உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டில் மலேசியாவின் நிலை கடந்த ஆண்டு 73வது இடத்தில் இருந்த நிலையில், 34 இடங்கள் சரிந்து 107வது இடத்திற்கு சென்றுள்ளது. எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) இன்று வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2024 அறிக்கை, மலேசியாவின் மதிப்பெண் இப்போது 52.07 புள்ளிகளாக உள்ளது…
ஜாகீரின் மகன் சொற்பொழிவுக்கு பினாங்கில் அனுமதி
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய ஆன்மிகப் பேச்சாளர் ஜாகீர் நாயக்கின் மகன் பினாங்கில் சொற்பொழிவாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பினாங்கு துணை முதலமைச்சர் I முகம்மட் ரஷிட் ஹஸ்னோன் இதைத் தெரிவித்தார். ஜாகீரின் மகன் பாரிக் நாயக், “இஸ்லாம் பற்றிய தப்பெண்ணங்கள்” என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை இரவு பென்யாயாங் சமூக மண்டபத்தில் உரையாற்றுவார்.…
ஜாகீரை ‘சைத்தான்’ என்று சொன்னதற்கு ராமசாமி வருத்தம் ஆனாலும் கண்டனக்…
முஸ்லிம் ஆன்மிகப் பேச்சாளர் டாக்டர் ஜாகீர் நாயக்கை “சைத்தான்” என்று சொன்னதற்காக டிஏபி தலைவர் பி.இராமசாமி வருத்தம் தெரிவித்திருந்த போதிலும் அவருக்கு எதிரான கண்டனங்கள் நிற்பதாக தெரியவில்லை. “நான் பயன்படுத்திய ‘சைத்தான்’ என்ற சொல் மலேசிய முஸ்லிம்களிடையே ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பது கண்டு வருந்துகிறேன். “இஸ்லாத்துக்கு எதிராகவோ இந்நாட்டு …
சனிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஸாகீர் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது
இஸ்லாமியச் சமயச் சொற்பொழிவாளர் டாக்டர் ஸாகிர் நாய்க் எதிர்வரும் சனிக்கிழமை புக்கிட் ஜாலில், தேசிய ஹோக்கி அரங்கத்தில் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் மலேசியாகினியிடம் கூறினார். இதற்கு அடுத்து மலாக்காவில் நடபெறவிருந்த இது போன்ற…
இசி வியாழக்கிழமை சரவாக் தேர்தல் பற்றி விவாதிக்கும்
இன்று சரவாக் சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையம் (இசி) சரவாக் மாநிலத் தேர்தல் பற்றி விவாதிப்பதற்காக வியாழக்கிழமை சிறப்புக் கூட்டமொன்றை நடத்துகிறது. அதில் வேட்பாளர் நியமன நாள், வாக்களிப்பு நாள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பற்றியெல்லாம் முடிவெடுக்கப்படும் என இசி செயலாளர் அப்துல் கனி சாலே கூறினார். …
ரயானி ஏர் விமானச் சேவை மூன்று மாதங்களுக்குத் தற்காலிகமாக நிறுத்தி…
இன்று தொடங்கி மூன்று மாதங்களுக்கு ரயானி ஏர் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை தலைமை இயக்குனர் அஸாருடின் அப்துல் ரஹ்மான் கூறினார். மே 17-இல் ஒரு விசாரணை நடத்தப்படும் என்றும் அதில் ரயானி ஏர் விளக்கமளிக்கலாம் என்றும் அவர் சொன்னார். தொடங்கப்பட்டு நான்கே …
மகாதிருக்கு எதிராக நான்கு விசாரணை அறிக்கைகள்
போலீசார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராக நான்கு விசாரணை அறிக்கைகளைத் தயாரித்து வருவதாக இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று தெரிவித்தார். விசாரணை அறிக்கைகள் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று மகாதிர் கேட்டுக்கொண்டாரே அது தொடர்பானவையா என்று வினவியதற்கு அவர் நேரடியான பதிலை …
எம்ஏசிசி அதிகாரி கைது செய்யப்பட்டதற்கும் குவான் எங் வழக்குக்கும் தொடர்பில்லை
மலேசிய ஊழல்-தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), அதன் அதிகாரி ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதற்கும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்மீதான விசாரணைக்கும் தொடர்பிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது. அந்த அதிகாரி ஆணையத்தின் விசாரணைக்குட்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவரிடமிருந்து பாதுகாப்புப் பணமாக ரிம20,000 பெற்றார் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார் என…
மகாதிர்: அன்வாருக்கு வயதாகிவிட்டது, பிரதமராக முடியாது
சிறையிலிருக்கும் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு வயதாகி விட்டது என்பதால் அவரால் பிரதமராக முடியாது என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவருக்கு வயதாகி விட்டது என்று நினைக்கிறேன்” என தி ஆஸ்திரேலியன் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் மகாதிர் கூறினார். ஆனால், உண்மையில் அன்வாருக்கு வயது …
மலாக்காவில் ஜாகீர் நாயக்கின் நிகழ்வை இரத்துச் செய்ய போலீஸ் உத்தரவு
மலாக்காவில் சர்ச்சைக்குரிய முஸ்லிம் பிரச்சாரகர் டாக்டர் ஜாகீர் நாயக் கலந்துகொள்ளவிருந்த கருத்தரங்கம் ஒன்றை இரத்துச் செய்யுமாறு போலீஸ் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 17-இல், மலாக்காவில் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழக வளாகத்தில் அக்கருத்தரங்கம் நடைபெறுவதாக இருந்தது. அதனை இரத்துச் செய்யுமாறு கூறுவதற்கு அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் எனப் போலீஸ் …
ஜாகிருக்குத் தங்கும் வசதிக்கும் உணவுக்கும் மட்டுமே திரெங்கானு ஏற்பாடு செய்துள்ளது
திரெங்கானு அரசு. முஸ்லிம் பிரச்சாரகரான டாக்டர் ஜாகிர் நாயக் அம்மாநிலத்தில் தங்கி இருக்கையில் அவருக்குத் தங்கும் வசதி, உணவு ஆகியவற்றை மட்டுமே ஏற்பாடு செய்து கொடுக்கிறது மற்ற செலவுகளை இஸ்லாமிய ஆராய்ச்சி அறநிறுவனத்தின் மூலமாக அவரே கவனித்துக் கொள்கிறார் என மந்திரி புசார் அஹமட் ரஸிப் அப்துல் ரஹ்மான் …
எத்தனை தமிழ்ப்பள்ளிகள் எங்கே, எப்போது இடமாற்றம் காண்கின்றன?
-வி.சம்புலிங்கம், தலைமைச் சபை உறுப்பினர், ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம், ஏப்ரல் 4, 2016 குறைவான மாணவர் சேர்க்கையால் நலிந்து வரும் தமிழ்ப்பள்ளிகளின் இடமாற்றம் குறித்து ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் எழுப்பிய கேள்விகளுக்கு 9 ஏப்ரல் 2016 தமிழ் மலர் நாளிதழில் மலேசிய தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டு திட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்…
ரபிஸி: நான் செய்தது சரியே அதற்காகத்தான் சிறை செல்லவும் துணிந்தேன்
அதிகாரத்துவ இரகசிய சட்டத்துக்கு (ஓஎஸ்ஏ) உட்பட்ட ஆவணங்களை அம்பலப்படுத்தியற்காக சிறைத் தண்டனை விதிக்கப்படலாம், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கலாம் என்று கூறப்பட்டாலும் அரசாங்க ஊழலை எதிர்க்கும் போராட்டத்தில் தாம் செய்ததுதான் சரி என்று பிடிவாதம் பிடிக்கிறார் பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி. “இதை நான் சொல்லித்தான் ஆக …
ரயானி விமானச் சேவை தற்காலிக நிறுத்தம்
மலேசியாவின் ஷியாரியா விமான நிறுவனம் ரயானி ஏர், விமானிகள் வேலைநிறுத்தம் காரணமாக அதன் பயணச் சேவையை அடுத்த அறிவிப்புவரை இரத்துச் செய்துள்ளது. “இடைஞ்சல்களுக்கு வருந்துகிறோம்”, என அந்த விமான நிறிவனத்தின் முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மூன்று மாதங்களுக்குமுன் தொடங்கப்பட்டது ரயானி ஏர் சென். பெர்ஹாட். வெள்ளிக்கிழமையிலிருந்து அதன் …
கருவூலத் தலைவர்: 1எம்டிபி ஆலோசனை வாரியம் கூட்டம் நடத்தியதே இல்லை
1எம்டிபி ஆலோசனை வாரிய உறுப்பினர்கள் கூடிப் பேசியதே இல்லை. எனக் கருவூலத் தலைமைச் செயலாளர் இர்வான் சிரிகார் பொதுக் கணக்குக் குழுவிடம் கூறியுள்ளார். 1எம்டிபி மீதான பொதுக் கணக்குக் குழுவின் விசாரணை குறிப்பேடு(Hansard) இதனைத் தெரிவிக்கிறது. 1எம்டிபி ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவரான இர்வான், அந்நிறுவனத்தின் இயக்குனர் வாரியத்துக்கு …
நஜிப்பை அகற்ற வெளிநாட்டு உதவியை நாடுகிறாரா மகாதிர்?
என்ன வேடிக்கை பாருங்கள், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைப் பதவியிலிருந்து வெளியேற்ற உலக நாடுகளின் உதவியை நாடுகிறாராம் டாக்டர் மகாதிர் முகம்மட். தி ஆஸ்திரேலியன் டுடே கூறுகிறது. தமது நீண்டகால ஆட்சியில் வெளிநாட்டுத் தலையீடுகளைக் கடுமையாகக் கண்டித்து வந்தவர் டாக்டர் மகாதிர். தீவிர தேசியவாதியான அந்த முன்னாள் பிரத்மர்தான் …
சரவணன்: மைஸ்கில்ஸ் அறவாரியம் பெரும் உருமாற்றம் செய்துள்ளது
இந்திய இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிப்பதற்காக ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட மைஸ்கில்ஸ் அறவாரியம் இன்று அதன் நான்காவது பட்டமளிப்பு நிகழ்ச்சியை கோலாலம்பூர், சோமா அரங்கத்தில் நடத்தியது. இந்நிகழ்ச்சியில் தொழிற்பயிற்சி பெற்ற 149 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்று உரையாற்றிய இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை துணை அமைச்சர்…
விரைவில் வருகிறது: ரஹ்மான் vs குவான் எங் வாதம்
பொதுமக்கள் முன்னிலையில் வாதமிட பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தயாராக இருப்பதை பிஎன் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் டஹ்லான் வரவேற்றார். அது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அப்துல் ரஹ்மான், “தாமான் மங்கிஸ் (நிலம்) மீது பொது விவாதம் நடப்பதை நான் வரவேற்கிறேன். என் அதிகாரி …
சிந்தனைக்குழு: நஜிப் 1எம்டிபி-யை ஆட்டுவித்தாரா என்பதைக் கண்டறிய வேண்டும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் திரைமறைவில் 1எம்டிபிமீது ஆதிக்கம் செலுத்தினாரா என்பதை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் எனச் சிந்தனைக்குழு ஒன்று கேட்டுக்கொண்டிருக்கிறது, “ஆலோசனை வாரியத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ஆதிக்கம் செலுத்தினாரா என்பதை ஆராய வேண்டும். “தவறினால் நடந்துள்ள விசாரணை முழுமையானது ஆகாது”, என ஜனநாயகம் மற்றும் …
ஓஎஸ்ஏ-இன்கீழ் குற்றஞ்சாட்டப்பட்டார் ரபிஸி
பாண்டான் எம்பி ரபிஸி ரம்லிமீது கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அதிகாரத்துவ இரகசியச் சட்ட(ஒஎஸ்ஏ)த்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பிகேஆர் உதவித் தலைவரும் தலைமைச் செயலாளருமான ரபிஸி ஓஎஸ்ஏ-இன்கீழ் இரகசியம் என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணம் ஒன்றை வெளிப்படுத்தியதாகவும் கைவசம் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் மார்ச் 24-இல் அவர் …
நஜிப் போன்ற நண்பர் ஒபாமாவுக்குத் தேவையில்லை என்கிறது வாஷிங்டன் போஸ்ட்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைச் சூழ்ந்துள்ள பல்வேறு ஊழல்களைச் சுட்டிக்காட்டும் வாஷிங்டன் போஸ்ட் அவரைவிட்டு ஒபாமா நிர்வாகம் விலகி இருப்பதே நல்லது என நினைக்கிறது. ரிம2.6 பில்லியன் ‘நன்கொடை’ விவகாரத்தில் நஜிப் குற்றம் எதுவும் புரியவில்லை என மலேசியாவின் சட்டத்துறைத் தலைவர் கூறி இருந்தாலும் நஜிப்பால் உருவாக்கப்பட்ட 1எம்டிபியில் …
பண்டிகார்: ரபிஸியின் கைது பற்றி போலீஸ் எனக்குத் தெரியப்படுத்தி இருக்க…
பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லியை நாடாளுமன்றத்துக்கு வெளியில் ஒஎஸ்ஏ-இன்கீழ் வாரண்டி இன்றியே கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு உண்டு என்பதை மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா ஒப்புக்கொண்டார். ஆனாலும், போலீசார் கைது குறித்து முன்கூட்டியே தமக்குத் தெரிவித்திருக்கலாம், அப்படிச் செய்திருந்தால் அதைத் தாம் மக்களவைக்குத் தெரியப்படுத்துவதற்கு …
பிஏசி: 1எம்டிபி-இன் குறைகளுக்கு அதன் முன்னாள் தலைவரே பொறுப்பேற்க வேண்டும்
1எம்டிபியின் கோளாறுகளுக்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி ஷாரோல் அஸ்ரால் ஹல்மியும் நிர்வாகத்தில் இருந்த மற்றவர்களும்தான் பொறுப்பு என்பது பொதுக் கணக்குக் குழுவின் முடிவாகும். “அந்த வகையில் சட்ட அமலாக்கத் தரப்பு ஷாரோல்மீதும் மற்ற நிர்வாகிகள்மீதும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்”, என …
ஜோகூர் எம்பி-யை மாற்ற நினைப்பது ‘வீண் முயற்சி’
ஜொகூர் மந்திரி புசார் காலிட் நோர்டினை மாற்றும் எந்தவொரு முயற்சியும் வெற்றிபெறாது என ஜோகூர் அம்னோ இளைஞர் தலைவர் ஹஹாஸ்ரின் ஹஷிம் கூறினார். “ஜோகூர் எம்பி-யை மாற்றும் முயற்சி வீணான முயற்சி என்பதை ஜோகூர் அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்த விரும்புகிறது”, என ஹஹாஸ்ரின் இன்று ஓர் அறிக்கையில் …