‘தற்கொலை தொகுதிகள்’ கொடுக்கப்பட்டதாக பிகேஆர் மகளிர் முறையீடு

பிகேஆர் காங்கிரஸ் நேற்று பிகேஆர் மகளிர் கூட்டத்தில் கலந்துகொண்ட பேராளர்களில் சிலர், அண்மைய தேர்தலில் தங்கள் வேட்பாளர்கள் ‘தற்கொலைப் பணிக்கு’ அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறைப்பட்டுக்கொண்டார்கள். பாகாங் பேராளர் முரினி ஹிடாயா அனுவார், “மகளிர் பகுதிக்கு வெற்றிபெறக்கூடிய தொகுதிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போட்டி கடுமையாக இருந்த இடங்கள்தாம் கொடுக்கப்பட்டன”,…

ஜாஹிட்: பிஜே பேரணி ‘ஒரு சினமூட்டும் நடவடிக்கை’

இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியைக் கையாளும் திறமை போலீசுக்கு உண்டு என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். திட்டமிடப்பட்டுள்ள அப்பேரணி 2012 அமைதிப் பேரணிச் சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றாரவர். இன்று மாலை மணி 5-க்கு எம்கோர்ப் மால் அருகில் உள்ள திடலில் அப்பேரணிக்கு…

‘சீரமைப்புக்காக பெரும்பான்மை மக்களுடன் பிஎன் ஒத்துழைக்க வேண்டும்’

தேசிய இணைக்கத்துக்கு அறைகூவல் விடுக்கும் பிஎன் முதலில் ஜனநாயக சீரமைப்புகளைச் செய்வதில் மாற்றரசுக் கட்சியை ஆதரித்த “பெரும்பான்மை மக்களுடன்’ ஒத்துழைக்க வேண்டும் என பிகேஆர் தலைவர் அசிசான் வான் இஸ்மாயில் வலியுறுத்தினார். “இணக்கம் காண்பதற்குமுன் பெரும்பான்மை மக்களின் குரல் என்ற முறையில், அரசியல் சீரமைப்பு, தேர்தல் சீரமைப்பு, நாடாளுமன்ற…

வேதமூர்த்தி செய்வாரா?

மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 23, 2013. என். தர்மேந்திரன் அநியாயமாகக் காவல் துறையினரால்  கொடூரமாகக் தாக்கப்பட்டு இறந்துள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைகிறேன். குகனுக்கு பிறகு மிகவும் மோசாமன கொலை என்று பிகேஆர் துணைத் தலைவர் என். சுரேந்திரன் இக் கொலையை வருணித்திருக்கின்றார். மக்களுக்கு பாதுகாப்பு…

தியான் சுவா, தாம்ரின், ஹேரிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் மற்றும் பாஸ் உறுப்பினர் தாம்ரின் காஃபார் ஆகியோரை போலீஸ் ரிமாண்டில் வைப்பதற்கு இன்று போலீஸ் செய்து கொண்ட மனுவை மஜிஸ்திரேட் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்படவிருக்கின்றனர். அந்த மூவரும் ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு தயாராகிக்…

அஸ்மின்: கைது நடவடிக்கை மகாதிரிசம் திரும்புவதைக் காண்பிக்கிறது

அண்மையில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களும் ஜனநாயக-ஆதரவு சமூக ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டது, மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்ட ‘மகாதிரிசம்’ மறுபடியும் தலையெடுப்பதற்கான அறிகுறியாகும் என பிகேஆர் கூறுகிறது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் காலத்தில் “சிவில் உரிமை பற்றிப் பேசியவர்கள்” தடுத்து வைக்கப்பட்டனர். நேற்று பலர் கைது செய்யப்பட்ட…

அமைச்சர் பால் : புத்ராஜெயாவை கேளுங்கள்

கடந்த மே 16 ஆம் தேதி பேரரசரால் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு நியமனக் கடிதம் பெற்றவர்களில் ஒருவரான  முன்னாள் டிரான்ஸ்பேரன்சி இண்டர்நேசனல்-மலேசியா தலைவர் பால் லோ கெங் சுவான் மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்ற கேள்விக்கு "புத்ராஜெயாவை கேளுங்கள்" என்று மிகச்…

கர்பால்: செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்

மேலவை உறுப்பினர்களும் (செனட்டர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் என்கிறார் டிஏபி தலைவர் கர்பால் சிங். இதற்காக நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர கர்பால் ஆலோசிக்கிறார். இப்போது மாநில அரசாங்கள் செனட்டர்களை நியமனம் செய்கின்றன. “அவர்கள் மாநில வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இனி, நியமனங்களே இருக்கக் கூடாது. “பிஎன் முடியாது…

பயந்தாங்கொள்ளிகள்போல் ஓட்டம் பிடிக்கக்கூடாது; பெர்சே ஆண்டி ஆலோசனை

முதிய வயதிலும் பெர்சே 2.0 பேரணியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டதன் வழி பிரபலமானவர் என்னி ஊய். அவர், நேற்றிரவு ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்துக்குமுன் மெழுகு ஏந்திய கூட்டத்தில் கூடியிருந்தவர்களுக்கு அன்பான குரலில் சில அறிவுரைகளை எடுத்துரைத்தார். போலீசார், கூட்டத்தைக் கலைக்க முற்பட்டால் அமைதியாகக் கலைந்து செல்ல வேண்டும் என்றாரவர். “நாம்…

அதிரடி நடவடிக்கைகளைக் கண்டு அன்வார் கலங்கவில்லை

பொதுத் தேர்தல் மோசடி பற்றிக் குற்றம் சொன்னதை அடுத்து  கைது நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருந்தாலும்,  பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்  அதைக் கண்டு அஞ்சி  போராட்டத்தைக் கைவிடமாட்டார். இதனை, நேற்றிரவு, திரெங்கானுவின் கோலா இபாயில், ‘இருட்டடிப்பு 505’ பேரணியில் கூடி இருந்த 20,000 பேரிடம் தெரிவித்த அன்வார்,…

தர்மேந்தரன் மரணம் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த தர்மேந்தரனின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு பெடரல் போலீஸ் தலைமையகம் ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று கோலாலம்பூர் சிபிஒ முகமட் சாலே இன்று பின்னேரத்தில் கூறினார். தர்மேந்தரன் உடல் மீது மேற்கொள்ளப்பட்ட சவப் பரிசோதனையில் அவர் மீது "கிரிமினல் பலாத்காரம்" பயன்படுத்தப்பட்டுள்ளது…

பூச்சோங் முரளிக்கு 18 மாதம் சிறை தண்டனை!

பூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியத்திற்கு இன்று பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனையை விதித்தது. 2011-ஆம் ஆண்டு சுபாங்ஜெயா வாவாசான் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி என்பவரை மிரட்டியதற்காக குற்றவியல் சட்ட விதி 353-இன் கீழ் பூச்சோங் முரளிக்கு 18 மாத சிறை…

மாற்றரசுக் கட்சி செய்தித் தாள்களின் பிரதிகள் உள்துறை அமைச்சால் பறிமுதல்

மாற்றரசுக் கட்சி செய்தித் தாள்களான ஹராகாவையும் சுவாரா அடிலானையும் உள்துறை அமைச்சு பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. பல மாநிலங்களில் அது நிகழ்ந்துள்ளது. மலாக்கா, நெகிரி  செம்பிலான், கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில் பாஸ் கட்சியின் செய்தித்தாளான ஹராகா டெய்லி பறிமுதல் செய்யப்பட்டதென  ஹராகா இணையச் செய்தித்தளம் கூறியது. அந்த…

மூன்று பக்காத்தான் தலைவர்கள் கைது!

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும், Anything But Umno (அபு) அமைப்பின் தலைவர் ஹரிஸ் இப்ராகிமும்  இன்று பிற்பகல் தனித்தனியே கைது செய்யப்பட்டனர். கோலாலும்பூரில் தேர்தல் மோசடி-எதிர்ப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டதன் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. சிறிது நேரம் கழித்து முன்னாள் பத்து பெரண்டாம்…

‘கள்ளக்குடியேறிகளை வேலைக்கு அமர்த்துவது பிறகு மன்னிப்புத் திட்டத்துக்குக் காத்திருப்பது’

சாபாவில் உள்ள  தோட்ட நிறுவனங்கள் முறையான ஆவணங்கள் வைத்திராத குடியேறிகளை வேலைக்கு  வைத்துக்கொள்வது பற்றிக் கவலைப்படுவதில்லை. ஏனென்றால், அரசாங்கம்  கள்ளக்குடியேறிகளுக்கு அடிக்கடி மன்னிப்பு வழங்குவதை அவர்கள் நன்கு  தெரிந்து வைத்திருக்கிறார்கள். சாபா கள்ளக்குடியேறிகள்  மீதான அரச விசாரணை  ஆணையத்திடம் சாட்சியமளித்த ஆம்கார் தோட்ட நிர்வாகி நோகியா சனுசி,  குனாக்கில்…

‘ஜிஎஸ்டிமீது இன்னும் முடிவு இல்லை, 7 விழுக்காடு என்பது ஓர்…

பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) விதிப்புமீது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரதமர்துறையில் உள்ள பெமாண்டு விளக்கமளித்துள்ளது. அமைச்சரவைதான் அதன்மீது இறுதி முடிவைச்  செய்யும். கடந்த வாரம் பெமாண்டு தலைமை செயல் அதிகாரி இட்ரிஸ் ஜலா, ஒரு கருத்தரங்கில் பேசியபோது 7 விழுக்காடு ஜிஎஸ்டி என்று குறிப்பிட்டது உண்மைதான். ஆனால்,…

தியான் சுவா, ஹரிஸ் இப்ராகிம் ஆகியோர் காவல்துறையினரால் கைது

பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும், Anything But Umno (அபு) அமைப்பின் தலைவர் ஹரிஸ் இப்ராகிமும் இன்று பிற்பகல் தனித் தனியே கைது செய்யப்பட்டனர். வார இறுதியில்  பெட்டாலிங் ஜெயாவில் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் மோசடி-எதிர்ப்புப் பேரணி  தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. தியான் சுவா, …

ஆடாம் அட்லி தேச நிந்தனை குற்றச்சாட்டுக்கு எதிராக விசாரணை கோரினார்

பல்கலைக்கழக மாணவர் ஆடாம் அட்லி அப்துல் ஹாலிம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்கக் கோரிக்கை விடுத்ததன்வழி தேச நிந்தனைக் குற்றம் இழைத்துள்ளார் என இன்று கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1)-இன்கீழ் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை மறுத்த சமூக ஆர்வலரான ஆடாம்…

‘தேர்தல் தொகுதியைத் திருத்தி அமைப்பது பிஎன்-னுக்கே சாதகமாகிறது’

ஒரு தேர்தல் தொகுதியின் எல்லை திருத்தி அமைக்கப்பட்டதும் அங்கு பிஎன் கூட்டணிக்கு எளிதாக வெற்றி கிடைத்து விடுகிறது என மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக, தேர்தல் மையம் (யுஎம்சிடெல்) கூறுகிறது. ஒரு தொகுதியின் எல்லைக்கோடுகள் திருத்தி அமைக்கப்பட்டதும் அத்தொகுதியில் பிஎன்னுக்கு சராசரி 60 விழுக்காடு வாக்குகள் கிடைத்து விடுவதைத்தான் வரலாறு…

முரட்டுத்தனமாக தாக்கப்பட்டதில் கைதி இறந்தார் என்பதை மருத்துவமனை உறுதிப்படுத்தியது

போலீசாரால் விசாரணைக்குத் தடுத்து வைக்கப்பட்ட என். தர்மேந்திரன் “முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டதில் ஏற்பட்ட காயங்களால்த்தான் இறந்தார்” என்பதை கோலாலும்பூர் மருத்துவமனை (எச்கேஎல்) மருத்துவ நிபுணர் ஒருவர் உறுதிப்படுத்தினார். நேற்றிரவு டாக்டர் சியு சுயு பெங், எச்கேஎல் பிணவறையில் தர்மேந்திரனின் குடும்பத்தாரிடமும் வழக்குரைஞர்கள் என்.சுரேந்திரன், லத்திபா கோயா ஆகியோரிடமும் இதைத் தெரிவித்தார்.…

இந்தியர்களின் குரல் யார்? : மக்கள் கூட்டணியா? ம.இ.காவா? ஹிண்ட்ராப்பா?

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 23, 2013. ம.இ.காவின் கணக்குப்படி 6 லட்சம் பேர் அதன் உறுப்பினர்கள். பி பி பி சொல்கிறது அதனிடம் 3 லட்சம் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் என்று.    ஐ பி எப் பின் விவரப்படி அதனிடம் 4 லட்சம் பேர் இருக்கின்றார்கள்.…

ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஊர்வலம்; 18 பேர் கைது

மாணவர் போராளி ஆடாம் அலியை விடுதலை செய்யக்கோரி ஜிஞ்சங் காவல்நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஊர்வலத்தின்போது 18 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக அரசாங்கத்துக்கு எதிராக மே 13 ஆம் தேதி போராட்டம் நடத்தியதாக கூறி சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவரான ஆடாம் அலியை காவல்துறையினர்…