பினாங்கு ஆட்சிக்குழு பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டது

பினாங்கு   முதலமைச்சர்   செள  கொன்  இயோ,  11-பேரடங்கிய   பினாங்கு   ஆட்சிக்குழுவினரை  இன்று   அறிமுகப்படுத்தினார். 11  பேரும்      பினாங்கு   ஆளுனர்   அப்துல்    ரஹ்மான்   அப்பாஸின்   அதிகாரப்பூர்வ   இல்லமான    ஸ்ரீமுத்தியாராவில்     பதவி  உறுதிமொழி   எடுத்துக்கொண்டார்கள். அதில்  பிகேஆர்   ஏற்கனவே   இருந்ததுபோல்   மூன்று   இடங்களைப்   பெற்றுள்ளது.  பினாங்  துங்கால்   சட்டமன்ற   உறுப்பினர்    ஜகியுடின்  …

அன்வாருக்கு முழு மன்னிப்பு அளிக்க பேரரசர் ஒப்புக் கொண்டார்

  பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு முழு மன்னிப்பு கோரும் முறையீடு மே 16 இல் 51 ஆவது மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அம்முறையீடு பரிசீலிக்கப்பட்டது. பெடரல் அரசமைப்புச் சட்டம் பிரிவு 42 க்கு ஏற்ப, மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனைப்படி, பேரரசர் சுல்தான் முகம்மட்…

1எம்டிபி பற்றி வருத்தம் தெரிவிக்காதது ஏன்? கைரியிடம் கிட் சியாங்…

அம்னோ  உறுப்பினர்கள்   கட்சிமீது   அதிருப்தி  கொண்டிருந்ததை   அப்போதைய    பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கிடம்    தெரியப்படுத்தாதற்காக    கைரி  ஜமாலுடின்    வருத்தப்படுவதை  டிஏபி  பெருந்  தலைவர்   லிம்   கிட்  சியாங்    பெரிதாக    எடுத்துக்கொள்ளவில்லை. அம்னோ   இளைஞர்    தலைவர்    காலம்தாழ்த்தி   வருத்தம்     தெரிவித்துள்ளார்   என்று  குறிப்பிட்ட  லிம்,    கைரி    அவரது   கண்மூன்னே   நிகழ்ந்த  …

அன்வார் இன்று விடுவிக்கப்படும் சாத்தியம் உண்டு

  மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்து விட்ட பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது குடும்பத்தினர் அன்வாரின் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பாரிசான் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து புதிய ஹரப்பான் அரசாங்கம் அன்வாரின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.…

1எம்டிபி தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை பகிரங்கமாக்கப்பட்டுள்ளது

  இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்டிருந்த 1எம்டிபி தேசிய கணக்காய்வாளர் அறிக்கை இப்போது மறுவகைப்படுத்தப்பட்டுள்ளதாக தலைமைக் கணக்காய்வாளர் மடினா முகமட் அறிவித்தார். பிரதமர் மகாதிரை சந்தித்த பின்னர் மடினா இந்த அறிவிப்பை இன்று செய்தார். ஜனவரி 22, 2016 இல் இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்டு மார்ச் 4, 2016 இல்…

அன்வாருக்கு சிறப்பான அதிகாரங்கள் இல்லை, மகாதிர் கூறுகிறார்

இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பிரதமர் பதவியைத் துறந்த பின்னரும் பின்னணியிலிருந்து தொடர்ந்து தமது பங்களிப்பைச் செய்யப் போவதாக பிரதமர் மகாதிர் கூறினார். தமது இடத்திற்கு பிரதமராக அன்வார் வருவது பற்றி குறிப்பிட்ட மகாதிர், அவர் நாடாளுமன்றத்தில் ஒரு இருக்கையைப் பெற வேண்டும்; அதன் பின்னர் அவருக்கு…

நஜிப் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார், மகாதிர் உறுதி

  1எம்டிபி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நஜிப்பை நீதிமன்றத்தில் நிறுத்துவதிலிருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்பதை பிரதமர் மகாதிர் உறுதிப்படுத்தினார். தோக்கியோ, வால் ஸ்திரீட் ஜர்னல் சிஇயோ மன்றத்துடன் வீடியோ இணைப்பு வழி நடந்த ஒரு நேர்காணலில் நஜிப்புடன் எந்த ஒரு பேரத்திற்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக மகாதிர்…

பிரதமர் தலைமை நீதிபதி மற்றும் முன்னாள் ஏஜி ஆகியோரைச் சந்தித்தார்

  புத்ரா ஜெயா, இன்று பிரதமர் மகாதிர் தலைமை நீதிபதி முகமட் ரவுஸ் முகம்மட் மற்றும் முன்னாள் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேல் ஆகியோரைச் சந்தித்தார். கனி பட்டேல் ரிம2.6 பில்லியன் மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் பிரச்சனைகள் மீதான சிறப்பு பணிப்படைக்கு தலைமையேற்றிருந்தார். விசாரணையின் பாதி…

செத்தி: 100 நாளில் ஜிஎஸ்டிக்கு முடிவுகட்டப்போவது எப்படி என்பதை விளக்குவோம்

பக்கத்தான்  ஹரப்பான்   வாக்களித்தபடி   முதல்   100  நாளில்   பொருள்,  சேவை   வரியை   இரத்துச்   செய்ய  முடியாமல்   போகலாம். ஆனாலும்,  ஜிஎஸ்டியை  ஒழிப்பதற்கு    என்னென்ன   நடவடிக்கைகள்    எடுக்கப்படும்    என்பது   100  நாள்களில்    அறிவிக்கப்படும்.   பிரதமர்  டாக்டர்   மகாதிர்  முகம்மட்டால்   நியமிக்கப்பட்ட   ஐவரடங்கிய   ஆலோசனை   மன்றத்தின்  உறுப்பினர்களில்   ஒருவரான   செத்தி   அக்டார்  …

டிஏபி தலைவர்கள் மகாதிருடன் சந்திப்பு

டிஏபி    தலைவர்கள்   சிலர்  இன்று  காலை   பிரதமர்   மகாதிர்  முகம்மட்டை   புத்ரா  ஜெயாவில்   பெர்டானா  தலைமைத்துவக்  கட்டிடத்தில்    சந்தித்தனர். பக்கத்தான்   ஹரப்பான்  பங்காளிக்   கட்சிகளில்   ஒன்றான   டிஏபியின்    தலைவர்களுக்கும்  பிரதமருக்குமிடையிலான    சந்திப்பு   ஒரு  மணி   நேரம்   நீடித்தது. பெர்டானா   கட்டிடத்துக்குள்  டிஏபி   துணைத்   தலைவர்   கோபிந்த்   சிங்,    தலைமைச்  …

பிஎம்ஓ: புருணை சுல்தான் யுஎஸ்$1 பில்லியன் நன்கொடை அளித்தார் என்பது…

சமூக    வலைத்தளங்களில்   புருணை    சுல்தான்  மலேசிய   அரசாங்கத்துக்கு  யுஎஸ்$1 பில்லியன்  நன்கொடை  அளித்தார்   என்று  பரவிவரும்     செய்தி  பொய்யான    செய்தி   என்று    பிரதமர்   அலுவலகம் (பிஎம்ஓ)   கூறியது. இன்று   காலை   முக்ரிஸ்   மகாதிர்  எப்சி  முகநூல்   பக்கத்தில்    வெளியான   அச்செய்தியில்    சிறிதளவும்  உண்மை  இல்லை    என்று   பிஎம்ஓ   பேச்சாளர்  …

நஜிப்பிடம் உண்மையைச் சொல்லாதது தப்பு: கைரி வருத்தம்

முகைதின்  யாசினையும்   ஷாபி   அப்டாலையும்   கட்சிநீக்கம்   செய்தது   அடிநிலை  உறுப்பினர்களுக்குப்  பிடிக்கவில்லை  என்பதை  முன்னாள்   பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கிடம்   சொல்லியிருக்க   வேண்டும்   சொல்லாதது   தப்பு    என்று  கைரி   ஜமாலுடின்  வருத்தப்படுகிறார். “முகைதின்  தூக்கப்பட்டபோதும்   ஷாபி    தூக்கப்பட்டபோதும்   ஒரு   பிரச்னை   உருவானது.  அதை  ஒப்புக்கொள்ள   யாரும்   விரும்பவில்லை.  அதுதான் …

மகாதிர் மலேசியாவைச் சிறந்த எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வார், சாமிவேலு கூறுகிறார்

  பிரதமர் மகாதிர் நாட்டை அனைத்து மலேசியர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வார் என்று மஇகாவின் முன்னாள் தலைவர் ச. சாமிவேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாதிர் பிரதமராக இருந்த காலத்தில் சாமிவேலு அவரது அமைச்சரவையில் அமைச்சராக 1981 லிருந்து 2003 ஆம் ஆண்டு வரையில் இருந்துள்ளார். தாம் மகாதிர்…

ரோஸ் பதிவாளர்: நான் வழக்கம் போல் இன்னும் கடமையில் இருக்கிறேன்

  மன்றங்கள் பதிவாளர் (ரோஸ்) சுரயாத்தி இப்ராகிம் தாம் இன்னும் எப்போதும் போல் தமது கடமைகளைச் செய்து வருவதாகக் கூறினார். எந்த நடவடிக்கை பற்றியும் எனக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை; இன்று வரையில் தமது கடமைகளை வழக்கம் போல் செய்து வருவதாக அவர் கூறினார். மன்றங்கள் பதிவகத்தில் மிக…

பொய்ச் செய்தி சட்டம் : நீக்கப்படும் எனக் கூறப்பட்டது, இப்போது…

2018-ஆம் ஆண்டு பொய்ச்செய்தி சட்டத்தை இரத்து செய்யலாமா என்பதை அரசாங்கம் முதலில் பரிசீலிக்கும் என துன் டாக்டர் மகாதிர் முஹமட் இன்று தெரிவித்தார். "நாம் ஆய்வு செய்ய வேண்டும்," என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சுருக்கமாக கூறினார். பொதுத் தேர்தலுக்கு முன்னர், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி…

இர்வான் பொதுச் சேவை இலாகாவிற்கு மாற்றப்பட்டார்

  கருவூலத்தின் தலைமை அதிகாரி இர்வான் செரிகர் அப்துல்லா உடனடியாக பொதுச் சேவை இலாகாவிற்கு (பிஎஸ்டி) மாற்றப்பட்டுள்ளார் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹமாஸ் தெரிவித்தார். 1எம்டிபியின் தலைவருமான இர்வான் கருவூலத்தின் தலைமை அதிகாரியாகச் செயல்பட இனிமேலும் அனுமதிக்கப்பட மாட்டார் என்று அலி கூறினார். மே 14…

அன்வார் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்படலாம், மகாதிர் கூறுகிறார்

  பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு மன்னிபு அளித்தல் மற்றும் விடுவிக்கப்படுதல் ஆகியவற்றில் சற்று தாமதம் ஏற்படலாம் என்று பிரதமர் மகாதிர் இன்று கூறினார். அன்வாருக்கு மன்னிப்பு பெறுவோம் என்ற நமது வாக்களிப்பு தொடரும், ஆனால் அதற்கான வழிமுறை பின்பற்றப்படும். அது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள போதிலும், மன்னிப்பு வாரியம்…

குடிநுழைவுத்துறை கருப்புப் பட்டியல் மிக நீளமானதாம்

குடிநுழைவுத்துறையின்  கருப்புப்   பட்டியலில்   சேர்க்கப்பட    வேண்டிய   பலரது   பெயர்களைக்  கொண்ட   இன்னொரு   பட்டியல்   பிரதமர்  டாக்டர்    மகாதிர்   முகம்மட்டிடம்   கொடுக்கப்பட்டுள்ளது. முதலில்   கொடுக்கப்பட்ட    பட்டியலில்    உள்ளவர்கள்  ஏற்கனவே   கருப்புப்  பட்டியலிடப்பட்டு  விட்டனர்  என   ஒரு   வட்டாரம்   கூறியது. “இரண்டாவது   பட்டியல்  பிரதமரிடம்  ஒப்புதலுக்காக   ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அது  விரைவில்   அமலுக்கு  …

ஏர்ஏசியா பங்குகள் சரிவு

பங்குச்   சந்தையில்   இன்று   வர்த்தகம்   தொடங்கியபோது   ஏர் ஏசியா  நிறுவனப்  பங்குகள்   10 விழுக்காடு   சரிவு  கண்டன.  அந்நிறுவனத்   தலைவர்    டோனி   பெர்னாண்டஸ்    பொதுத்   தேர்தலில்   முன்னாள்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்கை   ஆதரித்தது    தப்பு   என்று   ஒப்புக்கொண்டு   மன்னிப்பு   கேட்ட   பின்னரும்   இது    நிகழ்ந்தது. நஜிப்  கடந்த  …

தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் பதவி துறக்க வேண்டும் அல்லது 100…

  தேர்தல் ஆணையத்தின் ஏழு உறுப்பினர்களும் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும். அதை அவர்கள் செய்யாவிட்டால் அவர்களை ஆணையத்திலிருந்து அடுத்த 100 நாள்களுக்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் பெர்சே கோரியுள்ளது. கிடைக்கப் பெற்ற புகார்கள் மற்றும் தேர்தல் வாக்களிப்பு நாளுக்கு முன்னால் அந்த ஆணையம் புரிந்த குற்றச்…

எம்ஏசிசி தலைமையகத்தில் வாகனங்கள் சோதனை

புத்ரா    ஜெயாவில்,  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையத்   தலைமையகத்திலிருந்து  வெளியேறும்    வாகனங்கள்    சோதனை    செய்யப்படுவதாக     பெரித்தா   ஹரியான்   கூறியது. அந்நாளேடு  பதிவேற்றம்  செய்த   ஒரு   காணொளி   எம்ஏசிசி   பாதுகாவலர்   ஒருவர்   அக்கட்டிடத்தைவிட்டு    வெளியேறும்   ஒரு   வாகனத்தைச்  சோதனை   செய்வதைக்   காண்பித்தது. ஏன்  இச்சோதனை   என்பதை   உறுதிப்படுத்திக்கொள்ள   இயலவில்லை. டாக்டர்  மகாதிர்  …

எம்ஏசிசி தலைவர் பணிவிலகல்; ஏஜி வழக்கம்போல் அலுவலகம் சென்றார்

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய(எம்ஏசிசி)  தலைவர்    சுல்கிப்ளி   அஹமட்   அரசாங்கத்   தலைமைச்    செயலாளரிடம்   பணிவிலகல்   கடிதத்தை      இன்று   காலை   கொடுத்தார். “அவரது   பணிவிலகல்   கடிதம்  ஒப்புதலுக்காக  மகாதிரிடம்  ஒப்படைக்கப்பட்டது. “சுல்கிப்ளியின்   இடத்துக்கு   யாரை  நியமிப்பது   என்பது  இன்னும்   முடிவாகவில்லை”,  என   ஒரு   வட்டாரம்   மலேசியாகினியிடம்   தெரிவித்தது. இன்னொரு   வட்டாரம்   சுல்கிப்ளி   …