சிலாங்கூர் அரசாங்கத்தின் நினைவூட்டலைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வணிக வளாகம், செல்லப்பிராணிகளை அதன் வளாகத்தில் அனுமதிக்கும் தனது நடவடிக்கையை மாற்றியுள்ளது. உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலாவுக்கான மாநில நிர்வாகக் கவுன்சிலர் இங் சூயி லிம், மாநில உத்தரவை மீண்டும் உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சுபாங்கின் சன்வே ஸ்கொயர்…
கெராக்கான் குழு கோத்தா பாரு சலூனில் முடி திருத்திக் கொண்டது
இரு பாலர் முடி திருத்தும் நிலையங்கள் மீது (சலூன்) கிளந்தான் அரசாங்கம் விதித்துள்ள சர்ச்சைக்குரிய விதிமுறைக்கு சவால் விடுக்கும் வகையில் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஆறு கெராக்கன் உறுப்பினர்கள் கோத்தா பாருவில் சலூன் ஒன்றில் தங்கள் முடியை திருத்தம் செய்து கொண்டனர். நெகிரி செம்பிலான் கெராக்கான் துணைச் செயலாளர்…
தேர்தல் ஆணைய அதிகாரிகள் அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாக இருக்கலாம்!
அரசியலில் பங்கேற்பதற்கான ஜனநாயக உரிமை தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால், அவர்கள் தங்களுடைய கடமையில் பாரபட்சமின்றி இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யுசுப் வலியுறுத்தியதாக மலேசியன் இன்சைடர் நேற்று வெளியிட்ட செய்தி கூறுகிறது. "தேர்தல் ஆணையத்தின் எந்த ஓர் அதிகாரியும்…
“பக்குவப்படுத்தப்பட்ட லைனாஸ் தொழில் கூடக் கழிவுகள் மலேசியாவில் விற்கப்படலாம் ஆனால்….”
குவாந்தான் கெபெங்கில் லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்தின் கழிவு, விதிக்கப்பட்டுள்ள இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே மலேசியாவில் விற்கப்பட முடியும். அந்தக் கழிவு குறைந்த அணுக்கதிரியக்க சக்தியைக் கொண்ட செயற்கைக் கூட்டுப் பொருளாக (synthetic aggregates) மாற்றப்பட வேண்டும் என்பதும் அதனை வாங்குவதற்கான நிறுவனத்தைக் கண்டு…
பெங்கேராங் என்ஜிஓ கருத்துக் கணிப்புகள் நடத்த நீதிமன்ற ஆணையைப் பெற…
ஜோகூர், பெங்கேராங் துணை மாவட்ட மக்களைப் பாதிக்கும் இரண்டு விவகாரங்களில் கருத்துக்கணிப்புகள் நடத்த நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என பெங்கேராங் என்ஜிஓ கூட்டமைப்பு மனு செய்துகொள்ளும். அவ்வட்டார மக்கள், பெட்ரோனாஸ் சுத்திகரிப்பு ஆலையும் பெட்ரோகெமிகல் ஒருங்கிணைப்பு மேம்பாட்டுத் திட்டமும்(ரப்பிட்) அங்கு அமைவதற்கும் சீன இடுகாடுகள் இடமாற்றம் செய்யப்படுவதற்கும் எதிர்ப்புத்…
கிளந்தான்: ஊராட்சி மன்றங்கள் முஸ்லிம் அல்லாதாருக்கும் சம்மன் வழங்கலாம்
அநாகரீகமான நடத்தைக்காக முஸ்லிம் அல்லாதாருக்கும் சம்மன் (குற்றப்பதிவுகள்) வழங்கும் அதிகாரத்தை தனது துணைச் சட்டங்களின் கீழ் கோத்தா பாரு நகராட்சி மன்றம் பெற்றுள்ளது என கிளந்தான் ஆட்சி மன்ற உறுப்பினர் தாக்கியுடின் ஹசான் கூறுகிறார். கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாதாருக்கு இது போன்ற சம்மன்களை வழங்கியுள்ளதாக வீடமைப்பு,…
மூசா ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து புகார் செய்ய வேண்டும்
தமக்குப் பின் போலீஸ் படைத் தலைவர் பதவி ஏற்ற இஸ்மாயில் ஒமார் மீதும் மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) ஆலோசனை வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் ரோபர்ட் பாங்கின்மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசன் அக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் போலீசிலும் எம்ஏசிசி-இலும் புகார் பதிவு செய்ய வேண்டும்…
டாக்டர் மகாதீர்: நன்கு செயல்படாத யாருக்கு எதிராகவும் நான் பேசுவேன்
ஐந்தாவது பிரதமர் அப்துல்லா அகமட் படாவிக்கு எதிராக இயங்கிய தாம் இப்போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்குப் பிரச்சாரம் செய்வதின் மூலம் இரட்டை வேடம் போடுவதாக கூறப்படுவதை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்துள்ளார். "இரட்டை வேடம் ஏதுமில்லை. யாராவது நன்கு செயல்படவில்லை என்றால் நான் யாருக்கு…
பாஸ்: கோத்தா பாருவில் நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம், இஸ்லாமியச் சட்டம்…
கடந்த அக்டோபர் மாதம் கோத்தா பாரு நகராட்சி மன்றம் முஸ்லிம் அல்லாத நால்வருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ஷாரியா சட்டங்கள் தொடர்புடையது அல்ல. அந்தத் தகவலை பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தாபா அலி இன்று வெளியிட்டார். 1990ம் ஆண்டு கிளந்தான் ஆட்சியை பாஸ் எடுத்துக் கொண்டதிலிருந்து இஸ்லாமியச் சட்டங்களுக்கு எந்த…
கிளானா ஜெயாவுக்குக் கூடுதல் போலீஸ் தேவை
கிளானா ஜெயாவில் உள்ள சுமார் 200,000 மக்களைப் பாதுகாக்கவும் அவர்களுக்குச் சேவையாற்றவும் 56 போலீசார் இருப்பது போதாது எனக் குறைகூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக்கு ஏற்ப போலீசார் எண்ணிக்கை இல்லாததால் தேசா மெந்தாரி, பிஜேஸ் 8,9 போன்ற பகுதிகளிலும் தம் தொகுதியிலும் கடும் குற்றங்கள் “அபாயமளிக்கும் வகையில் பெருகி வருகின்றன” என்று…
இந்தியர் பிரச்னைகள் மீதான ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பக்காத்தான் ‘ஏற்றுக் கொள்கிறது’
மலேசிய இந்திய சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழு முன்மொழிந்துள்ள ஐந்து ஆண்டு பெருந்திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் உடன்பாட்டில் அடுத்த மாதத் தொடக்கத்தில் பக்காத்தான் கையெழுத்திடும். "கொள்கை அளவில் அவை (பக்காத்தான் கட்சிகள்), (நமது பெருந்திட்டத்தை) ஒப்புக் கொண்டு ஆதரிப்பதாக…
‘எல்லா விதிகளையும்’ பூர்த்தி செய்யப் போவதாக லைனாஸ் அறிவித்துள்ளது
இந்த நாட்டில் இயங்கும் கட்டுப்பாட்டு அமைப்புக்கள் நிர்ணயித்துள்ள எல்லா விதிகளையும் பூர்த்தி செய்யப் போவதாக லைனாஸ் அறிவித்துள்ளது. குவாந்தான் கெபெங்கில் உள்ள அதன் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுப் பொருட்கள் அகற்றப்படுவது தொடர்பில் வெளியிடப்பட்ட "துல்லிதமில்லாத ஊடகத் தகவல்களை" தொடர்ந்து இவ்வாறு அறிவிப்பதாக லைனாஸ் தெரிவித்தது.…
மீண்டும் மீண்டும் இந்தியர்களை ஏமாற்ற முடியாது, வேதமூர்த்தி காட்டம்
இந்தியர்கள் தூங்கியிருந்த காலம் கடந்து விட்டது அவர்கள் விழித்துவிட்டார்கள் அவர்களை இனிமேலும் இந்த பாரிசான் அரசாங்கம் இனிமேலும் ஏமாற்ற முடியாது என ஹிண்ட்ராப் தலைவர் பி. வேதமூர்த்தி தெரிவித்தார். நேற்று டத்தாரன் மெர்டேக்கா சதுக்கத்தில் நடைபெற்ற அனைத்துலக மனித உரிமை நாள் கொண்டாட்ட நிகழ்வின்போதே அவர் இதனை தெரிவித்தார்.…
ஏஇஎஸ் போராட்டத்தில் பாஸ் கட்சி சட்ட பலவீனத்தைக் கண்டு பிடித்துள்ளது
ஏஇஎஸ் என்ற தானியங்கி அமலாக்க முறையின் கீழ் கொடுக்கப்பட்ட குற்றப்பதிவுகள் சட்டப்படி செல்லாதவை. அத்தகைய குற்றப்பதிவுகளை வெளியிடும் அதிகாரமோ அந்த முறையின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாகக் கூறப்படுகின்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவோ சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு இல்லை. இவ்வாறு அஞ்சல் வழி அனுப்பப்படும் குற்றப்பதிவுகளுக்கு எதிராகப் போராடும் பாஸ்…
உங்கள் கருத்து: மூசா ஐஜிபி-யாக இருந்த போது ஏன் மௌனமாக…
"நேர்மையில்லாதவர்களும் பொய்யர்களும் நமது போலீஸ் படையின் உச்சப் பதவிகளுக்கு எப்படி உயர முடிந்தது ? அரசாங்க உதவியும் பாதுகாப்பும் இல்லாமல் அது நடந்திருக்க முடியாது." மாட் ஜெய்ன்: மூசா ஆவேசம் இன்னொரு சண்டிவாரா (நாடகம்) தாய்கோதாய்: முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் நெற்றியடி கொடுத்துள்ளார்.…
புத்ராஜெயா: லைனாஸ் அதன் கழிவுப் பொருளை மலேசியாவிலிருந்து அகற்ற வேண்டும்
ஆஸ்திரேலியாவின் லைனாஸ் கார்ப்ரேசன் தற்காலிகமாக செயல்படுவதற்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமத்தின் நிபந்தனைக்கு உட்பட்டு அதன் கழிவுப் பொருள்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசாங்கம் அதன் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது. லினாஸ் மலேசியா நிறுவனத்தின் நிருவாக இயக்குனர் மாஷால் அஹமட் அந்நிறுவனத்தின் கழிவுப் பொருள்களை வெளிநாட்டிற்கு அனுப்ப இயலாது ஏனென்றால்…
‘பினாங்கு மலாய் எதிர்ப்புப் போக்கைப் பின்பற்றவில்லை என்பதை தெங் அறிக்கை…
பினாங்கு மாநிலத்தில் முஸ்லிம் விவகாரங்களுக்குக் கூடுதல் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளதால் அது இஸ்லாமியமயத்தை நோக்கிச் செல்லக் கூடும் என கடந்த வாரம் அறிக்கை விடுத்த பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தொடர்ந்து கண்டிக்கப்பட்டு வருகிறார். தெங்-கின் 'இனவாதி, துரோகி, மலாய் எதிர்ப்பு, இஸ்லாம் எதிர்ப்புப் போக்கு பாரிசான்…
உங்களிடம் உள்ள பெருவாரியான சொத்துக்கள் பற்றி விளக்குங்கள் என மூசா,…
ஒய்வு பெற்ற இரண்டு முதுநிலை போலீஸ் அதிகாரிகளுக்கு இடையிலான- முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், முன்னாள் வர்த்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் ராம்லி யூசோப்- வாக்குவாதம் முற்றுகிறது. அதன் தொடர்ச்சியாக, ராம்லி தாம் சேவையில் இருந்த போது 'பெருவாரியான சொத்துக்களை' எப்படிச் சேர்த்தோம்…
‘உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளரும் போலீஸ் பணியில் குறுக்கிடுவார்’
உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் போலீஸ் பணிகளில் குறுக்கிடுவார் என்று குற்றம் சுமத்திய முன்னாள் போலீஸ் படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) மூசா ஹசன், அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரகிம் முகம்மட் ரட்ஸியும் அதேபோன்று குறுக்கீடு செய்வது உண்டு என்றார். அப்துல் ரகிமைப் பெயர் குறிப்பிடாமலேயே, அமைச்சின் தலைமைச்…
பிபிபி: 300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதை நிரூபியுங்கள்
இந்த நாட்டில் 300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதாக தாம் கூறிகொள்வதை பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் மெய்பிக்க வேண்டும் என பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி இன்று கேட்டுக் கொண்டுள்ளது. "300,000 நாடற்ற இந்தியர்கள் இருப்பதை மெய்பிக்குமாறு நாங்கள் சுரேந்திரனிடம் கூறியுள்ளோம். கற்பனையாக எந்த எண்ணிக்கையையும்…
‘நாடற்ற இந்தியர் எண்ணிக்கை குறித்து பிரதமர் பொய் சொல்கிறார்’
மலேசியாவில் நாடற்றவர்களாக உள்ள இந்தியர் எண்ணிக்கை 9,000தான் என்று பிரதமர் கூறியிருப்பதைச் சாடுகிறார் பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன். “பிரதமரின் அறிவிப்பில் உண்மையில்லை. அது நாடற்றவர்களாக உள்ள இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கையைக் குறைத்துக்காட்டும் அருவறுக்கத்தக்க முயற்சி; அந்த எண்ணிக்கை 9,000 என்பது அடிப்படையற்றது, அறிவுக்குப் பொருந்தாதது”, என்று சுரேந்திரன்…
ஹிம்புனான் ஹிஜாவுக்கு சுவாராம் விருது
சுற்றுச்சூழல், மனித உரிமைப் பிரச்னைகள் மீது பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக ஹிம்புனான் ஹிஜாவ், முரும்- பாராம் சமூகங்களுக்கு சுவாராமின் மனித உரிமை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சுவாராம் விருது பெறுவோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவரும் ஜிஎம்ஐ என்ற இசா எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்தவருமான நோர்லைலா அதனை அறிவித்தார். இந்த…
மாட் ஜெய்ன்: மூசாவின் ஆவேசம் இன்னொரு சண்டிவாரா (நாடகம்)
முன்னாள் தேசியப் போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான் அண்மையில் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் எதிராக ஆவேசமாக பேசியிருப்பது 'இன்னொரு நாடகம்' என்று முன்னாள் கோலாலம்பூர் சிஐடி தலைவர் மாட் ஜெய்ன் இப்ராஹிம் கூறுகிறார். மூசா அறிக்கைகள் உண்மையானவை என்றும் அவர் திருந்தி போலீஸ் படையின் புகழை மீண்டும்…
மலிவான அம்னோ நிலம்: இப்போது அம்னோ அங்காடித் தொழிலிலும் இறங்கியுள்ளது
அம்னோ மலிவான விலைக்கு பெற்ற இன்னொரு நிலத்துக்கு டிஏபி இன்று வருகை அளித்தது. அந்த இடம் இப்போது பரபரப்பான அங்காடி வியாபார மய்யமாகத் திகழ்கின்றது. அதற்குப் பின்னால் அந்நியத் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகளும் கட்டப்பட்டுள்ளன. சிலாங்கூர் சுங்கைவே-யில் 5,010.6 சதுர அடி பரப்புள்ள அந்த நிலம் 1981ம் ஆண்டு…


