ஷா ஆலம் விரைவுச்சாலையில் (கசாஸ்) இருந்து பெர்சியாரன் கெவாஜிபன், சுபாங் ஜெயா நோக்கிச் செல்லும் வெளியேறும் பாதையில் ஹெலிகாப்டரை ஏற்றிச் சென்ற நீண்ட டிரெய்லர் லாரி கடுமையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் காணொளி டிக்டோக்கில் பரவியதைத் தொடர்ந்து…
சபா பிஎன் எம்பி-க்கள்: சுலு ஊடுருவல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்…
இவ்வாண்டு தொடக்கத்தில் சபாவுக்குள் ஊடுருவிய சுலு பயங்கரவாதிகள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு தாமதம் ஏற்பட்டது ஏன் என்று சபாவைச் சேர்ந்த இரண்டு பிஎன் எம்பி-க்கள் வினவியுள்ளனர். லஹாட் டத்துவில் போலீஸ் அதிகாரிகளை ஊடுருவல்காரர்கள் தாக்கும் வரையில் அவர்களை பயங்கரவாதிகள் என அடையாளம் காண அரசாங்கம் தவறி விட்டது…
கலால் வரியை ரத்துச் செய்வதால் கார் விலை குறையும் என…
இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான கலால் வரியைக் ரத்துச் செய்வது கார் விலைகளைக் குறைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என அனைத்துலக வாணிக, தொழிலியல் துணை அமைச்சர் ஹமிம் சாமுரி மக்களவையில் கூறியிருக்கிறார். கலால் வரி ரத்துச் செய்யப்பட்டாலும் நடப்பு கார் விலைகளை குறைப்பதா அல்லது அப்படியே வைத்திருப்பதா என்பதை…
சந்தேகத்துக்குரிய நபர்கள் ‘சித்திரவதை’ செய்யப்படுவது ஏன்?
போலீஸ் நிலையங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறப்படுவதற்கும் தடுப்புக்காவல் மரணங்கள் நிகழ்வதற்கும் போலீஸ்காரர்களுக்கு விசாரணை முறைகளில் போதுமான பயிற்சி இல்லாதது காரணமாக இருக்கலாம் என்கிறார் மூத்த வழக்குரைஞர் ஒருவர். கடந்த எட்டாண்டுகளாக வாக்குமூலங்களும் எச்சரிக்கை வாக்குமூலங்களும் நீதிமன்றங்களில் ஏற்கப்படுவதில்லை என்பதை வழக்குரைஞர் மன்ற குற்றவியல் சட்டக் குழுத்…
மதம் மாற்ற மசோதா மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு மொழி பெயர்ப்பு…
அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மதம் மாற்ற மசோதாவைச் சூழ்ந்துள்ள சர்ச்சைக்கு மொழி பெயர்ப்பு தவறு காரணம் என மஇகா துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் பழி சுமத்தியிருக்கிறார். இன்று காலை நிருபர்களிடம் பேசிய சுகாதார அமைச்சருமான அவர், அந்த மசோதாவின் மலாய் மொழி வாசகம் ஆங்கில…
ஆயர்: துணைப் பிரதமர் அச்சத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்
குழந்தைகளை மதம் மாற்றுவது தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சட்டத் திருத்தம் மீது துணைப் பிரதமர் முஹைடின் யாசின் விடுத்துள்ள அண்மைய அறிக்கை 'ஒரே சமயத்தில் அச்சத்தையும் தருகிறது, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது' என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் கருதுகிறார். "அரசாங்கம் எல்லாக் கருத்துக்ளையும் கவனத்தில்…
மதம் மாற்றம் மசோதா மீது மனச்சாட்சியுடன் வாக்களியுங்கள் என பிஎன்…
இஸ்லாத்துக்கு குழந்தைகளை மதம் மாற்றுவது சம்பந்தப்பட்ட கூட்டரசுப் பிரதேச சட்டத்தைத் திருத்தும் மசோதா மீது பிஎன் எம்பி-க்கள் தங்கள் மனச்சாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் எனப் பினாங்கு கெராக்கான் தலைவர் ஒருவர் அறிவுரை கூறியுள்ளார். அவ்வாறு ஆலோசனை கூறிய அந்தக் கட்சியின் மாநில சட்ட, மனித உரிமைப் பிரிவுத் தலைவர் பல்ஜித் சிங்,…
இந்திய மாணவர்கள் மெட்ரிகுலேசன் விவகாரம்: புத்ரா ஜெயாவில் பாயில் அமர்ந்து…
இன்றைய நிலையில் 13 மெட்ரிகுலேசன் மையங்களில் 700 இந்திய மாணவர்கள் மட்டுமே பயில்வதாகவும் இன்னும் 800 இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என மலேசிய இந்திய கல்வி சமூக விழிப்புணர்வு கழகத்தின் தலைவர் ஆ.திருவேங்கடம் உறுதியாகச் சொல்கின்றார். ஆக, இந்த உண்மை நிலை தெரிந்திருந்தும் துணைக் கல்வியமைச்சர் கமலநாதன்…
தண்ணீர் சர்ச்சை குறித்து முக்ரிஸின் பேராளர்களைச் சந்திக்க லிம் மறுப்பு
தண்ணீர் கட்டண விவகாரம் குறித்து கெடா அரசின் கீழ்நிலை அதிகாரிகளைச் சந்தித்துப் பேச பினாங்கு தயாராக இல்லை என்று அதன் முதலமைச்சார் லிம் குவான் எங் கூறினார். அவ்விவகாரம் குறித்து கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிருடன் நேரடியாக விவாதிப்பதையே அவர் விரும்புகிறார். “உயர்நிலையில் சந்திப்போம். மூன்றாம் தரப்புகள்…
சிலாங்கூருக்கு எதற்காக துணை பட்ஜெட்?: அஸ்மின் கேள்வி
சிலாங்கூர் சட்டமன்ற அரசு ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் மன்றத்தின் தலைவர் அஸ்மின் அலி (பிகேஆர்- புக்கிட் அந்தாராபங்சா), கூடுதல் நிதி கேட்டு மாநில அரசு துணை பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதைக் குறைகூறினார். இது மாநில அரசின் திட்டமிடும் ஆற்றல் குறித்து ஒரு தப்பான கருத்தை உருவாக்கிவிடும். “2013ஆம் ஆண்டுக்கான…
குகன் வழக்கு குறித்து பேசாதீர்: மக்களவை துணை தலைவர்
தடுப்புக்காவலில் இறந்துபோன ஏ.குகன் விவகாரம் பற்றிப் பேச வேண்டாம் என மக்களவை துணைத் தலைவர் இஸ்மாயில் முகம்மட் சயிட் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தடை விதித்துள்ளார். ஜூன் 20-இல், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தாலும் அதைப் பற்றிப் பேசுவது நீதிமன்ற நடவடிக்கையில் குறுக்கிடுவதாக அமையும் என்றாரவர். “தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும்…
கோலா பெசுட் இடைத் தேர்தலுக்கான தேதிகள் வெள்ளிக் கிழமை அறிவிக்கப்படும்
தேர்தல் ஆணையம் (இசி) கோலா பெசுட் இடைத் தேர்தல் தொடர்பான விவகாரங்களை வெள்ளிக்கிழமை விவாதிக்கும். அந்தக் கூட்டத்துக்குப் பின்னர் வேட்பாளர் நியமனம், முன்கூட்டியே வாக்களிப்பது, வாக்களிப்பு ஆகியவற்றுக்கான தேதிகளை இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் அறிவிப்பார் என இசி செயலாளர் கமாருதின் முகமட் பாரியா கூறினார்.…
மதம் மாற்ற மசோதா இரண்டாவது வாசிப்புக்குச் சமர்பிக்கப்படுவதற்கு எம்பி-க்களுக்கு விளக்கமளிக்கப்படும்
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மதம் மாற்றம் மீதான கூட்டரசுப் பிரதேச இஸ்லாமியச் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மசோதா இரண்டாவது வாசிப்புக்குத் தாக்கல் செய்யப்படும் முன்னர் அரசாங்கம் தனது எம்பி-க்களுக்கு விளக்கமளிக்கும். "நாங்கள் முடிந்த அவரை அந்த மசோதாவை ஆராய்வோம். எல்லோருடைய கருத்துக்களையும் கவனத்தில்…
அஜிஸ் பேரி: ‘தொங்கு’ சட்டமன்றத்தில் சுல்தான் மட்டுமே தலையிட முடியும்
திரங்கானுவில் 'தொங்கு' சட்டமன்றம் ஏற்பட்டால் அதனைக் கலைப்பதற்கும் மாநில அரசாங்கத்தை நியமிப்பதற்கும் சுல்தானுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநிலச் சட்டமன்ற சபாநாயகரிடம் அந்த அதிகாரம் இல்லை என அரசமைப்பு வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி சொல்கிறார். மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் முகமட் ஜுபிர் எம்போங், அவைக்கு வெளியிலிருந்து நியமிக்கப்பட்டவர்.…
சில இலக்குகளை அடையவில்லை என்பது உண்மையே: மந்திரி புசார்
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம், மெராக்யாட் எக்கோனோமி சிலாங்கூர் (எம்இஎஸ்) திட்டத்தில் குறிப்பிடப்பட்ட சில இலக்குகளை அடையமுடியாமல் போனதை ஒப்புக்கொண்டார். இலவச குடிநீர், சிலாங்கூர் குழந்தைகள் நிதி, மூத்த குடிமக்கள் உதவி போன்றவை அவற்றில் அடங்கும்.. “இவை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை. எனவே, இத்திட்டங்கள் அவற்றின் இலக்கை…
இஸ்லாமியச் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் கெரக்கான் நீதிமன்றத்துக்குச் செல்லும்
குழந்தைகளை பெற்றோர்களில் ஒருவர் மதம் மாற்றுவதற்கு அனுமதிக்கும் இஸ்லாமிய நிர்வாக (கூட்டரசுப் பிரதேசம்) 107(b) பிரிவுக்கான திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றினால் அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக கெடா கெராக்கான் இளைஞர் பிரிவு மருட்டியுள்ளது. கூட்டரசு அரசமைப்பின் 12(2) பிரிவு எல்லா நேரங்களிலும் நிலை நிறுத்தப்பட வேண்டும்…
‘தேர்தல் செலவு 100 விழுக்காடு கூடியது எப்படி? விளக்கம் தேவை’
2008ஆம் ஆண்டுத் தேர்தலுக்கான செலவு ரிம200 மில்லியன். அந்த ரிம200 மில்லியன் 13வது பொதுத் தேர்தலுக்கு ரிம400 மில்லியனாகப் பல்கிப் பெருகியதை அரசாங்கம் விளக்க வேண்டும். “ஐந்தாண்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை 20 விழுக்காடு உயர்ந்தது ஆனால், தேர்தல் செலவு 100 விழுக்காடு உயர்ந்தது எப்படி?”, என்று சிரம்பான் எம்பி…
மலாக்கா அரசு ஜோங்கர் சாலையை போக்குவரத்துக்குத் திறந்து விடுவதில் உறுதியாக…
மலாக்கா அரசு பண்டார் ஹிலிர் பகுதியில் ஏற்படும் நெரிசலைப் போக்க ஜோங்கர் வாக்-கைச் சுற்றிலும் உள்ள சாலைகளைப் போக்குவரத்துக்குத் திறந்து விடுவது என்ற முடிவிலிருந்து மாறாது என அதன் முதலமைச்சர் இட்ரிஸ் ஹரோன் கூறுகிறார். அதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஜோங்கர் சாலை இரவுச் சந்தை நெரிசலுக்குக் காரணமல்ல…
முஹைடின்: இசி தலைவர் விலக வேண்டியதில்லை
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) அழியா மை தொடர்பில் தேர்தல் ஆணையத்தை (இசி) விசாரிக்கப் போவதால் இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் பதவி விலக வேண்டிய அவசியமில்லை என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அந்த மையின் விநியோகம் பற்றி…
துணைப் பிரதமர்: குழந்தைகள் மதமாற்றம் தொடர்பான 2009ம் ஆண்டு முடிவு…
பெற்றோர்களில் ஒருவர் குழந்தைகளை இஸ்லாத்துக்கு தன்மூப்பாக மதம் மாற்றுவதற்கு எதிராக 2009ம் ஆண்டு அமைச்சரவை எடுத்த முடிவு, நடப்பு சூழ்நிலைகளிலிருந்து மாறுபட்ட அப்போதைய சூழ்நிலைகளில் எடுக்கப்பட்டது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் சொல்கிறார். 2009 முடிவு 'அப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது' என அவர் நாடாளுமன்ற வளாகத்தில்…
சிலாங்கூரில் ஊராட்சி தேர்தல் மசோதா அடுத்த ஆண்டு கொண்டுவரப்படும்
சிலாங்கூர் அரசு ஊராட்சி தேர்தல் சட்ட முன்வடிவு ஒன்றை வரைந்து வருகிறது. அடுத்த ஆண்டு அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டவுடன் ஒன்றிரண்டு ஊராட்சி மன்றங்களுக்குத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று ஆட்சிக்குழு உறுப்பினர் தெங் சாங் கிம் மாநிலச் சட்டமன்றத்தில் இன்று கூறினார்.…
மதமாற்றச் சட்டமசோதா: மசீசாவும் மஇகாவும் என்ன செய்யப்போகின்றன?
உங்கள் கருத்து ‘சட்டமியற்றலில் என்ன நடக்கிறது என்பதையே அறியாதவர்களாக இருக்கிறார்கள். அதைத்தான் மசீசவும் மஇகாவும் விடுக்கும் அறிக்கைகள் உணர்த்துகின்றன. ’ மதமாற்றச் சட்டம் திருத்தப்படுவதை அறிய மஇகாவும் ‘அதிர்ச்சி’ ஆரீஸ்46: மசீசாவும் மஇகாவும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாமலேயே முஸ்லிம்-அல்லாதாரின் அரசமைப்பு உரிமைகளைக் கீழறுக்க அம்னோ கமுக்கமாக…
குற்றச் செயல்கள் கூடுகிறது என்பது கற்பனை அல்ல என்கிறார் கைரி
இந்த நாட்டில் குற்றச் செயல் நிலவரம் மோசமடைந்து வருகிறது என சில தரப்புக்கள் சொல்வது கற்பனை அல்ல என்பதை இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் ஒப்புக் கொண்டிருக்கிறார். நேற்று முன் தினம் அவருடைய புக்கிட் டமன்சாரா வீட்டில் திருடர்கள் கொள்ளையடித்த பின்னர் அவர் அவ்வாறு ஒப்புக் கொண்டுள்ளார்.…
திரங்கானு பிஎன்: சபாநாயகரைச் சேர்த்தால் எங்களுக்கு இன்னும் பெரும்பான்மையே.
திரங்கானு கோலா பெசுட் இடைத் தேர்தல் முடிவுகள் பிஎன் வழி நடத்தும் திரங்கானு மாநில அரசாங்கத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இவ்வாறு அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் சொல்கிறார். அந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றாலும் மாநிலச் சட்டமன்றத்தில் 16க்கு 16 என்ற நிலை…


