எம்பி: ஊழல்வாதிகளின் பாதுகாவலராக மாறிவிட்டதா எம்ஏசிசி?

பொதுத் தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கியதாக செய்த புகார்களின்மீது விசாரணையை முடித்துக்கொண்ட பினாங்கின் மலேசிய ஊழல்தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) மேலும் ஒரு பக்காத்தான் ரக்யாட் எம்பி- இங் வெய் ஏய்க்- சாடியுள்ளார். ஏழு இடங்களில் அந்தத் தேர்தல் குற்றம் நடந்திருப்பதாக பக்காத்தான் தலைவர்கள் புகார் பதிவு செய்துள்ளபோதும் அவற்றைக்…

மதம் மாற்றம் மீதான மாநிலச் சட்டங்களைத் திருத்துமாறு ஐந்து மாநில…

தன்மூப்பாக மதம் மாற்றப்படுவதைத் தடுப்பதற்காக தங்கள் மாநில மதம் மாற்ற  சட்டங்களை திருத்துமாறு ஐந்து மாநில அரசாங்கங்களை டிஏபி தைப்பிங் எம்பி  இங்கா கோர் மிங் கேட்டுக் கொண்டுள்ளார். குழந்தையை இஸ்லாத்துக்கு மதம் மாற்றுவதற்கு பெற்றோர்கள் இருவருடைய  ஒப்புதலும் கட்டாயமாகத் தேவை எனக் கூறும் மற்ற ஆறு மாநில மதம்…

கேள்வி நேரம் நீண்டிருப்பதை விரும்புகிறார் பினாங்கு சட்டமன்றத் தலைவர்

பினாங்கின் புதிய சட்டமன்றத் தலைவர் லாவ் சூ கியாங், கேள்வி நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்ற பரிந்துரையைச் செயல்படுத்தலாமா என்று ஆலோசித்து வருகிறார். முந்தைய சட்டமன்றம், சட்டமன்றச் சீரமைப்புக்காக எட்டு திருத்தங்களை முன்மொழிந்திருந்தது. “அதில் கேள்வி நேரத்தை ஒவ்வொரு நாளும் 90 நிமிடங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகும்”,…

பொறுப்பில்லை’அதனால்தான் சுவாரா கெஅடிலானுக்கு உரிமம் கொடுக்கவில்லை

‘சுவாரா கெஅடிலானிடம் “பொறுப்புணர்ச்சி இல்லை”, அதனால்தான் அச்செய்தித்தாள் அதன் பிரசுர உரிமத்தைப் புதுப்பிக்க செய்துகொண்ட விண்ணப்பத்தை உள்துறை அமைச்சு பரிசீலிக்கவில்லை என்று அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறினார். “பெல்டா நொடித்துப்போனது” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்திக்கு விளக்கம்கேட்டு அமைச்சு எழுதிய கடிதத்தை அது புறக்கணித்தது அச்சக, பிரசுர…

குற்றச் செயல்களைக் குறைக்க பெண்களுக்கு ஆடை விதிமுறைகள் தேவை என்கிறார்…

பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு பெண்கள் 'அநாகரிமாக'  ஆடைகளை உடுத்துவதைக் தடுக்க கூட்டரசு அரசாங்கம் சட்டங்களை இயற்ற  வேண்டும் என பாஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்பி ஒருவர் கேட்டுக்  கொண்டுள்ளார். குட்டை டிரவுசர்களும் குட்டை ஆடைகளும் அத்தகைய குற்றங்களுக்கு வழி  வகுக்கும் 'அம்சங்களில் அடங்கும்' என சித்தி…

சாலைக் கட்டணம் குறைக்கப்படுமா?

அடுத்த ஐந்தாண்டுகளில் சாலைக் கட்டணத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் ஹீ லோய் சியான் (பிகேஆர்- பெட்டாலிங் ஜெயா செலாதான்) ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதற்குப் பொதுப் பணி அமைச்சர் பாதில்லா யூசுப் அளித்த  மறுமொழியில்  எந்தத் திட்டமும் தெரிவிக்கப்படவில்லை.  மாறாக, அரசாங்கம் எதிர்நோக்கும் இடர்ப்பாடுகள் மட்டுமே …

சிறப்புப் பிரிவு பணியாளர் எண்ணிக்கையைத் தெரிவிக்க அமைச்சு மறுப்பு

பூலாய் டிஏபி எம்பி தியோ நை சிங், போலீசில்  பணிபுரிவோர் எண்ணிக்கையைத் தெரிவிக்குமாறு மக்களவையில் கேட்டிருந்தார். அதற்கு உள்துறை அமைச்சு சிறப்புப் பிரிவு (Special Branch), சிறப்புப் பணிப்படை பிரிவு ஆகியவை தவிர்த்து மற்ற பிரிவுகளில் பணியாற்றுவோர் எண்ணிக்கையை மட்டும் தெரிவித்தது. இதற்கு விளக்கமளித்த உள்துறை துணை அமைச்சர்…

தேர்தல் மனு: கிளந்தான் செலிஸிங்-கை பிஎன் தக்க வைத்துக் கொண்டுள்ளது

கிளந்தான் செலிஸிங் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் முடிவை எதிர்த்து பாஸ்  வேட்பாளர் டாக்டர் சைபுல் பாஹ்ரிம் முகமட் செய்து கொண்ட மனுவை கோத்தா  பாரு தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி டத்தோ ஸாமானி அப்துல் ரஹிம்,  மனு முழுமையாகத் தாக்கல்…

குற்ற விகிதம் மீது அரசாங்கத்தின் முரண்பாடான கூற்றுக்கள்

நாட்டில் குற்றச் செயல் நிலவரம் மோசமடைந்துள்ளது என கடந்த நான்கு  ஆண்டுகளாக பொது மக்கள் கூறி வருவதை உள்துறை அமைச்சர் அகமட்  ஸாஹிட் ஹமிடி உறுதிப்படுத்தியுள்ளதாக கேலாங் பாத்தா டிஏபி எம்பி லிம் கிட்  சியாங் கூறுகிறார். அதே வேளையில் குற்றச் செயல்களுக்கு எதிரான அரசாங்க உருமாற்றத்  திட்டங்கள்…

வான் ஜுமாய்டி: IPCMC போலீஸ்காரர்களை கிரிமினல்களைக் காட்டிலும் மோசமாக நடத்தும்

உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி, IPCMC என்னும் போலீஸ் புகார்கள்  தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையம் போலீஸ்காரர்களை  கிரிமினல்களைக் காட்டிலும் மோசமாக நடத்தும் எனக் கூறியதின் வழி அந்த  ஆணையத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி  வைத்துள்ளார். "அந்த IPCMC அரசமைப்பு முதல் இயற்கை…

துணை அமைச்சர்: அவசர காலச் சட்டத்துக்குப் பதில் அமையும் சட்டம்…

கடந்த ஆண்டு ரத்துச் செய்யப்பட்ட அவசர காலச் சட்டத்துக்கு பதில்  முன்மொழியப்படும் மாற்றுச் சட்டம் மக்களுடைய அடிப்படை சுதந்திரத்துக்கு  உத்தரவாதம் அளிக்கும் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி  துவாங்கு ஜபார் சொல்கிறார். "வரையப்படும் எந்தச் சட்டமும் நீதித் துறையை நாடுவதற்கான உரிமை, முறையீடு  செய்து கொள்வதற்கான…

சுப்ரா: நான் நஸ்ரியுடன் மோத விரும்பவில்லை

தமது சகாவான சுற்றுப்பயண அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸுடன்  மோத விரும்பவில்லை எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம்  கூறியிருக்கிறார். 1948ம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வது என அமைச்சரவை  முடிவு செய்ததா என்பது மீது அவருக்கும் நஸ்ரிக்கும் இடையில் முரண்பாடு  ஏற்பட்டுள்ளது. அது…

இசி: வாக்காளர்கள் விரலை மையில் தோய்த்தெடுக்க வேண்டும்

கோலா பெசுட் இடைத் தேர்தலில் வாக்காளர்கள்தான் இடது சுட்டுவிரலை அழியா மையில் அமிழ்த்தி எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் (இசி) அறிவித்துள்ளது. 13வது பொதுத் தேர்தலில் செய்ததைப் போல் ஆணையம்  விரலில் மைதடவும் வேலையை இனி செய்யாது என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப்…

தேச நிந்தனை சட்டம்: நஜிப் விளக்க வேண்டும் என்கிறது சுஹாகாம்

1948 தேச நிந்தனை சட்டம் தொடர்பில் அமைச்சர்கள் முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டுக் குழப்பி வருகின்ற நிலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் அதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று மலேசிய மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) உதவித் தலைவர் காவ் லேக் டீ கேட்டுக்கொண்டிருக்கிறார். நேற்று சுஹாகாம் ஆண்டறிக்கை வெளியிடப்பட்ட…

மாற்றரசுக் கட்சியினர் ‘மலம் கிண்டுபவர்கள்’: அமைச்சர் சாடல்

மாற்றரசுக் கட்சியினரை “மலத்தைக் கிண்டிக் கிளறுபவர்கள்” என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் மன்சூர் காட்டமாகக் கூறினார். “ஒரு விவகாரத்தைக் கிண்டிக் கிளறி குழப்பத்தை உண்டுபண்ணுவதே அவர்களின் வேலை”. இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் தேச நிந்தனை சட்டம் குறித்து அவரின் கருத்தைக் கேட்டபோது தெங்கு அட்னான்…

சொத்துக்களை அறிவிப்பதில் சிலாங்கூர் மந்திரி புசார் எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்

"பொதுச் சேவையில் உள்ளவர்களும் அதிகாரத்துவப் பதவிகளுக்கு  நியமிக்கப்படுகின்றவர்களும் எதிர்காலத்தில் மட்டுமின்றி கடந்த  காலத்திலும்  தூய்மையானவர்களாக இருக்க வேண்டும்" டிஏபி: சொத்துக்களை அறிவிக்கும் விஷயத்தில் காலித் இப்ராஹிம் பிஎன் -னைப்  போன்று பேசுகிறார். ஏரியஸ்46: நன்றாகச் சொன்னீர்கள் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்  அவர்களே. பொதுச் சேவையில் உள்ளவர்களும்…

நாடாளுமன்ற வளாக வசதிகளைப் பயன்படுத்திக் கொள்வது மீது மீண்டும் சர்ச்சை

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வசதிகளை பொது மக்கள் பயன்படுத்திக்  கொள்ள மக்களவை அனுமதிப்பதற்காக நிரந்தர ஆணை 27 (3)-ன் கீழ் பிகேஆர்  பாடாங் செராய் எம்பி என் சுரேந்திரன் தீர்மானம் ஒன்றைச் சமர்பித்துள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் பொது மக்கள் நாடாளுமன்ற வசதிகளைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டது. மக்களவை…

‘IPCMC-யை அமைப்பது நீதிக் கோட்பாட்டுக்கு எதிரானது’

IPCMC எனப்படும் போலீஸ் புகார்கள். தவறான நடத்தை மீதான சுயேச்சை  ஆணையத்தை அமைப்பதால் இந்த நாட்டிலுள்ள அமலாக்க நிறுவனங்களுக்கு  இடையில் சட்டங்கள், அதிகாரக் கட்டுப்பாடுகள் தொடர்பில் பிரச்னைகள்  உருவாகும். இவ்வாறு உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி மக்களவையில் அரச  உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தமது…

போலீஸ், அரசியல் அமைப்புக்கள் ஆகியவை ஊழல் மலிந்தவையாகக் கருதப்படுகின்றன

மலேசியாவில் போலீசும் அரசியல் அமைப்புக்களும் மிகவும் ஊழல்  மலிந்தவையாக தொடர்ந்து கருதப்படுகின்றன. உலகளவில் 36 நாடுகளில் போலீஸ் ஊழல் மிகுந்தது என்றும் 20 நாடுகளில் நீதித்  துறை மிகவும் ஊழலானது என்றும் 51 நாடுகளில் அரசியல் அமைப்புக்கள்  ஊழலானவை என்றும் கருதப்படுவதற்கு இணங்க அந்த எண்ணம் அமைந்துள்ளது. அனைத்துலக…

தாக்குதல் வழக்கு பற்றிக் குறிப்பிட்டதும் ஆத்திரமடைந்தார் அஹ்மட் ஜஹிட்

மக்களவையில் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி-இடம் அவர்மீதுள்ள போலீஸ் புகார் குறித்து கோபிந்த் சிங் டியோ (டிஏபி-பூச்சோங்) கேட்கப்போக அவையில் அமளி சூழ்ந்தது. அரச உரைமீதான விவாதத்தின்போது தம் அமைச்சு தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அஹ்மட் ஜஹிட் விளக்கமளித்துக் கொண்டிருந்தபோது அவர்மீதுள்ள தாக்குதல் வழக்கு பற்றி கோபிந்த்…

அரசாங்கத்தின் ஊழல் தடுப்பு முயற்சிகள் மீதான பொது மக்கள் நம்பிக்கை…

ஊழலை துடைத்தொழிப்பதில் அரசாங்கத்தின் திறமை குறித்த மக்கள் எண்ணம்  குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. மலேசிய அனைத்துலக வெளிப்படைக் கழகத்தின் உலக ஊழல் அளவுகோல்  அவ்வாறு கூறுகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அரசாங்கம் திறமையாக நடந்து கொள்கிறது  என 2012 செப்டம்பர் மாதத்திற்கும் 2013 மார்ச் மாதத்திற்கும் இடையில் பேட்டி…

பால் லாவ் ‘முதிர்ச்சியற்றவர் சிறுபிள்ளைத்தனமானவர்’ என்கிறார் ராபிஸி

விளம்பரத்துக்கு அலையும் அரசியல்வாதிகள் மலேசிய ஊழல் தடுப்பு  ஆணையத்தில் (எம்ஏசிசி) புகார் செய்வதாக கூறியுள்ள பிரதமர் துறை அமைச்சர்  பால் லாவ், 'முதிர்ச்சியற்றவர் சிறுபிள்ளைத்தனமானவர்' என பண்டான் எம்பி  ராபிஸி இஸ்மாயில் வருணித்துள்ளார். அத்தகைய அரசியல்வாதிகள் 'விவரங்களை வழங்குவதில்லை' என்றும் அதனால்  எம்ஏசிசி புலானாய்வுக் கோப்புக்களைத் திறப்பது சிரமமாக…

கெராக்கான்: தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்யும் வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள்

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்தை ரத்துச் செய்வதாக பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் அளித்த வாக்குறுதியை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும் என  கெரக்கான் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. "காலத்திற்கு ஒவ்வாத ஒடுக்குமுறையான" அந்தச் சட்டம் மறு பதிப்பாக வரக்  கூடாது என்றும் அது போன்ற இன்னொரு சட்டத்தை…