உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் மலேசியாவின் நிலை கடந்த ஆண்டு 73வது இடத்தில் இருந்த நிலையில், 34 இடங்கள் சரிந்து 107வது இடத்திற்கு சென்றுள்ளது. எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) இன்று வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2024 அறிக்கை, மலேசியாவின் மதிப்பெண் இப்போது 52.07 புள்ளிகளாக உள்ளது…
ஹலோ பேராசிரியர் தியோ, இனவாதத்தின் தோற்றுவாய் அம்னோ, தெரிந்துகொள்வீர்
நாட்டில் இனவாதத்தை எதிர்க்க ஒரே வகைக் கல்வி அமைவுமுறையை அமல்படுத்த வேண்டும் என்று யுகேஎம் பல்கலைக்கழக பேராசிரியர் தியோ கோக் சியோங் கேட்டுக்கொண்டுள்ளார். பேராசிரியர் தியோவின் கூற்று தவறானது. ஏனென்றால், மலேசியாவின் இனவாதப் போக்கிற்கு பல்வகைக் கல்வி அமைவுமுறை அமலில் இருப்பது காரணமல்ல. ஆகவே, ஒரே வகைக்…
பினாங்கு இந்து சங்கம்: சினிமா கொட்டகைகளில் பீர் விற்பதைத் தடை…
பினாங்கு மாநிலத்தில் சினிமா கொட்டகைகளில் பீர் விற்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பினாங்கு இந்து சங்கம் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் துணைத் தலைவர் பி.முருகையா, அங்கு பீர் விற்கப்படுவது சிறார்கள் உள்பட சினிமா பார்க்கச் செல்வோரை பீர் குடிக்க ஊக்குவிக்கிறது என்றார். “சினிமாக்களில் பீர் விற்போருக்கு எதிராக …
நஜிப்பின் சொத்துகளை முடக்கக் கோரி மகாதிர் செய்த மனு ஜூன்…
பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் சொத்துக்களை முடக்கி வைக்கக் கோரி முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் வேறு இருவரும் செய்துகொண்டுள்ள மனு ஜூன் 23-இல் விசாரணைக்கு வருகிறது. அதே நாளில் அவ்வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி நஜிப் செய்து கொண்டிருக்கும் மனுமீதும் விசாரணை நடைபெறும். இரண்டு மனுக்கள் …
சரவாக் பிகேஆர் 46 இடங்களில் போட்டி
சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியான், அந்த எதிரணிக் கட்சி 46 இடங்களில் போட்டியிடக்கூடும் என அறிவித்ததுடன் மே 7 தேர்தல்களில் இப்போதிருப்பதைவிட இரண்டு இடங்களில் கூடுதலாக வெற்றிபெற முடியும் என்றும் நம்புகிறார். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளான திங்கள்கிழமைக்குள் கட்சி வேட்பாளர் பட்டியல் தயாராகி விடும் என்று …
மாணவர் ரிம30,000 புத்தக பற்றுச் சீட்டுகளைப் பறிகொடுத்தார்
பொதுப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ‘ஆசோங்’ என்பவரிடம் ரிம30,000 பெறுமதியுள்ள 1மலேசிய புத்தக பற்றுச் சீட்டுகளைக் கொடுத்து ஏமாந்தார். ஏப்ரல் 2-இல் அச்சம்பவம் நிகழ்ந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் அந்த 22-வயது மாணவர் போலீசில் புகார் செய்ததாக ஷா ஆலம் போலீஸ் தலைவர் ஏசிபி ஷாபியன் மாமாட் கூறினார். “அம்மாணவர் …
அம்னோ சரவாக்கில் கால் பதித்தால் பதவி துறப்பேன்: அடினான் சூளுரை
சரவாக் முதலமைச்சர் அடினான் சாதேம், மாநில பிஎன் பங்காளிக் கட்சியான அம்னோ சரவாக்கில் நுழைந்தால் பதவி துறக்கப்போவதாக அறிவித்துள்ளார். “அம்னோ சரவாக் வருவதை நாங்கள் விரும்பவில்லை. இதை அம்னோ தலைவரிடமே (பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்) தெரிவித்திருக்கிறேன். அம்னோ சரவாக்கில் கால் வைக்காது. “தேர்தலின்போது வந்து உதவி செய்வார்கள் …
‘கல்வி நிதியை வைத்து வாக்குகள் வாங்கவில்லை’- பிஎன் வேட்பாளர்கள் மறுப்பு
சரவாக் தேர்தல்: ஐக்கிய மக்கள் கட்சி(யுபிபி) முன்னாள் தலைவர் வொங் சூன் கோ, தாமும் மற்றுமிரு பிஎன் நேரடி வேட்பாளர்களும் டுடோங், பெலாவான், பாவாங் அசான் ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்குக் கையூட்டு கொடுப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார். மற்றுமிரு பிஎன் வேட்பாளர்கள் டூடோங்கில் போட்டியிடும் தியோங் தாய் கிங்கும் பெலாவான் …
19 மலேசிய போராளிகள் சீரியாவிலும் ஈராக்கிலும் சண்டைகளில் மாண்டார்கள்
கடந்த வார இறுதியில் சீரியாவில் ஒரு மலேசிய தீவிரவாதி கொல்லப்பட்டான். இதையும் சேர்த்து கடந்த ஈராண்டுகளில் சீரியாவிலும் ஈராக்கிலும் நடந்த சண்டைகளில் மொத்தம் 19 மலேசியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனப் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏப்ரல் 17-இல் அப்துல் கனி யாக்கூப்,31, அல்-கயிர் மாநிலத்தில் ஒரு சண்டையில் …
சரவாக் சிஎம்: 1எம்டிபி விவகாரம் இங்கு வேண்டாம்
சரவாக் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் சரவாக் விவகாரங்களை வைத்துதான் களமிறங்க வேண்டுமே தவிர 1எம்டிபி முறைகேடுகளையும் மற்ற தேசிய விவகாரங்களையும் கொண்டுவரக் கூடாது என மாநில பிஎன் தலைவரும் முதலமைச்சருமான அடுனான் சாதேம் கூறுகிறார். “எதிரணிகளுக்கு, குறிப்பாக டிஏபிக்குச் சவால் விடுக்கிறேன்: தேசிய விவகாரங்களை சரவாக் கொண்டுவர வேண்டாம், …
தேர்தல் காலத்தில் இனவாதம் உச்சக்கட்டம் அடைகிறது, பிடிஎன் தலைவர்
மலேசியாவில் தேர்தல் காலங்களில் இனவாதம் தலைவிரித்தாடத் தொடங்கி விடுகிறது என்கிறார் தேசிய குடிமையியல் பிரிவுத் தலைவர் இப்ராகிம் சாஆட். நேற்றிரவு ஷா ஆலாமில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், 1970, 80-களுடன் ஒப்பிட்டால் இப்போது இனவாதம் அவ்வளவு மோசமாக இல்லை என்றார். “தேர்தல்களின்போதுதான் பிரச்னை. சில தரப்புகள் அரசியல் …
புவா: 1எம்டிபி அறிக்கையில் வெட்டப்பட்ட வரிகள் முக்கியமானவை
1எம்டிபி அறிக்கையிலிருந்து பொதுக் கணக்குக் குழுத் தலைவர் ஹசான் அரிப்பின் அகற்றிய வரிகள் விசாரணைக்கு முக்கியமானவை என்கிறார் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா. அறிக்கையிலிருந்து குறிப்பிட்ட வரிகளை எடுத்து விட்டதை ஒப்புக்கொண்ட ஹசான், முக்கியமானவை அல்ல என்று நேற்றுக் கூறியிருந்தது குறித்து புவா கருத்துரைத்தார். ஆனாலும் …
தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றுவீர்: சுஹாகாம் மீண்டும் கோரிக்கை
மலேசிய மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) 1948 தேசநிந்தனைச் சட்டத்தை அகற்ற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியது. சுஹாகாமின் 2015 ஆண்டறிக்கையை வெளியிட்டபோது சுஹாகாம் தலைவர் ஹஸ்மி ஆகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். தேச நிந்தனைச் சட்டத்துக்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. “ஆனாலும், கூட்டரசு அரசமைப்பு …
அவை எம்எச்370 விமானத்தின் பாகங்களே என்பது ‘கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது’
மொசாம்பிக் கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்ட விமானத்தின் உடைந்த பாகங்கள் இரண்டும் எம்எச் 370-இன் பாகங்கள்தான் என்பது “கிட்டத்தட்ட உறுதி” என்கிறார்கள் ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள். அவற்றின் அளவையும் சாயம் முதலியவற்றையும் வைத்து அவர்கள் அம்முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370, 2008 மார்ச் 8-இல் 239 பயணிகளுடனும் பணியாளர்களுடனும் கோலாலும்பூரிலிருந்து …
குளிர்சாதன வசதிக்கு ரிம10 கட்டணமா? உணவகத்தை அமைச்சு விசாரிக்கிறது
குளிர்சாதன வசதிக்காக ரிம10 கட்டணம் வசூலித்த கோலாலும்பூர் உணவகத்தை உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சு விசாரிக்கிறது. குளிர்சாதன வசதிக்கு உணவகம் கட்டணம் வசூலித்ததைக் காண்பிக்கும் ரசீதை ஒரு வாடிக்கையாளர் ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததை அடுத்து அமைச்சு நடவடிக்கையில் இறங்கியது. ரசீதைத் தயார் செய்யும்போது தவறு …
கப்பலில் ஏற்பட்ட தீயில் ஒருவர் பலி, ஐவர் காயமடைந்தனர்
பினாங்குக்கு அப்பால் Heung-A Pioneer என்னும் கப்பலில் தீ மூண்டு வெடிப்பு ஏற்பட்டதில் பணியாளர்களில் ஒருவர் கொல்லப்பட்டார், ஐவர் காயமடைந்தனர். கப்பலில் தீ பற்றியதாக நேற்றிரவு 10மணி அளவில் அவசர அழைப்பு ஒன்று வந்ததாக பினாங்கு துறைமுகம் சென்,பெர்ஹாட் (பிபிஎஸ்பி) இடைக்கால தலைமைச் செயல் அதிகாரி ரோஸிஹான் அடி …
பிஏசி-இடம் பொய்யுரைத்தவர்கள் சிறையிடப்படலாம்
பொதுக் கணக்குக் குழுவிடம் பொய் சொன்னவர்களுக்கு மூன்றாண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என செலாயாங் எம்பி வில்லியம் லியோங் கூறினார். நாடாளுமன்ற (அதிகாரம், சலுகைகள்) சட்டம் பிரிவு 20, நாடாளுமன்றத்திடம் அல்லது நாடாமன்றக் குழுவிடம் பொய்ச் சாட்சியம் கூறுவோரை குற்றவியல் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்ட வகை செய்கிறது என …
லிம்: பங்களா வீடு பற்றிய உண்மை வெளிவருவதை அம்னோ விரும்பவில்லை
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், தாம் வீடு வாங்கியது பற்றியும் தாமான் மங்கிஸ் நில விவகாரம் பற்றியும் தம்முடைய விளக்கத்தைக் கேட்காமலேயே அம்னோ தம்மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வருவதாக கூறினார். “அவர்கள்தான் சவால் விடுத்தார்கள். சாவலை ஏற்றேன். விவாதத்தின்போது இந்த விவகாரங்களை எல்லாம் விளக்கலாம் என்பதால் …
ரிபோர்மாசியை நினைத்துப் பாருங்கள்: மகாதிரைக் குறைகூறுவோருக்கு தியான் சுவா பதிலடி
1990-களின் இறுதிப் பகுதியில் ரிபோர்மாசி காலத்தின்போது பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ள பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, அப்போது நடந்ததைப் பாருங்கள் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டைக் குறைகூறுவோரை நோக்கிக் கூறினார். இன்று ஒரு பொதுவான இலக்கின் காரணமாக பல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் ஒன்றுபட்டிருப்பதுபோல் …
1எம்டிபி இயக்குனர்கள் பதவிவிலக முன்வந்திருப்பதை அரசாங்கம் ஏற்க வேண்டும்
1எம்டிபி நிறுவனத்தின் இயக்குனர்கள் பதவிவிலக முன்வந்திருப்பதை அரசாங்கம் உடனடியாக ஏற்க வேண்டும் என்று மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. 1எம்டிபி-யுடன் செய்துகொள்ளப்பட்ட ஒரு மீட்பு நடவடிக்கை ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதாக அபு டாபியைத் தளமாகக் கொண்டு செயல்படும் அனைத்துலக பெட்ரோலிய முதலீட்டு நிறுவனம்(ஐபிஐசி) அறிவித்திருப்பதை ஊழல் எதிர்ப்பு மையமான சி4-வின் …
விடுப்பில் செல்வதை உறுதிப்படுத்தினார் நசிர். வங்கியின் நேர்மை காக்க விடுப்பில்…
சிஐஎம்பி தலைவர் நசிர் ரசாக், யுஎஸ்$7 மில்லியன் விவகாரம் மீது விசாரணை நடப்பதற்கு இடமளித்து தாம் விடுப்பில் செல்வதை உறுதிப்படுத்தினார். தாம் சிஐஎம்பியில் இருப்பது விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கலாம் என்று அஞ்சுகிறார் அவர். வங்கியின் நேர்மையைக் காப்பதற்கு அதைவிட்டு விலகியிருப்பதே நல்லது என்று நினைக்கிறார். முன்னதாக ஏர் ஏசியா …
பெளர்ணமி கடற்கரை விழாவுக்கு எதிராக போலீசில் முறையீடு
பெசுட் அம்னோ இளைஞர், புத்ரி பிரிவுகளும் அரசுசார்பற்ற அமைப்புகள் பலவும், ஏப்ரல் 19, 20 தேதிகளில் பெசுட் அருகில் பூலாவ் பெர்ஹெந்தியான் கிச்சிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவுக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளன. ‘பெளர்ணமி விழா’ என்று அழைக்கப்படும் அவ்விழா பூலாவ் பெர்ஹெந்தியான் கிச்சிலின் லோங் பீச்சில் நடைபெறும் …
ஹிண்ட்ராப் பேரியக்கம்:”நம்மை எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் சிறுபான்மை இனத்தவரின் பிரச்சனைகள் அல்ல,…
இந்நாட்டின் இந்தியச் சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் ஒரு சிறுபான்மை இனத்தவரின் பிரச்சனைகள் அல்ல. அவை இந்நாட்டு குடிமக்கள் சம்பந்தப்பட்ட தேசியப் பிரச்சனைகள் ஆகும் என்று ஹிண்ட்ராப் பேரியக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் பிரகடனம் செய்யப்பட்டது. நேற்று, ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் ரவாங், அருள்மிகு அகோர வீரபத்திரர் - சங்கிலி கறுப்பர்…
ஆனந்தகிருஷ்ணன் மூலம் கிடைத்த கடனை 1எம்டிபி திருப்பிச் செலுத்தியது
1எம்டிபி, ஆனந்தகிருஷ்ணன் மூலமாகக் கிடைத்த கடனைத் திருப்பிச் செலுத்தி விட்டதாக இன்று அறிவித்தது.கடந்த ஆண்டில் நிதி நெருக்கடியை எதிர்நோக்கிய 1எம்டிபி மே பேங்குக்கும் ஆர்எச்பி பேங்குக்கும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தடுமாறிக் கொண்டிருந்தபோது ஆனந்தகிருஷ்ணன் ரிம2 பில்லியன் கடனுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். “அது திருப்பிச் செலுத்தப்பட்டு விட்டது …