விஸ்மா புத்ரா (Wisma Putra), நாட்டில் வசிக்கும் அல்லது அந்த நாட்டின் வழியாகப் பயணம் செய்யும் குடிமக்கள், e-Konsular இணையதளம் மூலம் தங்களது தொடர்பு விவரங்களைப் பதிவு செய்து, அவற்றைத் தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்குமாறு அறிவுறுத்துகிறது. நேபாளத்தின் வடக்கு ராசுவா மாவட்டத்தில் உள்ள போதே கோசி(Bhote Koshi) ஆற்றுப்…
சீனப் புத்தாண்டு காணொளியால் எரிச்சலடைந்திருக்கிறார் ஷபரி சிக்
எதிரணி எம்பி தெரேசா கொக் நையாண்டி செய்யும் நோக்கத்தில் இணையத்தில்; பதிவேற்றம் செய்திருந்த சீனப்புத்தாண்டு காணொளி “எரிச்சலுண்டாகுவதாக”க் கூறிய தொடர்பு, பல்லூடக அமைச்சர் ஷபரி சிக், அது பொறுப்பான தலைவர் செய்யும் வேலை அல்ல என்றார். அதைக் கண்டு பல தரப்பினர் ஆத்திரமடைந்துள்ளனர் என்றாரவர். “அதைப் பார்த்தால் எரிச்சல் …
பாஸ் இளைஞர் பகுதி காஜாங்கில் அன்வாரை ஆதரிக்கும் ஆனால்……..
அன்வார் இப்ராகிம் சிலாங்கூர் மந்திரி புசார் ஆவதை பக்காத்தான் ரக்யாட்டில் எல்லோருமே ஆதரிப்பதாகக் கூறுவதற்கில்லை. குறிப்பாக பாஸ் இளைஞர் பகுதிக்கு அதில் உடன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை. காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவரை ஆதரிப்பதை வைத்து அவர் மந்திரி புசார் ஆவதையும் தாங்கள் ஆதரிப்பதாக யாரும் நினைத்துவிடக்கூடாது என …
தூருன் தலைவரை ‘வில்லனாக’ சித்திரித்துக் காட்டுகிறது சிலாங்கூர் பிடிஎன்
அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டியதற்காக சமூக ஆர்வலரான முகம்மட் அஸான் சபாரை தேசிய குடிமைப் பிரிவு (பிடிஎன்) “நன்றி கெட்டவராக” கருதுகிறது. சிலாங்கூர் பிடிஎன் அதிகாரிகள் மாரா உதவிச் சம்பளம் பெற்ற மாணவர்களுக்காக நடத்தும் விளக்கக் கூட்டங்களில் தம் நிழல்படத்தைக் காண்பித்து உதவிச் சம்பளம் பெறும் மாணவர்கள் அரசாங்கத்தை எதிர்க்கக் …
அன்வார்: சொங் வேயை எதிர்க்க என்னால் முடியாது
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், காஜாங் இடைத் தேர்தலில் லீ சொங் வே போட்டியிட்டால் தமக்குத் தோல்வி உறுதி என்று குறிப்பிட்டார். பெட்மிண்டன் ஆட்டத்தில் உலகின் முதல்தர ஆட்டக்காரரான அவருக்குள்ள செல்வாக்கு என்ன, புகழ் என்ன, அவரை எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியுமா என்றவர் வேடிக்கையாககக் குறிப்பிட்டார். “லீ …
அன்வார்: காலிட்-அஸ்மின் “பேரம்” எதுவுமே கிடையாது
சர்சைக்குள்ளாகியிருக்கும் "காஜாங் நகர்வு" திட்டத்தை சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் ஏற்றுக்கொண்ட போது அவர் நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என்று பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். ஆகவே, சிலாங்கூர் பிகேஆர் தலைவர் அஸ்மின் அலி அவரது சிலாங்கூர் மாநில சட்டமன்ற புக்கிட் அந்தாராபங்சா…
இசி: அவதூறு கூறும் பரப்புரைகளைத் தடுக்க நடப்பு விதிகளே போதுமானவை
பரப்புரைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நடப்பு விதிகள் தெளிவாகவே எடுத்துரைக்கின்றன. “செக்ஸ் விவகாரங்களைச் சொல்லிக் களங்கப்படுத்தும்” பரப்புரையில் அம்னோ ஈடுபடுவதைத் தடுக்க அவை போதுமானவை. தேர்தலின்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கக் கோட்பாடுகள் பற்றி அரசியல் கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்பட்டு வந்திருப்பதாக தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் அப்துல் …
‘அப்பாவைப்போல் பிள்ளை’ முக்ரிஸ் பற்றி பாஸ்
தம் நிர்வாகத்தைக் குறை சொல்லிக் கொண்டிருந்தால் முந்திய பக்காத்தான் ரக்யாட் ஆட்சியின் “விவகாரமான திட்டங்கள் மீதான கோப்புகள்” அம்பலப்படுத்தப்படும் என்று மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர் மிரட்டியிருப்பதை கெடா பாஸ் பொருட்படுத்தவில்லை. “தயவுசெய்து அதைச் செய்யுங்கள். பிரச்னைகளா, ஊழலா எதையும் மூடிமறைக்க வேண்டாம்”, என மாநில பாஸ் ஆணையர்…
செக்ஸ் விவகாரங்களைச் சொல்லிக் களங்கப்படுத்தும் பரப்புரையைத் தடுக்க வேண்டும்
காஜாங் இடைத்தேர்தலில் அம்னோ-பிஎன், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை செக்ஸ் விவகாரங்களில் சம்பந்தப்படுத்தி அவரைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் பரப்புரை செய்வதைத் தேர்தல் ஆணையம்(இசி) தடுக்க வேண்டும். அப்படிப்பட்ட பரப்புரை உத்தி “முறைகேடானது, அசிங்கமானது” என பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறினார். “ 1998 தொடங்கி அம்னோவும் …
பேச்சுரிமை மீதான கருத்தரங்கத்துக்குப் பல்கலைக்கழகம் அனுமதி மறுப்பு
பிப்ரவரி 16-இல், யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா-வில் இஸ்லாமும் பேச்சுரிமையும் மீதான கருத்தரங்கம் ஒன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அப்பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அனுமதி மறுப்புக்குக் காரணம் எதுவும் சொல்லப்படவில்லை என இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணியின் இயக்குனர் டாக்டர் பாரூக் மூசா கூறினார். “அது ஒரு …
கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களை ஏமாற்றப் பார்க்கிறார்களா? ஜாக்கிமால் நிரூபிக்க முடியுமா?
மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை (ஜாக்கிம்) கிறிஸ்துவர்கள் முஸ்லிம்களை ஏமாற்ற முயல்வதாகக் கூறுவதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என சாபா எம்பி ஒருவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஜனவரி 31-இல் ஜாக்கிமால் தயாரிக்கப்பட்ட வெள்ளிக்கிழமை தொழுகையுரையில் யூதர்களும் கிறிஸ்துவர்களும் தவறான பாதையைக் காண்பித்து எமாற்றப் பார்க்கிறார்கள் என்றும் அதற்கெதிராக முஸ்லிம்கள் …
டிஏபி: காஜாங் தேர்தல் பணத்தை விரயமாக்கும் செயலல்ல
காஜாங் இடைத் தேர்தல் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லப்படுவதை மக்கள் பொருட்படுத்தக் கூடாது என்றுரைத்து பிகேஆருக்குத் தன் ஆதரவு என்றென்றும் உண்டு என்பதை டிஏபி உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இடைத் தேர்தல் கூட்டரசு அரசாங்கத்துக்கும் மாநில அரசுக்கும் மக்களிடமுள்ள ஆதரவை அளவிட உதவும் என டிஏபி தேசிய தலைவர் கர்பால் …
எதனை வைத்து உன்னை தமிழன் என்பாய்? தமிழை இழந்து விட்டு…
சங்கம் வளர்த்த தமிழ் இந்நாட்டி இன்னும் எத்தனை நாள் வாழும்?.என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை!!ஆனால் 2000 கு மேல் அரசு சாரா இயக்கங்களை வைத்துக்கொண்டு வாழா வெட்டிகளாக இயக்க தலைவர்கள் பொறுப்பாளர்கள் பணம் சம்பாதிப்பதில் பகல் பேய்களாக திரிகிறார்கள். இது திட்ட மிட்ட மோசடி ..நம்மை ஏமாற்றும்…
சுல்தான்களுடன் நெருங்கிப் பழக உதவும் என்பதால் எம்பி ஆக ஆசைப்படுகிறார்…
ஆட்சியாளர் மன்றத்தில் சுல்தான்களிடமும் அதிகாரம் படைத்த மற்ற வட்டாரங்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால்தான் அன்வர் இப்ராகிம் மந்திரி புசார்(எம்பி) ஆக விரும்புகிறார். அன்வரின் முன்னாள் தோழர் சந்த்ரா முஸாபார் , பெரித்தா ஹரியான் நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். “எம்பி பதவி மட்டுமே அன்வரின் நோக்கம் என்று …
அஜிஸ் பாரி: சுல்தான் அறுதி அதிகாரம் படைத்தவரல்ல
சுல்தான்கள் அரசமைப்பைப் பின்பற்ற வேண்டிவர்கள். அந்த வகையில் மந்திரி புசார்களை நியமனம் செய்வதில் அவர்களுக்கு அறுதி அதிகாரம் ஒன்றும் கிடையாது என்கிறார் அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அஜீஸ் பாரி. முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா, சிலாங்கூர் மாநில அரசமைப்புப்படி மந்திரி புசார்களை நியமனம் செய்வதில் சுல்தானுக்கே …
ரபீஸி: அன்வார் விவகாரத்தில் விளையாடுகிறோம் என்று எண்ணினால், பிகேஆரை நிராகரியுஙகள்
கட்சி ஜனநாயக நடைமுறைகளை தவறாக பயன்படுத்துகிறது என்று மக்கள் கருதினால், காஜாங் இடைத் தேர்தலில் அத்தொகுதி வாக்காளர்களால் நிராகரிக்கப்படுவதை பிகேஆர் ஏற்றுக்கொள்ள தயார் என்று அக்கட்சியின் வியூக இயக்குனர் ரபீஸி ரம்லி கூறுகிறார். "நமது முடிவு ஜனநாயக நடைமுறைகளுடன் விளையாடுவதாகும் என்று சிலர் வர்ணிக்கின்றனர். இல்லை. நாங்கள் ஒரு…
மகாதிர்: காஜாங்கில் மசீசதான் போட்டியிட வேண்டும்
காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு மசீசவுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “மசீச மீண்டும் தலையெடுக்கப் பார்க்கிறது. அதனால்தான் அதற்கு அந்த வாய்ப்பை வழங்க வேண்டும்”. அத்தொகுதியில் சீனர்கள் அதிகம் இருந்தால் அங்கு மசீச போட்டியிடுவதுதான் முறையாகும் என்று மகாதிர் …
காஜாங் இடைத் தேர்தல்: தவறு செய்துவிட்டது பிகேஆர்
மசீச தலைவர் லியோ தியோங் லாய், காஜாங்கில் இடைத் தேர்தல் நடத்த பிகேஆர் செய்த முடிவு “தப்பு”என்று கூறியுள்ளார். “மக்கள் வாழ்க்கைச் செலவினம் கூடியிருப்பதாலும் பொருளாதாரப் பிரச்னைகளாலும் ஏற்கனவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். “அவர்களும் (பிகேஆர்) பொருளாதாரத்தை உயர்த்த கவனம் செலுத்த வேண்டுமே தவிர சுய விருப்பத்துக்காக இடைத் தேர்தலை …
இவ்வாண்டு கூட்டரசு பிரதேச தினக் கொண்டாட்டம் இல்லை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சிக்கனத்தை வலியுறுத்தி இருப்பதால் அரசாங்கம் இவ்வாண்டு கூட்டரசு தினத்தை விமரிசையாகக் .கொண்டாடப் போவதில்லை. கொண்டாட்டத்துக்குச் செலவிடும் பணத்தைத் தேவைப்படுவோருக்குக் கொடுத்து உதவப்போவதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறினார். “கொண்ட்டாட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையை ரிம7 மில்லியனை ரிம1.5 மில்லியனாகக் …
பதவி துறக்கும் அரசியல்வாதிகளைத் தண்டிக்க சட்டம் தேவை
தகுந்த காரணமின்றி தொகுதிகளைக் காலி செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தண்டிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என தலைமைத்துவ, மேம்பாட்டு ஆய்வுக் கழகம்(லீட்) பரிந்துரைத்துள்ளது. “தேவையற்று பதவிதுறப்பதைச் சட்டப்படி தடுப்பது அவசியம்”, என அதன் நிறுவனரும் இயக்குனருமான அமின் அஹ்மட் கூறினார். இடைத் தேர்தல் செலவில் ஒரு பகுதியைப் பதவிதுறக்கும் …
முருகேசன், மஇகா தலைமைப் பொருளாளராக நியமனம்
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எஸ். முருகேசன் மஇகா தலைமைப் பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் இன்று இதை அறிவித்தார். சிவில் வழக்கைத் தொடர்ந்து ஆர். ரமணன் பொருளாளர் பதவியிலிருந்து விலகியதால் முருகேசன் (வலம்). 47, அதற்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் தலைமைச் செயலாளரும் ஒரு வழக்குரைஞருமான முருகேசன், …
தி கியாட்: லியோ அன்வாரை எதிர்த்து போட்டியிடலாமே
முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், காஜாங் இடைத் தேர்தலில் அன்வாரை எதிர்த்து மசீச தலைவர் லியோ தியோங் லாய் களமிறங்குவதே பொருத்தமாக இருக்கும் என்று மொழிந்துள்ளார். காஜாங்கில் தேசிய எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவதால் அவரை லியோ போன்ற உயர் தலைவர் எதிர்ப்பதுதான் பொருத்தமாக …
எம்பி கட்சிக்காகக் கூடுதல் நேரத்தை ஒதுக்குவார்
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், நிறுவனத் துறையிலிருந்து வந்தவர் என்பதால் எப்போதும் மாநில நிர்வாகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் கொடுப்பார். “சிலாங்கூரைச் சீரமைப்பதுதான் என் குறிக்கோள். ஆதரவு வேண்டும் என்பதற்காக மக்களைத் திருப்திப்படுத்துவது இரண்டாம் பட்சம்தான்”, என்றவர் சொல்வார். ஆனால், இதுவே பலரும்…
காஜாங்கில் போட்டியிடுவது ஏன்? அன்வார் விளக்கமளிப்பார்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தாம் காஜாங்கில் போட்டியிடுவது ஏன் என்று கேள்வி எழுப்பும் பக்காத்தான் பங்காளிகளையும் வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீநிவாசன் போன்ற நண்பர்களையும் பெர்சே 2.0 அமைப்பு போன்றவற்றையும் சந்தித்து விளக்கமளிக்க முடிவு செய்துள்ளர். அவர்கள் கேள்வி எழுப்புவது நியாயம்தான் என்று கூறிய மக்களுக்கு விளக்கமளிக்கும் …


