஏற்பட போலீசே காரணம்

மலேசியாவில்  அமைதி  ஆர்ப்பாட்டம்  என்பதே  கிடையாது  என்று  இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ்  கூறி இருப்பதை மனித  உரிமை  கண்காணிப்பு  அமைப்பான  சுவாராம்  மறுத்துள்ளது. அமைதிப்  பேரணி  நடத்த  அரசியலமைப்பு  இடமளிக்கிறது. ஆனால், அரசியலமைப்பு  வழங்கும்  உரிமைகளை  போலீசார்  மதிக்கத்  தவறும்போதுதான்  அமைதிப்பேரணி  திசைமாறிப்  போய்விடுகிறது  என்றது  கூறிற்று. “பொதுமக்களால் …

அஸ்மின் நீக்கப்பட்டது ஏன் என்று சிலாங்கூர் எம்பி விளக்க வேண்டும்

சிலாங்கூர்  பிகேஆர், அதன்  தலைவர் அஸ்மின் அலி  சிலாங்கூர்  மாநில  மேம்பாட்டு  நிறுவன (பிகேஎன்எஸ்) இயக்குனர்  வாரியத்திலிருந்து  தூக்கப்பட்டது ஏன்  என்பதை  மந்திரி புசார்  அப்துல்  காலிட் விளக்க  வேண்டும்  என விரும்புகிறது. அரசியல் நியமனங்களைச் செய்யும்போது  கட்சியுடன்  ஆலோசனை கலக்க  வேண்டும்  என்று  கடந்த  ஆண்டு  அக்டோபர் …

என்ஜிஓ-கள்: சிலாங்கூரில் ஊராட்சி மன்றங்கள் செயல்படாமல் கிடக்கின்றன

சிலாங்கூர் அரசாங்கம்,  ஊராட்சி  மன்ற  கவுன்சிலர்கள்  நியமனத்தைத்  தாமதப்படுத்துவதானது,  செயல்படும் ஊராட்சி  மன்றங்களைப்  பெற்றிருக்கும் சிலாங்கூர்  மக்களின் “அடிப்படை உரிமை”யை  மறுப்பதற்கு  ஒப்பாகும்  என நல்ல நிர்வாகத்துக்கான  கூட்டமைப்பு (சிஜிஜி)  கூறியுள்ளது. 2008 தேர்தலுக்குப்  பின்னர்  சிலாங்கூர்  அரசின் செயல்பாட்டைக்  கண்காணிக்க  உருவாக்கப்பட்ட  அந்த என்ஜிஓ-களின் கூட்டமைப்பு, 2014…

கேவியஸுக்கு ரிம200,000 கொடுக்குமாறு என்எஸ்டிக்கு நீதிமன்றம் உத்தரவு

பிபிபி  தலைவர் எம்.கேவியஸை  அவதூறு  செய்த  குற்றத்துக்காக ரிம200,000 இழப்பீடு கொடுக்குமாறு கோலாலும்பூர்  உயர் நீதிமன்றம் த நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்(என்எஸ்டி)  நாளேட்டுக்கு  உத்தரவிட்டது. வழக்குச்  செலவாக  மேற்கொண்டு  ரிம5,000 கொடுக்குமாறும்  நீதி  ஆணையர்  சித்தி  கத்திஜா எஸ். ஹசான் பட்ஜெனிட்  ஆணையிட்டார். அச்செய்தித்தாளில் “கேவியஸ்  கட்சிக் கணக்குச் …

பக்தர்கள் நிர்வாணமாக காவடி எடுத்தால்…?

  தைப்பூசத்தன்று முருகப் பெருமானுக்கு காவடி எடுப்பது தைப்பூச திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். காவடி எடுப்பது என்பது ஒரு புதிய முறை இல்லை என்றாலும், காவடி எடுக்கும் பக்தர்கள் பின்பற்றும் வழிமுறைகள் குறித்து பல ஆட்சேபங்களும் குறைகூறல்களும் எழுந்துள்ளன. பக்தர்கள் எடுக்கும் காவடிகள் ஒரு வரைமுறைக்கு உட்பட்டு இருக்க…

ரயில் வண்டி தடம்புரண்ட சம்பவங்களுக்கு ஹிஷாமுடின் பொறுப்பேற்க வேண்டும்

கடந்த ஓராண்டுக் காலத்தில் தீவகற்ப  மலேசியாவில்  ரயில்கள்  தடம்புரளும் எட்டு  சம்பவங்கள்  நிகழ்ந்துள்ளன.  அவற்றில் ஐந்து  ஹிஷாமுடின்  உசேன்  போக்குவரத்து  அமைச்சரான  பின்னர்  ஏற்பட்டவை. எனவே, இச்சம்பவங்களுக்கு அவர்தான்  பொறுப்பேற்க  வெண்டும்  என டிஏபி-இன் புக்கிட் காசிங்  சட்டமன்ற  உறுப்பினர்  ராஜிவ் ரிஷ்யகரன்  கூறினார்.  “ரயில்கள்  தடம்புரள்வதால்  காயங்களும் …

ராஜா பெட்ராமீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டது

லெப்டனெண்ட்- கர்னல்  அப்துல் அசீஸ்  பூயோங்கும் அவரின்  துணைவியார்  லெப்டனெண்ட்- கர்னல்  நோர்ஹயாதி ஹசனும் ரிம2 மில்லியன் கோரி வலைப்பதிவர்  ராஜா  பெட்ரா  கமருடின்மீது தொடுத்திருந்த  வழக்கைத்  திரும்பப்  பெற்றுக்கொண்டனர்.  வழக்கு  மீட்டுக்கொள்ளப்பட்டதை  ராஜா பெட்ராவின்  வழக்குரைஞர்  ஜே.சந்திராவும்  உறுதிப்படுத்தினார். ஆனால், என்ன  நிபந்தனைகளின்பேரில் அது திரும்பப் பெறப்பட்டது …

என்எப்சி, இகோ சிட்டி கொண்டோமினியம் தொடர்பில் நுருல், சைபுடின் ஆகியோர்மீது…

தேசிய  ஃபீட்லோட்  கார்ப்பரேசன் சென். பெர்ஹாட்(என்எப்சி)-டும்  அதன்  தலைவர்  முகம்மட்  சாலே  இஸ்மாயிலும்  பிகேஆர்  உதவித்  தலைவர்  நுருல்  இஸ்ஸா  அன்வார்மீதும்  கட்சித்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுத்தியோன்  இஸ்மாயில்மீதும்  அவதூறு  வழக்கு தொடுத்துள்ளனர்.  என்எப்சி,  கேஎல் இகோ  சிட்டி-இல்,  ரிம12 மில்லியனுக்கு  எட்டு கொண்டோமினியம்கள்  வாங்கி  இருப்பதாக …

பிரதமர் கிளந்தானுக்குரிய எண்ணெய் உரிமப் பணத்தை மறந்து விட்டாரா?

ஓராண்டுக்கு  முன்னர், கிளந்தானின்  எண்ணெய்  உரிமப்  பணம் பற்றி பாஸுடன்  கலந்துரையாட முன்வந்த  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அதை  அடியோடு  மறந்து  விட்டாரா  என்று  வினவுகிறார்  முன்னாள்  ஆட்சிக்குழு  உறுப்பினர்  ஹுசாம்  மூசா. கிளந்தானுக்கு  எண்ணெய்  உரிமப்  பணம்  வழங்குவதை  விவாதிக்க  அமைக்கப்படும்  புதிய  குழுவில்  சேர்ந்துகொள்ள …

பெர்சே: பிரச்னைகளுக்குப் பேரணிகளே தீர்வாகிடமாட்டா

பெர்சே  என்றதும் அது நடத்திய  மிகப்  பெரிய  பேரணிகள்தான்  சட்டென்று  நினைவுக்கு  வரும்.  ஆனால், பேரணிகள்  நடத்தியே  எல்லாப்  பிரச்னைகளுக்கும்  தீர்வு  காண  முடியாது  என்கிறார்  அக்கூட்டமைப்பின்  புதிய  தலைவர்  மரியா  சின்  அப்துல்லா. வரும்  ஆண்டுகளில், தேர்தல் தொகுதி  எல்லைகளைத்  திருத்தி  அமைக்கும் தேர்தல் ஆணையத்தின்  நடவடிக்கையை…