சுல்தான் கருணையால் தூக்குத்தண்டனை கைதி தலை தப்பியது

சந்திரன்  பாஸ்கரனுக்கு  இன்று  தூக்குத்தண்டனை  நிறைவேற்றப்பட  விருந்தது.  ஆனால்,  கடைசி  நேரத்தில் ஜோகூர்  சுல்தான்  தலையிட்டதால்  அவருக்குத்  தண்டனை  ஒத்தி   வைக்கப்பட்டது. தண்டனை  ஒத்திவைக்கப்பட்ட  செய்தி  நேற்றிரவுதான்  தங்களுக்குத்  தெரிய  வந்ததாக  அவரின்  சகோதரர்  தாமோதரன்  கூறினார்.  “கடைசி  நேரத்தில்   கிடைத்த  செய்தியால்  எங்கள்  குடும்பமே  மிகுந்த   மகிழ்ச்சி …

பாலியல் உறவுமீதான ஆய்வைச் செய்தது நீலாயில் உள்ள ஒரு மருத்துவ…

நீலாய்  தொடக்கநிலைப்  பள்ளி  ஒன்றில்  பாலியல்  உறவுமீதான  ஆய்வைச்  செய்தது  அங்குள்ள  ஒரு  மருத்துவ  நிலையம்  என்று  நெகிரி  செம்பிலான்  கல்வித் துறை  கூறியது. அது  அந்த  ஆய்வை  நடத்தியது  தங்களுக்குத்  தெரியாது  என்று  மாநிலக்  கல்வி  இயக்குனர்   கல்சோம்  காலிட்  கூறியதாக  த  ஸ்டார்  அறிவித்துள்ளது.  “எங்களுக்கும் …

உயிருக்கு மிரட்டல் என தெரேசா கொக் போலீஸில் புகார்

சில  முஸ்லிம்  என்ஜிஓ-கள்  கோழிகளை  வெட்டி  அவற்றின்  இரத்தத்தைத்  தம்  உருவப்படம்  பொறிக்கப்பட்ட   பதாதை  மீது  பூசியதை  அடுத்து  தம்   பாதுகாப்புக்கு  மிரட்டல்  ஏற்பட்டிருப்பதாக  டிஏபி-இன்  சிபூத்தே  எம்பி  தெரேசா கொக்  போலீசிடம்   புகார்  செய்துள்ளார்.  தம்  மீது  ஆத்திரம்  உண்டாகும்படி  பேசியதுடன்  தம்  கன்னத்தில்  அறைவோருக்கு  ரிம500 …

நஜிப்பை அறைந்தால் ரிம1,200 கொடுப்பதாக ஒரு என்ஜிஓ அறிவித்திருந்தால் என்னவாகும்?

சில  முஸ்லிம்  என்ஜிஓ-கள்  திறந்த  வெளியில்  கோழிகளைக்  காவுகொடுப்பதையும் ஒரு  எம்பிக்கு  எதிராக  மிரட்டல்  விடுப்பதையும்  அனுமதித்த  போலீசை  லிம்  கிட்  சியாங்  கடுமையாகக்  கண்டித்தார். ஒரு  என்ஜிஓ  அரசாங்கத்  தலைவர்களுக்கு  எதிராக  இதேபோல்  நடந்துகொண்டிருந்தால் போலீஸ்  சம்பவம் நடக்கும்  இடத்துக்கு  முன்கூட்டியே  சென்று  நடவடிக்கை  எடுத்திருக்கும்  என்றவர் …

அஸ்மின்: காலிட் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமக்குப் பிடிக்காதவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்

சிலாங்கூர் மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்   தம்  அரசியல்  எதிரிகளுக்கு  எதிராக  அதிகாரத்தைத்  தவறாக  பயன்படுத்துவதை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலி  கூறியுள்ளார். சிலாங்கூர்  மாநில  மேம்பாட்டுக்  கழக(பிகேஎன்எஸ்)த்தின்  துணை  நிறுவனமொன்று  20-க்கு  மேற்பட்ட  ஒப்பந்தப்  பணியாளர்களை  வேலையிலிருந்து  நிறுத்தியதைக்  குறிப்பிட்டு …

கோழிகளைப் பலியிட்டு பதாதைமீது இரத்த அபிஷேகம் செய்தனர்

முஸ்லிம்  என்ஜிஓ-களைச்  சேர்ந்த  ஆத்திரம்கொண்ட  ஆர்ப்பாட்டக்காரர்களின்  கூட்டம்  ஒன்று  நான்கு  கோழிகளைப்  பலியிட்டு  அவற்றின்  இரத்தத்தை  டிஏபி,  பிகேஆர்  தலைவர்களின்  உருவப்படங்களைக்  கொண்ட  ஒரு  பதாதைமீது  தெளித்தனர். முஸ்லிம்  என்ஜிஓ-களின்  மன்றம்  என்று  தன்னை  அழைத்துக்கொண்ட  அக்கூட்டம்,  ‘மலாய்த்  தலைமைத்துவத்தையும் பேரரசரையும்  இஸ்லாத்தையும்  மலாய்க்காரர்  கண்ணியத்தையும்  இழிவுபடுத்தும்  அரசியல்வாதிகள்,…

நீலாய் தொடக்கநிலைப் பள்ளியில் பாலியல் உறவு தொடர்பான ஆய்வா?

தேசிய  வகை  தொடக்கநிலைப்  பள்ளியில்  பாலியல்  நடத்தைகள்  பற்றி  ஆய்வு  நடத்தி இருக்கிறார்களே,  என்ன  கொடுமை இது   எனக்  குமுறிக்  கொண்டிருக்கிறார்கள்  நெகிரி  செம்பிலான்  மாநில  டிஏபி  சட்டமன்ற  உறுப்பினர்கள்  இருவர். ஜே. அருள்குமார் (நீலாய்), பி.குணசேகரன் (செனாவாங்) ஆகிய  அவ்விருவரும் 10 வயது  மாணவர்  ஒருவரின்  தந்தை …

இசி பாலியல்-அவதூறு பரப்புரைகளைத் தடுக்க வேண்டும்

தேர்தல்  ஆணையம்,  காஜாங்  இடைத்  தேர்தலின்போது  “பாலியல் அவதூறு” கூறும்  பரப்புரைகளைத்  தடுக்க  விரும்பினால்  “சட்ட  விதிகளைக் கண்டிப்பான  முறையில்  அமல்படுத்த  வேண்டும்”  எனப் புறநகர், வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  ஷாபி அப்டால்  கூறினார்.  சட்ட  விதிகள்  உள்ளன;  அமலாக்கம்தான்  இல்லை  என்றாரவர்.  காஜாங்  இடைத்  தேர்தலில்  எல்லாத் …

பக்காத்தான்: நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களின் சலுகைகளை மறுஆய்வு செய்ய வேண்டும்

2014-இல் நெடுஞ்சாலை  கட்டண  உயர்வை  முடக்கிப்  போடுவது  ஒரு  தற்காலிக  நடவடிக்கைதான்.  அரசாங்கம்  சாலைப் பராமரிப்பு  நிறுவனங்களுக்குத்  தொடர்ந்து  இழப்பீடு  கொடுத்துக்  கொண்டிருக்க  முடியாது  என  பக்காத்தான்  ரக்யாட்  கூறியது. அதற்குப்  பதிலாக  அரசாங்கம்  அந்நிறுவனங்களுடன்  செய்துகொள்ளப்பட்ட  ஒப்பந்தங்களை  மறு ஆய்வு  செய்ய  வேண்டும்  என   அக்கூட்டணி …

தெரேசாவின் வீடியோவைப் பார்ப்பதைவிடவும் உருப்படியான வேலை இருக்கிறது

சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்,  அவரது  சர்ச்சைக்குரிய  சீனப்  புத்தாண்டு  நையாண்டி  காணொளியைக்  காண  வருமாறு  விடுத்த  அழைப்பை   ஏற்க  மறுத்த  புறநகர்,  வட்டார  மேம்பாட்டு  அமைச்சர்  ஷாபி  அப்டால் “அதைவிடவும்  உருப்படியான  வேலை”  தமக்கு  உண்டு என்றார். ஷாபி,  தெரேசா கொக்கின்  காணொளி  லாஹாட்  டத்து-வில் பாதுகாப்புப் …

அழியா மை குறித்து புகார் செய்த விமானிமீது வழக்கு

கடந்த  ஆண்டு  13வது  பொதுத்  தேர்தலில்  பயன்படுத்தப்பட்ட  அழியா  மை  குறித்து  புகார்  செய்ததற்காக அரச மலேசிய  ஆகாயப்  படையின்  விமானி  ஒருவர்  நாளை  இராணுவ  நீதிமன்றத்தில்  விசாரணையை  எதிர்நோக்கியுள்ளார். அவர்மீது  ஏழு  குற்றச்சாட்டுகள்  சுமத்தப்பட்டுள்ளன. நாளை  விசாரணைக்கு  வரவேண்டும்  என்று  நேற்று  இராணுவ  நீதிமன்றத்திடமிருந்து  உத்தரவு  வந்ததாக …

பக்காத்தான் தேசிய நிலையில் இணக்கம்காண விரும்புவது ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதற்கு…

தேசிய  விவகாரங்கள்  பற்றி  இரு--தரப்பு  கலந்துரையாடல் நடத்த  பக்காத்தான்  ரக்யாட்  திரும்பத்  திரும்ப  அறைகூவல்  விடுப்பதை  வைத்து  அது  ஒற்றுமை  அரசாங்கத்துக்கு  அடிபோடுவதாக  நினைக்கக்  கூடாது  என  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  வலியுறுத்தியுள்ளார்.  “பிஎன்  இதற்கு ஒத்துக்கொள்ளாது  என்பதையும்  சில (அம்னோ)  தரப்புகள்  இதை  எதிர்க்கும் …

கீர் தோயோவின் மேல்முறையீடு காலவரையின்றி ஒத்திவைப்பு

இன்று  கூட்டரசு  நீதிமன்றத்தில்  விசாரிக்கப்படவிருந்த  முன்னாள்  சிலாங்கூரின்  முன்னாள்  மந்திரி  புசார்  டாக்டர்  முகம்மட்  கீர்   தோயோவின்  மேல்முறையீடு  காலவரையின்றி  ஒத்தி  வைக்கப்பட்டது.  2011-இல்,  பதவியில்  இருந்தபோது  அவர்  இரண்டு  துண்டு  நிலங்களையும்  ஒரு  பங்களாவையும்  வாங்கியதில்   ஊழல்  நிகழ்ந்திருப்பதாக  ஷா ஆலம் உயர் நீதிமன்றம்  வழங்கிய  தீர்ப்பை …

கேஎல்ஐஏ2 பாதுகாப்புச் சோதனையில் தேறாதது என்? அமைச்சு விளக்க வேண்டும்

கேஎல்ஐஏ 2 பாதுகாப்புச்  சோதனைகளில்  தேறாமல்  போனதால்  அது  திறக்கப்படுவது  மேலும்  தாமதமடைந்துள்ளது.  இதற்கான  காரணத்தை  இடைக்காலப்  போக்குவரத்து  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  உடனடியாக  விளக்க  வேண்டும்  என  பிகேஆர்  லெம்பா  பந்தாய்  எம்பி  நுருல்  இஸ்ஸா  அன்வார்  வலியுறுத்தினார். அந்த  விமான  முனையம்  ஜனவரி  31-க்குள்  தகுதிச் …

பிகேஎன்எஸ்: பணியாளர்கள் அதிகப்படியாக இருந்ததால் ஒப்பந்தப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர்

20 ஒப்பந்தப்  பணியாளர்கள்  நீக்கப்பட்டதில்  வேலை  ஒப்பந்தமீறல்  எதுவும்  இல்லை  என பிகேஎன்எஸ் ஹோல்டிங்  கூறியுள்ளது. பணியாளர்கள்  எண்ணிக்கை  மிகையாக  இருந்ததால்  அதைத்  “திருத்தி  அமைக்கும்  நடவடிக்கையாக”  அவர்களின்  ஒப்ந்தங்கள் முடிவுக்குக்  கொண்டுவரப்பட்டன  என  பிகேஎன்எஸ்  ஓர்  அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. “அவர்களிடமுள்ள  அதே  திறமையும்  அனுபவமும்  பிகேஎன்எஸ்  நிரந்தரப் …

இது ஒன்றும் குந்தா கிந்தே நாடல்ல: பிகேஎன்எஸ்-ஸைச் சாடியது எம்டியுசி

பிகேஎன்எஸ்  ஒப்பந்தப்  பணியாளர்கள்  24-நேர  அறிவிக்கை  கொடுத்து  பணிநீக்கம்  செய்யப்பட்டது  ‘ரூட்ஸ் (வேர்கள்)’ நாவலில்     அடிமைகளுக்கு   இழைக்கப்படும்   கொடூரங்களை  நினைவுபடுத்துகிறது. பிகேஎன்எஸ்  செய்கை   குறித்துக்  கருத்துரைத்த   மலேசிய  தொழிற்சங்க  காங்கிரஸின்  துணைத்  தலைவர்  அப்துல்லா  சானி  அப்துல்  இவ்வாறு  கூறினார். “இது  குந்தா  கிந்தே (அந்நாவலின்  முக்கிய  கதாபாத்திரத்தின் …

அல்லாஹ்’ விவகாரம் தொடர்பில் செய்திகள் போடுவதை நிறுத்துமாறு ஹெரால்ட் கேட்டுக்கொள்ளப்பட்டது

அரசாங்கம்  ‘அல்லாஹ்’  என்னும்  சொல்லைப்  பயன்படுத்துவது  மீதான  நிதிமன்ற  வழக்கு  பற்றியும்  முஸ்லிம்-அல்லாதார்  அச்சொல்லைப்  பயன்படுத்துவதின்  தொடர்பில்  எழுந்துள்ள  சர்ச்சை  பற்றியும்  செய்திகள்  வெளியிடுவதை  நிறுத்திக்கொள்ளுமாறு  கத்தோலிக்க  வார  இதழான  த  ஹெரால்டைக்  “கேட்டுக்கொண்டிருக்கிறது”. ஹெரால்ட்,  மற்ற  இடங்களில்  மலேசியாகினி   போன்ற  இணையச்  செய்தித்தளங்களில்  இடம்பெறும்  கட்டுரைகளைத்  தனது …

காஜாங் தேர்தலால் இசியின் தொகுதிகள் திருத்தி அமைக்கும் வேலை தடைப்பட்டது

தேர்தல்  தேர்தல்  ஆணையம் (இசி)  தொகுதிகளைத்  திருத்தி  அமைக்கும்  பணியில்  ஈடுபட்டிருக்கும்  வேளையில்  காஜாங்  இடைத்  தேர்தல்  நடப்பது  அதன்  பணிக்கு  இடையூறாக  அமைந்துள்ளது. பிகேஆரின்  லீ  சின்  சே  ஜனவரி  27-இல்  சட்டமன்ற  உறுப்பினர்  பதவியிலிருந்து  விலகியது  எதிர்பாராத  ஒன்று  என்று  கூறிய  இசி  தலைவர்   அப்துல் …

மார்ச் 23-இல் காஜாங் இடைத் தேர்தல்

காஜாங்  இடைத்  தேர்தல்  மார்ச்  23-இல்  நடைபெறும்  எனத்  தேர்தல்  ஆணையம் இன்று  அறிவித்தது. அதற்கான  வேட்பாளர்  நியமன  நாள்  மார்ச்  11. எனவே,  தேர்தல்  பரப்புரை  செய்வதற்கு  12 நாள்  அவகாசம்  கிடைக்கும்.     இதுவே  இவ்வாண்டில்  நடைபெறும்  முதலாவது  இடைத் தேர்தல்  ஆகும். இதில்  சிலாங்கூர்  சட்டமன்றத்தில் …

ஓய்வு பெறப் போகிறாரா தயிப் முகம்மட்?

33 ஆண்டுகளாக  சரவாக்  முதலமைச்சராக  இருந்துவரும்  அப்துல்  தயிப்  முகம்மட்  பதவி  விலகுவது  பற்றியும்  அரசியலிலிருந்து  ஓய்வு  பெறப்போவதையும்  வரும்  சனிக்கிழமை  பிபிபி  கட்சிக்  கூட்டத்தில்  அறிவிப்பார்  என  எதிர்பார்க்கப்படுகிறது.  ஞாயிற்றுக்கிழமை  பிஎன்  எம்பி- களுடனும்  சட்டமன்ற  உறுப்பினர்களுடனும்  சந்திப்பு  நடத்தியதை  அடுத்து  இம்முடிவு  எடுக்கப்பட்டது  எனப்  பெயர்…

சிலாங்கூரைப் பாதுகாக்க அன்வார் தேவை

சிலாங்கூரில்  கடந்த  சில  மாதங்களாக  பிஎன்  கடுமையான  அரசியல்  தாக்குதல்களை  நடத்தி  வருவதால்  அதைக்  காப்பதற்கு  பிகேஆர்  நடப்பில்  தலைவர் அன்வார்  இப்ராகிமின்  சேவை  மிகவும்  தேவைப்படுகிறது  என  சிலாங்கூர்  சட்டமன்றத்  துணைத்  தலைவர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்  கூறினார். சிலாங்கூரின்  பொருளாதார  ஆலோசகராக  உள்ள  அன்வார், …

லீ குவான் இயு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

தொற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் இயு தற்போது குணமடைந்து வருகிறார். காய்ச்சல் மற்றும் கடுமையான இருமலால் பாதிக்கப்பட்டுள்ள 90 வயதான லீ குவான் இயு கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து சிங்கப்பூர் பொதுமருத்துவமனையில் இருந்து வருவதாக உள்ளூர் சிங்கப்பூர் டெலிவிசன் சேனல் நியுஏசியா…

எம்ஏசிசி-க்கு வழக்கு தொடரும் அதிகாரம் தேவை

முன்னாள்  அமைச்சர்  ஒருவரின்  முன்னாள்  உதவியாளர்கள்  இருவர்மீது  1Azam திட்டம்  தொடர்பில்   வழக்குத்  தொடராமல்  சட்டத்துறைத்  தலைவர்  தாமதப்படுத்தி  வருவது  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையத்துக்கு(எம்ஏசிசி)  வழக்கு  தொடரும்  அதிகாரம்  தேவை  என்பதை  உறுதிப்படுத்துகிறது. அவ்விருவரும்  நீதிமன்றத்தில்  நிறுத்தப்படுவர்  என்று  எம்ஏசிசி  கடந்த  வாரம்  நம்பிக்கையுடன்  அறிவித்திருந்தது,  ஆனால்,  சட்டத்துறைத் …