வழக்குரைஞர் மன்றம்: ஒராங் அஸ்லி அறிக்கையை ஏற்றுக் கொள்வதில் தாமதம்…

ஒராங் அஸ்லி மக்கள் தாங்கள் நில உரிமைகளை இழப்பது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் மலேசிய மனித உரிமை ஆணைய (சுஹாக்காம்) அறிக்கையை  அரசாங்கம் தாமதம் செய்யாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மலேசிய  வழக்குரைஞர் மன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த அறிக்கை…

Ops Cantas Narkotik-நடவடிக்கையின் கீழ் போலீசார் 1,911 பேரைக் கைது…

கடந்த வெள்ளிக் கிழமை நாடு முழுவதும் மூன்று நாட்களுக்கு Ops Cantas Narkotik-நடவடிக்கையின் கீழ் புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை 1,911 பேரைக் கைது செய்துள்ளது. மொத்தம் 1,772 விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அதன் இயக்குநர் நூர் ரஷீட் இப்ராஹிம் தெரிவித்தார். அவற்றில் 29 விசாரணைகள்…

அதிகாரத்துவச் சட்டத்தின் கீழ் டாக்டர் மகாதீர் மீது குற்றம் சாட்டப்பட…

"இன்னும் ரகசியமான அந்த பசிபிக் பங்காளித்துவ ஒப்பந்த (TPPA) விவரங்கள்  அந்த முன்னாள் பிரதமருக்கு எப்படிக் கிடைத்தன ? இந்த நாட்டிலுள்ள  மற்றவர்களைப் போன்று அவரும் பொது மக்களில் ஒருவர் தானே ?" டாக்டர் மகாதீர்: TPPA குறித்து ரகசியமாக இருப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் ஆயிஷா: பசிபிக் பங்காளித்துவ…

ரபீடா அம்னோ உச்சமன்றப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிட…

அக்டோபர் மாதம் நிகழும் அம்னோ தேர்தலில் அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்  என்ற தமது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முன்னாள் அம்னோ மகளிர்  தலைவி ரபீடா அஜிஸ் போட்டியிட மாட்டார். 1975ம் ஆண்டு முதல் அம்னோ உச்ச மன்ற உறுப்பினராக அவர் இருந்து வருகிறார். இவ்வாண்டு அம்னோ…

குண்டர் கும்பல்கள் பட்டியலை உள்துறை அமைச்சு வெளியிடும்’

உள்துறை அமைச்சு விரைவில் குண்டர் கும்பல் பட்டியலையும் அவற்றின்  உறுப்பினர்கள் செய்துள்ள குற்றங்களையும் விரைவில் அறிவிக்கும். அந்தப் பட்டியல் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும் என அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி சொன்னார். "சட்ட விரோத அமைப்புக்கள் என வகைப்படுத்தப்பட்ட குண்டர் கும்பல்கள்  பட்டியலும் அவை…

பிரிஸ்டினா தலைமை ஆசிரியருக்கு விடுக்கப்பட்ட ‘கொலை மருட்டல்’ தொடர்பில் பெற்றோர்…

பிரிஸ்டினா தேசியப் பள்ளியின் தலைமை ஆசிரியர் முகமட் நாசிர் முகமட்  நோர்-க்கு 'கொலை மருட்டல்' விடுத்ததாக கூறப்படும், அந்தப் பள்ளியில் பயிலும்  குழந்தையின் பெற்றோர் ஒருவர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார். அந்தத் தகவலை உறுதி செய்த சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர்  ஜுனாய்டி பூஜாங்இன்று பிற்பகல்…

மந்திரி புசார் காலித்: சுதந்திரம் குறித்த உண்மைகள் விளக்கப்பட வேண்டும்

நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு மறு ஆய்வு செய்யப்பட்டு மீண்டும்  எழுதப்பட வேண்டும் என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம்  வலியுறுத்தியுள்ளார். சில உண்மை நிலவரங்கள் பற்றி தெளிவாக இல்லாததே அதற்குக் காரணம்  என்றார் அவர். நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்து வரலாற்று ஆசிரியர்களிடமும்…

சீன உணவு மையம்: உத்துசானின் இனவாத கருத்துக்குக் கண்டனம்

ஜாலான் அலோரில் சுற்றுப் பயணிகளைக் கவரும் திட்டம் ஒன்றை மேற்கொள்ளும் திட்டத்தை உத்துசான் மலேசியா ஓர் இன விவகாரமாக மாற்றியுள்ளது  வருத்தமளிப்பதாக மசீச கூறியுள்ளது. “சுதந்திரம் பெற்று 55 ஆண்டுகளுக்குமேல் ஆன பிறகும் தேசிய நலனைவிட இன விவகாரத்துக்கே மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுவதைக் காண ஏமாற்றமளிக்கிறது”, என மசீச…

அரசப் பேராளர்: சமய விவகாரங்களில் யோசித்துப் பேசுவீர்

சமய விவகாரங்கள் குறித்து கருத்துரைப்போர்  எண்ணிப் பார்த்துப் பேச வேண்டும், பலஇனச் சமுதாயத்தில் சினமூட்டும் வகையில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என பேராக் அரசப் பேராளர் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷா கூறியுள்ளார். சமயம்  என்பது  ஒவ்வொரு சமயத்தாரும் உயர்வாகப் போற்றும் ஒன்றாகும். “எனவே, அதன் பேரில் தெரிவிக்கப்படும்…

சஞ்சீவனின் தந்தைக்கு மகன் சுடப்பட்ட விவகாரத்தை நெகிரி போலீசாரே விசாரிப்பதில்…

மைவாட்ச் தலைவர் ஆர். ஸ்ரீசஞ்சீவன் சுடப்பட்ட விவகாரத்தை விசாரிப்பதில் நெகிரி செம்பிலான் போலீசாரே தொடர்ந்து ஈடுபடுவது கண்டு அவரின் தந்தை பி.ராமகிருஷ்ணன் வருத்தம் அடைந்துள்ளார். சில நாள்களுக்கு முன்  சஞ்சீவனின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்ள சில அதிகாரிகள் செர்டாங் மருத்துமனை வந்ததாக ராமகிருஷ்ணன்  மலேசியாகினியிடம் தெரிவித்தார். “அவர்கள் மருத்துவர்களைச்…

கருத்தரித்துள்ள பயிற்சியாளர்களுக்கு தேசிய சேவையில் இடமில்லை

தேசிய சேவை பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் கருத்தரிப்புச் சோதனைக்கு  அனுப்பப்படுவார்கள். இதற்குமுன் பயிற்சிக்குச் சென்ற சிலர் கருத்தரித்திருந்தும் அது பற்றி அறியாமல் இருந்ததும் சிலர் அதை இரகசியமாக வைத்துக்கொண்டதும்தான் இதற்குக் காரணமாகும். அப்பயிற்சிகள் “உடலை வருத்திச் செய்யப்படுபவை” என்பதால் கருத்தரித்துள்ள பெண்களுக்கு அவை “ஆபத்தானவை” என மகளிர், குடும்ப,…

சினிமா ரசிகர்கள்: நாட்டுப்பண் சட்டத்தைக் கட்டாயமாகச் செயல்படுத்தாதீர்

ஆகஸ்ட் 28-இலிருந்து செப்டம்பர் 3வரை படக் கொட்டகைகளில் நாட்டுப்பண் இசைக்கப்படுவது தொடர்பில் மாறுபட்ட எதிர்வினைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ரசிகர்களுக்கு அதில் மறுப்பு இல்லை. ஆனால், நாட்டுப்பண் சட்டம் 1968, கட்டாயமாக செயல்படுத்தப்படுவதைத்தான் அவர்களால் ஏற்க முடியவில்லை. அது தேவை இல்லை என்கிறார்கள். அச்சட்டம் நாட்டுப்பண்ணை அவமதிப்போருக்கு ரிம100 அபராதம்…

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் பிரச்னை இல்லை:…

கடந்த திங்கள்கிழமை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட  ஐவரின் குடும்பத்தார் விரும்பினால் ஒரு மரண விசாரணை நடந்தும்படி கேட்டுக்கொள்ளலாம் என பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி கூறினார். குற்றவாளிகளே ஆனாலும் அவர்களின் உரிமையை அரசாங்கம் ஒதுக்கித் தள்ளாது என்றாரவர். “இப்போது அது பற்றி போலீசார் விசாரணை…

மகாதிர்: டிபிபிஏ விவகாரத்தில் இரகசியம் தேவையில்லை

அரசாங்கம் ட்ரேன்ஸ்-பசிபிக் கூட்டு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தைப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். “அது மலேசிய மக்கள் சம்பந்தப்பட்டது என்பதால் அரசாங்கம் அதை இரகசியமாக வைத்திருக்கக் கூடாது”, என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அதைக் கமுக்கமாக  வைத்திருக்கிறார்கள் என்றால்   அந்த ஒப்பந்தத்தில் பொதுமக்கள் அறியக்கூடாத விசயங்கள் இருக்கின்றன…

‘வன்குற்றங்களின் பெருக்கம் வணிகத்தைக் கெடுக்கிறது’

வன்முறை  சார்ந்த குற்றச்செயல்களின் பெருக்கம் வணிகத்தைக் கெடுக்கிறது என்று கூறும் சீன மலேசிய வணிகச் சமூகம் அதை ஒடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட வெண்டும் என அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதைக் கண்டு முதலீட்டாளர்களும் வாடிக்கையாளர்களும் மிரண்டு ஓடுகிறார்கள் என மலேசிய சீனர் வர்த்தக,  தொழில் சங்கங்கள்  கூட்டமைப்பின் தலைவர்  லிம்…

வேதா: குற்றத்தை ஒழிக்க எல்லாக் குண்டர்களையும் சூட்டுத் தள்ளுவோமா?

இந்திய மலேசியர்களிடையே குண்டர்தனம் பெரும் பிரச்னையாக உருவாகி வருகிறது என்று கூறிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி, வன்முறையைக் கையாண்டு அதற்குத் தீர்வுகாண முடியாது என்றார். பினாங்கில் ஐந்து இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்திருந்த அவரைக் குறைகூறுவோருக்குப் பதிலளிக்கும் வகையில்   அறிக்கை  வெளியிட்டிருக்கும்   வேதமூர்த்தி,  “நிலைகெட்டுப்போன இளைஞர்களைச் சுட்டுத்தள்ளுவதுதான் இதற்குத்…

குற்றச்செயல்களுக்கு இனம் காரணமல்ல, வறுமைதான் காரணம்

உங்கள் கருத்து  ‘குற்றவாளிகளில் மிகப் பலர் இந்தியர்கள் என்றால் இந்தியர்களில் பெரும்பாலோர் வறிய நிலையில் இருப்பதுதான் அதற்குக் காரணம்’ ஜாஹிட்டின் திறந்த இல்ல உபசரிப்பையும் குண்டர் கும்பல் விட்டு வைக்கவில்லை ரூபிஸ்டார்: உள்துறை அமைச்சரே, மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக இப்படி ஒரு கதையா? உங்கள் திறந்த இல்ல உபசரிப்பில்…

நாம்வீ-யின் புதிய திரைப்படத்தை உத்துசான் சாடுகின்றது

நாம்வீ வெளியிட்டுள்ள Kara King என்னும் மூன்றாவது திரைப்படத்தை உத்துசான் மலேசியா கடுமையாகக் குறை கூறியுள்ளது. குறிப்பாக அந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரம் தவறுதலாக மலாய் ஜோடி ஒன்றின் மீது சிறுநீர் கழித்து விடுவதைக் காட்டும் தொடக்கக் காட்சியை அந்த ஏடு சாடியுள்ளது. 'Kenapa masih buta?' (நாம் ஏன்…

விகிதாச்சார முறையில் இசி ஆர்வம் காட்டவில்லை

நடப்பு தேர்தல் முறை விகிதாச்சார முறையைக் காட்டிலும் மேலானது என தேர்தல்  ஆணைய (இசி) துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் சொல்கிறார். "நான் அந்த விகிதாச்சார முறையை ஆய்வு செய்தேன். அதில் பல பலவீனங்கள்  உள்ளன. மலேசியாவைப் போன்ற வளரும் நாட்டுக்கு முதலில் கம்பத்தைத்  தாண்டும்…

1மலேசியா கோட்பாட்டை அரசாங்கம் நாறடித்து விட்டது

மலேசியரிடையே  1மலேசியா கோட்பாட்டைப் பதிய வைக்கும்  அரசாங்கத்தின்  முயற்சி எதிர்மறையான  விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது  என்கிறார் ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழக தலைமை செயல் அதிகாரி சைபுல் வான் ஜான். ஒற்றுமையை வலுப்படுத்தி இருக்க வேண்டிய  1மலேசியா கோட்பாடு அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வாக மாறியுள்ளது என்றாரவர். “அப்படித்தான் அது மாறிவிட்டது.…

டிபிகேஎல்-லின் ‘சீன உணவு மய்யத் திட்டத்தை’ உத்துசான் சாடுகின்றது

கோலாலம்பூரில் உள்ள ஜாலான் அலோர்-ரை அனைத்துலகத் தரத்திலான சீன  உணவு மய்யமாக மாற்றும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்)  யோசனையை உத்துசான் மலேசியா சாடியுள்ளது. 2 மில்லியன் ரிங்கிட் செலவிலான அந்த யோசனை ஒர் இனத்துக்கு மட்டுமே  நன்மை அளிக்கும் என அந்த ஏடு தனது ஞாயிறு பதிப்பான…

அரசின் சிவப்பு நாடாவால் கோயில்களில் அர்ச்சகர் பற்றாக்குறை

வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து மலேசிய ஆலயங்களில் பணிபுரிய வரும்  அர்ச்சகர்களுக்கு விசா கொடுப்பதில் கடுமையான கெடிபிடி கடைப்பிடிக்கப்படுவதாக கோயில் நிர்வாகக் குழுக்கள் அதிருப்தி கொண்டுள்ளன.. அரசாங்கத்தின் சிவப்புநாடா நடைமுறையின் காரணமாக ஆலயங்களுக்கு அர்ச்சகர்கள் கிடைப்பது சிரமமாக உள்ளதென மலேசிய இந்து சங்கத் தலைவர் ஆர்.எஸ். மோகன் ஷண் மலேசியாகினியிடம்…

பிகேஆர்: போலீஸ் சொல்வது உண்மை என்றால் அது இந்திய சமூகம்…

மக்கள் தொகையில் ஏழு விழுக்காடாக இருக்கும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குண்டர் கும்பல் உறுப்பினர்களில் 71 விழுக்காட்டினர் எனப் போலீசார் சொல்வது  உண்மையானால் அது இந்திய சமூகம் சம்பந்தப்பட்ட தேசியப் பிரச்னை என  பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் சொல்கிறார். "அந்தத் தகவல் உண்மை என்றால் ஏன் பொது…