விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
பிஎன் உணர்வை மதிப்பீர்: கைரிக்கு மசீச இளைஞர்கள் அறிவுறுத்தல்
காஜாங்கில் பிஎன்-னைப் பிரதிநிதித்து மசீசதான் போட்டியிடும். அதை அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் ஏற்க வேண்டும் என மசீச இளைஞர் தலைவர் சொங் சின் வூன் கூறினார். “காஜாங்கைக் வெல்வது நம் ஒருமித்த குறிக்கோளாகும். (அப்படி இருக்க) வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் பழைய முறையைப் பின்பற்ற வேண்டியதில்லை என்றவர் …
தமிழ் மலர் அலுவலகம் தாக்கப்பட்டது
பாராங் கத்தி ஏந்திய மூவர், கோலாலும்பூர் தமிழ் மலர் அலுவலகத்துக்குள் புகுந்து அடித்து நொறுக்கினர். தலைக்கவசம் அணிந்து முகத்தை மறைத்த அவர்கள் காலை மணி 11-க்கு ஜாலான் ஈப்போவில் உள்ள தமிழ் மலர் அலுவலகத்துக்குள் நுழைந்ததாக நிர்வாக ஆசிரியர் எஸ்.எம்.பெரியசாமி கூறினார். அங்கிருந்தவர்களிடம் பெரியசாமி எங்கே என்று கேட்டிருக்கின்றனர். …
சபரி: பிகேஆரின் அரசியல் விளையாட்டுகளில் பிஎன் ஏமாறக் கூடாது
மாற்றரசுக் கட்சியான பிகேஆரின் அரசியல் விளையாட்டுகளில் பிஎன் சிக்கிக்கொள்ளக்கூடாது எனத் தொடர்பு, பல்லூடக அமைச்சர் அஹமட் சபரி சீக் எச்சரித்துள்ளார். உள்கட்சி விவகாரங்களுக்குத் தீர்வுகாணும் விவேகமற்ற பிகேஆர் தலைவர்கள், கவனத்தைத் திசைதிருப்புவதற்காக இப்படிப்பட்ட அரசியல் ஆட்டங்களை ஆடத் தொடங்கியுள்ளனர் என்றாரவர். லீ சின் செ காஜாங் சட்டமன்றத் தொகுதியைத் …
சிலாங்கூர் டிஏபி பிகேஆருக்கு துரோகமிழைக்காது
பாஸ், காஜாங் இடைத் தேர்தலைப் புறக்கணிப்பது பற்றி அலோசித்தாலும் டிஏபி தன் நண்பனைக் கைவிடாது. “பக்காத்தான் ரக்யாட் பங்காளி என்ற முறையில் சிலாங்கூர் டிஏபி, இடைத்தேர்தலில் பிகேஆர் வெற்றிபெற தேவையான ஆதரவையும் உதவிகளையும் வழங்கும். தேவையான நேரத்தில் அதைக் கைவிடாது, அதற்குத் துரோகம் இழைக்காது. “இடுக்கண் வரும்போது உதவுவதுதானே …
அம்பிகா: பிகேஆர் விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளது
பிகேஆரின் தகிடுதத்தங்கள் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள முன்னாள் பெர்சே.2 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன், காஜாங் தொகுதி காலிசெய்யப்பட்டு அங்கு ஒரு இடைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்னவென்பதை அது பொதுமக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளது என்றார். அது கட்சிக்குள் நிலவும் பூசலுக்குத் தீர்வுகாணும் முயற்சிபோன்று தோன்றுகிறது என்று …
பள்ளிவாசல் தாக்கப்படும் ‘சாத்தியம்’ இருப்பதை எதிர்த்து மலாய் என்ஜிஓ-கள் ஆர்ப்பாட்டம்
நேற்றிரவு பினாங்கு பாயான் பாரு பள்ளிவாசலில் திரண்ட மலாய் என்ஜிஓ-களைச் சேர்ந்த சுமார் 150 பேர், சில தரப்பினர் பள்ளிவாசலைத் தாக்கத் திட்டமிடுவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களுக்கு வெளியில் கண்டெடுக்கப்பட்ட பதாதைகளில் ‘அல்லாஹ்’ என்னும் சொல் இருந்ததையும் அவர்கள் கண்டித்தனர். அல்லாஹ் என்னும் சொல் முஸ்லிம்களுக்கு …
பாபாகோமோவின் வழக்கை ஒத்திவைக்கும் முயற்சி நிராகரிக்கப்பட்டது
வான் முகம்மட் அஸ்ரி வான் டெரிஸ் அல்லது பாபாகோமோ, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தமக்கு எதிராக தொடுத்துள்ள ரிம100மில்லியன் அவதூறு வழக்கை ஒத்திவைக்க செய்துகொண்ட விண்ணப்பத்தை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மேலும் ஒரு சாட்சியைக் கொண்டுவருவதற்காக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டிருந்தார். “வான் …
காஜாங்கில் பிஎன் போட்டியிடும்- முகைதின்
காஜாங் இடைத் தேர்தலில் போட்டியின்றி வெல்லலாம் என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நினைத்தால் அது நடக்காது. பிஎன் வேட்பாளர் அங்கு களமிறக்கப்படுவார். துணைப் பிரதமர் முகைதின் யாசின் அதை அறிவித்ததாக த ஸ்டார் கூறியது. “நாங்கள் வழக்கம்போல் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம். “எதிர்த்துப் போட்டியிடுபவர் யாராக இருந்தாலும் …
அஸ்மின்: காஜாங் தேர்தலுக்குப் பின்னே முக்கிய நோக்கமுண்டு
காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ பதவி துறந்தது, காலியான தொகுதிக்கு இடைத் தேர்தல் நடப்பது எல்லாமே எதிர்கால பலனைக் கருத்தில் கொண்ட ஒரு “தந்திர நடவடிக்கை” என்கிறார் சிலாங்கூர் பிகேஆர் தலைவர், அஸ்மின் அலி. “அன்வார் இப்ராகிம் அங்கு போட்டியிடுவது நாங்கள் சிலாங்கூருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும்…
பினாங்கு தேவாலய விவகாரத்தைக் கவனிக்க தனி போலீஸ் படை
பினாங்கில் தேவாலயங்களுக்கு வெளியில் “ஏசுநாதர் அல்லாவின் பிள்ளை” என்று வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகள் காணப்பட்டதன் தொடர்பிலும் அஸ்ஸம்ஷன் தேவாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பிலும் போலீஸ் இதுவரை 16 புகார்களைப் பெற்றுள்ளது. “நேற்றிரவு அசம்பாவிதம் எதுவும் இல்லை. அதற்கு இறைவனுக்கு நன்றி”, என மாநில போலீஸ் தலைவர் அப்துல்…
காஜாங்கில் போட்டியிடாதீர்: பிஎன்னுக்கு அன்வார் கோரிக்கை
காஜாங் இடைத் தேர்தலால் வீண் செலவுதான் என்று தேர்தல் ஆணையம் நினைக்குமானால் ‘பிஎன் அதில் போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கலாம்’. பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். காஜாங்கில் களமிறங்க ஆயத்தமாகிவரும் அன்வார், பிகேஆர் “அதன் பணிகளைத் தொடர இடமளித்து” பிஎன் தேர்தலில் குதிக்காமல் ஒதுங்கிக் கொள்ளலாம் என்றார்.…
காஜாங்கில் அன்வார்தான் போட்டியிடுகிறார்: பிகேஆர்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்தான் காஜாங்கில் போட்டி இடுகிறார். இதை அக்கட்சி இன்று உறுதிப்படுத்தியது. சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமே பிகேஆர் தலைமையகத்தில் அம்முடிவை அறிவித்தார். அன்வார் பொறுப்பேற்கும்வரை “இடைக்காலத்துக்கு” மந்திரி புசார் பணியைத் தாம் தொடரப்போவதாகவும் அவர் சொன்னார். காஜாங்கில் இடைத் தேர்தலுக்கு …
பொதுப்பணம் விரயம் செய்யப்படுவதைக் குற்றமாக்குவீர்
அரசுப் பணியாளர்கள் கவனக் குறைவால் பொதுப் பணத்தை விரயம் செய்தலைக் குற்றமாக்க ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் அதற்கு தம் ஆதரவு நிச்சயம் உண்டு என்கிறார் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் நூர் ஜஸ்லான் முகம்மட். ஆனால், தவறிழைக்கும் அரசுப் பணியாளர்கள்மீது தலைமைச் செயலாளரோ, அமைச்சர்களோ நடவடிக்கை எடுப்பார்களானால் …
அன்வார் காஜாங்கில் களமிறங்க பிகேஆர் இளைஞர் ஆதரவு
பிகேஆர் இளைஞர் பகுதி, விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படும் காஜாங் இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதை மட்டுமே தான் ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் விடுத்துள்ள அறிக்கை, அப்துல் காலிட் இப்ராகிமை மந்திரி புசார் பதவியிலிருந்து அகற்றும் நாடகம் விரைவில் …
பதவி பறிப்பா?, அப்படி ஒன்றும் இல்லை, காலிட்
காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது அவரை மந்திரி புசார் பதவியிலிருந்து நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட திடீர் புரட்சியா என்ற கேள்விக்கு, "அப்படி ஒன்றும் இல்லை", என்று சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறினார். "ஒரு மந்திரி புசாரின் நியமனத்திற்கு…
முகைதின் நிகழ்ச்சியில் மலேசியாகினிக்கு அனுமதி மறுப்பு
துணைப் பிரதமர் அலுவலகம் அதன் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொள்ள மலேசியாகினிக்கு அனுமதி இல்லை என்று கூறித் தடுத்தது. இன்று பிற்பகல், பாங்குனான் பெர்டானா புத்ராவில் “உயரும் வாழ்க்கைச் செலவுகள்” மீது முகைதின் யாசின் செய்தியாளர் கூட்டமொன்றை நடத்தினார். அதில் செய்தி சேகரிக்கச் சென்ற மலேசியாகினி செய்தியாளர் கூட்டத்துக்குச் செல்ல …
நிதானம் காப்பீர்: கிறிஸ்துவ கூட்டமைப்பு வேண்டுகோள்
பினாங்கு தேவாலயத்துக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசிப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆத்திரம் கொள்ளாமல் பொறுமை காக்க வேண்டும் என மலேசிய கிறிஸ்துவ கூட்டமைப்பு (சிஎப்எம்) கிறிஸ்துவர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. “வெறுக்கத்தக்க செயல்களான” இதுவும் இதற்குமுன் பினாங்கில் பல்வேறு தேவாலயங்களில் ‘ஏசுநாதர் அல்லாவின் மகன்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகள் தொங்கவிட்ட சம்பவங்களும் …
த ஹீட் மீதான தற்காலிகத் தடை நீக்கப்பட்டது
த ஹீட் மீதான தற்காலிக தடை விதிப்பை அரசாங்கம் அகற்றியுள்ளது. பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரின் துணைவியாரும் அளவுமீறி ஆடம்பரச் செலவு செய்வதாகக் கட்டுரை வெளியிட்டதை அடுத்து அவ்விதழுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. தடைவிதிப்பு நீக்கப்பட்டதைத் தெரிவிக்கும் கடிதம் ஒன்று இன்று மாலை அந்த வார இதழுக்கு …
குலா: அடித்த ஆசிரியரை அடிவாங்கிய துணை அமைச்சர் மன்னித்து விட்டேன்…
அடித்தவர் ஆசிரியர். அடிவாங்கியவர் கல்வி துணை அமைச்சர் பி.கமலநாதன். அவரை இவர் மன்னித்து விட்டதாக கூறுவது ஏமாற்றமளிப்பதோடு ஒழுங்கின்னையைக் காட்டுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அடிவாங்கிய துணை அமைச்சர் கமலாநாதன் கூற்றுப்படி அது அவருக்கும் அடித்த உலுசிலாங்கூர் அம்னோ இளைஞர்…
10-அம்சத் தீர்வை மாநிலச் சட்டங்களுடன் இணைக்கலாம்
பிரதமர்துறையில் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் ஜோசப் குருப், அமைச்சரவையின் 10-அம்சத் தீர்வுக்கு ஏற்ப மாநிலச் சட்டங்களில் திருத்தம் செய்வது பற்றி கூட்டரசு, மாநில அரசுகள் பேச்சு நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ளார். “இரண்டையும் (10-அம்சத் தீர்வையும் மாநிலச் சட்டங்களையும்) இணப்பதற்கு ஒரு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கலாம்”, என்றவர் …
பிகேஆர் காஜாங் பிரதிநிதி பதவி விலகல்: அங்கு அன்வார் போட்டியிடுவார்?
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் பதவியிலிருந்து தூக்கப்படலாம் என்ற ஊகம் பரவி வரும் வேளையில் அதற்கு மேலும் வலுசேர்ப்பதுபோல் பிகேஆர் பிரதிநிதி ஒருவர் தம் சட்டமன்ற இடத்தைக் காலி செய்துள்ளார். காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சின் செ, இன்று பிற்பகல் பெருந் தலைவர் அன்வார் …
மஇகா ரமணன் பதவி விலகல்
மஇகா தலைமை பொருளாளர் ஆர். ரமணன், நான்காண்டுகளுக்குமுன் உளவியல் மருத்துவர் ஒருவரிடமிருந்து ரிம5 மில்லியன் மோசடி செய்து பெற்றதாக அண்மையில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பதவி விலகினார். தீர்ப்பை எதிர்த்து ரமணன் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் முடிவு தெரியும்வரை அவர் பதவி விலகி இருப்பதாக உத்துசான் மலேசியாவின் …
தேவாலயத்துக்குள் மொலடோப் குண்டுகள் வீசி எறியப்பட்டன
இன்று அதிகாலை பினாங்கு லெபோ பார்க்குவார் அஸ்ஸம்ஷன் தேவாலயத்துக்குள் பெட்ரோல் குண்டுகள் வீசி எறியப்பட்டன. அதிகாலை 1.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்ததாக பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபியை மேற்கோள்காட்டி த ஸ்டார் ஆன்லைன் அறிவித்தது.…


