தேசிய நல்லிணக்கச் சட்டம் தவறான பெயராக இருக்கலாம்

தேசிய நிந்தனைச் சட்டம் தேர்வு செய்யப்பட்டு அமலாக்கப்பட்டதைப் போன்று அதன் விதிமுறைகளை உள்ளடக்கிய தேசிய நல்லிணக்கச் சட்டத்தை தேசிய நிந்தனைச் சட்டதிற்கு மாறாக கொண்டு வரப்படுவதை விட தேசிய நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வதே நல்லது என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கூறுகிறார்.…

உத்துசான், ஒரு விஷயத்தைத் திரிப்பது என்பது பொய் சொல்வதற்கு ஒப்பாகும்

"அப்பட்டமான பொய்களுக்கும் ஏமாற்றுவதற்கும் இடையில் நுட்பமான வேறுபாடு உள்ளது. அந்தக் கறை படிந்த பத்திரிக்கை அங்கீகரிப்பது அப்பட்டமான பொய்களே தவிர வேறு ஒன்றுமில்லை." உத்துசான் ஆசிரியர்: எதிர்க்கட்சிகளைத் தாக்குவதற்கு விஷயங்களைத் திரிப்பது சரியானதே குரல்: ஒரு விஷயம் அப்பட்டமான பொய்யாக மாற்றுவதற்கு அதனை திரிக்க வேண்டும். இல்லை என்றால்…

இறால் பண்ணையில் பங்கிருப்பதை நோ ஒப்பினார்

  விவசாய அமைச்சர் நோ ஒமார், தஞ்சோங் காராங் இறால் பண்ணையில் தமக்குப் பங்கிருப்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதில் தப்பில்லை என்றும் அவர் சொல்கிறார்.  விவசாய அமைச்சராகும் முன்பே, பாகான் தெங்கோராக்கில் 30-ஏக்கர் நிலம் தமக்குச் சொந்தமாக இருந்தது என்றவர் கூறியதாக சின் சியு டெய்லி கூறியுள்ளது. “மேலும், அது…

FGV பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை எதிர்த்து 5,000 பேர்…

Felda Global Ventures Holdings’ (FGV) பங்குச் சந்தைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதை ஆட்சேபித்து கோலாலம்பூரில் இன்று பிற்பகல் நடத்தப்பட்ட ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்  கலந்து கொண்டனர். அவர்கள் அதன் தொடர்பில் அகோங்கிடம் மகஜர் ஒன்றைச் சமர்பிப்பது அவர்களுடைய நோக்கமாகும். கூட்டரசுப் பிரதேசப் பள்ளிவாசலில் பிற்பகல் மணி 2.20…

“அம்பிகா கடற்கொள்ளைக்காரி” என்னும் கேலிச் சித்திரப் புத்தகம் தொடர்பில் பாஸ்…

பக்காத்தான் ராக்யாட்டையும் தேர்தல் சீர்திருத்தப் போராட்ட அமைப்பான பெர்சே-யையும் கடுமையாக தாக்கும் கேலிச் சித்திரப் புத்தகம் ஒன்று பாஸ் இளைஞர்களிடையே ஆத்திரத்தை மூட்டியுள்ளது குத்துவாளை  வைத்துக் கொண்டிருக்கும் பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், அவருக்கு பின்னால் நிற்கும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், துணைத் தலைவர்…

உத்துசான் ஆசிரியர்: எதிர்க்கட்சிகளைத் தாக்குவதற்கு விஷயங்களைத் திரிப்பது சரியே

வாசகர்களுக்கு 'விரும்பப்படும் தோற்றத்தை' வழங்குவதற்கு விஷயங்களைத்  திரித்து செய்திகளை வெளியிடுவதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்துசான் மலேசியாவின் துணைத் தலைமை ஆசிரியர் முகமட் ஜைனி ஹசான் கூறினார். விஷயங்களைத் திரித்துக் கூறுவது எதிர்க்கட்சிகள் மீது "நாகரீகமாக தாக்குதல்" (serangan berhemah)  தொடுப்பதற்கான வழிகளில் ஒன்று என முகமட் ஜைனி…

மூசா காலத்தில்தான் குற்றங்கள் பல்கிப் பெருகின

அரசாங்கம் குற்றம் பற்றிய புள்ளிவிவரங்களை மூடி மறைப்பதாகக் குற்றஞ்சாட்டும் முன்னாள் போலீஸ் படைத்தலைவர் மூசா ஹசான் ஒரு “விளம்பரப் பிரியர்” என்று குறைகூறப்பட்டுள்ளார். புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் மூசாவின் பதவிக்காலத்தின்போதுதான் குற்றச்செயல் விகிதம் உச்சத்தை எட்டியிருந்தது என மலேசிய குற்றத்தடுப்பு அறநிறுவன(எம்சிபிஎப்) நிர்வாக மன்ற உறுப்பினர் ரோபர்ட் பாங் கூறினார்.…

டிங்கில் தாமான் பெர்மாத்தாவுக்கு 18 ஏக்கர் மாற்று நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது,…

டிங்கில்  தாமான்  பெர்மாத்தா  அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு மாற்று  வரிசை வீடுகள் கட்டச் சுமார் 18 நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜூலை 12, 2012 இல் சிலாங்கூர்  சட்டமன்ற கூட்டத்தில் கேள்வி ஒன்றுக்குப்  பதில் அளிக்கையில் டாக்டர் சேவியர் கூறினார்.  அங்குக் கட்டப்பட்டுள்ள சில வீட்டு தொகுதிகளில் இரண்டு,  நீண்ட நாள்  பயன்பாட்டிற்குப் பாதுகாப்பற்றதாக இருப்பதால், …

நாட்டிற்கு திரும்பும் ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி கைதாவதற்கு தயார்!

- வி.சம்புலிங்கம், தேசிய ஒருங்கிணைப்பாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி, ஜூலை 14, 2012. ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தி  லண்டனிலிருந்தது நாடு திரும்புகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஜூலை 29 ஆம் தேதி சிங்கபூர் வந்தடைந்து அங்கிருந்து ஆகஸ்ட் 1 ஆம்  தேதி மலேசிய  எல்லைக்குள் பிரவேசிக்க இருக்கிறார்.      கடந்த…

30 ஏக்கர் இறால் பண்ணை: நோ எவ்வளவு கொடுத்தார்?

"முதலில் நிலத்தை மலிவாக பெறுங்கள். அடுத்து அந்த நிலத்தை மூன்றாம் தரப்புக்கு வாடகைக்கு விடுங்கள். இது தான் அலிபாபா பாணி." நோ-வின் 30 ஏக்கர் இறால் பண்ணை நிலம் மீது ஏதோ குளறுபடி மியோப்101: எது எப்படி இருந்தாலும் விவசாய அமைச்சர் அந்த நிலத்தை 1995ம் ஆண்டு வாங்கியுள்ளார்.…

இனவாத கேலிச் சித்திரப் புத்தகத்தை தடை செய்க என அரசுக்கு…

அரசாங்க நிகழ்வு ஒன்றில் விநியோகம் செய்யப்பட்ட கேலிச் சித்தரப் புத்தகம் ஒன்று 'இனவாதத் தன்மையைக் கொண்டது, வெறுப்புணர்வைத் தூண்டக் கூடியது' என அரசு சாரா அமைப்புக்கள் கூட்டமைப்பு ஒன்று கண்டித்துள்ளது. அதன் விநியோகம் நிறுத்தப்பட்டு அதன் வெளியீட்டாளருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இனப் பாகுபாட்டை…

ஹூடுட் சட்ட அமலாக்கம்: புத்ரி அம்னோ ஆதரிக்கிறது

ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் அம்னோ கெமெலா சட்டமன்ற உறுப்பினர் அயுப் ரஹ்மாட் முன்வைத்த கோரிக்கைக்கு அம்னோ புத்ரி தலைவர் ரோஸ்னா அப்துல் ரஷிட் ஷிர்லின் தெரிவித்துள்ள ஆதரவு அக்கோரிக்கை வலுப்பெற்று வருவதைக் காட்டுகிறது. அந்தக் கோரிக்கையை புத்ரி இயக்கம் ஆக்ககரமானதாகக் கருதுகிறது, ஆனால் அதைக்…

‘பெல்டாவைக் காப்பாற்றுங்கள்’ ஊர்வலத்துக்கு போலீஸ் அனுமதி கிடைத்தது

Gerakan Selamatkan Felda (GSF) எனப்படும் இயக்கம் நாளை இஸ்தானா நெகாராவுக்கு ஊர்வலமாகச் செல்வதற்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மஸ்லான் அலிமான் அந்தத் தகவலை இன்று வெளியிட்டார். இரண்டு மணி நேர விவாதத்துக்கு பின்னர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கியச் சாலையான ஜாலான்…

லிங்: அமைச்சரவை முடிவுகள் கூட்டுப் பொறுப்பு

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் தமது எதிர்வாதத்தில் சாட்சியமளித்தார். அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவும் கூட்டுப் பொறுப்பு என்று அவர் தமது சாட்சியத்தில் கூறினார். பிரதிவாதித் தரப்பின் முதல் சாட்சியாக  அவர் இன்று சாட்சியமளித்தார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கு தலைமை ஏற்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்…

பினாங்கு ஆட்சி மன்றம்: மலைகள் கண்ணீர் சிந்துவதற்கு பிஎன்-னே காரணம்

பினாங்கில் மலைகள் மடிவதற்கு நடப்பு நிர்வாகமே காரணம் என பிஎன் குற்றம் சாட்டும் துண்டுப் பிரசுரங்கள் இப்போது விநியோகம் செய்யப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டை மாநில அரசாங்கம் நிராகரித்துள்ளது. மாநிலத்தின் மலைச்சாரல் மேம்பாடு பற்றிய அந்த பிரசுரங்களில் பொய்கள் நிறைந்துள்ளதாக மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் சாவ் கோன் இயாவ்…

மசீச-தலாம் தொடர்புகளை அம்பலப்படுத்தப் போவதாக ராபிஸி மருட்டுகிறார்

மசீச துணை அமைச்சர் சுவா தீ யோங் தொடர்ந்து சிலாங்கூர் அரசாங்கத்தைத் தாக்கிக் கொண்டிருந்தால் தலாம் கார்ப்பரேஷன் -உடன் அந்த பிஎன் கட்சிக்கு உள்ள தொடர்புகள் சம்பந்தப்பட்ட "கோப்புக்களை அம்பலப்படுத்தப் போவதாக" பிகேஆர் வியூக இயக்குநர் ராபிசி இஸ்மாயில் மருட்டியுள்ளார். "தலாம் மசீச-வுடன் தொடர்பு உடையது. தலாமும் மசீச…

வெளிநாடுகளிலிருந்து அஞ்சல்வழி வாக்களிப்பதற்கு பாஸ் இளைஞர்கள் எதிர்ப்பு

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்கள் அஞ்சல்வழி வாக்களிப்பதை அனுமதிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் முன்வைத்துள்ள பரிந்துரைக்கு பாஸ் இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “அஞ்சல் வாக்குகளில் பல தகிடுதத்தங்கள், மோசடிகள் நிகழலாம் என்பதால் இசி-இன் பரிந்துரை பொருத்தமற்றது என்பது பாஸ் இளைஞர்களின் கருத்து. “வெளிநாட்டில் உள்ள குடிமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும்…

ஐஜிபி: EO கைதிகள் விடுவிக்கப்பட்டதைக் குற்றவிகித அதிகரிப்புடன் தொடர்புப்படுத்தாதீர்

அவசரகாலச் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதுதான் நாட்டில் குற்றச்செயல் அதிகரிப்புக்குக் காரணம் என்று தேவையில்லாமல் ஊகம் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் கேட்டுக்கொண்டிருக்கிறார். “ஊகம் கூறுதல் வேண்டாம்.அது(குற்றவிகிதம்)கட்டுப்பாட்டில் இருக்கிறது.நாங்கள் நிலவரத்தைக் கண்காணித்து வருகிறோம்”, என்று செராசில் செய்தியாளர் கூட்டமொன்றில்…

நுருல் இஸ்ஸா: மீண்டும் வெற்றிபெற மாட்டேன் என்றார் தேர்தல் அதிகாரி

லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார்,நேற்றிரவு ஒரு நிகழ்வில் தெரித்த ஒரு தகவல் அவரின் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அண்மையில் அவர், 2008  மார்ச் 8-இல் தம் தேர்தல் அதிகாரியாக் (ஆர்ஓ) இருந்தவரைச் சந்தித்தார். அப்போது அவர் தாம் மீண்டும் தேர்தல் அதிகாரியாக பணியாற்ற நேர்ந்தால் நுருல் வெற்றி…

மெட்ரிகுலேசன் வாய்ப்பை 585 இந்திய மாணவர்கள் நிராகரிப்பு! ஏன்?, செனட்டர்…

சமீப காலத்தில் இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேசன் கல்லூரி வாய்ப்பு குறித்து நம் சமுதாயத்தில் பெரும் களேபரம் நிலவியது!   கடந்த ஜூலை 9ம் நாள் மேலவையில் அது குறித்து நான் பேசிய பின் துணைக் கல்வி அமைச்சர் டத்தோ வீ கா சியோங் விளக்கம் அளித்தார். அதாவது 2012/2013…

இறால் பண்ணையாளர்: நோ ஒமார் அந்த நிலத்துக்குச் சொந்தக்காரர் மட்டுமே

சிலாங்கூர் அம்னோ துணைத் தலைவர் நோ ஒமாருடன் தாம் கூட்டாக இறால் வளர்ப்புத் திட்டத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுவதை Pristine Agrofood Sdn Bhd இயக்குநர் சூ பாக் தெக் மறுத்துள்ளார். தஞ்சோங் காராங்கில் உள்ள 100 ஏக்கர் பரப்புள்ள இறால் பண்ணையில் ஒரு பகுதி நிலத்துக்கு மட்டுமே நோ…

கல்விக் கடன் மீட்கப்பட்டதை மாரா பரிசீலிக்கும்

பிகேஆர் தலைவர் ஒருவருடைய புதல்வருக்குக் கொடுக்கப்பட்ட கடன் திடீரென மீட்டுக் கொள்ளப்பட்ட விவகாரம் விரைவில் தீர்க்கப்படும் என மாரா உறுதி அளித்துள்ளது. 17 வயதான அக்மால் ஹாக்கிம் என்ற தமது புதல்வர் வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு வழங்கிய கடனை மாரா ரத்துச் செய்து விட்டதாக பத்து பஹாட் பிகேஆர்…

தி எகானாமிஸ்ட்: அம்பிகா மீதான தாக்குதல்கள் பிரதமரைக் காயப்படுத்தலாம்

பெர்சே 2.0ன் இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மீது தொடுக்கப்படுகின்ற இடைவிடாத தாக்குதல்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு களங்கத்தை ஏற்படுத்தலாம் என செல்வாக்குமிக்க அனைத்துலக சஞ்சிகையான தி எகானாமிஸ்ட் கூறுகிறது. அந்த சஞ்சிகையின் இந்த வாரத்திற்கான ஆசிய பதிப்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பெர்சே-யை சிறுமைப்படுத்தும்…