மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
ஜொகூர் சுல்தான் : கோயில் உடைப்பு பிரச்சனையைச் சுமூகமாகத் தீர்க்கவும்
மாசாய் ஶ்ரீ ஆலாமில், 80 ஆண்டுகால கோயில் உடைப்பு பிரச்சினையைச் சர்ச்சைக்குரியதாக ஆக்க வேண்டாம் என்று, ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் கேட்டுக்கொண்டார். இன்று, ஶ்ரீ சிவசக்தி ஶ்ரீ சின்னக்கருப்பர் ஆலய நிர்வாக செயலவையினர், புக்கிட் பெலாங்கி அரண்மனையில் தன்னைச் சந்தித்ததாக, சுல்தான் அவரது அதிகாரப்பூர்வ…
அம்னோவை நிராகரியுங்கள், லங்காவி வாக்காளர்களுக்கு டாக்டர் எம் அறைகூவல்
பக்காத்தான் ஹராப்பானின் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்னோவை நிராகரிக்கச் சொல்லி லங்காவி வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து எதிர்க்கட்சியினர் வசமாகாத லங்காவி, அம்னோவின் கோட்டை என்று தெரிந்தும், லங்காவி வாக்காளர்களை அவர் இவ்வாறு வலியுறுத்தி உள்ளார். “அம்னோவை நிராகரிப்பதற்கான நேரம்…
கல்வி அமைச்சர் : எதிர்க்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் ஆசிரியர்களை நான்…
எதிர்க்கட்சிக்கு ஆதரவான ஆசிரியர்களை, தான் எச்சரித்ததாக வெளிவந்த செய்தி அறிக்கைகளைக், கல்வி அமைச்சர் மஹ்ட்சீர் கலிட் மறுத்தார். அந்தச் செய்தியில் உண்மையில்லை, நிருபர்கள் தவறாக புரிந்துகொண்டனர் என்று மஹ்ட்சீர் கூறியதாக, தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. “வாக்களிப்பது இரகசியமானது, ஆக எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பவர்களுக்கு நான் எப்படி எச்சரிக்கை விடுக்க…
பிரதமர் வேட்பாளர் : மலேசியா அமெரிக்கா அல்ல, ஹாடி கூறுகிறார்
பொதுத் தேர்தலின் போது, பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்க, மலேசியா ஒன்றும் அமெரிக்கா அல்ல என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியுள்ளார். அப்துல் ஹாடியைப் பொறுத்தவரையில், பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதை விட, ‘நபிகள் காட்டிய வழியில் பயணிப்பது’ மற்றும் ‘இஸ்லாத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை வைப்பது’…
இரண்டு மாதங்களுக்கு முன்னதாக, அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க…
14-வது பொதுத் தேர்தலுக்கான தேதியை, இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டுமென ஷங்காய் பெர்சே, மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இதன்வழி, வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள், வாக்களிக்க மலேசியா வருவதற்கு இலகுவாக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் பெரும்பாலான மலேசியர்கள், பணி நிமித்தமாகவும் மேற்கல்விக்காகவும் அங்கு இருப்பதால்,…
பிஎஸ்எம் : சர்வதேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் பொது சுகாதாரத்…
சர்வதேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடுவது, பொது சுகாதாரத் துறைக்குப் பாதிப்பைத் தரும் என்று மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) எச்சரித்துள்ளது. விரிவான பொருளாதாரக் கூட்டு மண்டலத்தில் (ஆர்சிஇபி), மலேசியா ஆர்வம் கொண்டுள்ளதைப் பற்றி, டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ், “அத்தகைய ஒப்பந்தங்கள் பொது சுகாதார வசதிகளுக்குப் பேரழிவை…
ஜொகூர் ஹராப்பான் நாற்காலி பகிர்வு, பெர்சத்து முன்னிலை
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி, ஜொகூர் சட்டமன்ற நாற்காலிகளில், பெரிபூமி பெர்சத்து மலேசியா கட்சிக்கு 18 இடங்களை ஒதுக்கியுள்ளது. கடந்த ஜனவரி 18-ல், சட்டமன்ற இருக்கைகள் பகிர்வு ஒரு முடிவுக்கு வந்ததாக ஹராப்பான் தரப்பு தெரிவித்தது. டிஏபி-க்கு 14 இடங்களும், பிகேஆர் மற்றும் அமானா இரண்டுக்கும் முறையே 12 இடங்களும்…
கிளந்தான் பிகேஆர் 15 சட்டமன்ற இடங்களுக்குக் குறி
பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரபான் தனக்கு 15 சட்டமன்ற இடங்களைக் கொடுக்கும் என கிளந்தான் பிகேஆர் எதிர்பார்க்கிறது. பல நாடாளுமன்ற இடங்களை பெர்சத்துவுக்கு விட்டுக்கொடுக்க முன்வந்திருப்பதால் தங்களுக்கு ஏற்கனவே போட்டியிட்ட 5 இடங்களைவிட கூடுதலாக கொடுக்கப்படுவது நியாயமே என்று கிளந்தான் பிகேஆர் தலைவர் அப் அசிஸ் அப் காடிர் …
மகாட்சிர் ‘தந்தைபோல் அறிவுரை’ கூறினாரே தவிர அரசு ஊழியர்களைப் பணிவிலகச்…
கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட் அரசு அதிகாரிகள் அரசாங்கம் குறித்துக் கருத்துரைக்கும்போது சிந்தித்துப் பேச வேண்டும் என்று ‘தந்தைபோன்று’ அறிவுரைதான் கூறினார் என அமைச்சரின் ஊடக மற்றும் தொடர்பு அலுவலகம் கூறியது. “ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருப்பதைப்போல் அவர் பேசவில்லை, பிள்ளைகளுக்குத் தந்தை சொல்வதுபோன்று அறிவுரைதான் கூறினார் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.…
அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த மகாட்சிரை விசாரிக்க பெர்சே வலியுறுத்து
எதிர்க்கட்சிகளில் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று கூறியதாகக் கூறப்படும் கல்வி அமைச்சர் மகாட்சிர் காலிட்மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என பெர்சே வலியுறுத்தியது. “எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் அரசு அதிகாரிகளை வெளிப்படையாக மிரட்டும் மகாட்சிரின் செயலை பெர்சே கண்டிக்கிறது. “ இசி …
ஶ்ரீ ராம்: அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தை அமல்படுத்த முடியாது
அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ அமல்படுத்த முடியாது, ஏனென்றால் அது நாடாளுமன்றத்தால் இயற்றப்படவில்லை, அதோடு அது மக்களின் பேச்சுரிமையை மீறுகிறது என்று பெடரல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஶ்ரீ ராம் இன்று கூறினார். பெடரல் அரசமைப்புச் சட்டம் ஆகஸ்ட் 31, 1957 இல்…
நிறைய பேர் எதிர்க்கட்சிக்கு வாக்களியுங்கள், அமைச்சருக்கு வேலை போகட்டும்
ஒரு மூத்த பத்திரிகையாளர், எதிர்க்கட்சிக்கு வாக்களிப்பதால், வேலைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கவலைபடும் பொது ஊழியர்களுக்கு ஒரு சிறந்த வழியை முன்வைக்கிறார். எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் பொது ஊழியர்கள், 'தங்கள் வேலைகளை இழக்கக்கூடும்' என்று ஓர் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது தொடர்பில், நியு ஸ்ரேட்ஸ் டைம்ஸி -ன் முன்னாள் ஆசிரியர்,…
டாக்டர் மகாதீர் சரியான பாதைக்கு வர வேண்டும் என்கிறார் நஜிப்…
‘அம்னோவைப் பாதுகாக்க வேண்டும், அழிக்கக்கூடாது’ என்று இரண்டாம் பிரதமர் மகாதீரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, மகாதீர் சரியான அரசியல் பாதைக்குத் திரும்ப வேண்டுமென, இன்று துன் அப்துல் ரசாக் ஹுசேனின் பேரன் மகாதீரைக் கேட்டுக்கொண்டார். “மலேசியாவை வழிநடத்தவும், அம்னோவை வலுப்படுத்தி, பாதுகாக்கவுமே அப்துல் ரசாக் மகாதீரை அம்னோவுக்கு மீண்டும் கொண்டுவந்தார்,…
என்.யு.தி.பி. : ஆசிரியர்கள் அரசியல் பிரச்சனைகளைப் பேசுவது, சர்ச்சையை உண்டாக்கலாம்
ஆசிரியர்கள் அரசியல் கட்சிகளில் பங்குபெறுதல் மற்றும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தல் போன்றவை, ஆசிரிய சமூகத்திற்குள்ளே ஆரோக்கியமற்ற சூழல்களை உருவாக்க முடியும் என, தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத் தலைவர் கமாரோசாமான் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இந்தச் செயல், பணியிடத்தில் சர்ச்சைக்கு வழிவகுக்கும், குறிப்பாக எதிர்த்தரப்பு அரசியலில் இணைந்த…
ஜிம்பாப்வேகூட 93 வயது தலைவரை நிராகரித்து விட்டது, நஜிப் கூறுகிறார்
பக்கத்தான் ஹரப்பானின் பிரதமர் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் மகாதிர் முகமட் மீது பிரதமர் நஜிப் ரசாக் இன்னொரு தாக்குதல் நடத்தினார். ஓய்வுபெற்ற 93 வயதான ஒருவர் பிரதமராக வேண்டும் என்று கூறுகிறவர்கள் இருக்கிறார்கள். இதை எந்த நாடும், ஜிம்பாப்வே உட்பட, விரும்புவதில்லை என்று நஜிப் கூறினார். கடந்த நவம்பர்…
அம்னோ கிளந்தானை பாஸுக்கு விட்டுக் கொடுக்கப்போகிறதா? அபத்தம் என்று விளாசுகிறார்…
14வது பொதுத் தேர்தலில் கிளந்தானை பாஸுக்கே விட்டுக்கொடுக்க அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்குடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை அபத்தம் என்று கிளந்தான் அம்னோ தலைவர் முஸ்தபா முகம்மட் சாடியுள்ளார். பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பிபிபிஎம்) …
எதிர்க்கட்சிகளில் பொறுப்பு வகிக்கும் ஆசிரியர்கள் பணிவிலக அமைச்சர் உத்தரவு
ஆசிரியர்களும் கல்வி அமைச்சு அதிகாரிகளும் எதிர்க்கட்சிகளில் பதவி வகித்தால் அவர்கள் பணி விலக வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதாக சீன நாளேடான குவோங் வா ஜிட் பாவ் அறிவித்துள்ளது. அரசாங்கத்தில் இருந்துகொண்டே அரசாங்கத்தைக் குறைகூறுவது அதற்குக் களங்கம் உண்டு பண்ணிவிடுகிறது என்பதால் அப்படிப்பட்ட அரசு அதிகாரிகள் பணிவிலக வேண்டும் எனக் …
8 ஆவது நாள்: மலேசியாகினி தற்காப்பு நிதி மூன்றில்-இரண்டு இலக்கை…
மலேசியாகினியின் சட்ட தற்காப்பு நிதிக்கான ரிம350,000 நன்கொடை திரட்டல் தொடங்கியதிலிருந்து எட்டாவது நாளான இன்று ரிம270,000 ஐ கடந்து விட்டது. இன்னும் தேவைப்படுவது ரிம80,000 மட்டுமே. நன்கொடை வழங்கிய ஆதரவாளர்களுக்கு மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீவன் ஹான் மீண்டும் நன்றி கூறினார். மலேசியாகினியின் தலைமை நிருவாகி பிரமேஷ்…
சுரங்கப்பாதை விவகாரம் ஒரு தேர்தல் தந்திரம் என்பது பினாங்கு மக்களுக்குத்…
பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டம் சர்ச்சையாக்கப்பட்டு எம்ஏசிசி விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருப்பது மாநில அரசுமீது நடத்தப்படும் “வெளிப்படையான தாக்குதல்” என்கிறார் பிகேஆர் எம்பி சிம் ட்ஸே ட்ஸின். 14வது பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் மாநில அரசின்மீதும் முதலமைச்சர் லிம் குவான் எங்மீதும் “அரசியல் நோக்கம்” நோக்கத்துடன் தாக்குதல்கள் …
மகாதிர் ‘உதவியுடன்’ பிஎன் சிரம்பானை வெல்லும்
பிஎன்னின் நீண்டகால பிரதமராக இருந்த டாக்டர் மகாதிர் முகம்மட்டின் உதவியால் சிரம்பானில் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்க முடியும் என்று மசீச நம்புகிறது. மகாதிர் எதிரணிக்குத் தலைமையேற்றிருப்பதால் இது சாத்தியமே என்கிறார் அதன் சிரம்பான் வேட்பாளர் சோங் சின் வூன். கடந்த பொதுத் தேர்தலில் டிஏபி “Ubah” என்று முழக்கமிட்டு அரசாங்கத்தை …
முகைதினுக்கு எதிரான முன்னாள் பெர்சத்து உறுப்பினரின் வழக்கு தள்ளுபடி
பெர்சத்து தலைவர் முகைதின் யாசினுக்கு எதிராக முன்னாள் பெர்சத்து உறுப்பினர் முகம்மட் அனாஸ் சுடின் தொடுத்த அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பபட்டது. தள்ளுபடி செய்த கோலாலும்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி அது ஆதாரமற்ற, அடாவடித்தனமான வழக்கு என்று தீர்ப்பளித்தார். இதனை முகைதினின் வழக்குரைஞர் ரோஸ்லி டஹ்லான் செய்தியாளர்களிடம் …
பேராக் டிஏபி தலைவர் வீட்டில் எஸ்கேஎம்எம் சோதனை
இன்று, மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எஸ்கேஎம்எம்), ஈப்போவில் உள்ள தைப்பிங் நாடாளுமன்ற உறுப்பினர் ங்கா கோர் மிங் வீடு, ஆயேர் தாவாரில் உள்ள அவரின் பெற்றோர் வீடு மற்றும் தைப்பிங்கில் உள்ள அவரது மக்கள் சேவை மையம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டதோடு, அவரின் கைப்பேசியையும்…
பிபிசியின், சவுதி அரேபிய ஊழல் ஆவணப்படத்தில் நஜிப்
சவுதி அரச குடும்பத்தைச் சூழ்ந்த மோதல் பற்றி, பிபிசி ஒலிபரப்பு நிறுவனம் தயாரித்த ஓர் ஆவணப்படத்தில் பிரதமர் நஜிப் ரசாக் தோன்றியுள்ளார். கடந்த செவ்வாயன்று, முதன்முறையாக ஒலிபரப்பப்பட்ட ‘ஹவுஸ் ஓஃப் சவுட்’ : எ ஃபெமெலி எட் வார் (சவூதியில் ஓர் இல்லம்: போரில் ஒரு குடும்பம்) இரண்டாவது…

















