20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர்…

டிஏபி கட்சியின் 16வது மூவாண்டு தேசியப் பேரவை இந்த வார இறுதியில் பினாங்கில் நடைபெறுகின்றது. அங்கு நிகழும் கட்சித் தேர்தல்களில் 20 டிஏபி மத்திய நிர்வாகக் குழு இடங்களுக்கு 68 பேர் போட்டியிடுகின்றனர். டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், அவரது புதல்வர்களான கோபிந்த் சிங் டியோ (…

அம்னோவிலிருந்து விலகி விட்டேன் என்கிறார் முது நிலை இசி அதிகாரி

இசி என்னும் தேர்தல் ஆணையத்தில் சேருவதற்கு முன்னரே தமது அம்னோ பதவியிலிருந்து விலகி விட்டதாக சபா தேர்தல் ஆணைய துணை இயக்குநர் (நடவடிக்கை) அக்ஸா நஸ்ரா கூறுகிறார். "இசி-யில் சேருவதற்கு முன்பே நான் அம்னோ இளைஞர் பதவியைக் கை விட்டு விட்டேன்," என அவர் மலேசியாகினி தொடர்பு கொண்ட…

‘லைனாஸ், கழிவை மாற்றும் திட்டத்தை எங்களுக்குக் காட்டுங்கள்’

கெபெங்கில் அமைந்துள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவை மாற்றும் தனது திட்டத்தை ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனமான லைனாஸ் வெளியிட வேண்டும் என 80 அரசு சாரா அமைப்புக்களைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு கோரியுள்ளது. மூன்று இதர ஆவணங்களுடன் லைனாஸ் அந்தத் திட்டத்தை வெளியிட மறுத்தால்…

தற்காலிக நடவடிக்கை அனுமதியை பொது மக்களுக்கு வெளியிடுவது பற்றி அரசாங்கம்…

லைனாஸுக்கு வழங்கப்பட்ட தற்காலிக நடவடிக்கை அனுமதியை பொது மக்களுக்கு வெளியிடுவது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என அறிவியல், தொழில் நுட்ப, புத்தாக்க அமைச்சர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி கூறியிருக்கிறார். "அது எங்கள் கவனத்துக்கு இன்னும் கொண்டு வரப்படவில்லை," அவர் சொன்னார். லைனாஸ் அரிய மண் தொழில் கூடம் (LAMP) என…

என்ஜிஓ: டிஏபி மத்திய செயலவையில் கூடுதல் மலாய்க்காரர்கள் இடம்பெற வேண்டும்

தன்னை ஒரு பல்லினக் கட்சி என்று கூறிக்கொள்ளும் டிஏபி, அதை நிரூபிக்க, வார இறுதியில் நடக்கும் கட்சித் தேர்தலில் மத்திய செயலவைக்குப் போட்டியிடும் எட்டு மலாய்க்காரர்களில் ஐவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருகிறது. “அது அலங்காரத்துக்காக சொல்லப்படுவதல்ல என்று நினைக்கிறோம்.அதை நிரூபியுங்கள்”, என்று பினாங்கு மலாய் காங்கிரஸ் தலைவர்…

‘கழிவை மறுபதனீடு செய்ய முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை…

குவாந்தான் கெபெங்கில் உள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திருந்து வெளியாகும் கழிவை அணுக்கதிரியக்கம் இல்லாத பொருளாக மறு பதனீடு செய்யப்பட முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை செய்து பார்க்க வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார். "எங்கள் நிலை ஒரே மாதிரியானது.…

பிகேஆர்: நாடற்றவர் பேரணியில் நடந்தது பற்றி ஹிஷாமுடின் கூறியிருப்பது அப்பட்டமான…

நேற்றைய பேரணியில் நாட்டற்ற இந்தியர்கள் நிரந்தர வசிப்பிடத் தகுதிக்குத்தான் விண்ணப்பம் செய்தார்கள் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறியிருப்பது ஓர் “அப்பட்டமான பொய்” என்கிறது பிகேஆர். “புத்ரா ஜெயா தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) (நேற்று) 308 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும் அவற்றில் 280 நிரந்தர வசிப்பிடத் தகுதி கேட்டு செய்யப்பட்டவை…

நாடற்ற மக்களுடைய முடிவில்லாத சொல்ல முடியாத துயரங்கள்

எம் ஞானப்பிரகாசம் 1946ம் ஆண்டு தைப்பிங்கில் பிறந்தார். பல வரலாற்று முக்கியத்துவம் கொண்ட மலேசிய நிகழ்வுகளை அவர் கண்டுள்ளார். அவற்றுள் 1946 முதல் 1960 வரை நீடித்த கம்யூனிஸ்ட் அவசர காலம், 1957ம் ஆண்டு நாடு சுதந்தரமடைவதற்கு வழி கோலிய மலாயா சுதந்திரப் போராட்டங்கள் ஆகியவையும் அடங்கும். ஆனால்…

நஜிப் திருந்தினாலும் மஇகா திருந்தாது போல் உள்ளது!

நாடற்றவர்கள் பிரச்னையை 55 ஆண்டுகளாக தீர்க்க இயலாத மஇகா, புதிதாக எழுந்த அரசியல் விழிப்புணர்ச்சியால் நிகழ்ந்த  மாற்றத்தின் தாக்கத்தைத் தனது சாதனை என்று  கூறுவது ஏமாற்றத்தை அளிப்பதாக சுவராம் மனித உரிமை கழகத்தலைவர் கா. ஆறுமுகம் கூறுகிறார். [VIDEO | 05:46mins] நாடு விடுதலை அடைவதற்கு 3 ஆண்டுகளுக்கு…

டாக்டர் மகாதீர் அவர்களே யார் நன்றாக செயல்பட்டனர் என்பதை மக்கள்…

'இந்த நாடு இப்போது எதிர்நோக்கும் பல இன்னல்களுக்கு மகாதீருடைய 22 ஆண்டு கால ஆட்சியின் போது பின்பற்றப்பட்ட தவறான கொள்கைகளே காரணம்' டாக்டர் மகாதீர்: நன்றாக செயல்படாத யாருக்கும் எதிராகவும் நான் பேசுவேன் அமைதி இல்லாத_சுதேசி: புரோட்டோன் மீது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் தெரிவித்த கருத்துக்களை முதலில்…

‘மூசா மீது குற்றம் சாட்டப்படும் சாத்தியம் அதிகமாக உள்ளது என…

கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கியது (பணச் சலவை) தொடர்பில் சபா முதலமைச்சர் மூசா அமான் மீது ஹாங்காங் அதிகாரிகள் குற்றம் சாட்டக் கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறிக் கொண்டுள்ளார். அவர் ஹாங்காங் சட்ட மன்ற உறுப்பினரான ஜேம்ஸ் தோ-வை மேற்கோள் காட்டி…

பிரதமருடைய சகோதரர் பாலாவுக்கான ரொக்கத்தைக் கொடுத்தார்

முன்னாள் தனிப்பட்ட துப்பறிவாளரான பி பாலசுப்ரமணியம் சர்ச்சையை ஏற்படுத்திய தமது இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுவதற்கு ஈடாக அவருக்கு பணம் கொடுத்த மனிதர் பிரதமருடைய இளைய சகோதரர் முகமட் நசிம் அப்துல் ரசாக் என கம்பள வணிகர் தீபக் ஜெய்கிஷன் பெயர் குறிப்பிட்டுள்ளார். "என்ன செய்ய வேண்டுமே அதனை…

வருகிறது: ரோஸ்மாவை பற்றி அனைத்தையும் கூறும் தீபாக் நூல்

சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வணிகர் தீபாக் ஜைக்கிஷன் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மாவை மங்கோலிய மாது அல்தான்துயாவின் கொலை  சம்பந்தப்பட்ட  கதையுடன் தொடர்பு படுத்தி ஓர் 26 பக்க புத்தகம் எழுதப் போகிறார். ரோஸ்மா தமது சொந்த வரலாறு குறித்து எழுதத் திட்டமிட்டுள்ளார். அதில் அவருக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கத்…

நாடற்ற நிலை : தேசியப் பதிவுத் துறை தலைமையகம் நூற்றுக்கணக்கான…

நாடற்றவர்களாக உள்ள மலேசியர் விவகாரத்துக்குத் உடனடியாக தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை புத்ராஜெயாவில் அமைந்துள்ள தேசியப் பதிவுத் துறை தலைமையத்தின் முன்னால் பிகேஆர் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. [VIDEO | 05:46mins] காலை மணி 10 வாக்கில் சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் புத்ராஜெயா நீதித்…

தனித்துவாழும் 3,011 தாய்மார்கள் ரிம16 மில்லியன் கோரி சிலாங்கூர் அரசுமீது…

3,011 தனித்துவாழும் தாய்மார்கள், 2008 பொதுத் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் பக்காத்தான் ரக்யாட் வாக்குறுதி அளித்தபடி ரிம16 மில்லியன் அலவன்சைத் தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடுத்துள்ளனர். சிலாங்கூர் தனித்துவாழும் தாய்மார்கள் சங்கத் தலைவி முர்தினி கஸ்மான் தலைமையில் அவர்கள் ஷா ஆலம் உயர் நீதிமன்றத்தில்…

அட்னான் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கோரிய பின்னர் Aunty…

கடந்த மாதம் நடைபெற்ற லைனாஸ் எதிர்ப்பு 'பசுமை ஊர்வலம்' மீது தாம் தெரிவித்த கருத்துக்களுக்காக பாகாங் மந்திரி புசார் அட்னான் யாகோப் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோரிய பின்னர் ஒரு மூத்த குடிமகளும் அவரது இரண்டு நண்பர்களும் கைது செய்யப்பட்டார்கள். குவாந்தானிலிருந்து கோலாலம்பூருக்கு ஹிம்புனான் ஹிஜாவ் ஏற்பாடு…

கர்பால்: கிளந்தான் ஆண்-பெண் பிரிவினை விஷயத்தை பாஸ் தெளிவுபடுத்த வேண்டும்

கிளந்தான் ஆண்-பெண் பிரிவினை விஷயம் தொடர்பான துணைச் சட்டம் மீது பாஸ் கட்சி நிலையை அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என டிஏபி தலைவர் கர்பால் சிங் கேட்டுக் கொண்டுள்ளார். கோத்தா பாருவில் முஸ்லிம் அல்லாத பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆண்களுடைய முடியைத்…

எங்கள் வீடமைப்புத் திட்டத்தைக் காப்பாற்ற வாருங்கள் என மலாய்க்காரர்கள் பிஎன்…

பினாங்கு மாநில அரசாங்கத்துக்கும் மாநில பிஎன் -னுக்கும் இடையிலான தாமான் மாங்கிஸ் நில விவகாரம் மீதான சர்ச்சை நின்று விட்ட நிலையில் தெலுக் கும்பாரில் மலாய் சமூகத்துக்கான குறைந்த விலை வீடமைப்புத் திட்டத்துக்காக போராடுமாறு பிஎன் -னை அரசு சாரா மலாய் அமைப்பு ஒன்று கேட்டுக் கொண்டுள்ளது. 2005ம்…

கியூபெக்ஸ்: 50,000 ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிப்பீர்

அரசாங்க ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான கியூபெக்ஸ், ஆண்டு இறுதியில் முடிவடையும் 50,000 அரசாங்க ஊழியர்களின் ஒப்பந்தத்தை நீட்டிக்குமாறு அரசுதுறைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. தங்கள் சார்பில் குரல் கொடுக்குமாறு ஒப்பந்த ஊழியர்கள் கியூபெக்சை வேண்டிக்கொண்டிருப்பதாக அதன் தலைவர் ஒமார் ஒஸ்மான் கூறினார். “அவர்களில் பெரும்பாலோர் 10 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றியவர்கள் என்பதால் நாங்கள்…

நாடற்ற நிலைக்கு எதிரான பிகேஆர் பேரணிக்காக புத்ராஜெயாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்

தனிப்பட்ட அடையாள ஆவணங்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ள நாடற்ற நிலையை எடுத்துக் காட்டும் பொருட்டு தேசியப் பதிவுத் துறைக்கு ஊர்வலமாகச் செல்வதற்காக புத்ராஜெயாவில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கூடியுள்ளனர். காலை மணி தொடக்கம் அங்கு சென்றடையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் உள்ள நீதித் துறை வளாகத்துக்கும் தேசியப் பதிவுத் துறைக்கும் ஊர்வலமாகச் சென்றனர்.…

உள்துறை அமைச்சர் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்கிறார் சிஐடி தலைவர்

உள்துறை அமைச்சர் போலீஸ் விவகாரங்களில் தலையிடுவதுண்டு என்று முன்னாள் போலீஸ் படைத் தலைவர் கூறியிருப்பதை கூட்டரசு போலீஸ் சிஐடி இயக்குனர் முகம்மட் பக்ரி ஜினின் மறுத்துள்ளார். போலீஸ் மேற்கொள்ளும் ஒவ்வொரு விசாரணையும் சட்டப்படிதான் செய்யப்படுகிறது, அதில் எந்தத் தரப்பும் தலையிடுவதில்லை என்று பக்ரி (இடம்) தெரிவித்ததாக மலாய்மொழி நாளேடான…

தற்காலிக நடவடிக்கை அனுமதி, கழிவை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக்…

குவாந்தான் கெபெங்கில் அமைந்துள்ள லைனாஸ் அரிய மண் தொழில் கூடத்திலிருந்து வெளியாகும் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என தற்காலிக நடவடிக்கை அனுமதியில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை என லைனாஸ் தொழில் கழகத் தலைவர் நிக்கோலஸ் கேர்ட்டிஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நிபந்தனையைப் பூர்த்தி செய்வதற்கு லைனாஸ் 'கழிவுகளை ஏற்றுமதி…

‘என்இபி-ஆல் மலேசியப் பொருளாதாரம் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கண்டது’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், புதிய பொருளாதாரக் கொள்கை (என்இபி)-யால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி குன்றியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். “என்இபி முழுவீச்சில் செயல்பட்டபோது மிக உயர்ந்த பொருளாதார வளர்ச்சி பதிவு செய்யப்பட்டது”, என்று புத்ரா ஜெயாவில் கருத்தரங்கம் ஒன்றைத் தொடக்கிவைத்து உரையாற்றியபோது அவர் கூறினார்.  பெர்டானா தலைமைத்துவம்…