சினமூட்டும் தகவல்களைத் தடுக்க போதுமான சட்டங்கள் உண்டு- நிபுணர்

நாட்டில் சினமூட்டும் தகவல்களையோ பயங்கரவாதத்தைத் தூண்டும் தகவல்களையோ கட்டுப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன என்கிறார் ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப வல்லுனர் ஒருவர். நடப்பில் உள்ள குற்றவியல் தடுப்புச் சட்டம் (பொக்கா), 2015 பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (பொடா), பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கை சட்டம் 2012(சோஸ்மா), 1998…

காற்றுத் தூய்மைக்கேடு மோசமாக உள்ள இடங்கள் தங்காக்கும் மலாக்காவும்

இன்று நண்பகல் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஜோகூர், தங்காக்கும் பண்டாராயா மலாக்காவும் மிக மோசமான காற்றுத்தூய்மைக் கேடுள்ள இடங்களாக தெரிய வருகின்றன. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (ஏபிஐ) தங்காக்கில் 254 ஆகவும் பண்டாராயா மலாக்காவில் 222 ஆகவும் இருந்தது. நாடு முழுக்க மொத்தம் 68 இடங்கள் காற்றுத்தூய்மைக் கேட்டால்…

ஹலால் சான்றிதழை நிதி அமைச்சு வழங்குகிறதா? மறுக்கிறது ஜாகிம்

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறையான ஜாகிம், அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் செப்டம்பர் 13-இல் புத்ரா உலக வாணிக மையத்தில் உரையாற்றியபோது, இப்போதெல்லாம் நிதி அமைச்சுத்தான் ஹலால் சான்றிதழை வழங்குகிறது என்று குறிப்பிட்டிருப்பதை மறுக்கிறது. “அக்கூற்றை ஜாகிம் மறுக்கிறது. ஹலால் சான்றிதழை ஜாகிமும் அந்தந்த மாநிலங்களில்…

அம்னோ தோற்றிராவிட்டால் அம்னோ-பாஸ் கூட்டணியே ஏற்பட்டிருக்காது- லோக்

அம்னோ கடந்த பொதுத் தேர்தலில் ஆட்சியை இழக்காதிருந்தால் அதுவும் பாஸ் கட்சியும் சேர்ந்து கூட்டணி அமைக்கும் நிலையே ஏற்பட்டிருக்காது என்கிறார் நெகிரி செம்பிலான் டிஏபி தலைவர் அந்தோனி லோக். முன்பு அம்னோ ஆட்சியில் இருந்தபோது அது தன்னை ஓரங்கட்டுவதிலேயே குறியாக உள்ளது என்று புலம்பிக்கொண்டிருந்த கட்சிதான் பாஸ், இப்போது…

தொழிலாளர் வர்க்கப் போராளி பி. வீரசேனன் காற்பந்து போட்டி

இம்மாதம் 22-ம் தேதி, மலேசிய சோசலிசக் கட்சி, கிள்ளான் கிளை, வெத்தரன் ஹைலண்ட்ஸ் காற்பந்தாட்டக் குழுவுடன் இணைந்து பி.வீரசேனன் காற்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இப்போட்டி காலை 7.30 மணிக்கு, கிள்ளான் பாடாங் ஜெயா திடலில் தொடங்கும். கடந்த 24 வருடங்களாக இப்போட்டியைத் தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக,…

அம்னோவும் பாஸும் அரசியல் ஒத்துழைப்பை முறைப்படுத்தும் சாசனத்தில் கையொப்பமிட்டன

இன்று கோலாலும்பூரில் புத்ரா உலக வாணிக மையத்தில், எதிர்க்கட்சிகளான அம்னோவும் பாஸும் அவற்றுக்கிடையில் அரசியல் ஒத்துழைப்புக்கு வழிகோலும் Piagam Muafakat Nasional எனப்படும் தேசிய ஒத்துழைப்புச் சாசனத்தில் கையொப்பமிட்டன. கையொப்பமிடுவதற்கு முன்பு அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் இரு கட்சிகளும்…

காலித் இஸ்மத் விடுவிக்கப்பட்டார், தேசத் துரோகச் சட்டத்தை ஒழிப்பீர், பி.எஸ்.எம்.…

நேற்றிரவு, 1948 தேசத் துரோகச் சட்டத்தின் கீழ், போலிசாரால் கைது செய்யப்பட்ட, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) செயற்பாட்டாளர் காலிட் இஸ்மத் சற்றுமுன்னர் விடுவிக்கப்பட்டார். தங்கள் விசாரணைக்கு உதவும் வகையில், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்த போலிசார், அவரைத் தடுத்து வைக்கவில்லை என பி.எஸ்.எம். இளைஞர் அணி தலைவர்…

தம்மைக் குறை சொன்னவர்மீது போலீஸ் நடவடிக்கை எடுத்ததை எண்ணி பேரரசியார்…

ராஜா பெர்மைசூரி ஆகோங் துங்கு அசிசா அமினா இஸ்கண்டரியா, தம்மைக் குறை சொன்னவர்களுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதை அறிந்து வருத்தம் கொண்டிருகிறார். போலீஸ் நடவடிக்கை கைவிடப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். தமக்கு எதிராக டிவிட்டரில் பதிவிட்டவர்கள் சிலரைப் போலீஸ் கைது செய்ததை அடுத்து பேரரசியார் இவ்வாறு…

முஸ்லிம்-அல்லாதார் பொருள்களைப் புறக்கணிக்கும் அறிவுகெட்டத்தனமான புறக்கணிப்புக்கு எம்டியுசி கண்டனம்

முஸ்லிம்-அல்லாதாரின் பொருள்களைப் புறக்கணிக்குமாறு சில தரப்புகள் விடுத்துள்ள கோரிக்கை, இன, சமய உணர்வுகளின் அடிப்படையில் விடுக்கப்பட்டது என்பதாலும் அது நாட்டுக்கு ஆரோக்கியமற்றது என்பதாலும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) தொழிலாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக மலேசியர்கள் தயாரிக்கும் எல்லாப் பொருள்களையுமே ஆதரிப்பது…

காலிட் இஸ்மாத் கைது, மனித உரிமை அமைப்புகள் கண்டனம்

பேரரசியாரைச் சமூக ஊடகத்தில் அவதூறு பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பி.எஸ்.எம். கட்சியைச் சேர்ந்த காலிட் இஸ்மாத், 1948 தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு, சுவாரா ரக்யாட் மலேசியா (சுவாராம்), மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை, இரவு 10.40 மணியளவில், காலிட் கைது…

பேரரசியாரை அவதூறு பேசினார், பி.எஸ்.எம். இளைஞர் அணியின் முன்னாள் தலைவர்…

பேரரசர் தம்பதியரை, சமூக ஊடகத்தில் அவதூறாகப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் காலிட் இஸ்மாத் கைது செய்யப்பட்டார். இதனை, டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர், ஏசிபி முகமட் ஃபாமி விஸ்வநாதன் உறுதிபடுத்தியுள்ளார். நேற்றிரவு, 10.30 மணியளவில்,…

டாக்டர் எம் : பெர்சத்து அம்னோவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்

எதிர்காலத்தில், மக்களால் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க, அம்னோவிடம் இருந்து கற்றுக் கொள்ளுமாறு பெர்சத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமது, இன்று கட்சி உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். உண்மையில், ஒரு தொலைநோக்குடைய நாட்டுக்குத் தலைமையேற்க வேண்டுமாயின், கடந்த ஆண்டு அரசாங்கத்திலிருந்து வீழ்ந்த அம்னோவின் வீழ்ச்சிக்கான காரணங்களைப் பெர்சத்து கவனிக்க வேண்டும். அதேநேரத்தில், அம்னோ-பிஎன்…

புகை மூட்டம் : 24 பகுதிகளில் ஆரோக்கியமற்ற ஐ.பி.யு. குறியீடு

கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய தீபகற்ப மாநிலங்களில் காற்று மாசுபாடு குறியீட்டு (ஐ.பி.யு.) வாசிப்பு மிதமானவையிலிருந்து ஆரோக்கியமற்ற நிலையை (101-க்கும் மேல்) அடைந்துள்ளது. மலேசியக் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (ஏ.பி.ஐ.எம்.எஸ்.) போர்ட்டல்-ன் படி, இன்று காலை 10 மணி…

பேராக் டிஏபியில் விரிசல், ங்கா பதவி விலக வேண்டும்

பேராக் டிஏபி தலைவர் ங்கா கோர் மிங் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சனையினால், அக்கட்சியின் தலைவர்கள் இருவர் கட்சியில் வகித்துவந்த பதவிகளை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பேராக் டிஏபியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. முன்னாள் துணைப் பொருளாளர் லியோங் ச்சியோக் கெங்கிற்கும் உதவிச் செயலாளர் லியோ தை யே-க்கும் இடையிலான அந்தச்…

ஒரு வழியாக சுஹாகாம் ஆண்டறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்

மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) ஆண்டறிக்கை முதல்முறையாக எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. 1999ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சுஹாகாம் ஒவ்வோராண்டும் ஆண்டறிக்கையைத் தயாரித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கிறது. ஆனால், இதுவரை எந்தவொரு நாடாளுமன்றக் கூட்டத்திலும் அது விவாதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டில் அது விவாதிக்கப்படும். அக்டோபர் 7-இல் தொடங்கும்…

புகைமூட்டம்: கிள்ளானில் மூன்று பள்ளிகள் மூடப்பட்டன

கிள்ளானில் ஜொஹான் சித்தியாவில் காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டு எண்(ஏபிஐ) 200-ஐத் தாண்டியதால் மூன்று பள்ளிகள் இன்று மூடப்பட்டன. ஸ்கோலா கெபாங்சான் (எஸ்கே) ஜொஹான் சித்தியா, எஸ்கே ஜாலான் கெபுன், ஸ்கோலா கெபாங்சான் , ஜாலான் கெபுன் ஆகியவையே அம்மூன்று பள்ளிகளாகும் என சிலாங்கூர் கல்வித் துறை ஓர் அறிக்கையில்…

மலேசியத் தூதர்: அது புகைமூட்டத்துக்குக் கண்டனம் தெரிவிக்கும் கடிதம் அல்ல

  இப்போதைய புகைமூட்டத்துக்கு இந்தோனேசியாதான் காரணம் என்று மலேசியா குற்றம் சுமத்தவில்லை, மாறாக அக்குடியரசில் பல இடங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைப்பதற்கு உதவிக்கரம் நீட்டத்தான் அது விரும்புகிறது. இதை வலியுறுத்தும் கடிதமொன்றை அரசாங்கம் எரிபொருள், தொழில்நுட்ப, அறிவியல், வானிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் இயோ…

அவரவர் போக்கில் ஜொகூர் பி.எச்., முன்னாள் பி.கே.ஆர் தலைவர் வருத்தம்

பாரிசன் நேஷனல் கூட்டணியைத் தூக்கியெறிய முயன்றபோது, ஜொகூர் பக்காத்தான் ஹராப்பானிடம் இருந்த வலு, இப்போது இல்லை என்று ஜொகூர் பி.கே.ஆர்.-இன் முன்னாள் தலைவர் ஹசான் அப்துல் கரீம் தெரிவித்தார். மலாய் மையத் தொகுதிகளில் ஒன்றான, பி.என்.-இன் கோட்டையான ஜொகூர் மாநிலத்தைக் கைப்பற்றிய பின்னர், பி.கே.ஆர், பெர்சத்து, டிஏபி மற்றும்…

டாக்டர் எம் : ஜிஇ15-ல், பி.எச்.-இன் செயல்திறனை மக்கள் தீர்மானிப்பார்கள்

2023-ம் ஆண்டு வாக்கில், 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), அதன் கடந்தகால வெற்றிகளை மீண்டும் கூறி, தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க விரும்பினால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) இப்போது செய்ய வேண்டியப் பெரிய பணிகள் உள்ளன. இரண்டாவது முறையாக, மக்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து பெறுவது எளிதல்ல என்பதால், வரும் தேர்தலில்…

போலி மைகார்டு விவகாரம் தொடர்பில் அரசு அதிகாரிகள் சோஸ்மாவின்கீழ்க் கைது

சீன நாட்டுக் குடிமகள் ஒருவருக்குப் போலி மைகார்டு கிடைப்பதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின்படி உயர் அதிகாரிகள் உள்பட பல அரசாங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக ஹரியான் மெட்ரோ கூறியது. பாதுகாப்புக் குற்றங்கள்(சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012(சோஸ்மா)-இன்கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் கைதானதன்வழி போலி மைகார்ட் தயாரித்துக் கொடுக்கும்…

மின்னஞ்சல் மோசடி தொடர்பில் உலக முழுவதும் 281 பேர் கைது;…

மின்னஞ்சல் மோசடிகளுக்கு எதிராக உலகளவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 281 பேர் பிடிபட்டனர். கைதானவர்களில் 167 பேர் நைஜிரியாவிலும் 74 பேர் அமெரிக்காவிலும் 18 பேர் துருக்கியிலும் 15 பேர் கானாவிலும் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்தது. மலேசியா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கென்யா ஆகிய நாடுகளிலும் சிலர்…

நெருக்கடிக் காலங்களில் சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிப்பதற்கு நான்கில் மூன்று…

நான்கில் மூன்று மலேசியர்கள் நெருக்கடிக் காலங்களின்போது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்களூக்குத் தடைபோட்டு முடக்கிப் போடுவதை ஆதரிக்கிறார்கள். Ipsos Global என்னும் ஓர் ஆய்வு நிறுவனம் உலகளவில் மேற்கொண்ட ஆய்வில் ஆய்வில் கலந்துகொண்ட மலேசியரில் 75 விழுக்காட்டினர் சமூக வலைத்தளத் தடைவிதிப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.…

2020 இறுதியிலேயே, மேலவையில் பி.எச். ஆதிக்கம் செலுத்த முடியும்

சில செனட்டர்களின் பதவி காலம் விரைவில் நிறைவடைவதைத் தொடர்ந்து, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அடுத்தாண்டு நவம்பரிலேயே மேலவையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முடியும் எனத் தெரிகிறது. மேலவையில் 70 உறுப்பினர்கள் நியமனம் பெற்றுள்ளனர். தற்போது, பி.எச். சார்பில் 26 செனட்டர்களும், பிஎன் கூட்டணி சார்பில் 27 பேரும், அதன்…