விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
பெர்னாஸை பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்படுவதை முக்ரிஸ் தடுக்க வேண்டும்
பாடிபிராஸ் நேசனல் பெர்ஹாட் (பெர்னாஸ்)-டைப் பங்குச்சந்தை பட்டியலிலிருந்து அகற்றும் முயற்சியை கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் தலையிட்டுத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மலேசியாவின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் மாநிலத்தின் விவசாயிகளைப் பாதுகாக்க அது அவசியம் என அலோர் ஸ்டார் எம்பி குய் ஹிஸியாவ் லியோங் கூறினார்.…
பதற்ற நிலைக்கு பினாங்கு அம்னோ காரணமல்ல
பினாங்கு அம்னோ, அங்கு பதற்றமிக்க சூழல்கள் உருவானதற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுவதை மறுத்துள்ளது. ஆனால், பதற்றத்தை உண்டுபண்ணியவர்களின் மனநிலையைப் புரிந்துகொண்டிருப்பதால் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக அது கூறிக்கொண்டது. செபராங் ஜெயாவிலும் அல்மாவிலும் நடந்த பேரணிகளுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிய அது, ஜனவரி 18 பேரணியில், ‘டிஏபி தலைவர்களின் …
தம்மை தாக்கிய அம்னோகாரரை மன்னித்து விட்டார் கமலநாதன்
தம்மை தாக்கிய உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு உதவி செயலாளர் முகமட் ரிஸுவான் சுகாய்மியை துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் மன்னித்து விட்டார். இவ்விவகாரம் தமக்கும் அவருக்கும் இடையிலானதாகும். நடந்த சம்பவம் நோக்கமற்ற உணர்ச்சி வசப்பட்ட செயல் என்று அவர் கூறினார்.
பதற்ற நிலை மே 13 அளவை நெருங்கி விட்டது, அன்வார்…
இந்நாட்டில் பதற்ற நிலை மே 13 க்கு முந்திய கலவர அளவை எட்டியுள்ளது என்று கூறிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆளும் கூட்டணியுடன் ஒரு தேசிய உடன்பாடு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். "மே 13, 1969 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தேசிய பேரிடருக்குப் பின்னர் இப்போது…
“சுகாதாரமற்ற” சூழ்நிலையால் உதயகுமார் பாதிக்கப்பட்டுள்ளார்
காஜாங் சிறைச்சாலையில் நிலவும் சுகாதாரமற்ற சூழ்நிலையால் தாம் சொறி சிரங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப்பும் உள்துறை அமைச்சர் ஸாகிட் ஹமிடியும் தலையிட வேண்டும் என்றும் ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். மரண தண்டணை கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதில் ஜனவரி 15 ஆம்…
பாஸ் இளைஞர்: காலிட்-அஸ்மின் மோதல் பக்கத்தானின் தோற்றத்தை பாதித்துள்ளது
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் மற்றும் பிகேஆர் உதவித் தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவருக்கிடையிலான கருத்து வேறுபாடுகள் பக்கத்தானுக்கு பாதகமான விளம்பரத்தை தரும் என்பதால் அவர்கள் தங்களுக்கிடையிலான வேறுபாட்டை களைய வேண்டும். இன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் பாஸ் இளைஞர் பிரிவு தலைவர்…
“அல்லா” தடை சட்டங்கள் முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தாது
தமது 10 அம்சத் திட்டம் முஸ்லிம்-அல்லாதவர்கள் 'அல்லா' என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் மாநில சட்டங்களுக்கு ஆட்பட்டது என்று பிரதமர் நஜிப் அறிவித்த அடுத்த நாள் அச்சட்டங்களுக்கு முஸ்லிம்-அல்லாதவர்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இல்லை என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறுகிறார். "மாநிலங்களின்…
பேரணி வேண்டாம் என்ற குவான் எங்-கின் வேண்டுகோளை என்ஜிஓ-கள் புறக்கணித்தன
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், நாளை செபராங் ஜெயாவில் விலை உயர்வுக்கு எதிராக சில என்ஜிஓ-கள் ஒன்றுசேர்ந்து திட்டமிட்டிருக்கும் பேரணியைத் தள்ளிவைக்குமாறு அறிவுறுத்தியிருப்பதாக அறியப்படுகிறது. என்ஜிஓ-கள் லிம்மின் அறிவுரையை மதிக்கிறார்கள் என்று கூறிய மாநில ஜிங்கா 13 ஒருங்கிணைப்பாளர் அமிஸுடின் அஹ்மாட், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்திருப்பதை …
சீபோர்ட் பள்ளி மாணவர்களை மிரட்டும் வேலையை நிறுத்துக
கல்வி அமைச்சும், மாநிலக் கல்வித் துறையும், சீபோர்ட் பள்ளி மாணவர்கள் புதிய பள்ளிக்கு இடமாறிச் செல்ல மறுத்தால் அவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மிரட்டுவதை நிறுத்த வேண்டும். புதன்கிழமை மாநிலக் கல்வி இயக்குனர் மஹ்முட் கரீம், அவ்வாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. “மாநிலக் கல்வித் துறை இப்படி மிரட்டுவதை விடுத்து …
சாபா ஆர்சிஐ அறிக்கை: தாக்கல் செய்வதில் மேலும் தாமதம்
சாபா கள்ளக்குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய அறிக்கை கடந்த டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்ப்பட்டிருக்க வேண்டும். அது முழுமை பெறவில்லை என்பதால் அதை முடித்துக் கொடுக்க மேலும் மூன்றுமாதகால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இவ்வாண்டு மார்ச் 24-க்குள் ஆணையம் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும், ஆணையத்துக்கு இதுவரை …
அல்லாஹ் விவகாரத்தில் நஜிப்பின் நிலைப்பாட்டைச் சாடியது பெர்காசா
மலாய்க்காரர் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் பெர்காசா பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீது ஆத்திரம் கொண்டுள்ளது. கிறிஸ்துவர்கள் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதை அவர் கடுமையாகக் கண்டிக்கவில்லையாம். அல்லாஹ் விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சை நிலவிவரும் வேளையில் இதுவரை மவுனமாக இருந்த நஜிப், நேற்று அம்னோ உச்சமன்றக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் …
இப்போது போலீஸ், டி-சட்டை அச்சடிப்பவர்களைக் குறி வைக்கிறது
புத்தாண்டின்போது விலைவாசி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தோர் அணிந்திருந்த டி-சட்டையை அச்சடித்த ஆடவரிடம் போலீஸ் விசாரணை செய்ததை சுவாராம் குறைகூறியது. அதிகாரிகள் குற்றவியல் மற்றும் பாதுகாப்புக் குற்றங்கள் சட்ட (சொஸ்மா) த்தில் இணைக்கப்பட்ட புதிய பகுதிகளைப் பயன்படுத்தி மக்களை அச்சுருத்தி வருவதாக அது கூறிற்று. வியாழக்கிழமை ஜுல் ரெய்டி …
காடிர்: பிரதமர் மாற வேண்டும்; இல்லையேல் மாற்றப்படுவார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் போக்கை மாற்றிக்கொண்டு மக்களின் சுமையைக் குறைக்க சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், தவறினால் பிஎன் அடுத்த பொதுத் தேர்தலில் கவிழ்ந்து விடும் என அப்துல் காடிர் ஜாசின் தம் வலைப்பதிவில் எச்சரித்துள்ளார். பெரித்தா பப்ளிஷிங் சென், பெர்ஹாட்டில் தலைமை செய்தியாசிரியராக உள்ள…
ரோன் 95 ஏழைகளை மட்டுமே என்று சொல்லவில்லை: கேஜே-யும் கூ…
ரோன் 95 பெட்ரோலை ஏழைகளுக்கு மட்டுமே விற்பதென அரசாங்கம் வரையறுக்கப் போவதாகக் கூட்டரசுப் பிரதேச அமைச்சரை மேற்கோள்காட்டி நாளேடுகளில் வெளிவந்த செய்திகளை இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பக்கார் மறுத்தார். தெங்கு அட்னான் மன்சூரிடமே அதைக் கேட்டுத் தெரிந்து கொண்டதாக கைரி கூறினார். “குறைந்த வருமானம் …
புதிய ரயில்வண்டிகளால் கேஎல் மொனோரெயில் உருமாறும்
இன்று நான்கு-பெட்டிகள் கொண்ட 12 புதிய ரயில்வண்டிகள் வந்துசேர்வதைத் தொடர்ந்து கேஎல் மொனோரெயில் சேவை உருமாறப் போகிறது. புதிய ரயில்வண்டிகளால் மொனோரெயிலின் பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் 214-லிருந்து 430 ஆக அதிகரிக்கும் என ஷியாரிகாட் பிராசரானா நெகாரா பெர்ஹாட் ஓர் அறிக்கையில் கூறியது. இதனால் இனி மொனோரெயில்களில் இப்போது …
தேர்தல் வெற்றியில் கவனம் செலுத்துவீர்: அம்னோவுக்கு நூர் ஜஸ்லான் அறிவுறுத்தல்
பூலாய் எம்பி, நூர் ஜஸ்லான் முகம்மட், பினாங்கு அம்னோ மே 13 கலவரத்தைக் காண்பித்து பூச்சாண்டி காட்டுதல் போன்ற அச்சுறுத்தல் தந்திரங்களைக் கைவிட்டு தேர்தலில் வெற்றிபெறுவதில் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை பகர்ந்துள்ளார். அப்படிப்பட்ட தந்திரங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டவைதான். ஆனால், பொதுத் தேர்தலில் பினாங்கில் அம்னோவுக்குத் தொடர்ந்து …
பெர்காசா: கைரி அவரது வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டும்
இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் அவரது அமைச்சு சம்பந்தப்பட்ட விவகாரங்களை மட்டுமே கவனிக்க வேண்டும், ‘அல்லாஹ்’ விவகாரத்தில் கருத்துரைக்க அவருக்கு அதிகாரமில்லை என மலாய் உரிமைக்காக போராடும் அமைப்பான பெர்காசா கடுமையாக இடித்துரைத்துள்ளது. “புத்ரா ஜெயா பேச்சாளராக மாற வேண்டாம். நீங்கள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் மட்டுமே. …
நஜிப்-ஆதரவு பேரணியாக இருந்தாலும் சட்டத்தைப் பின்பற்றத்தான் வேண்டும்
பேரணி நடத்துவோர் பிஎன்னைச் சேர்ந்தவர்களோ, பக்காத்தான் சேர்ந்தவர்களோ ஒரே வகை நியாயம்தான் கடைப்பிடிக்கப்படுகிறது என்கிறார் பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரகிம் ஹனாபி. பிஎன், பக்காத்தான் ரக்யாட் பேரணி ஏற்பாட்டாளர்களிடம் போலீஸ் வெவ்வேறு விதமாக நடந்துகொள்கிறது என்று கூறப்படுவதை அவர் மறுத்தார். ஞாயிற்றுக்கிழமை, செபராங் ஜெயா, பண்டார் சன்வே-யில் …
புத்தாண்டு பேரணி டி-சட்டைகளை தயாரித்தவர் கைது
துருன் என்ற அரசு சார்பற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு பேரணியில் பங்கேற்ற ஆர்பாட்டக்காரர்கள் அணிந்திருந்த டி- சட்டைகளைத் தயாரித்து விற்றவர் இன்று வாக்குமூலம் அளிக்க செர்டாங் போலீஸ் தலைமையகத்திற்கு சென்ற போது கைது செய்யப்பட்டார். முகமட் ஸுல் ரைடி அஹமட் தார்மிஸி பீனல் சட்டம் செக்சன்…
தீயணைப்பு படையின் ரிம50 மில்லியன் டம்பமான செலவு
தீயணைப்பு மற்றும் மீட்பு இலாகவுக்கு தேவையற்ற கருவிகளை வாங்கியதன் மூலம் நிதி அமைச்சு ரிம50 மில்லியனை வீண் செலவு செய்துள்ளது என்று நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு (பிஎசி) குற்றம் சாட்டியது. 116 வெட்டும் தீயணைப்பு கருவிகள் வாங்கப்பட்டது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று…
தியன் சுவாவுக்கு ஒரு மாத சிறை தண்டனை
தடை செய்யப்பட்டுள்ள புலாபோல் போலீஸ் பயிற்சி மையத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக பிகேஆர் உதவித் தலைவரும் பத்து நாடாளுமன்ற உறுப்பினருமான தியன் சுவாவுக்கு இன்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டணையும் ரிம1000 அபராதம் விதித்தது. அந்த மையத்திலிருந்து வெளியேற மறுத்ததால் சுவா ஏப்ரல் 28,…
சீபோர்ட் தமிழ்ப்பள்ளி நிலத்தைத் திருப்பி எடுத்துக்கொள்ள பிகேஎன்எஸ் ஆயத்தமாகிறது
சீபோர்ட் தமிழ்ப்பள்ளி அமைந்துள்ள நிலப்பகுதி பள்ளிக்கே உரியதாக அரசு ஏட்டில் பதிவு செய்யப்படுவது தொடர்பில் மாநில அரசிடமிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை இல்லை என்பதால், சிலாங்கூர் மேம்பாட்டுக் கழகம் (பிகேஎன்எஸ்) அந்த நிலத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ள தயாராகி வருகிறது. 27 மாணவர்கள் இன்னும் அந்த இடத்தையே பள்ளிக்கூடமாக பயன்படுத்திக் …
கமலநாதன் தாக்கப்பட்ட சம்பவம்: வழக்குரைஞர்கள் கொடுத்துதவ மசீச இளைஞர்கள் முன்வந்தனர்
கல்வி துணை அமைச்சர் II பி. கமலநாதனைத் தாக்கியதாகக் கூறப்படும் நபருக்கு எதிராக சட்டத்துறை தலைவர் (ஏஜி) அலுவலகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பதால் அந்நபருக்கு எதிராக வழக்கு தொடுப்பதில் வழக்குரைஞர்களைக் கொடுத்துதவ மசீச முன்வந்தது. போலீஸ் விசாரணை முடித்து ஏஜி-யிடம் அறிக்கை கொடுத்து ஒரு வாரம் ஆகிறது ஆனால், …


